Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 49

49- மனதை மாற்றிவிட்டாய்

திவி ஆதியை அழைக்க பாட்டியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுஅவன் இப்போத்தானே மா கிளம்பிப்போனான்.”

அவரு இன்னும் சாப்பிடலையே தாத்தா. போன் பாத்திட்டு இருந்தாரு. அதுக்குள்ள எடுத்து வெச்சிடலாம். வந்துடுவாருன்னு பாத்தேன்.” என அவள் கூற

ஈஸ்வரிபிடிக்காத கல்யாணம்னா இப்டி தான். பொண்டாட்டின்னு சொல்லிட்டா மட்டும் போதுமா? மனசளவுல அந்த நினைப்பு இருந்திருந்தா ஒரு வார்த்தை போய்ட்டு வரேன்னு கூட சொல்லாம போவானா? அதுவும் நேத்துதான் கல்யாணம்ன்னா யாராவது சொன்னா நம்புவாங்களா? ” என அவர் பங்கிற்கு ஒன்றை குத்திக்காட்ட திவியின் முகமும் வாட தாத்தா தான்அவனுக்கு ஏதாவது அவசர வேலையா இருந்திருப்பான் மா, அதனால சொல்லாம போய்ட்டான். நீ எதுவும் நினைச்சுகாதஎன

திவிஐயோ அதெல்லாம் இல்ல தாத்தாஎன்கிட்ட சொல்லாட்டி என்ன அதுதான் உங்க இரண்டு பேர்கிட்டேயும் சொல்லிட்டு போயிருக்காரே. எனக்கு அதுல வருத்தம் இல்ல, சாப்பிடாம போய்ட்டாரேன்னு தான் யோசிச்சேன்…” என்றதும் அவர்களுக்கும் சங்கடமாக போயிவிட்டது.

[அவர்களும்தான் காலையில் இருந்து பார்த்தார்களே ஆதிக்கு பிடிச்சதா அவ பாத்து பாத்து செஞ்சத, மதியும் சற்று நேரத்தில் வந்துவிட பாட்டிஎன்ன சந்திரா, நீ வந்துட்ட?”

அதுதான் அவ செய்றாளே மா, எதைப்பண்ணலும் கூடவே சுத்திகிட்டு எடுத்துகுடுக்கறேன், காய் நறுக்கி தரேன், இது சரியா இருக்கா பாருங்கன்னு ஒன்னு ஒண்ணுக்கா கேள்வி கேட்டு பேசிட்டே இருக்கா. “

உனக்கு புரியலையா சந்திரா மா, அவ எல்லார்கிட்டயும் பேசணும் பழைய மாதிரி இருக்கணும்னு ஆசைப்படறா..”

அது நல்லா புரியுது மா, அதனால தான் என்ன பண்ணாலும் வந்து வம்பு பண்றா.. எங்க அங்க இருந்தா திட்டிட்டாவது அவகிட்ட பேசிடுவேனோன்னு தான் வந்துட்டேன். “

புன்னகைத்த மாணிக்கம் தாத்தா கூறினார்என்ன இது மருமக பாத்து பாத்து வேலை செய்ய மாமியார் பயந்து ஓடிவந்தது இப்போதான் மா கேள்விப்படறேன்.” என்றதும் சந்திராவும் பாட்டியும் கூட சிரிக்க பாட்டிஏதோ நடந்தது நடந்திடிச்சு ராஜா தப்பான பொண்ண கல்யாணம் பண்ணலையே. நாமளும் அவளை தானே இவனுக்கு கட்டி வெக்க பாத்தோம்

ஆனா அம்மா அவ …”

கொஞ்சம் இரு மா, ஒருவேளை அந்த மாதிரி அவ சொத்துக்கு ஆசைப்பட்டு தான் கல்யாணம் பணிக்க சரினு சொல்லிருந்தாலும் அன்னைக்கு அந்த வீடியோ வராம இருந்திருந்தா கண்டிப்பா அவளை நீ மருமகளா ஏத்திட்டு இருந்திருப்பேள்ல. கல்யாணத்துக்கு அப்புறம் நமக்கு தெரியவந்தா மட்டும் என்ன பண்ணிருக்கமுடியும் சொல்லுஎங்களுக்கு அவகிட்ட எந்த வேறுபாடும் தெரில. அன்னைக்கு இருந்த மாதிரி தான் இப்போவும் சகஜமா பேசுறா இருக்கா. ..ஒரு மருமகளா அவளோட கடமையை செய்யணும்னு நினைக்கிறா

அதுதான் மா, எனக்கும் குழப்பமா இருக்கு. இவளோட இத்தனை வர்ஷம் இருந்துக்கேன். இவகிட்ட பாத்த நல்ல விஷயம் பெருமையான விஷயம் எல்லாமே அன்னைக்கு அந்த வீடியோல அவ பேசுனத கேட்ட அப்புறம் சேத்தி வெச்சு யோசிச்சு பாத்தா தப்பா தான் தெரியுது. ஒருவேளை சொத்துக்காக தான் வந்தாளோன்னு சில நேரம் தோணுது. “

தாத்தாஅப்படியே இருந்தாலும் மாறக்கூடாதுங்கிரியா? ஆதி மாத்திடுவான். இல்லாட்டினாலும் அவளும் இப்போ இந்த வீட்டு மருமக. ஆதி அன்னைக்கு சொன்னதை கேட்டீங்க தானேஅப்புறமும் ஏன் இப்டி. …மொத்த சொத்தையும் வாங்கிட்டு போயி அவளும் அழிக்கவா முடியும். எப்படியும் அவ குடும்பம் கொழந்தைனு சந்தோசமா இருக்கனுன்னு ஆசைப்பட்டுஇருப்பா. அப்டி பாத்தாலும் அது யார் குடும்பம் நம்ம ஆதி குடும்பம் தானே. அவனை அனுசரிச்சு சந்தோசமா இருந்தா நமக்கு அதைவிட வேற என்னமா நிம்மதி இருக்கப்போகுது..நமக்கு புள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம்.

ஆதிக்கு அவமேல தானே அவ்ளோ பிரியம் இருக்கு. அதை நாம மாத்த முடியுமா சொல்லு. அவளும் மத்த எல்லா விஷயத்துலையு குறையில்லாம ஒரு மருமகளா, மனைவியா எல்லாமே பாத்து செய்யணும்னு நினைக்கிறா. அப்புறம் என்னமா?” என்க இன்னும் தன் மகள் முகம் தெளியாமல் இருப்பதை கண்டவர்

சரி மா, இப்போதைக்கு அவள நீ நல்லவன்னு ஏத்துக்கிட்டு கொண்டாடவும் வேண்டாம். ஆகாதவனு ஒதுக்கி வெக்கவும் வேண்டாம். கொஞ்ச நாள் இப்படியே போகட்டும். உனக்கா திரும்ப முழு நம்பிக்கை வரட்டும்..அப்போ நீ ஏத்துக்கோ. அதுவரைக்கும் ஆதிக்காகவாது எந்த பிரச்னையும் வேண்டாம். அவன் மனசு விட்ருவான். அவனுக்கு நாமளும் வேணும். திவியும் வேணும். அவனை நம்பு. அவனுக்காக பாரு.”

சரி ப்பா நீங்க இவ்வளோ சொல்லறீங்க. பாக்கலாம்.” என

பாட்டிஅது சரி மா, கூட இருந்து ஆதிக்கு பிடிச்சதை அவளுக்கு சொல்லு, நம்மகிட்ட எப்படியோ அவங்க இரண்டுபேருமாவது சந்தோசமா இருக்கணும்ல. அவனை இவளும் புரிஞ்சுக்கணும்ல.”

மதிஅதெல்லாம் அவளுக்கு நல்லாவே தெரியும் மாஆதியை பத்தி நான் எப்போ பேசுனாலும் என்ன நிறுத்தாம அவ்ளோ ஆர்வமா கேப்பா. ஆதிக்கு என்ன என்ன பிடிக்கும், பிடிக்காது, எத விரும்பி சாப்பிடுவான், எப்போ கோபப்படுவான். யாரை பிடிக்கும், அவனுக்கு ரூம் எப்படி இருக்கணும்னுகிறதுல இருந்து அவன் கனவு லட்சியம் வரைக்கும் எல்லாமே அவளுக்கு தெரியும். அவளுக்கு தெரிஞ்ச இத்தனை விஷயங்களோட சேத்தி அவளோட குணம், அவன் கோபத்தை பிடிவாதத்த தான் யாராலயும் மாத்த முடியாது நினச்சேன். ஆனா இவ அதையும் ஒரு நாள் மாத்தி காமிச்சு அவனவே சிரிக்கவும் வெச்சுட்டா. அப்போவே மனசு நிறைஞ்சிடுச்சு. ஆனா இப்போ…” என அவர் இழுக்க

பாட்டி தான்இப்போ மட்டும் என்ன, எதுவும் ஆகல. எல்லாமே நல்லபடியா நடக்கும் மனச போட்டு கொழப்பிக்காத. போஎன கூறினார்.]

இதை எண்ணிப்பார்த்துக்கொண்ட பெரியோர்கள் திவிக்காக வருத்தப்பட்டனர்.

அவள் மற்ற அனைவர்க்கும் பரிமாற ஈஸ்வரி தான்ஏன் சோபி நீதானே ஆதிகிட்ட பேசிட்டு இருந்த ஏதாவது சொல்லிட்டு போனானா? “

சோபிஇல்ல மா, அம்முவும் இல்லையே அம்மா மட்டுமா இன்னைக்கு சமைக்காரங்கனு கேட்டாரு. இல்ல உங்க பொண்டாட்டி திவி தான் சொன்னேன். எனக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்னுகிளம்பி உடனே போய்ட்டாரு. “நானும் ஏதோ அவசர வேலைனு நினச்சு கூப்பிடல மா.” என பொறுமையாக சொல்ல

ஈஸ்வரிம்ம். ..நீ என்ன பண்ண முடியும். …அவசர வேலைன்னாலும் கட்டுன பொண்டாட்டிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போக தோணலேல்ல. பொண்டாட்டின்னு நினைப்பு இருக்கோ இல்லையோ? கட்டிக்கிட்டோமேன்னு வேற வழியில்லாம இருக்கானோ என்னவோ. ” என நீட்டி முழங்க

தாத்தாவும் பாட்டியும் இவர்களை முறைத்துக்கொண்டே இருக்க திவிக்குயாரு சமையல்னு ஆதி கேட்டாரா? நான் காலைல சொல்லிட்டு தானே வந்தேன். சமையல் வேலை இருக்குனு அண்ட் சாப்பாடு எடுத்து வெக்கறேன்னு சொல்லும் போதுகூட அவரும் எதுவும் ரியாக்ட் பன்னலையேஇந்த சோபனா ஏதாவது வில்லத்தனம் பண்ராளா? ஆள பாரு வெள்ள பனானா மாறி நட்டமா இருக்கா. ..இருடி தோலை உரிக்கறேன்ஆனா ஏன் இதுங்க திரும்ப திரும்ப அதவே சொல்லி வெறுப்பேத்தறாங்க. …என திரும்பியவள் மதி அத்தை இவர்கள் பேசியதை கேட்டு அப்டியே நிற்க திவி, அடிபாவிங்களா? என நினைத்துக்கொண்டு மீண்டும் திரும்பி

நீங்க நினைக்கிற மாறி இல்ல ஆண்ட்டி, அவரு காலைலேயே சொல்லிட்டாரு அவருக்கு ஆபீஸ் இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு. அப்போவே சொன்னேன் நான் சமைக்கறேன் சாப்பிட்டு போங்கன்னுஅவரு சரி டைம் இருந்தா சாபிட்றேன். இல்ல அப்புறம் வந்து கூட சாப்பிட்டுக்கறேன்னு..”

எதுக்கு அலைச்சல் அப்டி கிளம்பிட்டா அங்கேயே சாப்பிடுங்க. .மதியம் வாங்கனு சொன்னேன். .இருந்தாலும் சீக்கிரம் ரெடி பண்ணிட்றேன்னு தான் எல்லாம் எடுத்து வெச்சேன். அதுக்குள்ள ஓடிட்டாரு.” என அவள் சாதாரணமாக கூற

சோபனாநீதான் வேலை செஞ்சிட்டு இருந்தியேஎப்போ பேசுனாரு?” என விடாமல் கேட்க

திவிஆமா நான் காலைல அவரை எழுப்பி காபி குடுக்க போனபோது பேசுனாரு. என்ன விடவே இல்லகீழ சமையல் வேலை இருக்குனு சொன்னேன்.. அப்போதான் சொன்னாரு.” என

சோபிநீ சொல்றது உண்மையா? ” என அவள் ஒரு மாறி கேட்க

திவியும்உண்மையா பொய்யான்னு உனக்கு எப்படி தெரியும். ரூம்ல வந்து எட்டி பாத்தியா என்ன? ” என நேரடியாக கேட்க சோபிக்கு என்ன கூறுவது என தெரியவில்லை. பொய்ன்னு சொன்னா அவள் சொன்னமாதிரி எல்லாரும் சந்தேகப்படுவாங்க . இல்லைன்னா அவள் ஒத்துக்கணும். என யோசிக்க

திவியுடன் சேர்ந்து இப்போ தாத்தா, பாட்டி அனைவரும் முறைத்துக்கொண்டு நிற்கஇல்ல, சொல்லிருந்தா சரி….” எனக்கு போதும். என எழுந்துவிட்டாள்.

மதிக்கு திவி சொன்னதை கேட்டபிறகுதான் மூச்சே சாதாரணமாக வந்தது. மதி சேகர் அமைதியாக இருக்க காரணமே அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது. அவங்க பிடிச்சவங்க கூட வாழ்க்கையாவது நல்ல படியே அமைஞ்சதேன்னு தான் ஏதோ ஒரு மன ஆறுதலோடு நடமாடி கொண்டிருக்கின்றனர். ஆதியின் குணம் அந்த மாதிரி. பிறருக்காகவோ, தனக்காகவோ சரி ஒன்றை ஒப்புக்கொண்டால் பாதியில் விட்டு வரமாட்டான். அதில் என்ன பிரச்சனை வந்தாலும் இறுதி வரை அவன் தான் பொறுப்பு என இருப்பவன். ஒருவேளை அன்னைக்கு கோபத்துல அவன் சொன்ன மாதிரி பழிவாங்க ஏதாவது சொல்லி கல்யாணம் பன்னிட்டு வந்து இரண்டு பேரும் சந்தோசமா வாழலேன்னா கடவுளே. திவி மீது என்னதான் கோபம் இருந்தாலும் அவள் வாழ்க்கை பாழாகட்டும் என எண்ணவில்லை. இன்னொரு புறம் தன் பிள்ளை. சொத்து பிரச்னை, குடும்ப பிரச்சனைன்னு இருந்தாலும் அவங்களுக்கு மனசு ஒத்துபோகுதேன்னு தான் நிம்மதியா இருக்கேன். அதவாது அப்டியே குடுப்பா. என வேண்டிக்கொண்டாள்.

அனைவரும் பின்பு சாப்பிட்டு விட்டு எழுந்து செல்ல,

மதியும் உள்ளே சென்று விட பாட்டி தாத்தா அறையில் இருக்க திவி அவர்களிடம் வந்துமதி அத்தை சங்கடப்படுவாங்கனு தான் அப்டி பொய் சொல்லிட்டேன். அவங்கள கோபப்பட்டு திட்டுனாலும் சண்டை தான் வரும். அவங்க சொன்னதை ஒத்துக்கிட்டாலும் ஆதியை விடுகுடுத்தமாதிரி ஆகும் அத்தையும் வருத்தப்படுவாங்ககண்டுக்காம விட்டாலும் அவங்க 2 பேரும் திரும்ப திரும்ப பேசுவாங்க. அதனால அப்டி பொய் சொல்லிட்டேன். சாரி தாத்தா, சாரி பாட்டி. ” என தலை குனிந்து நிற்க பாட்டி அவளை அருகில் அழைத்து தங்கள் இருவருக்கும் நடுவில் உட்கார வைத்துக்கொண்டு

நீ ஏன் வருத்தப்படற, நாங்க எதுவுமே உன்ன குறை சொல்லல. நீ பண்ணது சரி தான். நாங்களும் அவளுங்க இரண்டு பேர்கிட்டேயும் பக்குவமாவும் சொல்லி பாத்துட்டோம். திட்டியும் பாத்துட்டோம். இந்த மாதிரி அடுத்தவங்க மனசு சங்கடப்படறமாதிரி பேசாதிங்கனு. ஒன்னு சண்டை போட்டு பேசுவாளுங்க, இல்ல, நாங்க அதுக்கு சொல்லல, நடக்காததையா பேசுறோம்னு திரும்பவும் ரொம்ப பேசுவாங்க, அப்புறம் மன்னிப்பு கேட்கறோம்னு மறுபடியும் அத ஞாபகப்படுத்தி, சொல்லிக்காட்டி, இனி எதுவும் சொல்லலனு மன்னிப்பு கேப்பாங்க. எப்படியும் எல்லாரையும் சங்கப்படுத்திடுவாங்க. இந்த குணம் தெரிஞ்சதால தான் ஏன் அவங்க வாயில விழுகணும்னு பேசாம விடறது.. ஆனா நீ சொல்றது உண்மைதா விடாம தொரத்தி தொரத்தி அத பத்தியே சொல்லி பேசம்போது விட்டுத்தள்ளிட்டு போகவும் முடியாது. சுத்தி இருக்கற இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் உன் புருசனோட கோபத்தை சொல்லி குடும்பத்தி பிரச்சனை பண்ண பாக்குறாங்க. அவங்களுக்கு சோபியை அவனுக்கு கல்யாணம் பண்ணாலேன்னு கோபம் அதனால இப்டி நடந்துக்கறாங்க. ஆனா ராஜாவுக்கு உன் மேல கொள்ள பிரியம். இல்லாட்டி எங்க எல்லாரையும் எதுத்துக்கிட்டு உன்ன கல்யாணம் பண்ணுவானா? அப்பவும் உன்ன திட்டும் போது அவன் தான் கட்டாயப்படுத்தி பண்ணேனும் சொன்னான். உன்ன விட்டுகுடுக்கல. விடவும் முடில. அதே அளவுக்கு அந்த பிரச்சனை அவனுக்கு குழப்பமாவும் இருக்கும். கோபத்துல எதாவது பேசுனாலும் நீ அனுசரிச்சு போகணும் டா. இப்போ இருக்கற பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியறவரைக்கும், இல்லாட்டி உன்ன அவன் இன்னும் முழுசா புரிஞ்சுக்கற வரைக்கும். வீட்ல என்னென்னவோ நடந்துபோச்சு. இந்த நேரத்துல மதிக்கும், மாப்பிள்ளைக்கும் இருக்கற ஒரே நிம்மதி நீயும், ராஜாவுமாவது சந்தோசமா இருக்கீங்களேன்னு தான்.

அதனால அத எந்த காரணத்துக்காகவும் இல்லைனு காட்டக்கூடாது. ரொம்ப மனசு ஒடஞ்சுடுவாங்க. உனக்கு நான் சொல்றது புரியுதில்ல.?”

திவிபுரியுது பாட்டி, அத்தை மாமா மட்டுமில்ல, யாருகிட்டேயும் நான் ஆதியை விட்டுகுடுக்கமாட்டேன். அவரை நான் இப்போ மட்டுமில்ல எப்போவுமே குறை சொல்லமாட்டேன். என்ன சில நேரம் அந்த கோபத்துல என்ன பேசுறோம்னே தெரியாம பேசிடுவாரு. ஆனா அடுத்த நிமிஷமே வந்து என்ன வேணும்னு கேட்டுட்டு நிப்பாரு. பாசமானவங்ககிட்ட அவரோட கோபம் குழந்தைத்தனமா இருக்கும். முக்கியமா என்னோட விசயத்துல குழந்தைங்க பொம்பைக்கு அடம்பிடிக்கறது தான் ஞாபகம் வரும்.

அவர்கள் புரியாமல் விழிக்க திவிகுழந்தையை கடைக்கு கூட்டிட்டு போறோம். கடைல நிறைய பாத்தாலும் ஏதாவது ஒரு பொம்மை ரொம்ப புடிச்சு போகும். அத வாங்கி தரேன்னு சொன்னதும் அது கூட இப்டி இருப்போம், அப்டி இருப்போம்னு எல்லாம் கனவு கோட்டை கட்டிடுவாங்க. அந்த குழந்தைங்களுக்கு தெரியாது அதோட விலைமதிப்பும் சரி, குறையும் சரி. எனக்கு இது வேணும்னு நிப்பாங்க. அது ஒரு சின்ன டேமேஜா இருக்குனு வேற வாங்க சொன்னா மாத்திக்கமாட்டாங்க. அதைவிட பெருசு, அத விட அழகா வேற எது வேணும்னோ நீயே பாத்து எடுனாலும் அவங்களால மனச மாத்திக்கமுடியாது. இதுதான் வேணும்னு நிக்கும் குழந்தை. சரி இதே வேற பீஸ் வரட்டும் அப்புறம் வாங்கித்தரேன்ன்னு சொன்னாலும் அவங்களுக்கு உள்ள எப்படியும் ஒரு பயம் தான் வரும்.. இவங்க வேணாம்னு சொன்னாங்க. இப்போ அப்புறம்ன்னு சொல்ராங்க. எப்படி நம்புறதுன்னு குழப்பிக்கிட்டு இது போனா கிடைக்காது மொதல்ல நம்மகிட்ட இத எப்படியும் கூட்டிட்டு போய்டணும்னு ஒரு வேகம் அத அடைஞ்சிடணும்னு தோணும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இல்ல பிடிவாதம் பண்ணி எப்படியும் வாங்கிடுவாங்க. அத கூட்டிட்டு வந்துட்டு சில நேரம் அந்த பொம்மையை போட்டு படுத்துற பாடு பாவமா இருக்கும். ஆனா அந்த குழந்தைங்களுக்கு மனசளவுல இது என்னோடது. எனக்கு மட்டுமே சொந்தம். நான் என்ன பண்ணாலும் என்கிட்ட இருக்கும்னு ஒரு எண்ணம் இருந்திட்டே இருக்கும். அத அவங்க அடிச்சாலும், தூக்கிப்போட்டாலும் அதே இடத்துல இருந்துட்டா சரி. வேற யாராவது அத பாவம் பாத்து எடுத்தாக்கூட எங்க விட்டுட்டு போய்டுமோன்னு கோபம் வரும். உடனே போயி இது என்னோடதுனு எடுத்துவெச்சுப்பாங்க. நான் திட்டுனா என்ன விட்டுட்டு போய்டுவியான்னு திரும்ப அதே பொம்மைகிட்ட தான் கேப்பாங்க. அந்த நேரத்துல அந்த குழந்தைங்களை பாக்கவே சிரிப்பா இருக்கும். அவங்களுக்கு இது வேணும்னு தெரியும். ஆனா காரணம் தேவையில்ல. குறை நிறைகளோட அன்பா ஒருத்தர ஏத்துக்கறத நாம அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கமுடியும்.

ஆதியும் என் விசயத்துல அவருக்கு பிடிச்ச, அவருக்கு மட்டுமே சொந்தமான பொம்மையா தான் என்ன பாக்கறாரு. என்னோட குறைகளும், நிறைகளும் சரி அவருக்கு எதுவும் பெருசில்ல. அவருக்கு நான் அவரோட இருக்கனும். என்கிட்ட குழந்தைத்தனமா அன்ப மட்டுமே எதிர்பாக்கிற ஒரு அழகான ஆழமான காதல் அவரோடது. அத இழக்கக்கூடாது இழக்கமாட்டேன். என்னை எனக்காகவே இப்டியே ஏத்துக்கிட்ட அவரை எப்போவுமே சந்தோசமா வெச்சுக்கணும்.. அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நான் கூட இருப்பேன் பாட்டி.” என கூற பாட்டியும் தாத்தாவும் புன்னகைத்துக்கொண்டனர்.

பாட்டிஎன் பேரனை குழந்தையை பாக்கிற. சந்தோசம். ஆனா குழந்தைங்களுக்கு நல்லது கெட்டது எதுவுமே தெரியாது. ஆதி அப்டி இல்லையே. பொம்மைக்கு திரும்ப பேச முடியாது. நீயும் அப்டி இல்லையே. உயிருள்ள பொண்ணு அவன் சுத்தி நடக்கற பிரச்னைல ஏதாவது வரம்பு மீறி பேசவும் வாய்ப்பிருக்கே. அப்டி அவன் பண்ணி உண்னையும் காயப்படுத்தி அவனையும் கஷ்டப்படுத்துக்குவானே மா அதான் சங்கடமா இருக்கு. நீ அந்த பிரச்சனையை சீக்கிரம் சரி பண்ணப்பாரு மா. “

அதை ஆமோதித்த திவிநீங்க இரண்டு பேரும் என்னை இவ்ளோ நம்புனதே எனக்கு சந்தோசம். உங்ககிட்ட நான் சொல்லக்கூடாதுனு நினைக்கல. ஆனா வேற வழியில்லை. நான் நம்ம குடும்பத்துக்காக ஒரு சத்தியம் பண்ணிட்டேன். நான் ஏன் அந்த மாதிரி பேசுனேன்னு ஆதியை தவிர யாருக்கும் காரணம் சொல்லமாட்டேனு. சத்தியத்தை மீற மனசில்லை. மீறி ஏதாவது யாருக்காவது ஆயிடிச்சுனா என்னால தாங்கிக்க முடியாது. கண்டிப்பா சீக்கிரம் அவர்கிட்ட இத பத்தி பேசி பிரச்சனைய முடிச்சிடலாம். விஷயம் தெருஞ்சுட்டா அவரும் முழு மனசோட இந்த வாழ்க்கைய ஏத்துக்குவாரு. இனி எப்போவும் எங்க வாழ்க்கை முழுசும் நானும் ஆதியும் ஒன்னாவே தான் இருக்கப்போறோம். எப்படியும் நான் சொத்தை எழுதி வாங்க போறதில்ல. குடும்பத்துல இருக்கறவங்கள பிரிக்கவும் மாட்டேன். யாராவது இவங்களுக்கு பிரச்சனை குடுக்க பிளான் பண்ணாலும் நான் கண்டிப்பா அதுக்கு தடையா தான் இருப்பேன். கொஞ்ச நாள் ஆனதும் மறுபடியும் எல்லாரும் நல்லபடியா பேசிடுவாங்க. அப்புறம் எந்த ப்ரோப்லேம் இருக்காது. ஆதி மனசுல உறுத்தல் இல்லமா இருந்தாலே போதும். அவரோட நம்பிக்கை தைரியம், தெளிவு தான் இந்த குடும்பத்தோட சந்தோசம். அவருக்கு சந்தோசமே நீங்க எல்லாரும் தான்.

அதனால தான் நான் தைரியமா நம்பிக்கையா இருக்கேன். ஆதி குழப்பமில்லாம இருந்தாலே எல்லா பிரச்னையும் முடிஞ்சுடும்.” என கூற

தாத்தாரொம்ப கரெக்டா சொன்ன, என் பேரன நீ பத்திரமா சந்தோசமா பாத்துப்ப, அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அவன்கிட்ட உன்ன பாத்துக்க சொல்லவே வேண்டாம். நீ சொன்ன மாதிரி இந்த பொம்மை என்னோடதுனு சொல்லிட்டு சுத்தறான். என்ன எல்லாரும்பெரியவங்கலாய்ட்டதால தூக்கி மட்டும் தான் வெச்சுகல.. அதுக்கு வழி இருந்தா அதையும் பண்ணிருப்பான்.” என அவர் கூற திவிக்கு மகிழ்ச்சியுடன் வெட்கமாகவும் இருந்தது.

அவளும் சிரித்து கொண்டேபோங்க தாத்தாஎன ஒடியேவிட்டாள்.

பெரியவர்களும் சிரித்துக்கொண்டு எப்படியும் புள்ளைங்களுக்கு எல்லாம் சீக்கிரம் சரி ஆய்டும்னு நம்பிக்கையுடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ! [googleapps domain=”drive”

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05

திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15

15 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் விடிந்ததும் ஆதர்ஷ் அவளை எண்ணிக்கொண்டே சிரிப்புடனே புரண்டு படுக்க வெளியே சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்தவன் மணி ஆறே கால் என காட்ட என் செல்லம் எந்திரிச்சுட்டாளா? என்றவன் வெளியே வந்து அவள் துவைக்க