Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானங்கள் – 1

மேற்கே செல்லும் விமானங்கள் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ்,

திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களை எழுத்தாளராக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுமட்டுமன்றி, கணினி வல்லுநராய், யூடியூபில் பங்குச்சந்தை மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராயும்இயங்கிக் கொண்டிருக்கிறார்.
அவரது ‘மேற்கே செல்லும் விமானம்’,  ‘காணமல் போன பக்கங்கள்’, ‘நேற்றைய கல்லறை’ என்பன, இன்றைய எழுத்தாளர்களுக்கு  எப்படி அழகாகவும், தொய்வில்லாமலும் கதையைநகர்த்தி செல்வதெனச் சொல்லும் பாடமாகும்.
திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் கதைகளை அவரது சம்மதத்துடன்  நமது தளத்தில் பதிவிட இருக்கிறோம். பதிவிட அனுமதித்ததற்கு நன்றி மோகன் ஸார்.
மேற்கே செல்லும் விமானம்:
நாம் மேற்குலகைப் பார்த்து கலாச்சார சீரழிவை மட்டுமே எடுத்துக் கொண்டு முன்னே செல்லும்போது, நம்மிடம் இருக்கும் பல சிறப்பான அம்சங்களை மேற்குலகினர்  கற்க விரும்புதை அடிப்படையாக வைத்து எழுதியிருப்பது தான் இந்த படைப்பு.

அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் பலவற்றை நாம் கண்டுக் கொள்வதில்லை. ஆனால், அவர்களோ நம்மிடம் இருக்கும் கடினமான விஷயங்களை கூட, அவை நன்மை பயப்பதால்  ஏற்கத் துணிகிறார்கள். இதுவே இதன் சாராம்சம்.

முதல் பதிவை படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே

[scribd id=372816132 key=key-oZGa9eOPh4rSvadDRaZc mode=scroll]

அன்புடன்

தமிழ் மதுரா

 

4 thoughts on “மேற்கே செல்லும் விமானங்கள் – 1”

  1. தமிழ் மதுரா தங்களின் முன்னுரை என் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டது. நம் விமானம் எத்திசையில் பயணித்தாலும் நம் தேவைகளும், சூழலும் மற்றும் எண்ணங்களின் போக்கைப் பொறுத்தே அந்தந்த மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து கற்றுக்கொள்ள விழைகிறோம். நம்மிடம் இருக்கும் விலைமதிப்பற்ற விஷயங்களை அறியாத ஒருவருக்கு நம்மிடம் இருக்கும் பொக்கிஷம் பற்றி அறிய முடியுமா? நாம் வளரும் பொழுதே ஆழ பதிந்த கருத்துக்களின் தாக்கம் நம்மோடு பயணிக்கும். ஆகையால் நாம் கற்பவை எவை என்பது நம்மை சார்ந்ததே… (நம் சமூகம், குடும்பம், கல்விநிலையங்கள், மதம் போன்றவை நம் எண்ணங்களை வார்த்தெடுக்கும்)

    ஆசிரியர் எழுது நடை எளிமையாக இருக்கிறது. ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து…

  2. நான் வாசித்து விட்டேனே!

    சொல்லவேண்டியதை வளவளவென்று இழுக்காது நச்சென்று சொல்லிவிட்டார்.

    அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு இருக்கு .

    ஹ்ம்ம் பார்ப்போமே…

    நன்றி தமிழ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மெல்லக் கொல்வேன் – குறுநாவல்மெல்லக் கொல்வேன் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது அழகான புதினத்தின் வாயிலாக நம்மை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=379018659 key=key-4np4W4YUd13DWMf8W7aD mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

மேற்கே செல்லும் விமானம் – 12மேற்கே செல்லும் விமானம் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 [scribd id=375054091 key=key-KduMNa5jOpRuJGWlZ0b5 mode=scroll]

மேற்கே செல்லும் விமானங்கள் – 3மேற்கே செல்லும் விமானங்கள் – 3

வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்… [scribd id=372890235 key=key-fmnoTjY8PvUKL8gnQI0i mode=scroll]   அன்புடன்,