Day: January 30, 2020

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 11

11  பேராசிரியர் முருகேசுவைப் பார்க்க அடுத்த நாள் காலை அவன் விடுதியிலிருந்து புறப்பட்டபோது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன் தெரியவில்லை. இந்த அழகிய பினாங்குத் தீவில் மழைக்காலம் தொடங்கிவிட்டது என்று நினைத்தான். அதிகாலை வரை மழை பெய்த தடயங்கள் இருந்தன.