Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

அர்ச்சனாவின் ‘காதல் என்பது இதுதானோ’ (கவிதை)

என் காதல் வானிலே

இரவிலும் வானவில் தோன்றுதே

என்னுள் பூத்த பூவொன்று

வாழ்வில் வாசம் வீசுதே

உள்ளங்கையில் புதிதாகக்

காதல் ரேகையும் தோன்றுதே

வெயிலிலும் ரகசியமாய்

மழைச்சாரல் என்னை நனைக்குதே

உன்னிடம் மட்டுமே சொல்லிட

கதைகள் கோடி உள்ளதே

உனக்காக மட்டுமே வாழ்ந்திட

உயிரும் உறுதி கொண்டதே

உன்னைக் காணாத பொழுதுகளில்

காதல் என்னுள் பெருகுதே

என் அருகே நீ இருந்தால்

தயக்கங்கள் தடமின்றி மறையுதே

நாம் சேர்ந்து போகும் பாதை

கண்முன்னே விரியுதே

உந்தன் எந்தன் நிழல் கூட

கைக் கோர்த்து நடக்குதே

சாலையோர மரங்களெல்லாம்

பூக்கள் தூவி வாழ்த்துதே

இதுவரைக் கண்டிராத அலையொன்று

என் இதயத்தை வருடிச் சென்றதே

காதல் என்பது இதுதானோ!

காற்றோடு கனவில் மிதப்பேனோ

உன் நினைவுகளை மாலையாக்கி

என் உயிருக்குச் சூட்டி மகிழ்வேனோ!!

— அர்ச்சனா

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது

புன்னகையே பதிலாய் (கவிதை)புன்னகையே பதிலாய் (கவிதை)

வணக்கம் தோழமைகளே! நமது தளத்துக்கு தனது கவிதை மூலம் வருகை தந்திருக்கும் சுரபி மூர்த்தி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.  இத்தனை அழகாய் காதலை சொல்லும் காதலிக்கு அவனின் புன்னகை கிடைக்காமலா போய்விடும் சுரபி.  அன்புடன், தமிழ் மதுரா     புன்னகையே