வார்த்தை தவறிவிட்டாய் (Final update) – 15

ஹாய் பிரெண்ட்ஸ்,

வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை ஒவ்வொரு பகுதியிலும் அவர் இருந்தார். முடிவு படித்துவிட்டு அவருக்கு மிகவும் திருப்தி. இந்த முறை  என் தோழிகள் சில பேரிடம் படித்து அவர்கள் எண்ணங்களை  சொல்லுமாறு கேட்டிருந்தேன். அவர்களும் வேலைப்பளுவுக்கு நடுவே படித்து சொன்னார்கள். எல்லாருக்கும் முடிவு மிகவும் பிடித்திருந்தது.

உங்க எல்லாருக்கும் 1000 Thanks from my heart to yours.

முன்பே சொன்ன மாதிரி இது ஒரு வித்யாசமான கதை. முடிவும் வித்யாசமாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். இதற்கு பலமாய் பத்மாவின் கவிதைகள்.அதுவும் இந்தக் கடைசி அத்தியாயத்தில் வரும் இந்தக் கவிதையைத்தான் சில மாதங்களுக்கு முன் முகநூலில் படித்தேன்.  நான் நினைத்த அதே முடிவு நாலே வரிகளில் நச்சென்று சொல்லி இருந்தார். சற்று மாற்றி கதையில் உபயோகப்படுத்திக் கொண்டேன். உணர்ச்சி ததும்பும் இந்தக் கவிதைகளை எங்களுக்குத் தந்ததுக்கு நன்றி பத்மா.

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு முன் ஒரு தோழி அவர் சொந்தக்காரப் பெண்ணுக்கு இதே போல் ஒரு சம்பவம் வாழ்க்கையில் நடந்தது என்று வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. சட்டரீதியாக பிரச்சனையை அணுகுங்கள் தோழி. அத்துடன் அந்தப் பெண்ணின் பாதுகாப்பான வாழ்வுக்கும், அவர்  சுயகாலில் நிற்கவும்  ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கான பதிலை நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதாது அந்தப் பெண்ணும் சேர்ந்து கண்டறிய  வேண்டும். கண்டிப்பாக கல்வியைத் தொடர வழி செய்யுங்கள். அவருக்கு துணிவையும் நம்பிக்கையையும் தாருங்கள்.

இப்போது கதையைப் பற்றி பார்ப்போம். பூர்வஜாவுக்கு ஏன் கடுமையான தண்டனை தரல என்று கேட்கலாம். கிட்டத்தட்ட நாப்பது வயதில் வேலை இல்லாம நிற்பதே இவளுக்கு ஒரு தண்டனைதான்.  நிஜத்தில் இந்த மாதிரி பெண்கள் எல்லாம் நல்லாவே இருப்பாங்க. இவங்க மேல சபலப்பட்ட ஆண்கள் தான் மனைவி, மக்கள், சொத்து,  மரியாதை எல்லாம் இழந்து கஷ்டப்படுவாங்க.  கதையின் இறுதிப் பகுதியைப்  படிங்க, படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை எழுதுங்கள். உங்களோட எண்ணத்தை அறிய ஆவலா இருக்கேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 15

இந்தக் கதையின் போது நான் சொன்ன மாதிரியே நீங்க சித்ராங்கதாவை மறந்துட்டு பானுவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது எனக்கு சந்தோஷம். இப்போது விடைபெறுகிறேன். மற்றுமொரு படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

அத்தியாயம் – 15

ரவு சுவர்கோழியின் கூப்பாட்டையும் கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தையும் தவிர வேறில்லை. அதற்கு ஈடாக பிரகாஷின் மனசாட்சி குறை கூறியது. எவ்வளவு தைரியம் இந்த பூர்வஜாவுக்கு? எல்லாருக்கும் முன்னாடி என் மனைவியைப் பார்த்து ஆயான்னு சொல்லுவா? எல்லாம் நான் தந்த இடம். அப்பறம் என் பேச்சால நடந்த நிகழ்ச்சியை சரி செய்றதுக்குள்ள பெரும்பாடா போயிடுச்சு. 

குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு ஹாலில் இறைந்து கிடந்த பொருட்களை ஒதுங்க வைத்தாள் பானு. 

“இதுக்காகத்தான் உனக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேன்” கண்டிப்பான குரலில் பேசிய பிரகாஷை நிமிர்ந்து பார்த்தாள் பானுப்ரியா. 

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றிங்களா” 

“எவளோ ஒருத்தி உன்னை ஆயான்னு கிண்டல் பண்ணுறா… நீ தேர்ந்தெடுத்த தொழில் சரியில்லை”

“இப்பதான் கொஞ்ச காலமா சரியான முடிவுகளை எடுத்துட்டு வரேன்”

“என்னடி சரியான முடிவெடுத்திருக்க… உனக்கும் உன் பிரெண்ட்ஸ்க்கும் மிஞ்சி மிஞ்சிப் போனா இதுல மாசம் பதினஞ்சாயிரம் கையில் நிக்குமா? இதுக்கு மூணு பேரும் மாங்கு மாங்குன்னு உழைக்கிறிங்க”

“நாங்க மெதுவா வளர்வதைப் பத்திக் கவலைப் படல. ஆனா இதே இடத்தில் தேங்கிடாம இருக்கணும்னு உறுதியா இருக்கோம்”

“சொன்னாக் கேளு பானு. நான் வெளிநாட்டில் இருக்கும்போது உனக்கும் ஒரு மாற்றம் தேவைன்னுதான் இந்த டேகேர் ஆரம்பிக்கவே சம்மதிச்சேன். இனிமே எனக்கு சம்பளம் ரெண்டு மடங்காகும். உன் வருமானத்தையும் சேர்த்து சம்பாதிப்பேன்”

“அது உங்க சம்பாத்தியம். உங்களோட சாதனை. இது என்னால முடிஞ்சது”

கோவத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாகப் பேசினான் “ அதென்ன என் சம்பாத்தியம் உன் சம்பாத்தியம்னு….. இத்தனை நாள்ல சம்பாதிச்சியோ இல்லையோ நல்லா வாய் பேசக் கத்துகிட்டிருக்க. நான் சொல்றதைக் கொஞ்சம் காதைத் திறந்து வச்சுக் கேளு. நான் வேலை சம்பந்தமா மறுபடியும் வெளிநாட்டுக்குப் போக வேண்டியது வரலாம். அங்க ரெண்டு மூணு வருஷம் தங்க வேண்டி இருக்கலாம். அந்த சமயத்தில் கூட வர முடியாம நீ இப்படி ஒரு பிசினெஸ்ஸில் மாட்டிட்டு  இருந்தா சரிபட்டு வருமா?”

“எந்த நாட்டுக்குப்  போனாலும் நீங்க மட்டும் போயிட்டு வாங்க. பழகின ஊர் தான் எனக்குக் குழந்தைகளை வளர்க்க வசதி.நான் இங்கதான் இருப்பேன். என் பிசினெசை கவனிப்பேன்”

பிரகாஷின் வெளிநாட்டு வாழ்க்கை அஸ்திரமும் பலனளிக்காது போய்விட்டது. “என்ன பெரிய பிஸினெஸ்… நாலு குழந்தைகளை மேய்க்கிறது ஒரு வேலையா… “ கோவத்தைத் தனித்துக் கொண்டவன் இறைஞ்சும் குரலில் சொன்னான் “நீ சம்பாதிக்கிற பணத்தை இனிமே பாக்கெட் மணியா எடுத்துத் தனியா தந்துடுறேன். உனக்கே உனக்குன்னு வச்சுக்கோ. ஆனா இந்த பிசினெஸ் வேண்டாம். பாரு அந்த பூர்வஜா கூட உன்னை ஆயான்னு கிண்டல் பண்றா… எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்தது தெரியுமா?”

சோபாவைப் பிடித்துக் கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்தாள் பானு. அவள் முகத்தில் உணர்வுகள் மாறி மாறி வந்து போயின.

 “அவளை மாதிரி ஒரு தரங்கெட்டவ சொன்னதை நினைச்சு நான் ஏன் கவலைப்படணும்”

திகைப்பில் முணுமுணுத்தான் “பானு” 

“மேய்க்கிறதுக்கு குழந்தைகள் என்ன ஆடா இல்லை மாடா? குழந்தைகளைப் பராமரிக்கிறது உங்களுக்கு சுலபமான வேலையா தெரியுதா? இங்க ரூம்ல அடைச்சு சாப்பாடு போட்டு, டிவி பாக்க விட்டு அனுப்புறோம்னா நினைக்கிறிங்க? தினமும் வீட்டில் செய்த சிறுதானிய உணவுகளைத் திம்பண்டமா தரேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் சொல்லித்தரோம். வெள்ளிக்கிழமை சாவித்திரி மாமி சுலோகம் கிளாஸ் எடுக்குறாங்க. திங்கள் நேத்ரா டான்ஸ் கிளாஸ் சொல்லித்தரா. செவ்வாய் நூர்ஜஹான் கிராப்ட் சொல்லித்தரா. புதன் கராத்தே கிளாஸ், வியாழன் மாரல் வகுப்பு இப்ராஹிம் அங்கிள் சொல்லித்தரார். இதைத்தவிர தினமும் கால்மணி நேரம் யோகா கிளாஸ் சதாசிவம் மாமா மேற்ப்பார்வையில் குழந்தைகள் கண்டிப்பா பண்ணணும்னு ஒரு ரூலே இருக்கு. இப்ப நான் சம்பாதிக்கிறது கையளவு இருக்கலாம். ஆனால் எங்ககிட்ட வர குழந்தைகளுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை போடுறோம். கல்வி வியாபரமாகிட்ட இந்த காலத்தில் எங்கள் வயத்து பிழைப்புக்காக செய்யும் தொழிலும் நன்மையைத் தர்றோம். எனக்கு சோறு போடுற தொழிலைப் பத்தி யாரு கேவலமா பேசினாலும் என்னால பொறுத்துக்க முடியாது. அவ கேவலமா பேசினதுக்கு என் வேலை காரணமில்லை. நீங்க தந்த இடம்தான் காரணம்.”

பானுப்ரியா இவ்வளவு நீளமாகப் பேசிப் பிரகாஷ் கேட்டதில்லை. “ஏன் இவ்வளவு டென்சன் ஆற பானு” 

“நானா டென்சனாறேனா…. கட்டின கணவன், நான் சகோதரியா மதிச்சவளோட ஜோடி போட்டு சுத்துறதைக் கண்ணால பார்த்தும் ஏன்னு உங்க சட்டையைப் பிடிச்சு உலுக்காம வந்தேன் பாருங்க… எனக்கு டென்சன் ஜாஸ்திதான். இன்னி வரைக்கும் மனசுக்குள்ள தினம் தினம் செத்து பொம்மையா நடமாடிட்டு இருக்கேன் பாருங்க… நான் ஆத்திரக்காரிதான்”

“பா…னு”

“ஆமாம் பானுதான். ஆனா உங்க பொண்டாட்டி பானுப்ரியா எப்ப உங்க துரோகத்தை பார்த்தாளோ அப்பவே செத்துட்டா”

இதற்குள் சுதாரித்திருந்தான் பிரகாஷ் “நீ பார்த்தது எதுவும் பொய்யில்லை. நான் செய்த துரோகத்தை சாரின்னு ஒரு வார்த்தையால்  சரி படுத்திட முடியாது.இருந்தாலும் நான் கேட்டே ஆகணும். ஒரு சபலத்தில் தப்பு பண்ணிட்டேன். பூர்வஜாமாதிரி ஒருத்தி என் மனசைக் கலைக்க முயற்சி செய்திருந்தாலும் நான் சலனப்பட்டிருக்கக் கூடாது. அந்த சமயத்தில் என் அறிவு படிப்பு எல்லாம் எனக்குத்தெளிவைத்தரல. இந்த வயசிலும் என் பின்னாடி ஒருத்தி என் பார்வைக்காகசுத்திட்டு இருக்கா, நான் என்ன சொன்னாலும் செய்வான்னு ஒரு கிக்.அது தந்தகர்வம் என் கண்ணை மறைச்சுடுச்சு. விழிப்பு தட்டினப்ப எங்க உறவு ரொம்ப தூரம்போயிடுச்சு. அவ உன்னை டைவேர்ஸ் செய்துட்டு அவளைக் கல்யாணம் செய்துக்கவற்புற்தினப்பத்தான் சூழ்நிலையோட பயங்கரம் புரிஞ்சது. பெங்களூர்கல்லூரியில் அவளோட பொண்ணுக்கு படிக்க பீஸ் கட்டிட்டு அப்படியே என்தொடர்புக்கு முடிவு கட்டிட்டு வந்தேன்”

அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் பானு 

“எவ்வளவு அழகா உங்கத் தவறை மறைக்க நினைக்கிறிங்க…. முட்டாள் பொண்டாட்டியை சுலபமா ஏமாத்திடலாம்னு எண்ணம்… அந்த எண்ணம் தந்த தைரியம்…. 

நான்   இப்படித்தான்..  நீங்க அடிக்கடி குத்திக் காட்டுறமாதிரிகொஞ்சம் அசடுதான். என்னோட குணம் தெரிஞ்சு வெறுத்தா கூட பரவல்ல. இல்லாதபுத்திசாலித்தனத்தை இருக்குற மாதிரி காமிச்சு என்னால வேஷம் போட முடியாது.நம்ம மனசுக்கு நெருக்கமா இருக்கவங்க கிட்ட உன்னால நடிக்க முடியுமா? என்அம்மாகிட்ட, அப்பாட்ட, என் குழந்தைங்ககிட்ட எப்படி என்னால நடிக்க முடியாதோஅதே மாதிரி உங்க கிட்டயும் என்னால வேஷம் போட முடியல.

நம்ம ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்க. எங்க குடும்பத்தை நல்லா தெரிஞ்சவர் நீங்க. என்னைப் பத்தி கல்யாணத்துக்கு முன்னமே உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்கு நான் பொருத்தமானவன்னு கணிச்சிருப்பிங்க. அப்பயே பிடிக்கலைன்னு சொல்லிருந்தா நானும் வேற யாரையாவது கட்டிருப்பேன். நீங்களும் உங்க மனசுக்கேத்த மகராசியா கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா குடும்பம் நடத்திருக்கலாம். இதையெல்லாம் விட்டுட்டு, ஊரார் முன்னாடி கூடவே இருப்பேன். கூடவே வருவேன்னு சத்தியம் செஞ்சிங்களே. இப்ப வார்த்தை தவறிட்டிங்களே. 

நீங்க எவ்வளவோ படிச்சுருக்கலாம், பெரிய பட்டமெல்லாம் வாங்கிருக்கலாம். ஆனா ஒரு சாதாரணமான ஆள் கூட கொடுத்த வாக்கைக் காப்பாத்துற  நாணயஸ்த்தனா இருக்கான். நீங்க….. “ கைகளால் காற்றில் பெரிய பூஜ்ஜியத்தை வரைந்துக்  காட்டினாள். 

விக்கித்து நின்ற பிரகாஷை சட்டை செய்யாமல் எழுந்து சமையலறையில் கழுவிக் கவிழ்த்திருந்த  பாத்திரங்களை அடுக்கி வைத்தாள். 

என்று பிரகாஷை பூர்வஜாவுடன் பார்த்தாளோ அன்றிலிருந்து அவனை விலக்கி இருக்கிறாள். அவனை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி தனக்கென்று ஒரு வட்டம் போட்டு வாழ்கிறாள். பூர்வஜாவை முற்றிலும் தவிர்க்க எண்ணி வெளிநாடு சென்ற பிரகாஷ் தன் மனைவி தன்னைவிட்டு வெகு தொலைவு சென்றதை உணராமலேயே போய்விட்டான். தன் நிலைமையை எண்ணித் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். 

சமையலறையில் லைட்டை ஆப் செய்துவிட்டு ஹாலில் தனக்கு விரித்திருந்த பாயில் அமர்ந்தாள் அவன் மனைவி. தூங்குவதற்கு முன் வழக்கம் போல் தெய்வத்தை வணங்கினாள். திருத்தமான அந்த முகத்தில் தெரிந்த தேஜஸைக் கண்டு ஒரு அடி தள்ளி மண்டியிட்டு அவளருகே அமர்ந்தான். கண்ணைத் திறந்த பானுவின் முன் அவனது முகம் கலக்கத்தோடு தெரிந்தது. 

“பானு.. பெரிய தப்பு பண்ணிட்டேன்… ஆனா இனிமே சத்தியமா இந்த மாதிரி தவறு நடக்காது. நீ என்னை விட்டுப் போயிட மாட்டியே” 

விரக்தியாய் ஒரு புன்னைகையை சிந்தியவள் “நான் எங்க போவேன். எனக்கு எங்க போக்கிடம் இருக்கு. இவளுக்கு சப்போர்ட் இல்லை… நம்மளப் பத்தித் தெரிஞ்சா அதிகபட்சம் என்ன செய்வா ஓ’ன்னு அழுவா.. கைவிட்டுடாதிங்கன்னு கெஞ்சுவா… இதையெல்லாம் சுலபமா சமாளிச்சுடலாம்ன்னுங்குற  திமிர்லதானே இப்படி ஒரு வேலையை செய்துட்டு வந்திங்க”

தலை குனிந்தான். சில நிமிடங்கள் மயான அமைதி. சற்று நேரம் கழித்துக் கேட்டான் “என் கூடவே இருப்பல்ல…” 


தீர்மானமாய் அவனைப் பார்த்தாள். “ நான் உங்க கூடவேதான் இருப்பேன். ஆனா இந்த வீட்டுலையேதான் இருப்பேன். இந்த வீட்டை வாங்க எவ்வளவோ செஞ்சிருக்கேன். நான் ஏன் இதை விட்டு வெளிய போய் கஷ்டப்படணும்? ஆனா உங்ககூட வெளிநாட்டுக்கெல்லாம் வர மாட்டேன். சமையல், சாப்பாடு, துவைச்சுப் போடுறதுன்னு உங்களுக்குத் தேவையானது எல்லாத்தையும்கடைசி வரை நான்தான் செய்வேன். ஏன்னா நம்ம கல்யாணத்தப்ப நான் உங்க கூடவேஇருக்கேன்னு வாக்களிச்சிருக்கேன். 

நம்ம ரெண்டு பேரும் காதலைப்பகிர்ந்துக்கலாம், உணவைப் பகிர்ந்துக்கலாம், ரசனையை பகிர்ந்துக்கலாம், நம்மளோட பலத்தையும் பலவீனத்தையும் அறிந்சுட்டு ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாஇருக்கலாம். இன்னைல இருந்து நம்ம ரெண்டு பேரும்  இரண்டு உடல்களாஇருந்தாலும் ஒரே மனசா மாறிட்டோம். நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்துகுழந்தைகளைப் பெத்துக்கலாம், சகல சௌபாக்யத்தையும் அடையலாம்னு சத்தியம்செய்துட்டு நீங்க வேணும்னா வார்த்தை தவறலாம் ஆனா நான் வார்த்தை தவறமாட்டேன்.  

எப்ப உங்களையும் பூர்வஜாவையும் அவ்வளவு நெருக்கமா பார்த்தேனோ அப்பயே  நான் செத்துட்டேன். இப்ப இங்க நிக்கிறதுவெறும் கூடுதான். உணர்ச்சிகள்இல்லாத மரத்துப் போனக்  கூடு. உங்க துரோகத்தைப் பாத்ததிலிருந்து  உங்க மேலஎனக்கிருந்த   நம்பிக்கை போயிடுச்சு. கூடவே இருக்கேன்னு ஆயிரம் பேர்முன்னாடி அக்கினி சாட்சியா வாக்களிச்சுட்டு அதை அப்படியே மறந்த  உங்களை நானும்என் குழந்தைகளும் எப்படி நம்புறது?

புருஷன் கைவிட்டா,அழகான பூர்வஜாவக் காப்பாத்த உங்களை மாதிரி ஆண்கள்நாக்கை தொங்கப் போட்டுட்டு நிப்பிங்க. ஆனா என்ன மாதிரி அசடுங்க புருஷனைப்  பிரிஞ்சா, அம்மா வீட்டுல  கூட படியேற விட மாட்டாங்க.


குடும்பம்ன்னுசொல்லுற கூட்டில் இருந்து முதல் அடியை எடுத்து வைக்கத்தான் தைரியம் தேவை.அந்த தைரியம் உங்களுக்கு வந்துடுச்சு. இனிமே உங்க சுயநலத்துக்காக எங்களைஉதறக் கூடத் தயங்க மாட்டிங்க. அப்படி உதறிட்டிங்கன்னா என் ரெண்டுபொண்ணுங்களை வச்சுட்டு நான் எங்க போய் நிப்பேன். அதைப் பத்தி மட்டும்தான்யோசிச்சேன்.நாய் படாதபாடு பட்டு என்னை ஸ்திரப்படுத்திக்கிட்டேன். இப்பநீங்க விட்டுட்டு போனா கூட நாங்க மானத்தோட பொழைச்சுப்போம்”

விக்கித்துப்  பார்த்தான் சந்திரப் பிரகாஷ். தான் அசட்டுப்பட்டம் கட்டி ஏளனமாய் பேசும் மனைவி எவ்வளவு மனோதைரியத்துடன் வாழ்க்கையைஎதிர்த்துப் போரிட்டிருக்கிறாள். பூர்வஜா மேல் இரக்கம் என்று சொல்லியே எனதுதகாத உறவுக்கு சப்பைகட்டு கட்டினேனே. எனது சபலம் என் மனைவியை இன்னொருபூர்வஜாவாய் மாற்றத் துணிந்ததே. நினைக்கும்போதே அருவருப்பால் கூசியது அவன்மனம். அவன் மனைவி அறிவு மட்டாய்இருக்கலாம், கண்ணை சுண்டி இழுக்கும் அழகுஇல்லாதவளாய் இருக்கலாம். ஆனால் எப்பேர்பட்ட நிலையிலும் அடுத்தவளின்கணவனுக்குத் தூண்டில் போடும் ஈன புத்தி படைத்தவளில்லை. அவன் சபலபுத்தியுடைவன்தான் ஆனால் அவன் பானுவோ மாசில்லாத பொன். 


“என்அன்பையும் காதலையும் இழந்தது உங்களுக்குப் பெருசில்லை. ஏன்னா பணமும்பதவியும் இருக்குற உங்களுக்குக் காதலை அள்ளித்தர ஏராளமான பூர்வஜாங்க  இருக்காங்க. ஆனா உங்க வப்பாட்டியோட பொண்ணுக்குத்  தத்துத் தகப்பனா இருந்தநீங்க உங்க சொந்த பிள்ளைங்களுக்குத்  தகப்பனா இருக்கத் தவறிட்டிங்களே….  

மோகம் உங்க கண்ணை மறைச்சது. என் கண்ணை திறந்துடுச்சு.சரி குப்பையைகிளறினா நாத்தம் தான் மிஞ்சும். அதை பொறுத்துக்குற அவசியம் எனக்கில்லை.நடக்கப் போறதை பேசலாமா… என்னால ஒரு வழித்துணையா உங்க கூட நிக்க முடியுமேதவிர, என் காதலையோ நம்பிக்கையையோ உங்க மேல செலுத்த முடியாது. சரியாசொல்லப்போனா அடுத்த வேளை சாப்பாடு நீங்கதான் போடணும்னு நிலைமை வந்தா என்பிராணனே போய்டும்.இழந்த காலத்தை எப்படி திரும்பப் பெறப் போறீங்க. உங்கபொண்ணுங்க அன்பை எப்படி மீட்டெடுக்கப் போறிங்க. என்கிட்டே வார்த்தை தவறினநீங்க,நம்ம குழந்தைகள் உங்க மேல வச்சிருக்க  நம்பிக்கையிலயாவது இடறாம இருங்க”

அசையாமல் அமர்ந்திருந்தான் பிரகாஷ். மனதில் அன்பை மட்டுமே சுமந்த அந்த அழகுத் தாய் படுத்த ஐந்தாவது நிமிடம் உறங்கிவிட்டாள். குற்றமுள்ள நெஞ்சுடன் அவளை வெறித்தபடி அமர்ந்திருத்த பிரகாஷ் தன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட இமாலயப் பிளவை சரி செய்யும் வழி தெரியாமல் கல்லாய் உறைந்திருந்தான்.

மெரினாவின் ஆர்ப்பரிக்கும் ஓசையில் பாமாவும், ஷ்யாமாவும் விளையாடுவதை பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தான் பிரகாஷ். தீபாவளிக்குப் புதுத் துணிகள் எடுக்க மகள்களுடன் வந்தவன் அவர்கள் ஆசைப்பட்டதால் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான். பானுப்ரியா மாலை பலகாரம் செய்ய வேண்டும் என்ற சாக்கினைச் சொல்லி வீட்டிலேயே இருந்துவிட்டாள். தவிர்க்க முடியாத காரணமாயிருந்தால் மட்டுமே பானு கணவனுடன் வெளியே செல்வாள். இப்போதும்  அவர்களையே தனக்கும் புடவையை வாங்கி வரும்படி சொல்லிவிட்டாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெரியவளிடம் வம்பு வளர்த்தபடியே விளையாண்டாள்  சின்னவள் ஷ்யாமா. 

“அப்பா சுண்டல் வேணும். மொளகா பஜ்ஜி வேணும்” என்று தொணத்தினாள் ஷ்யாமா.

“வெளிய கண்டதை சாப்பிடாதே வயிறு கெட்டுடும்” எச்சரித்தாள் சத்யாபாமா. 

“முன்னாடில்லாம் அம்மாகூட பீச் வருவோம்லப்பா… ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பலகாரம் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க. நம்ம எல்லாரும் கடலைலைல நனைஞ்சுட்டு, ஸ்வீட்,காரம் சாப்பிட்டுட்டு ட்ரெஸ் எல்லாம் வாங்கிட்டு போவோமே…” நினைவுகளில் அமிழ்ந்தாள் ஷ்யாமா.

“இப்பல்லாம் ஏம்பா நம்ம குடும்பத்தோட வெளிய வரதே இல்ல.” தகப்பனைக் கேட்டாள். 

“லூசு, அப்ப அம்மா ப்ரீயா இருந்தாங்க. எல்லா நேரத்தையும் நமக்காக செலவளிச்சாங்க. இப்ப எவ்வளவு பிஸியா இருக்காங்க. 

அப்ப கூட டிபன் செஞ்சுட்டு லேட்டா கிளம்புவாங்கள்ளப்பா. நீங்க அசடு அசடுன்னு திட்டுவிங்களே. இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாங்கப்பா… நம்ம அம்மாவா இதுன்னு ஆச்சிரியமா இருக்கு. பெருமையாவும்  இருக்கு…” கண்களில் ஆச்சிரியத்துடன் சொன்னாள் மூத்தவள் சத்யபாமா.

“போடி அந்த அசட்டு அம்மாவைத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. அவங்கதான் எப்போதும் நம்ம கூடவே இருப்பாங்க. இவங்க எப்போதும் பிஸியா இருக்காங்க” 

“அதுக்காக எப்போதும் அம்மா அப்பாட்ட திட்டு வாங்கிட்டே இருக்க முடியுமா.. நீங்க சொல்லுங்கப்பா… உங்களுக்கு எந்த அம்மாவைப் பிடிச்சிருக்கு”

“எனக்கு என் மனைவி எப்படி இருந்தாலும் பிடிக்கும்” என்று பதிலளித்தவனை ஓவெனக் கத்திக் கிண்டல் செய்தனர் இருவரும். 

அவனுக்கும் அந்த அசட்டு மனைவி திரும்ப வேண்டும் என்று ஆசையாக இருந்தது. பிரகாஷின் குரலிலேயே அவனது கோவத்தை கண்டு கொண்டு சமாதனம் செய்யும் பானு, அவனது பரிசுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் பானு. அவன் மேல் ஒவ்வொரு வினாடியும் அன்பைப் பொழியும் பானு இனிமேல் திரும்ப வருவாளா என்று மகள்களைப் போலவே அவனுக்கும் ஏக்கமாய் இருந்தது. 

புது ஜவுளிகள் எடுத்தார்கள். பானுவுக்குப் பார்த்துப் பார்த்து மாம்பழ நிறத்தில் அழகான பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தான். குழந்தைகளின் மூடை சரி செய்ய ராயர்கடையில் உணவு வாங்கித் தந்தான். பின் பானுவுக்கு பிடித்த உணவு வகைகளை பார்சல் வாங்கினான். 

வீட்டில் அம்மாவிடம் துணிகளைக் கடைவிரித்தனர் மகள்கள். “நீயும் வந்திருக்கலாம்மா”

“வேலை இருந்துச்சுடா… இன்னொருதரம் வரேன்” சமாதனப் படுத்தினாள் பானு, 

அந்த இன்னொருதரம் இதுவரை வந்ததில்லை என்று மனதில் நினைத்தான் பிரகாஷ். அவள் புடவையை எடுத்துக் கொண்டதே பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அவர்கள் உறவில் ஏற்பட்ட விரிசலுக்குப் பின் அவனது அன்பளிப்புக்களை நாசுக்காய் மறுத்துவிடுவாள். அதனால்தான் இந்த முறை மறுக்க முடியாமல் குழந்தைகள் மூலமாய் கொடுத்தான். அவள் பெற்றுக் கொண்டதே அவன் மனதில் சாரல் அடித்தது. 

இரவு குழந்தைகள் உறங்கியதும், அறையிலிருந்து வெளியே வந்த பானு பிரகாஷின் முன் நோட்டுக்களை எண்ணி வைத்தாள். சொல்லாமலேயே புடவைக்கான பணம் என்று பிரகாஷுக்குத் தெரிந்தது. அடிபட்ட பார்வை பார்த்தவன் அந்த இடத்தை விட்டுஎழுந்தான். 

“இந்த பணத்தை நீங்க எடுத்துக்கலைன்னா எனக்கு சேலை வேண்டாம்” உறுதியாக சொன்னாள். 

“உனக்கு சேலை வாங்கித் தரக் கூட எனக்கு உரிமையில்லையா” ஆதங்கப்பட்டான்.

“இல்லை… “ என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு அவனை நேர்ப்பார்வை பார்த்தாள் 

உனக்கும் எனக்கும் இடையில்

விரிசலின்றி விசாலமாய் ஓர்

இடைவெளி

அது காற்றால் மட்டுமே நிரம்பட்டும்

வெஞ்சினம் கொண்ட கடுஞ்சொற்களால் வேண்டாம்

சொல்லால் கொல்லும் வித்தை
உன்னுடைமையாகவே இருக்கட்டும்

நெந்நீர் ஊற்றின் இடையேயும்
துளிர்க்கும் திறமை எனக்குண்டு

—by  Padma Graham


சொல்லாமல் சொல்லி சாதனைப் பெண்ணாய் நிற்கும் பானுப்பிரியாவின் நிமிர்வு கண்டு புன்னகை புரிந்தான். 

“உன் சுயமரியாதையை  மதிக்கிறேன். ஆனா நான் திரும்பத் திரும்ப உன் கிட்ட வந்துட்டேதான் இருப்பேன். தப்பு செஞ்ச இந்த அசட்டுப் புருஷனுக்கு அவன் மனைவி திரும்ப வேணும். வார்த்தை தவறின இந்தப் பொய்யனுக்கு பொண்டாட்டியோட அன்பு கொள்ளை கொள்ளையா வேணும். அதுக்காக விக்ரமாதித்தன் மாதிரி திரும்பத் திரும்ப முயற்சி செய்வேன்.”

வார்த்தை தவறியவனின் மன்னிப்பு ஏற்கப்படுமா? பிரகாஷுக்கு அவனது பானுக்குட்டியின் அன்பு திரும்பக் கிடைக்குமா? முடிவைக் காலத்தின் கைகளில் ஒப்புவித்துவிட்டு உங்களைப் போல் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  

No Comments
shanthi

ஹாய் தமிழ் ,
ரொம்ப அருமையான முடிவு …..பூர்வா முன்னால் தலைகுனிவு என்று புலம்பும் சத்யனுக்கு பானு கொடுக்கும் விளக்கமும் ,அருமை ….

repplyuma

அருமையான முடிவு தமிழ் ..எனக்கு பானு அவனுக்கு தரும் பதில்கள் ரொம்ப பிடித்தது ..இத தான் எதிர்பார்த்தேன் ..கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அமைதியாக அவனை அடிச்சி நொறுக்கிட்டா …எனக்கும் முடிவும் ரொம்ப பிடித்தது ….

உங்க அடுத்த கதைக்கு காத்திருக்கேன் …

saji

arumayyana mudivu.super.

vijivenkat

very nice ….ethirpaartha mudivu…

benzishafeek

hai tamil nalla mudivu aana manasukku rmba kashtama irunthathu.banu kadaisi varai thannoda pathilla uruthiya ninnathu enakku pidicchu irunthathu.

sujatha

hi tamil
arumayana story nice ending
thanks for the novel

KG

superrrr tamil!!
asathalaana story!!
miga sariyana mudivu banu eduthadu !!
vaathukkal!!

suganya

hi tamil…
excellent end ma..

banu character manasula aala padhinjirukku..

Rukmani

Wow. Kalakitinga Tamil. Mudivu romba super. Banuvoda confrontation romba pidichatu.

Siva

Hi Tamil,
Simply Superb !! Arputhamana ending.

BGM – aha !! and the words in the background ‘When you are not with me I miss the best moments of my life’ – rendume manasai neghizhthuthu.

Kadavul thandha azhagiya vaazhvu thaan – anbe uruvana manaivi, gunavathi, porumaisali. Kannaana irandu kuzhandaigal. Ellathaiyum than sabala buthiyaal keduthu konda Prakash, thannaiye asattu kanavanaaga unarum idam – YESSSS !!!

‘Nee vaarthai thavarinalum naan thavara matten; kooda varuven vazhi thunaiyaga, aanal inimel unnai namba matten – unnidam endha edhirpaarpum illai’ endru Banu sollum idam – kathiyindri, rathamindri ranamaaki vittadhu idhayathai – enna madhiri oru virakthi irundhal indha madhiri sorkal varum.

Padma Graham’s kavithai – nachunnu nenjil iranguthu, especially,

‘Venneer ootrin idayeyum
thulirkkum thiramai enakkundu’

Appappa – Enna powerful vaarthai prayogam inge – yeri nenjil amarndhu vittana indha varigal !!

Mudivil thelivum, urudhiyudanum pesum Banuvidam, punnagaiyudan, ‘I will still keep trying to win you back’ endra reethiyil, ‘Vikramadhithanai’ padaiyeduppen – vidamal, endru Prakash solvathu – gives such hope. Hope (Nambikkai) thaane vaazhkkai. He absolutely and without doubt deserves what he is going thru’ now. But, that ray of hope… that is as it should be.

I love the way you have completed this story, Tamil.

VERY BEST WISHES !!! Waiting to see this in print !!

Ungalin adutha arputhamana padaippukkaaga aavaludan kaathiruppen.

Warmest wishes.

shubaram

அருமையான முடிவு Tamil. Super Update.

J KRITHIKA

Very nice and interesting story and update is superb

Raji

அருமையான கதைக்கு அற்புதமான முடிவு….👏👏👏👏
பானு மாதிரி எத்தனையோ பெண்கள் வீட்ட மட்டும் பாத்துக்கறதாலயோ… இல்ல அவங்க புறத்தோற்றத்துல அக்கறை செலுத்தாம இருக்குறதாலேயோ,… அவங்ககிட்ட எந்த திறமையும் இல்லாத அசடாட்டம் பாக்குற உலகம் தானே இது….
எந்த இடத்திலயும் குரலை உசத்தாம… பிள்ளைங்களுக்கு அவங்களுக்குள் பிளவு இருக்குறத சண்டை போட்டு காட்டிக்காம…. பானு…. கிரேட்… இந்த பானுவயா அசடுன்னு சொன்ன பிரகாஷ்……👊👊👊
Thanks Madhu for such a great story…

raj148

Hi Tamil
Nice story. Best of luck.

Premalatha

Nice story Tamil. Different plot & the way u conveyed also nice. Banu’s decision also good and practical.

sri

hi tamil,

kadhaiyum arumai,athan mudivum romba arumai.aanal mannipathum marapathum penngalin gunamthaan,athuvum varuda kanakil thirunthi irukum kanavanai mannikalaam,illaiyaa?

Bhavani.

Very nice story.
I like that climax.
Bhavani.

Queen

அஹிம்சை வழியில் சரியான தண்டனை வார்த்தை தவறியவர்க்கு. அசடு பானு அறிவானதென்ன, அறிவு பிரகாஷ் அசடானதென்ன! முத்தான கதைக்கு நன்றி தமிழ் மதுரா! இதனை கதையாக கருத முடியாது. ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுதான். முடிவுதான் வேறு வேறு.
Thanks once again

malaram

Hi Madura,
முடிவு ரொம்பவுமே super. பானுவின் பதில் ரொம்பவுமே நன்றாக இருந்தது. இந்த காலத்திற்கு இப்படி தான் இருக்க வேம்டும்.

AA

Hi Tamil

Wow!!!! Super writing!!!!
Romba romba sensitive subject-tai thottu….atharkku arumaiyaana mudivu koduthu romba azhaga kaalathin kaigalil koduthu mudichiteenga!!!! Amazing!!!!
Eppadi iruntha Bhanu ippadi maarittaa!!!!! Prakash! Enna solrathu…ivanai patri??
Oru nalla thagappan…avvalo than !!!!
Congrats Tamil.
Adutha kathaiyudan seekirame vaanga 🙂
Vanitha ku oru hi 😉

shanthi murugan

hi MAM end ud is super.banu’s decision is correct.but in practical life how will it possible i don’t know.banu’s answer to him is every lady’s voice.

sujathakarthiks

super climax.ithaithavirara varthaiye illai.thanks for nice story

sharadakrishnanha

bhanu dear…hats of di. thittina purushanai cool panna poori orulakizhangu senja bhanu va idhunu malaichu poiten. unnudaiya ovvoru adiyum nee meduva ana urudhiya eduthu vacchu oru entrepreneur ah maarite. unnudaiya davalat savithri mami nethra sadasivam mama yasim nasar Ibrahim uncle ivangolana unnoda uravu -un purushanai nee izhandalum unnai seepaduthi semmaipaduthi unnodu sernthu nadanthu uyarthil ethivachutangale. hats off to them. purushan sariyillane enna idho inda anubu ullangal unnodu payanikum varai vetri unnodu thodarnthu varum. prakashku nee kodutha thandanai 100% right. sollal kondru vitai bhanu. un nermai asatharathu bhanu. PHD/HOD idhethallam prakash kazhtapatttu padichu sambathitha pattangal. anal unnai pol avanal oru thozhilathipar aka mudiyavillai. kallai pona un kadhal manasu meendum ilakuma enpathu enaku kavalai illai. veetukule avanai oru theevakinai. kooda irundhum thalli nikka vaithai. nee imayamai uyarnthu vittai. unnai polthan ella penkalum thunbam varumbodu thunindhu vazhkaiyai edhikollanum penne. adhaku neeye oru standing example. unnai padaitha prammvana mathuravirkum sila vaarthaikal. ….Mathura. simple but strong story. hmm idhu storye illa…its still happening………some where some corner in the world. vaarthai thavariya kanavankellam bhanu kodutha punishment rombave sariyanathu. kathiyindri rathamindri vallil vadham court proceedings edhuvum illamal therrpai vazhangiya unaku ROYAL SOLUTE….SARAYUVAI NAANGAL MARAKAVILLAI MATHURA. ADHU ORU KAAVIYAM. BHANU ORU LIVING CHRACTER/. SARAYU ORU MOONRAM PIRAYI. EPODHAVATHU MIKA ARIYATHAI VANATHIL THORTRAM ALIKUM. BHANUPRIYA ORU VALARPIRAI NILLAVU MAATHIRI. THULI THULIYAI AVAL VALARCHIYAI RASITHOM,. INDRU AVAL POURNAMIYAI JOLIKIRAL.

viji

Bhanu… As I write this, I have tears in my eyes… What a lovely story… We have always studied the love stories written by you… Chitrangada la oru aazhamana love a padicha nanga, indha nidharsanamana story nala , I am stunned… What a lovely lady bhanu is? A lot of my friends had gone through such issues… I would love to buy and gift this story to show what women is capable of… Bhanu oru gem, koncham kooda azhama, sandai podama, evavalavu matured indha situationa handle panara… Oru husband ku koodave irundhu odhukivaikara dha vida dhandana enna iruka mudiyum… Lovely.. I am unable to sympathaize with Prakash….. Irundhalum poorvajava appadiye vituiruka koodadhunu thonudhu… I am sure Bhanu will remain in our hearts forever like SARAYU..

gjpooranigjpoorani

ஹாய் தமிழ்மதுரா,
ரொம்பவும் சரியான முடிவு.அருமையாய் உள்ளது.
பூரணி

நிதா

ஹாய் மது,

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியலை.. அவ்வளவு அருமை.. பூர்வஜா.. பெண் என்று சொல்வதற்கே வெட்கும் ஒரு பிறவி… ஆனாலும், நிஜவுலகில் பல பூர்வஜாக்கள் வெட்கம் இன்றியே வாழ்கின்றனர்.

அப்படி இருக்கையில் ஆண்களை மட்டுமே எப்படிக் குறை சொல்வது?

பிரகாஷ்.. சந்தர்ப்பம் கிடைக்காதவரி மட்டுமே மனிதன் நல்லவனாக வாழ்கிறான் என்கிற கூற்றுக்குச் சான்றாக நிற்கிறான். என்ன திருந்தி வந்தாலும், குற்ற உணர்வில் தவித்தாலும், தன் ஆசைகளை, மயக்கத்தை, வக்கிர எண்ணத்தை எல்லாம் ஆசைதீர அனுபவித்த பிறகே திருந்தி இருக்கிறான். அதன்பிறகு அவன் திருந்தி என்ன திருந்தாமல் விட்டு என்ன?

என்னால் அவனை நல்ல அப்பா என்று கூடச் சொல்ல முடியவில்லை. நல்ல அப்பாவாக இருந்திருக்க, தன் பெண்ணுக்குக் கணவனாக வரும் ஒருவன் தன்னைப் போல் நடந்தால் எப்படி இருக்கும் என்கிற சிந்தனை அவனுக்குத் தானாகவே வந்திருக்குமே?

அது வரவில்லையே.. ஒன்றுக்கு இரண்டாக பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவன் செய்த காரியங்கள்.. அவள் சபலப் படுத்தினால், நான் சபலப் பட்டேன் என்றால், என் புத்தி என்கிற ஒன்று எங்கே போனது?

இதையே பானு செய்திருந்தால் எற்றிருப்பானா? அங்கே ஆண் புத்தி தலை தூக்கி இருக்கும்.

அதேபோல பானுவின் முடிவு… கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும், அவளை எண்ணுகையில் மிகப் பெருமையாக எண்ணினேன்..

அதேபோல அவளுக்கு உதவும் சுற்றங்கள்.. எத்தனை பானுக்களுக்கு கிடைக்கும்?

முடிவு.. இது என்னைப் பொருத்தவரையில் முடிவல்ல… இதுதான் நிஜம்!

இனிக் காலத்தின் கையில் மட்டுமே அவர்கள் வாழ்க்கை!

மிக்க மிக்க நன்றி மது. அருமையான படைப்பைத் தந்ததற்கு.

அடுத்த கதையுடன் விரைவாக வாருங்கள்.

அன்புடன்,
நிதா.

cynthia

அருமையான கதை தமிழ்.. பானு நிமிர்ந்த விதம் என்னை கவர்ந்தது.. நிஜ வாழ்வில் பல பூர்வஜாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அதை எழுத்தில் பார்க்கும் பொது மனம் மிக வலிக்கிறது… கணவன் மன சலனப்படாமல் இருந்தால் ஒழிய பானு மாதிரி ஏரளமான பெண்கள் உருவாவார்கள் ….
தேங்க்ஸ் தமிழ் உங்களின் நிறைவான முடிவுக்கு…

நீங்க இறுதி அத்தியாத்தில் சொல்லியது போல சரயுவை மறக்கே முடியாது.. என்ன தான் பானு மனதை ஜெயத்தாலும் பட பட பட்டாம்பூச்சி சரயுக்கு யாரும் ஈடாக முடியாது..

அடுத்த கதை எப்போ??? waiting eagerly

Jasmine

Good ending! Nice story!

Logavalli

Wow,tamil?nice creation from you?this is really happening in the real life?banus reaction so nice?the relationship of the neighbours makes me jealous?but what Prakash did is unacceptable?even if he do wrong once is unacceptable?but though he is aware of what he is doing !he still continued it?but he has to see everyday the treasure he missed?the ending is really awesome.
All the best for your new story.(hats off to u to made us come out off sarayu)

Logavalli

Sorry punctuation mistake in my previous post.replce ? With .

anuja12397

Tamil
Sariyaana Climax,.
veenaa kaththaamal, avanai matravanga munnaadi insult pannaamal,pillaigalidam ethaiyum kaattikkaamal, kooda irunthum, vilagi iruppathu , superb Banu..

Nee vaarthai thavari vittaai, naan Thavara maattaen nu nachunu sollittaal,
Hats OFF Banu..

umamanoj64

சித்ராங்கதா…அப்புறம் உங்ககிட்டே ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுடிங்க தமிழ்…

அழுத்தமான கதைக்கு ஆழமான முடிவு….

அஹிம்ஸா முறையில் பானு வெற்றி பெற்றது மிக மிக அருமை….
சாதரணப்பெண் கத்தி ஆர்ப்பாட்டம் செஞ்சு போராடுவாள்..பானு அப்படி அல்லாமல் அழுத்தமான முறையில் பேசி வாழ்கையின் உச்சாணிக்கு செல்வது அற்புதம்….

திருமணப்படிகளை சொற்பொழிவாற்றியதும் அருமை…

பூர்வஜாக்கள் எளிதில் கிடைக்கும் உலகில் எத்தனை பானுவை போன்று நிமிர்ந்து வாழ்வார்கள்????

வாழ்வில் எதனை பூர்வஜாக்கள் இருந்தாலும் ஆண்கள் மாறப்போவதும் இல்லை..திருந்தப் போவதும் இல்லை…

அதுவும் இரண்டு குழந்தைகளை பெற்ற தந்தைக்கு சபலம்????

பிரகாஷ் மூன்று வருடங்கள் பானுவை பற்றி துளியும் நினைக்கவில்லை…குழந்தைகள் பற்றி அக்கறையும் இல்லை…
ஏன் அப்போதும் பூர்வஜா சுயநலம் தானே…அந்த நேரத்தில் கண்ணனுக்கு தெரியவில்லையா???மோகம்,தீர்ந்ததும் சுயநலமும் தன்னலமும் அப்போது தான் கண்ணுக்கு தெரிந்ததா???
அப்படி என்னில் பூர்வஜா பானுவை பற்றி பேசவில்லை என்றால் இவன் இந்த கேடுகெட்ட செயலை தொடர்ந்து இருப்பானா??????

என்ன தான் மனம் மாறினாலும் கெட்டவன் திரும்பி பானுவின் கணவனாக மட்டும் மாறி விட முடியுமா???அது இந்த ஜென்மத்தில் அவனால் மாறமுடியாது…

அவன் அவளுக்காக எதிர் வாழ்க்கைக்காக காத்து இருந்தாலும் பானு எப்போதும் மன்னிக்க கூடாது..மாறவும் கூடாது…

அவனின் அந்த மூன்று வருட வெட்கங்கெட்ட வாழக்கையை விவரிக்கமால் நேராக தரங் கேட்ட செயலினை வாழ்வின் இறுதிப்பகுதிக்கு சென்று அவ்வழியாக கதை கொண்டு சென்றது அருமை…
அதுவும் பானுவின் வழியாக கதையை நகர்த்தியதும் அருமை….

பாராட்டுக்கள் தமிழ்…பானுவை போன்று ஏமாறப்பட்டவர்கள் இருக்கும் உலகில் இப்படிப்பட்ட செயலையும் காட்டி அதற்கு தீர்வு சொன்னதற்கும் நன்றி தமிழ்.அவர்களும் பானுவை போன்று எதிர்காலம் ஏற்றுக்கொள்ளட்டும்…..

Kothai

nice update… amaithiya epdi punishment kodukardunu lets learn from Baanu.. Sarayu va marakadikara maadhiri iruku….

mahashrita

ஹாய் தமிழ்,

கதையை அருமையா முடிச்சிடிங்க .. இந்த கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது .. முடிவு ரொம்ப சூப்பர் ..இறுதிவரை பானு அவள் நிமிர்வை விட்டுக் கொடுக்க வில்லை ..கணவன் தவறு செய்துவிட்டு திருந்து விட்டேன் என்று கண்ணீர் விட்டால் பெண்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா ..பானுவுடைய முடிவு பிரகாஷ் போன்ற ஆண்களுக்கு சரியான பதிலடி ..பெண்களிடம் கட்டாயமாக இந்த நிமிர்வு இருக்க வேண்டும்.

ஆனால் சமூகத்தில் பூர்வஜா போன்ற ஜென்மங்களும் ..பிரகாஷை போன்ற சந்தர்ப்ப வாதிகளும் இருக்க தான் செய்கிறார்கள். அவர்களை போன்றவர்களால் பாதிக்க பட்ட பெண்கள் எல்லாம் பானுவை போல தெளிவாக சிந்தித்து செயல் படுவது இல்லை..

பானு இறுதியாக பேசும் வசனங்கள் எல்லாமே அருமை ..

நன்றி தமிழ் இப்படி சமூக அவலத்தை சிந்திக்க தூண்டும் கதையை கொடுத்தற்கு …

அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்.

அனு

vanitha

Hi தமிழ்

உங்கள் கதை மிகவும் நன்றாக இருந்தது. பானு ஒரு வெகுளியாகவோ அசடாகவோ எனக்கு தெரியவில்லை, இல்லத்தரசிகள் பெரும்பாலானோர் இதே போல் தான் இருக்கின்றனர் Real life layum intha மாதிரி நிறைய பெண்கள் இருக்கிறாங்க .அவங்களும் பானு மாதிரி முன்னேற முடிந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.Atleast இந்த கதையோட hero (??) தன்னுடைய தவறை உணர்ந்ததே பெரிய விஷயம், எத்தனையோ பேர் அதை கூட செய்வதில்லை.

வனிதா

Lak

Hai Tamil,

What a story?
About me: I am always fascinated with love stories. Hence my inner conscious blame me for only taking soft romance novels. I was scolding my self for getting ecstatic only with pulp fiction. Today I felt much much more ecstasy, when I read this story. My conscious justifies me for my love towards this story. I am proud that, I am still a good reader.

And about the story: What a story!!! Any one who over come such situation would have definitely done this. she is not barathi raja’s puthumai pen. But she is the nitharsanam. Thanakku valigalai mattume kodutha vaazhkaiku, uravugaluku, nyayam mattume seitha pen. The gave justice to her kids, he gave justice to herself(definitely), and she gave justice to her husband too. I love this story. I hope every one in this world reads this story. I definitely can’t forget this story. This story has a new message for every one who reads it!!!!!!

shanthi murugan

hi TAMILMAM why there is no announcement for next story?expecting eagerly.

Nagalakshmi

Hi Tamil,
Thanks for this nice story, I think this end is very apt and fine.
Expecting another nice story from you.
Nagalakshmi

murugan

அருமையான முடிவு உங்கள் வார்த்தை-தவறிவிட்டாய் பானு is soooo nice

sindu

very nice story. all the best

devi.u

ஹாய் தமிழ் mam ,
இப்போ தான் பானுவை பார்க்க வர முடிந்தது .நிறைய பெண்களின் மனதை படம் பிடித்து காட்டி விட்டீங்ka .

குறையும் நிறையும் கொண்டவன் தான் மனிதன் .அதில் ஆணும் ,பெண்ணும் சரி நிகர் சமனே .ஆணின் குறைகளை பெரிது படுத்தாமல் பெண்கள் இருக்கணும் ,வாழ நினைக்கணும் .பெண்ணை அப்படி ஏற்று கொள்ள ஆணுக்கு மனது இல்லை .இப்படி பல மக்கள் இருக்கின்றனர் தாம் .

அவள் செய்தது சரி தான் .யாருக்கு வேண்டி அவள் எல்லாமும் செய்கிறாள் ? நம்பிக்கை சிதைந்து போகையில் மனம் படும் பாடு கொடுமை.அப்படி சிதைந்து போகுமளவுக்கு ஒரு கணவன் நடக்கையில் , கணவனின் மேல் அன்பு கொண்ட மனது அதை மறுத்து ஏற்கலாம் தான் .அவள் நடப்பது தான் சரி .அந்தளவு தண்டனை கூட அவனுக்கு இல்லையெனில் அவளின் மனம் காயப்பட்டு தான் போகும் .அவள் அசடென்று .

அருமையான பாடல் வரிகள் .அந்த முதல் பாடல் சுபெர்ப் .எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது …கண்ணே நரை எழுதும் சுய சரிதம் அதில் என்றும் அன்பே ஆனந்தம் ஆனந்தம் ……

அருமையான கதை .பத்மா அவர்களின் கவிதை அருமை .அவர்களின் தமிழ் கவிதை மிகவும் உயிரோட்டமாக இருந்தது .நன்றி mam .thanks for the wonderful story .

(இன்னும் நிறைய வடிக்க ஆசை தான் .கால சூழலால் முடியவில்லை) .

kumudha

hai thamizh…

super kadhai… ipa dhaan padichen… romba arumaiyaa ezhudi irukeenga… enakku romba romba pidichadhu… thanks for giving such a wonderful story…

azhagaana nadai… arumaiyaana mudichum irukkeenga… oru chinna sarukkal vaazhkaila evlo vishaiyatha namma kitta irundhu eduthuttu poidum nu azhagaa solli irukkeenga… super… once again thanks for such a lovely story…

ival
kumudha

Thanu .k

ஹாய் மது
உங்களின் வார்த்தை தவறி விட்டாய் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். ஷ்ஷ்ஷ்….. சற்று நேரம் என்ன சொல்வது என்று கூட தெரியல.எல்லாமே உறைஞ்சு போன மாதிரி ஒரு உணர்வு..

முதலில் இப்படி ஒரு கதைக்கருவை எடுத்ததற்கு உங்களுக்கு மிகப்பெரிய சல்யுட்.சமகால சமுதாயத்தில் சம விகிதத்தில் கலந்து வாழும் மூன்று மாறுபட்ட குணாம்சம் கொண்ட நபர்களின் வடிவம் தான் இந்த பிரகாஷ் பானு மற்றும் பூர்வஜா.( அந்த பெயரை உச்சரிக்க கூட பிடிக்கவில்லை.)

இந்த கதையில் நீங்கள் எடுத்துக்கொண்ட கரு சமகால சமுதாயத்தில் நிஜமாகவே நடக்கும் பிரச்சினையே.

பிரகாஷ்__ இவன் என்ன படித்து என்ன ?? நாசூக்கு நாகரிகம் தெரிந்தென்ன?? தன்னுடைய தனிமனித ஒழுக்கத்தில் தவறிய இவன் என்னளவிலும் ஜீரோ
தான். தன்னையே உலகம் என்று நம்பும் மனைவிக்கும் முத்தான இரு குழந்தைகளையும் சற்றும் எண்ணிப்பார்க்காமல் தன்னுடைய உடல் தேவையை தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு கீழ்த்தரமான செயலைச் செய்த இவன் எப்படி திருந்த முடியும்.என்னைப் பொறுத்தவரை இப்படியானவர்கள் திருந்துவதென்பது நடக்காத விடயம். நாயகி பானு கூட ஒரு வார்த்தை சொல்லுவாள்.

“குடும்பம் எனும் கூட்டைத்தாண்டி முதல்படி எடுத்து வைக்க தான் தைரியம் வேண்டும்.நீங்கள் அந்த அடியை எடுத்து வைத்துவிட்டீர்கள்.இனி நீங்கள் எது செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது போல.அது மிகச் சரியானதே!!

பானு_ என்னளவில் நான் இதுவரை படித்த நாவல்களின் மிகச் சிறந்த நாயகி இவள் என்பேன்.என் மனதைத் தொட்ட நாயகி.வீட்டுக்கு அடங்கிய பெண்ணாய் கணவனுக்கு அடங்கிய மனைவியாய் குழந்தைகள் மீது உயிரையே வைத்த தாயாய் ..ஆக மொத்தம் ஒரு பூவாய் இருந்தவள் எப்படி ஒரு வைரமாய் உருமாருகிறாள்.

தன கணவன் திட்டினாலும் கோபப்பட்டாலும் அவன் அவளுடையவன் என்ற எண்ணத்தில் அனைத்தும் பொறுத்து சமாளித்து போகும் அவள் அவனின் துரோகத்தைக் கண்ட பின் மாறும் மாற்றம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.

சராசரிப்பெண்ணாய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் மனதளவில் நொறுங்கினாலும் அதனால் வீழ்ந்துவிடாமல் அந்த வலியையே வைராக்கியமாய் கொண்டு நிமிர்ந்து நின்று காட்டும் அவளின் துணிவும் தெளிவும்… இது இந்த திடம் தான் பெண்களுக்கு வேண்டியது.

பிரகாஷ் என்ன தான் தவறை உணர்ந்து திருந்தினான் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் மன்னிக்கப்படக் கூடாதவன். என் கணவன் உத்தமன் என்ற நம்பிக்கை எப்போது உடைகிறதோ அதன் பின் அந்த நம்பிக்கை ஒருபோதும் மறுபடியும் வரப்போவதில்லை.

கதையின் முடிவில் பானு பிரகாசை மன்னிப்பது போல் கூறியிருந்தால் நிச்சயம் என்னால் அது ஏற்கப்பட முடியாததாகவே இருந்திருக்கும்.இந்த முடிவு தான் கதைக்கு நூறு வீதம் பொருத்தமான முடிவு.

பிரகாஷ் போன்ற ஆண்களுக்கு இதைவிட சரியான தண்டனை இருக்க முடியாது.

நாவலாசிரியர்கள் பெரும்பாலும் எடுக்க தயங்கும் ஒரு கருவை எடுத்து அதை சரியானவிதத்தில் விவரித்து பிரச்சினையைக் கூறி அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதன் தீர்வு என்று அனைத்தையும் மிகச்சரியாக திட்டமிட்டு கதை சொன்ன பாங்கு மிக அருமை.

வார்த்தை தவறி விட்டாய் மிகச் சரியான தலைப்பு.(அந்த வசந்தமே எனக்கு பிடிக்கல. அவன எல்லாம் வாழ்வின் வசந்தம் என்று கூற முடியாது)

சொல்ல வேண்டியதை மிகச்சரியான சம்பவக்கோர்ப்பு வார்த்தைக் கோர்ப்பு என்று அழுத்தமாய் சொல்லிவிட்டீர்கள். அனாவசிய சம்பவங்களோ வார்த்தைகளோ எதுவும் இல்லை.சொல்ல வேண்டியதை மிகச் சரியாய் நேர்த்தியாய் சொல்லி இருக்கிறீர்கள்.சொல்லப்போனால் கதையில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் கூட முக்கியத்துவம் வாய்ந்தவையாக தோன்றுகின்றன.அதிலும் இறுதிப்பகுதி அற்புதம்.

ஹப்பாஆஆஆஆஆ……. விட்டால் நான் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போவேன். 🙂 🙂 இடம் போதாது.இதுவே சற்று பெரிய பின்னூட்டமாய் இருக்கும்.அதனால் முடிக்கிறேன் 🙂

அருமை அருமை அருமை
உங்கள் எழுத்துப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 🙂

அன்புடன்
தனு

sathya nandh kumar

super story mam final super pirinchu pona kuda avanuku evola pain irukathu super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page