வார்த்தை தவறிவிட்டாய் – 8

ஹாய் பிரெண்ட்ஸ்,

நன்றி நன்றி நன்றி. உங்களோட கருத்துக்களையும் ஆதங்கத்தையும் படிச்சேன். தினந்தோறும் செய்திகளையும், கண்ணால் பார்த்த, காதால் கேட்ட நிகழ்வுகளையும் கோர்த்தே ‘வார்த்தை தவறிவிட்டாய்’ உருவானது.

நீங்களும் இதே போல் நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருகிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு அனுப்பிய செய்தியின் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன். அந்த வகையில் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரு கதையாக இல்லாமல் பானுப்ரியா எனும் உங்கள்  தோழியின் வாழ்க்கையில் நிகழும் திருப்பமாய் நினைக்கிறீர்கள்.

கதையிலாவது அந்த வெகுளிக்கு  கண்டிப்பாய் நல்லது செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருகிறீர்கள். உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். எனது பொறுப்பு அதிகமாகிவிட்டதாய் உணருகிறேன்.

இனி முக்கியமான இன்றைய பதிவுக்குப் போகலாமா

வார்த்தை தவறிவிட்டாய் – 8

அன்புடன்,

தமிழ் மதுரா

அத்தியாயம் –8

பெட்டியில் இஸ்திரி போடப்பட்ட சட்டைகளையும், பேன்ட்டையும் செட்டாக அடுக்கி வைத்தாள் பானு. 

“சோப்பு, சீப்பு, ஹேர் கிரீம் எல்லாம் இந்த கவர்ல சுத்தி வச்சிருக்கேன். உங்க பாடி ஸ்ப்ரே தீர்ந்து போயிருச்சு. நீங்க உபயோகிக்கிறது ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டான். அதை மட்டும் வெளிய வாங்கிக்கோங்க. வேற பிராண்ட் போட்டுறாதிங்க. உங்களுக்கு அலர்ஜி வந்துடும்” 

அக்கறையாக எடுத்து வைத்த மனைவியின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தான். 

நான் வர பத்து நாளாகும்.. தனியா இருந்துப்பியா?”

அம்மாதான்  வரேன்னு போன் பண்ணாங்களே. இங்க ஒரு வாரம் இருந்துட்டு அவங்க கூட ஊருக்குப் போயிட்டு வரேன்”

நீ தனியா போனதே இல்லையேடி … பேசாம எங்கப்பாவை வர சொல்லு.. அவர் கூட ஊருக்குப் போயிட்டு வாங்க.”

வயசான எங்கம்மா தனியா வராங்க… ஆனா நீங்க என்னை அனுப்ப மாட்டிங்கிறிங்க. அப்பறம் தனியா ஒரு காரியமும் செய்யத் தெரியலைன்னு  திட்டாதிங்க”

உங்கப்பா இருந்த வரைக்கும் உங்கம்மாவைத் தனியா எங்கேயும் விட்டதில்லை”

எதுவும் சொல்லாதிங்க என்று கண்கலங்க அவன் வாயைப் பொத்திய மனைவியைப் பார்த்து சிரித்தவன்.

“என்ன செய்யுறது மனசு கேக்கலையே. என் முட்டாள் பொண்டாட்டியைத் தனியா ஊருக்கு பஸ் ஏத்தி விடக் கூட பயம்மா இருக்கு. தங்கமாட்டம் ரெண்டு பிள்ளைகளை வேற அவ அழைச்சுட்டுப் போயிட்டு வரணுமே” சொல்லிவிட்டு சிரித்தான். 

“அக்கறையைக் கூடத் திட்டித்தான் காமிக்கணுமா” கணவனின் சட்டை பட்டனைத் திருவியபடி வெட்கப்பட்டாள் பானு. 

நான்ராட்சசந்தான்.. கொடுமைக்காரன், சிடுமூஞ்சி. அப்படித்தான் உன்னைத்திட்டுவேன். நான் உன்னைத் திட்டக் கூடாதா? உன்னையும் நம்ம பசங்களையும் தவிரவேற யாரையும் திட்டிப் பாத்துறிக்கியா”

உங்கம்மா அப்பா தம்பி”

அவங்களைத் தவிர”

இல்லை என்று உதடுகளைப் பிதுக்கினாள்.

நான் ஊருக்கு வரதுக்குள்ள ஏன்னு யோசிச்சு வை”

“இப்பயே சொல்லுங்களேன்”

“மத்தவங்க மேல காமிக்கிற கோவம் எரிச்சல் எல்லாம் வேற விதமானது. உன் மேலையும் குழந்தைங்க மேலயும் காமிக்கும் கோவம் உரிமைல வரது. என் மனைவியும் என் பொண்ணுங்களும் எல்லாத்திலையும் பெஸ்ட்டா இருக்கணும்னு நினைக்கிறேன்”

“இருக்கோமா….”

உதட்டைப் பிதுக்கியவன் “குழந்தைகளை கொண்டு வந்துடுவேன். உன்னை… கஷ்டம்தான்… வேற வழியில்லை இனிமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான். 

எப்படிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஆயிரம் முறைகள் பானுவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, தவ்லத் வீட்டில் நாசரிடமும், நேத்ராவீட்டில் அவளதுதாத்தாவிடமும் பார்த்துக் கொள்ளச் சொன்னான். மும்பை செல்லும் விமானத்தில்ஏறும்முன் கண்கலங்க நின்ற மனைவியையும் குழந்தைகளையும் கண்டு மன உறுத்தலோடுகிளம்பினான். 

ஐந்து நாட்கள்தான் மும்பையில் வேலை. இது தெரிந்த பூர்வஜாதானும் வருவதாக அடம் பிடிக்க, ஒரு வழியாய் சமாதானப்படுத்தி மீதி ஐந்துநாட்களும் பூர்வஜாவுடன் கழிக்க ஒத்துக் கொண்டான். வழக்கமாய் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே பூர்வஜாவுக்குத் தருபவன் இன்று நாலைந்து நாட்கள் ஒதுக்கினான். இனியாவது என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் குடும்பத்துக்கு உண்மையாய் நடக்க முயல வேண்டும். இந்த முறை அவளிடம்தெளிவாகப் பேசி, லம்பாக ஒரு தொகையைக் கொடுத்து இந்த உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாய்எண்ணியபடியே மனைவிக்கும் குழந்தைகளுக்கும் டாட்டா  காட்டினான்.அவனது சேமிப்பான நான்கு லட்சம் பணம் பூர்வஜாவுக்கு நஷ்ட ஈடாய் சேர பத்திரமாய் அவனுடன் பயணம் செய்தது.

பானு ஊருக்கு எடுத்து வச்சுட்டியா” வினவியபடியே சாவித்திரி வந்தார்.

எங்க மாமி”

நல்லா கதையைக் கெடுத்த போ… நம்ம அப்பார்ட்மெண்ட்ல குடியிருந்தாளே சூசன். அவ  கல்யாணத்துக்குப்  போகணுமே”

இங்க பெசன்ட் நகர்ல தானே”

இல்லடி பெங்களூர்லல கல்யாணம்”

ஐயோ சுத்தமா மறந்துட்டேன். அவர்கிட்ட சொல்லவே இல்லை மாமி”

அடிப்போடி இங்க இருக்கு பெங்களூர். காலைல சதாப்தில ஏறினா பதினோரு மணிக்குபோய்டலாம்.சாய்ந்தரம் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு, ராத்திரிபஸ்பிடிச்சு மறுநாள் விடியுரப்ப வந்துடலாம்”

ஊர்  சுத்தி பாக்கலையா… அங்க புடவை டிசைனெல்லாம் சூப்பரா இருக்குமாம்” செவ்வந்தி ஆசையுடன் சொன்னார்.

அதுக்கெல்லாம் நேரம் இருக்காது”

சுவாரஸ்யம் குறைந்து விட்டது செவ்வந்திக்கு  “என்னால அலைய முடியாது… நான் வரல.. பானு நீ வேணும்னா போயிட்டு வா”

சரி நீ, நேத்ரா, நான், தவ்லத் நாலு பேரும் போயிட்டு வந்துடலாம்”

ஹை தவ்லத் அக்கா வராங்களா.. ஆச்சிரியமா இருக்கு”

எனக்கே நம்ப முடியலடி… நாசர் போயிட்டு வர சொல்லிட்டான். துணைக்கு வேணும்னா யாசிமை கூட்டிட்டு போலாமா?”

பொண்ணுங்கவெளிநாட்டுக்கே தனியா போய்ட்டு வர்றாங்க. அஞ்சு மணி நேர தூரத்தில்இருக்குற பெங்களூர் போறதுக்கு இந்த ஒல்டீஸ் என்னமா பில்ட் அப்கொடுக்குதுங்க” என்று அலுத்துக் கொண்டாள் நேத்ரா.

அம்மா,யாராவது ஜென்ட்ஸ் கூடப் போனா பாதுகாப்புன்னுதான் நாசர் அண்ணன் உங்க கூடபோக சொன்னான். அதுதான் நேந்தரங்கா சாரி நேத்ராக்கா வர்றாங்களே.. அப்பறம்நான் எதுக்கு?”

ஆமாம் ஆன்ட்டி, பய்யன் நான் துணைக்கு  வரப்ப  உங்க பொண்ணு யாஸிம் எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்?” பழிப்பு காட்டினாள் நேத்ரா.

சென்னையுடன்ஒப்பிடும் போது  இதமான வெயில்தான் பெங்களூரில். முதன் முதலாக தமிழ்நாட்டைவிட்டு வேறு மாநிலத்துக்கு  வந்த பானுவும் தவ்லத்தும் எல்லாவற்றையும்  ஆச்சிரியமாய் பார்த்தனர்.

மாமி, என்ன அழகு… என்ன அழகு… ஒவ்வொருத்தியும் பெங்களூர் தக்காளிப் பழமாட்டம் இருக்காங்க. நாசர்க்கு இங்கேயே பொண்ணு பாத்துடலாமா?”

உங்க  ஆம்பூர்  அண்ணன் காதுல மட்டும் விழுந்துச்சு நம்ம எல்லாரயும் கட்டி வச்சு உதைப்பார்”

தவ்லத் உங்க அண்ணன் பொண்ணு பேரு கூட என்னவோ சொன்னியே… “

நூர்ஜஹான்”

அவளுக்குஎன்னடி… நூத்துக்கு நூறு மார்க் போடுற  அளவுக்கு நல்ல பொண்ணு. உங்கண்ணன்வேற வருஷத்துக்கு ஒருதரம் கல்யாணம் பேச வந்துடுறான். பேசி முடிச்சுடவேண்டியதுதானே”

அங்கதான் மாமி பிரச்சனையே. நாசர் காலேஜ்ரெண்டாவது வருசத்தோட படிப்பை நிறுத்திட்டானா… நூரு  பன்னெண்டாவதுலதொள்ளாயிரம் மார்க் வாங்கிருக்கா.. படிக்கணும்னு சொன்னா போலிருக்கு.எங்கண்ணன் நாசரை விட அதிகம் படிக்க வச்சா அவ கல்யாணம் கட்டிக்குவாளோமாட்டாளோன்னு பயந்துட்டு மாட்டேன்னுடுச்சு. போன வருஷம் ரெண்டுத்துக்கும்  கல்யாணம் பண்ணிடலாம்னு பாத்தா இவன் இப்ப கல்யாணம் வேண்டாம் நூரு  ஆசைப்பட்டபடி டிகிரி வாங்கினதும் கல்யாணம் பேசலாம்னுசொல்லிட்டான்”

உங்கண்ணன் ஒத்துகிட்டாரா”

அண்ணன் சம்மதிக்கல அதுக்கு நம்ம மார்க்கம் பெண்களின்  உடலுக்கு திரையிட சொன்னதே தவிர, அறிவிற்கு திரையிட சொல்லவில்லை ..

ன்னு ஒரே போடா போட்டுட்டான். அண்ணனுக்கு வழியில்லை”

பச்…அந்தக் கடுவன் பூனைக்குள்ள  இப்படி ஒரு நல்ல மனுஷனா… ஆன்ட்டி  படிச்சுமுடிச்சதும் அந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா”

அதேகவலைதான் எனக்கும். அவ டிகிரி படிச்சா, அவளைவிட  உசத்தியா படிச்சமாப்பிள்ளையா கேப்பாளேன்னு  எடுத்து சொன்னேன்… அப்ப அவ உன்னோடமருமகள்-ன்னு ஆண்டவன் எழுதலன்னு நினைச்சுக்கோன்னு சொல்லிட்டாண்டி”

ஒரு மணி நேரமாய் தொடர்ந்த கார் பயணத்தில் சலிப்புற்ற சாவித்திரி

ஏண்டிஅந்தப் பத்திரிக்கைல எங்க கல்யாணம்னு பாரு. கிட்டத்தட்ட மான்டயா  வந்துடுச்சு இன்னும் ஒரு மணி ட்ராவல் பண்ணா  மைசூர் போயிடலாம் போலிருக்கு”

மாண்டையா  போற வழிலன்னுதான் சொன்னா பாட்டி”

எங்காவது நிறுத்தி சாப்பிட்டுட்டு போயிடலாமா.. நான் சுகர் டேப்லெட் வேற போடணும்”

டன்பாட்டி…. ஆனா இன்னைக்கு நம்ம எல்லாரும் நல்ல ரெஸ்டாரன்ட்ல சாப்பிடுறோம்.தவ்லத் அண்ட் பானு நீங்க ரெண்டு பேரும் எனக்கு தோசை வேணும், சாம்பார்அப்பளத்தோட மீல்ஸ் வேணும்னு தகராறு பண்ணா இங்கேயே இறக்கி விட்டுட்டுபோயிடுவேன்”

வாகனசாரதி பக்கத்தில் இருந்த  உணவுவிடுதிக்கு காரை செலுத்தினார். அவர்கள் உணவுண்ட இடத்துக்கு அருகிலேயேஒரு பெரிய நட்சத்திர விடுதியும் இருந்தது.பெங்களூரை விட்டு எத்தனையோமையிலுக்கு அப்பாலிருந்த அந்த விடுதி குடும்பத்துடன் தங்கும் வசதியும், நீச்சல் குளமும், உணவு விடுதியுமாய் நால்வரையும் ஆச்சிரியப்படுத்தியது.

பெங்களூர்லஇருக்குற ஐடி ஆளுங்க எல்லாரும் வாரக் கடைசியான இந்த மாதிரி விடுதிக்குவந்து பொழுதை கழிப்பாங்க. உள்ளேயே விளையாடுற இடம், சாப்பாடு, பியூட்டிபார்லர், ஏன்கடைங்க கூட இருக்கு. பணம் மட்டும் இருந்தா போதும். எல்லாம்வாங்கலாம்” என்று கூடுதல் தகவலும் தந்தார் டிரைவர். அவரையும்  அங்கேயேசாப்பிட சொல்லிவிட்டு சென்றார்கள்.


உணவு பிரமாதமாய்இருந்தது. இருவது வயதிலிருந்து எழுவது வயது வரை இருந்த அந்த நண்பர் குழாமைஅங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தபடி சென்றனர்.

ஏண்டி நேத்ரா, ஒரு காப்பி எம்பது  ரூவா போட்டிருக்கானே அநியாயமா இல்ல” புலம்பிக் கொண்டே சாப்பிட்டார் தவ்லத்.

அநியாயம்தான் ஆன்ட்டி. இந்த செலவுக்குஈடு செய்ய அடுத்த வாரம் புல்லா நீங்க சாப்பிடக் கூடாது.. சரியா”

வாயடித்தாலும் அனைவருக்கும் நேத்ராவே பில் கட்டினாள். தடுத்தவர்களிடம்

இதுஎன்னோட பிறந்தநாள் ட்ரீட். ஒவ்வொரு பிறந்தநாளும் அம்மா அப்பாவைப் பாக்கஊருக்குப் போய்டுறேன். அதனாலதான் முன்னாடியே தந்துட்டேன்” என்றுஅடக்கினாள்.

கையைக் கழுவிவிட்டு புடவையில் துடைத்த தவ்லத்தை கடிந்து கொண்டு டிஷு பேப்பரைத் தந்தாள்.

எவ்வளோபேப்பர வீணாக்குற, மரத்தை வளர்ப்போம்ன்னு…” பேசிய தவ்லத் அதிர்ச்சியுடன்பாதியில் நிறுத்தினார். அங்கிருந்த  கண்ணாடி ஜன்னல் வழியே பக்கத்திலிருந்தவிடுதியின் வாசல்  தெரிய அங்கு நின்ற காரிலிருந்து இறங்கியதுபானுவின் கணவன் போல் அல்லவா இருக்கிறான். கைகளில் ஷாப்பிங் செய்த பைகளுடன்விலையுர்ந்த டிசைனர் சேலை, அதற்கென்றே தேர்ந்தெடுக்கப் பட்ட பேன்சி நகைகள், தங்க நிறத்தில் தோலோடு பொருந்தித் தெரிந்த கைக்கடிகாரம் என்றுஇறங்கியபெண் யாரென்றே தெரியவில்லை தவ்லத்துக்கு. ஆனால் ஐந்து வருடமாய் தினமும்பார்க்கும் பிரகாஷ் அன்றாடம் அணியும் உடைகளைத்தான் அணிந்திருந்தான்.

டீ நேத்ரா… பானு வீட்டுக்காரர் மா…” வார்த்தைகள் வெளிவராமல் தவிக்க,

அ…  அண்…ண..னேதான் ஆன்ட்டி” என்றாள் நடுங்கிய குரலில்

இருக்…கா..துடி.. அவரு..  பா…ம்..பா…” குரலிலேயே அப்படி இருந்துவிடக்கூடாது என்ற பயமும் இருந்தது.

கூட இருக்குறது அக்காவோட ப்ரெண்ட் பூர்வஜா” அதிர்ச்சி விலகாமல் சொன்னாள் நேத்ரா.

இருக்காது நம்ம தப்பா பாத்திருப்போம்… இதை பானுகிட்ட சொல்லக் கூடாது.. என்ன” அழுகையை முந்தானையில் அடக்கியபடி சொல்ல

திரும்பியவர்கள்  கல்லாய் சமைந்து மூச்சு விடக் கூட மறந்து நின்ற பானுவின் மீதும் சாவித்திரி மீதும் இடித்துக் கொண்டார்கள்.

No Comments
Kothai

Banu is so pavan paaa………… Rom ba kashtapadutharinga

gsrividhya

Eagerly waiting for bhanu’s reaction . plz make her bold

gsrividhya

Eagerly waiting for bhanu’s reaction . plz make her bold

vijivenkat

bombay poren sollitu bangalore vanthirukanga….so ini banu enna mudivu seiya poraa……seekirame adutha update koduga….

raj148

Please help Banu to come out of her innocence

thenu23

ஹாய் தமிழ்

அவனோட குற்ற உணர்ச்சியை மறைக்க பானுவை திட்டுறதா… too bad…
அவளோட அன்புக்கு தகுதியானவனாய் மாறணுமா…. too late …

மனைவியும், பொண்ணுங்களும் எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கனுமா.. ஆனா இவரு மட்டும் வொர்ஸ்ட்டா இருப்பாரு…! அவனோட சேமிப்பை கூட அந்த கேடு கெட்ட பூர்வஜாவுக்கு கொடுக்க போறானே…! இவனை என்ன செய்யலாம்…??

அய்யோ… பானுவே நேரா பார்த்துட்டாளே…! கொடுமை..!
.

anuja

Tamil
Manasukku romba kashtamaa irukku, Banu vae paarthuttaa, ini aval enna mudivu seivaal, aval paarthathai avan ariyumaaru nadappaalaa illai ???

shanthi

ஹாய் தமிழ் ,
சந்தோசமா தொடங்கிய பயணம் வருத்தத்தில் ???பானுவின் நடவடிக்கை

Khokilaa

Hi Tamil,

Banu neril avargalai santhippala..allathu….athirchiyudane thirumbi selvaala….avargaluku kandippaga ippothu oru athirchi vaidyam thevai…eagerly waiting for next update…seekiram post pannungappa…

Thanks,
Khokilaa

J KRITHIKA

very nice and interesting update tamil and song selection super, what will happen next eagerly waiting

vrmagesh

ALL THE BEST&CONGRATS FOR UR CHITRAKADHA PUBLICATION

suganya

hi tamil..
nice update..

prakash,poorvaja va onna Bangalore la banu vum parthutta 🙁
epdi thaangikka poralo

சிந்தியா

நேரில் தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்க்கும் பானு ரொம்ப பாவம் ….! எப்படி ஒரு நிலை …. அவளுக்கு , என்ன செய்வாள் ???

benzishafeek

haiyo tamil ippadi thaan kathai pohumnu thaerichalum padikkayila manasukku romba kashtama irukkupa.banu romba paavaam unmaya solla pona paavam banu illai prakash thaan nalla life kidacchum vaala thaeriyaathavan.avana patthi padikkayila kovama varuthu.

anuashok

ஹாய் தமிழ் ,

இப்ப தான் 8 அப்டேட்ஸ் படிச்சேன் கதை ரொம்ப அருமையா போகுது வாழ்த்துக்கள்..என்ன சொல்றது தமிழ் அழகா ஒரு குடும்ப தலைவியோட அன்றாட வேளைகளில் இருந்து ஆரம்பிச்சி கதை நகருது..ஆனால் அந்த அப்பாவி பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகம் நடக்கும்னு எதிர்பார்களை.. அவளுடைய குனனலத்தை அழகா சொல்லி இருக்கீங்க.. பிரகாஷ் ஓட சபல புத்தியை என்ன சொல்றது இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் செய்ற காரியமா இது…பெரும்பாலும் படித்தவர்கள் இப்படி கழனிபானைக்குள் கையை விடும் வேலைகளை செய்றாங்க ..படிக்கும் போது ரொம்ப மனசு வருத்தமா இருந்தது. இவ்வளவு பலகீன மனசு கொண்டவனுக்கு மனைவியின் அறிவை பற்றி குறை சொல்ல எந்த தகுதியும் கிடையாது ..இந்த கேவலத்தை அவள் கண்ணாலேயே பார்த்துட்டு என்ன நடக்க போகுது.. உமையாளோட சொற்பொழிவு அருமையா ..ஆனால் எத்தனை சொற்பொழிவாளர்கள் வந்தாலும் இந்த மாதிரி ஜென்மங்களை திருத்தவே முடியாது. சுப்ரஜா cmt கொடுக்க கூட தகுதி இல்லாத கதாபாத்திரம்..

வித்தியாசமான கதைக்களம் சொல்ல வரும் விஷயமும் சாட்டையடிகாக இருக்கும் என்று நம்புறேன். keep rocking..

Hema

Hi Tamil,
Story is goin nice pa. Banu paavam Tamil. Romba kastamairuku pa

Siva

HI Tamil,
Iniya Deepavali nalvazhthukkal.

Episodes 7 & 8 serthu padithen.

Aswini’s background picture – beautiful. Eppadi adhu ninaivu vandhu apt-a potturukkeengannu adhisayithu mudikkala – adhukkula, ‘Azhagiya kanne’ endru BGM – absolutely heart-rending. Thank you for both.

Poor Banu – pirandha idathilum onnum solli kolluvadhu pol support illai – innum idithu thaan pesubavargalaaga irukkirargal – paavam aval.

Enna oru paasamum parivuma, indha Prakashukku paarthu, paarthu, petti adukki kodukkura – no wonder his guilt is piling up… he deserves to drown in it…

Irundhirundhu oru murai than thozhigaludan oor vittu oor vandhadhu than kanavanin indha adulterous treachery-i edhir kolla thana? Padikkum podhe dhik, dhik-nu thaan irundhadhu – endha idathil ival avargal iruvaraiyum paarka poralo endre thaan padithen.

Davlath-um, Nethravume avvalavu nilai kulaindhargal endraal, Poor Banu – mugathil araiyum betrayal – OMG – eppadi thaangi, veli vara pogiral?

ippadi thaan indha Bengaluru payanam mudiyum endru aval andha trip pathi pechu eduthathume purindhalum….. adhukku munnadi, Prakash-in mana nilaiyaiyum, his and Banu’s interaction just before he left padithathalum, manasukku innume romba kashtama irukku…. if he has no gentler qualities, totally a selfish, conscience-less adulterer, thooki erinchittu poidalam – as a reader, that is…

But, ivanukkulla, konjam gentler side-um irukku, manasaatchiyum konjam irukku, manaiviyaiyum pidichirukku…. indha madhiri manithargalidam dhaan – you just can’t completely discard them.. at the same time, considering what he had done, you can’t accept him either…. ivan mattum murai thavaramal irundhirukkalame endra ennam thaan, thondrugiradhu…

sharadakrishnanha

MM ETHRIPATHATUDAN. ANA INGE IPPADI BANGALORE MATTUVANGANU NAAN NINAIKALE. LOCAL ILEYE YAAR MOOLAMAVATHU THERIYA VARUNMNU NINACHEN MOSTLY THRO NETHRA .NU. IPPADI ANDHA GROUP PARTHU ADHIRCHI YARADHU ENAKUM SHOCK THAN. ENNA PANNA PORA BHANU. how she is going to react? a million dollar question….SHE MAY NOT BE AN INTELLIGENT BUT STILL INDA VISHAYATHIL AVAL EDUKAPOKUM MUDIVU ROMBA STRONG AKA IRUKUMNU NAMBAREN. ALL THE BEST BHANU. PRAKASH MARANUMNA NINACHA NERATHIL KAIYUM KALAVUMA MATTIKITAN. IDHUAN VIDHIIN SATHI. vazhkai porkalathil pukumthu oru kai parka bhanu ready avala……akanum……sadhu mirandal kadu kollathu. indha bhanuvum adhai polave endru edhiparkiren

Sulochana

Next update please. Ithu romba kastama erukku.

shubaram

எதிர் பார்த்தது தான். ஆனாலும் கஷ்டமாக இருக்கு. பானு பாவம் தமிழ். waiting for next Update.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page