வார்த்தை தவறிவிட்டாய் – 7

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி.

பானுவைப் பற்றி கவலைப்பட்டிருந்தீர்கள். உங்களது ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது எல்லா கதைகளும் Fairy Tale இல்லையே.

பானுவுக்கு உண்மை தெரிய வருமா? தெரிந்தால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எத்தனை பேர் பதில் சொல்லுறிங்கன்னு பார்க்கலாம். ஒரு ஐந்து விதமான பதில் வந்ததும் அடுத்த அப்டேட் போட்டுடுறேன். இன்னைக்கே ரிப்ளை வந்துட்டா நாளைக்கு அடுத்த பதிவு.

இனி இன்றைய பகுதி

வார்த்தை தவறிவிட்டாய் – 7

அன்புடன்,

தமிழ் மதுரா

அத்தியாயம் – 7

குழந்தைகளுக்குத்  தேர்வு விடுமுறை தொடங்கிவிட்டது. ஊருக்கு செல்ல வேண்டும். ஆனால் பிரகாஷுக்கு பாம்பே செல்ல வேண்டிய வேலை இருந்தது.
 

பானு,உங்களை உங்கம்மா வீட்ல விட்டுட்டுப் போகட்டுமா?” 

மறுத்து வேண்டாம் என்று தலையசைத்தாள்.

பானுவின் தந்தை குணசேகர், இவளுக்குத் திருமணம் செய்த கையோடு மண்ணுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார். அவள் தாய்செவ்வந்தி, இவர் ஆண்பிள்ளை குடும்பத்தின் வாரிசு என்றும் பெண்பிள்ளை செலவு என்றும் எண்ணும் பத்தாம்பசலி. பானுவுக்கு ஒரு முழம் பூ வாங்கித்தந்தால் கூட 

“பொண்ணைப் பெத்தாலும் பெத்தேன் அவ காதில் போட்டிருக்குற கம்மல், கழுத்தில் இருக்கும் செயின், கைவளை இதுமட்டுமில்லாம ஒரு முழம் பூ கூட நான்தான் வாங்கித் தரவேண்டியிருக்கு” என்று பத்து பேரிடமாவது சொல்லிவிட்டுத்தான் தருவார். 

சுருக்கமாக சொன்னால் விளம்பரப் பிரியை. மகளுக்கு செய்யும் சீரைக் கூட விலைபில்லுடன் கண்காட்சியாய் ஊருக்குக் காட்டிவிட்டுத்தான் செய்வார்.

தாய் எவ்வழியோ மகனும் அவ்வழி. பானுவின் அண்ணன் அவளைக் கல்லூரியில் படிக்க வைத்ததைக் கூடத்  தண்டச் செலவுக் கணக்கில் எழுதுபவன். ரெண்டு பொண்ணப்  பெத்திருக்கா இதுங்களுக்கு தாய்மாமன் சீரு வேற செய்யணும் என்று கடுப்பாகவே சத்யபாமாவையும், ஷ்யாமாவையும் பார்ப்பான். பானுவிடம் ஓரளவு தன்மையாக நடந்துக் கொள்கிறான் என்றால் அதற்கு முழுக்காரணம் சந்திரப்பிரகாஷின் படிப்பும், வேலையும் அதனால் சொந்தக் காரர்களின் மத்தியில் பிரகாஷுக்கு இருக்கும் பெயருமே…



பானுவின்அண்ணிக்கு பானு என்றாலே ஒரு காய்ச்சல். வாய் பேசத் தெரியாமல் அமைதியாய்இருப்பவளை வாட்டி எடுப்பாள். பானு பள்ளியில் படிக்கும்போதே அவளதுஅண்ணனுக்குத் திருமணமாகிவிட்டது. வீட்டுக்கு வந்த மகராசிக்கு வீட்டின்இளவரசியைக் கண்டாலே பற்றி எரிந்தது. சமையலுக்கு  மிளகாயை அம்மியில்அரைத்துத்தா என்பாள். வேலைக்காரி இல்லை வீட்டைக் கூட்டித் துடை என்றுகட்டளையிடுவாள்.



 பானுவுன் தந்தை குணசேகர் மருமகளைக் கண்டிக்க முடியாது. அதன்பின் அவருடன் நேருக்கு நேர் சண்டை போட ஆரம்பித்துவிடுவாள். மருமகள் மகனுடன் வம்பு வளர்க்க அவர் தயாராக இல்லை.  பின் உள்நாட்டுக் கலகமாகிவிடும். அதனால்பானுவைப் பாட்டி வீட்டில் படிக்க அனுப்பிவிட்டார். திருமணம் வரை பானுவை வெளியே தங்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே ப்ளஸ்டூ தாண்டாத அவளது குடும்பத்தினர் கல்லூரியில் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தனர்.

படித்து முடித்தசிறிது நாளிலே சந்திரப்பிரகாஷ் – பானுப்ரியா திருமணம் நடந்தது. எஞ்சினியர்மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டு சொந்த பந்தத்தில் பெயரோடு வலம் வந்த பானுவை அவள் அண்ணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும்  ஆண்கள் அருகிலில்லாத சமயம்பானுவை ஏதாவதுஜாடை மாடையாகப் பேசுவாள்.பானு காதிலே வாங்கிக் கொள்ள மாட்டாள்.

பானுவுக்கு, தந்தை உலகை விட்டு மறைந்ததும், அம்மாவுக்காக பிறந்தவீடு செல்வது ஒரு கடமையாகி விட்டது.


செல்லவில்லைஎன்றால் “எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவிங்களா” என்ற குத்தலையும்சென்று தங்கினாலோ  “ஒவ்வொரு வேளைக்கும்மூணு குடும்பத்துக்குள்ள  வடிச்சுக் கொட்ட வேண்டியிருக்கு” என்ற சுடுசொல்லையும் தாங்க வேண்டும்.



பானு பிறந்த வீட்டுக்கு செல்வதற்கும் மற்றொரு காரணமும் இருந்தது.

பானுஏற்கனவே உன் வீட்டுக்காரர் கோவக்காரர். பொறந்த வீட்டுக்கு நீ வந்துபோயிட்டு இருந்தாத்தான் உனக்கும்  ஒரு சப்போர்ட் இருக்குன்னு உன் மாமியார்வீட்டுல மரியாதை தருவாங்க. உங்க அண்ணி வாய்க்கு பயந்து வரதைநிறுத்திட்டா… உன்னை என்ன செஞ்சாலும் கேக்க நாதியில்லைன்னு ஆயிடும்.ஜாக்கிரதை” என்று அவள் தாய் செவ்வந்தி படித்துப் படித்து சொல்லியிருந்தார்.

தாய் தந்தையர் பேச்சுக்குத் தலையசைத்தே பழகியிருந்த பானுவும் அப்படியேஇன்றளவும்  நடந்து வருகிறாள்.


வருடம் ஒருமுறை முழு ஆண்டுத்தேர்வு விடுமுறையில் பத்து நாட்கள்பல்லைக் கடித்துக் கொண்டு தாய் வீட்டில் கழித்துவிட்டு மலையம்பட்டியிலேயே  இருக்கும்மாமியார் வீட்டில் பத்து நாட்கள் இருந்துவிட்டு ஓடி வந்துவிடுவாள். அந்தஇருவது நாள் இடைவெளியில் நேத்ராவும் ஊருக்குச் சென்று தன் பெற்றோருடன் சென்னைக்குவந்துவிடுவாள். நால்வர் அணியுடன் நேத்ராவின் தாய் அமுதவல்லியும் சேர்ந்துக்கொள்ள ஐவரும் இனிமையாகப் பொழுதைக் கழிப்பார்கள்.

செவ்வந்தி தன் மகள் பானுப்ரியாவை வேறு குடும்பத்தின் மருமகளாய் பார்த்தாலும், வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. 

அவருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்போது தாய் பானுவீட்டுக்குக் கிளம்பி வந்துவிடுவார். பத்து நாட்கள் கழித்து கோவம்ஆறிவிடும். ஊருக்குக் கிளம்புவார். ஊரில் உறவு முறைகளிடம் சென்னை சென்றதுக்கு “பானு பாவம் பிள்ளையை வச்சுட்டு கஷ்டப்படுறாளேன்னு உதவி செய்யப் போனேன்” என்று காரணம் சொல்வார்.

சுருக்கமாய் சொல்லப் போனால் பானுவைத் தனது மகளாகப் பார்க்கிறாரா இல்லை ஒரு இளிச்சவாயை தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறாரா என்ற எண்ணம் நியாயவாதிகளுக்குத் தோன்றும். இப்படியெல்லாம் சில தாய் இருப்பார்களா என்று கேட்காதீர்கள். அபூர்வமாய் இப்படியும் சில அன்னையர் குல திலகங்கள் இருக்கின்றனர். பானுவிடம் இருக்கும் சில நல்ல குணங்கள் அவளது பாட்டியின் வளர்ப்பினால் வந்திருக்கலாம்.

தாய்வீட்டைப் பற்றிக் குறைவாககணவனிடம் சொன்னால் உனக்குத்தான் கேவலம் என்றுபோதிக்கப் பட்டிருந்ததால் பானு வாய் விட்டுப்  பிரகாஷிடம் சொல்வதில்லை.அவள் சொல்லாமலேயேபிரகாஷுக்கும் பானுவுக்கு ஊருக்கு போவது மனமகிழ்ச்சியைத்தருவதில்லை என்று புரிந்தது. அதனால் ரொம்பவும் வற்புறுத்த மாட்டான். அவன்வீட்டுக்கு வரும்போது பானு வீட்டில் இருக்க வேண்டும். அதைத்தான் அவனும்விரும்பினான். மாலை டிபனும், இரவு உணவும் பானு கையால் உண்டால்தான்அவனுக்குப் பிடிக்கும்.ஏதாவது வெற்றியை அடைந்துவிட்டால் உடனே பானுவிடமும் குழந்தைகளிடமும் பகிர்ந்துக் கொள்ளத் துடிப்பான். கணவனின் சாதனையைக் கண்டு பெருமையால் பூரிக்கும் பானுவின் முகத்தைக் காண அவனுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு கணவனுக்கும் தன் மனைவியின் மனதில் சாதனை நாயகனாகத் தோற்றமளிக்கத் தானே விரும்புவான்.

பானுவின் அசட்டுத்தனம் கோபமூட்டினாலும் அதற்காக அவளை பிரியவோ வெறுக்கவோ பிரகாஷால் முடியாது. அவன் பானுவைத் திட்டினாலும் மற்றவர்கள் யாரும் அவளை மரியாதைக் குறைவாக நடத்த அனுமதிக்க மாட்டான். பூர்வஜா பானுவைப் பற்றி ஏதாவது குறைவாக சொன்னால் வார்த்தைகளால் குதறி விடுவான். அதனாலேயே ஆசைநாயகி என்ன முயன்றும் அந்த பந்தத்தை உடைக்க முடியவில்லை. 

அவனுக்கு பானுவைப் பிடித்தது. ஆனால் பூர்வஜாவின் நெருக்கமும் அதனால் ஏற்பட்ட மயக்கமும் நிலவை மறைத்த மேகம் போல அவன் நெஞ்சமெங்கும் நிறைந்திருந்தது. பல நேரங்களில் தவறிழைத்த மனது தூக்கமின்றி தவிக்கும் நேரத்தில், மேகம் விலகி அவன் செய்துக் கொண்டிருக்கும் தப்பை அவன் மனசாட்சி குத்திக் காட்டும். கணவன் பால் அதீத நம்பிக்கையுடன் அவன் தருவது மலரோ முள்ளோ வாய்பேசாது பெற்றுக் கொண்டு நிம்மதியாய் உறங்கும் பானுவைக் கண்டு அவன் உள்ளம் கனியும்.

அப்போதெல்லாம் தன்னைத் தானே கேட்டுக் கொள்வான் “நல்ல மனைவி, சமத்துக் குழந்தைகள்… இந்த மாதிரி ஒரு குடும்பம்அமையாதான்னு அவனவன் ஏங்குறான்… நீ  ஏண்டா பிரகாஷ் இப்படி இருக்க.. அந்தபூர்வஜாதான் உன் மேல வந்து விழுந்தான்னா நீ ஏன் வளைஞ்சு கொடுக்குற.  இனிமேஅந்தப் பிசாசைத்  திரும்பிக் கூடப் பாக்கக் கூடாது. சம்பளம் கம்மியாகிடைச்சாக் கூடப்  பரவல்ல ஊர் பக்கமே ஏதாவது வேலை பார்த்துட்டுப்போய்டலாம்” என்று முடிவு செய்வான். கல்லூரியிலும் பூர்வஜாவைப் பார்ப்பதையே தவிர்ப்பான். அதைப் புரிந்துக் கொள்ளும் அவள், எப்படியாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரகாஷைக் கண்டு கண் கலங்கும்போது அவனை அறியாமலேயேஅந்தக் கண்ணீரைத் துடைக்க அவன் கைகள் பரபரக்கும்.

No Comments
anuja12397

ponga Tamil.
Banu vai aval kanavan thaan ippadi oru throgam seigiraan nu paarthaal, aval amma vum ippadi nadakkaraangalae!!!!

Banu ku unmai therinthaal???

Banu oda characterukku , aval veru vazhiyillaamal iruppaal nu thaan thonuthu, aval kanavanukku adangiyae pazhakkappattaval, aval udanae puratchigaramaana mudivu edukka mudiyaathu
1.pirantha veettil muzhuthaaga thanga mudiyaathu
2.2 penpillaigal irukku, athan ethirkaalam ennaagum nu think pannuvaal
3.kanavan kettavanaaga irunthaalum avanai matravargalidam vittu kudukka maattaal

so avaloda anbaal avanai maatruvaal nu ninaikkiraen…

Rose

Banu amaithi than atharkaga mana uruthi illamal iruka mattal. Eppadi pata pennai irunthalum kanavanin droogathai parthu suma irukka mattarkal.

Khokilaa

Hi Tamil,

Banu ullirunthe amaithiyaga prakash-n throgathuku bathiladi kodukkanum. aval bathil poorvajavai oda oda viratanum.

marcelinemalathi

பானுவுக்கு ரொம்ப கஷ்டம் தான். ஒரு பக்கம் சுயநலமான அம்மா, செய்வதை சொல்லிக்காட்டும் அண்ணன், வார்த்தைகளால் வதைக்கும் அண்ணி, இவர்களை வைத்துக் கொண்டு கணவனை எதிர்த்து வெளியே சென்றால் அவளுக்கு ஆதரவு யார்? ஒரு வேளை மாமியார் வீட்டிற்கு சென்றாலும் பணம் கொடுக்கும் பிள்ளைக்காக பார்ப்பார்களா இல்லை மருமகளை ஆதரிப்பார்களா என்று தெரியவில்லை. அப்படியே பானு வெளியே வந்தாலும், அவள் படிப்பிற்கு வேலை கிடைக்குமா ? அதற்காக பிரகாஷ் கூட வாழ வேண்டும் என்று அவசியமில்லை. அவளுக்கு தேவை மனோதிடமும், தைரியமும் தான். பானு பிரகாஷ் விட்டு வந்தால் தான், பிரகாஷ் திருந்துவான். அவனுக்கு ரொம்ப நாள் பானுவையும், பிள்ளைகளையும் விட்டு இருக்க முடியாது என்று நினைக்கிறேன். பிரகாஷ் விட்டே பூர்வாஜாவை வெளியே அனுப்பவேண்டும்.

thenu23

ஹாய் தமிழ்

பானுவோட அம்மா பானுவை இளிச்சவாயா நினைப்பதோட மட்டுமில்லை, ஒரு சுயநலவாதியாகவும் இருக்காங்க… மகளுக்கு செய்ததை கூட சொல்லி காட்டும் அம்மாவை என்ன சொல்வது…??

அவளின் அண்ணாவும், அண்ணியும் சொல்வது கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்…, ஆனால் அம்மா பேசுவது…??

ஹய்யோ… என்ன ஒரு அன்பு பிரகாஷுக்கு…, பானுவை யாரும் எதுவும் சொல்ல கூடாதாம்…, அதிலும் பூர்வஜா ஏதாவது பானுவை பற்றி சொன்னால் கடித்து குதறி விடுவானாம்… கொடுமைடா …… இவன் பண்ணுற துரோகத்தை விடவா பூர்வஜா பேசிவிட போறா …??

அழகிகளின் கண்ணீர் ஒரு குடும்பத்தையே அழிக்கும்…!!

பானு என்ன பண்ணுவான்னு கேட்டு இருக்கீங்க…, அவ என்ன பண்ணுவாளோ எனக்கு தெரியாது.., ஆனா அவ பிரகாஷை மன்னிக்கவே கூடாது… திரும்ப ஏற்றுக்கொள்ளவும் கூடாது…

சிந்தியா

தமிழ் ஜீரணிக்கவே முடியவில்லை பிரகாஷின் செயலை …. ஆனாலும் நீங்க உங்க ஹீரோவை இப்படி ஒழுக்கம் இல்லாதவனாக கொடுத்திருக்க வேண்டாம்!!!! அழகில்லாத … படிக்காத அசடு மனைவியாக வந்தால் துரோகம் செய்யலாமா ????

பானு நிச்சயம் தயக்கம் காட்ட தான் செய்வாள் ஆனால் கண்டிப்பாக அவளின் தோழிகளின் உதவியுடன் தன் கணவனை விட்டு பிரிய வேண்டும் ….. சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் இந்த துரோக செயலை ஏற்று கொள்ளவே மாட்டாள்… அவளை முதுகெலும்பு இல்லாதவளாக , கணவர் மேல் அன்பு கொண்டு அவன் காதலுக்காக எதையும் தாங்குவேன் என்று கணவரை அனுசரித்து செல்வது போல தயவு செய்து சித்தரித்து விடாதீர்கள் ப்ளீஸ்……

அவளின் அம்மா..அண்ணன் வேறு சரியில்லை என்னப்பா பானு முடிவு எடுப்பாள்????

தாலி கட்டிய உரிமை … நான் போய் விட்டாள் அவளுக்கு உரிமை வந்து விடும் போக மாட்டேன் என்று துரோகம் செய்த கணவனுடன் தான் இருக்க போகிறாளா !!!!!!!
என்னை பொறுத்த வரை பானுவை பத்தாம்பசலி யாக சித்தரிக்கதீர்கள் …அவள் நம் சரயு மாதிரி திடம் உள்ளவளாக காதல் இருந்தாலும் கணவரை பிரிந்து தன் பிள்ளைகளை அருமையாக வளர்த்து … சாதிக்க பிறந்தவளாக கொடுக்க வேண்டும் …. கணவர் மட்டும் தான் வாழ்கையா என்ன????

பொன்ஸ்

ஹாய் தமிழ்,

என்ன சொல்ல ………பானுக்களை பார்க்கும்போது பாவமா இருக்கே.
உண்ட வீட்டிலேயே ரெண்டகம் செய்யும் ………..பேய் கள் இருக்கிறார்கள்.
ஆனால் பானு மன்னிக்கணும்,பொறுத்து போகக்கூடாது ……..எதுவும் சொல்ல முடியலை………..ஆனால் அப்படி வாழ்ந்த பெண்கள் கோழைகள் அல்ல……..
இப்ப நிறைய பெண் சுதந்திரம் பேசுறவங்க …..சொல்லலாம்…………
ஆனால் அவர்கள் தன்னலமற்றவர்கள்.அடுத்த தலைமுறையை காப்பாற்ற தன்னை அழித்து கொண்டவர்கள்…….உணர்வு,ஆசை …………அதில் சுகிப்பவ்ர்கள் நாம் …………ஆனால் ………நாம் சுயநலவாதிகள் ……..அவர்களை விமர்சிக்க தகுதி இல்லைன்னு நினைக்கிறேன்…………நிறைய கண்ணெதிரில் பார்க்கிறேன் ……….மன வருத்தமுண்டு……….பெண்ணும் துரோகம் செய்கிறாளே ………அவர்கள் நாடகத்தை நாமும் விழுந்து விழுந்து பார்க்கிறோம் ..சிலர் மனைவியை விட மரியாதை பெற்று விடுகிறார்கள் …….சமுகத்தில் …….
இது கொடுமை தான் …….

Kothai

saadu mirandal kaadu kolladu.. Banu calm aa irukara varaikum aadalam.. Baanuvuku vishayam theriyatum… ellaroda kadaiyum mudinjidu

shanthi

ஹாய் தமிழ் ,
பானுக்கு அனைத்து பக்கமும் இழிசவாய் பட்டம் ……..அருமையான அம்மா ,அண்ணா,அண்ணி ………..சத்யா மனசாட்சி குத்துதா ??????தெரிஞ்சே தவறு செய்வதை பானு பொருத்து கொள்ள கூடாது …….வெளியேறவும் கூடாது ……அவளுக்கும் ,குழந்தைகளுக்காகவும் அவள் தனி வழியில் முன்னேறனும் …………

shanthi murugan

hi tamilmam banu must punish prakash by ignore him because he love his wife and children.she must avaid him and stand by herself…

J KRITHIKA

Hai Tamil,

Today only i read your story .very nice, but i can’t able to tolerate this Prakash character.
So please don’t make Banu to accept this illegal connections and eagerly waiting for the next ud please

geethabalan

ஹாய் மதுரா,

படித்துவிட்டு தனது படிப்பை அத்தனை பேருக்கு சொல்லித்தரும் ஒரு ஆசானுக்கு தனது மனைவியின் மீது கொண்டுள்ள அதிருப்தி வாழ்க்கைக்கு உதவாது என்பதை அறியாமல் இருக்க முடியுமா???? படிப்பு நமது வாழ்க்கை முறையை சிந்தித்து வழி நடத்த தானே உதவும்? எப்படி இப்படிபட்ட சலனங்களுக்கு இடமளித்து நம்பிக்கை துரோகம் செய்ய தூண்டும்??? ம்ம்.,,,இப்படி பட்ட ஆண்கள் உலகில் இருக்கிறார்கள் தான்..ஆனால்…பிரகாஷின் உயரிய கல்வி ஆசான் சாசனத்தில் இருத்திக்கொண்டு இப்படி என்னால் முடியவில்லைபா….

பானு….. கண்டிப்பாய் அவளது கையில் கொடுத்து வேலைக்கு செல் என தூண்டும் அந்த ஒரு பொரியே அவலை இந்த நிகழ்வில் இருந்து மீட்டு… பிரகாஷிற்கு எது நிஜம், எது மாயை என்பதை உணர்த்துவாள்… ஆனால் மனதால் அவனது தவறை அவளால் ஏற்க முடிந்தாலும் ஓர் வாசகியாய் என்னால் ஏற்கவே முடியாது….. ஆனால் பானுவின் உயரிய பண்புகள் மூலம் எளிதில் வெளி வருவாள்

-கீதா

vijivenkat

உண்மை தெரிய வரும் போது பானு என்ன செய்ய முடியும்?????? அவளுக்கு தாய் வீட்டில் எந்த support கிடையாது ……படித்து வேலைக்கு செல்லும் பெண் என்றாலும் வீட்டை விட்டு வெளியே செல்லலாம் ….தைரியமான பெண்ணாகவும் தெரியல….வீட்டில் இருந்து ஆனால் பிரகாஷ்கு எந்த வேலையும் செய்யாமல் ,அவனிடம் பேசாமல் ,அவனை ஒதுக்கி வைத்து ,அவள் பாசம் கிடைக்காத என்று அவன் ஏங்க வேண்டும்…
அமைதி கூட சில சமயம் பெரிய தண்டனை தான்,,…..

gsrividhya

Ennai poruthavarai bhanu vettai vittu poga kudhathu ana sathyava othikidanum. Sathya manasu Mari vantha kooda ethuka koodathu

suganya

hi tamil..
nice update..

banu ku pirandha veetu support um illa..
prakash panra throgam theriyum bodhu , adhey veetula irundhalum avana full ah ava ignore pannanum..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page