Category: மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்

  • மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 7,8,9

    7

    போன் பேசி முடித்திருந்த ராஜி அதற்குள் வந்துவிட அவர்கள் பேச்சு தடை பட்டது.

    சுஜியின் அருகே வந்து அமர்ந்த ராஜி, “சுஜி நீ இஞ்ஜினீயரிங் அப்ளையாவது பண்ணி இருக்கலாமே?” என்றார்.

    “இல்ல ஆன்ட்டி எனக்கு இஞ்ஜினீயரிங்ல இன்ட்ரெஸ்ட் இல்ல. B.Sc. முடிச்சிட்டு M.B.A படிக்கலாம்னு இருக்கேன்.”

    தனது குடும்ப நிலைமை வெளியே சொல்லாமல் அழகாக பேசிய சுஜியை கனிவுடன் பார்த்தார் ராஜி. நீ எது படிச்சாலும் வாழ்கையில் நல்ல நிலைமைக்கு வந்து விடுவாய் சுஜி என்று மனதில் நினைத்துக்கொண்டார். பின் பேச்சை மாற்ற எண்ணி,

    “இவ சேராட்டியும் பரவாயில்ல அப்பிளிகேஷனயாவது வீணாக்காம போடச் சொல்லும்மா. அங்கிள் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தது” என்றார்.

    “சரி மினி ஒரு அப்பிளிகேஷன் மட்டும் போடு. அவன் இன்டெர்வியூ கூப்பிட்டா பார்த்துக்கலாம்”.

    “போடி இன்டெர்வியூக்கு முன்னாடி என்ட்ரன்ஸ் எக்ஸாம், ப்ராக்டிகல் எக்ஸாம் எல்லாம் வைப்பானாம். நம்ம காலேஜ்ல சேருரத்துக்கு முன்னாடியே இந்த பாடு படுத்துறவன் காலேஜ் சேர்ந்தவுடன் எந்த பாடு படுத்துவான்…”

    “பீஸ் எவ்வளவு இருக்கும் மினி?”

    “என்ன ஒரு பதினஞ்சு, இருவதாயிரம் இருக்கும்னு நினைக்கிறன். ஹாஸ்டல் ஃபீஸ் ஐயும் சேர்த்தாலும் நுப்பதாயிரதுக்குள்ளதான் வரும்.”

    “அவ்வளவா?…”

    “பின்னே கவர்மென்ட் காலேஜா கம்மியா பீஸ் வாங்க. ஆனா அங்க வேலை செய்யுறதுக்கு சம்பளம் மாதிரி தருவாங்க போல இருக்கு. அதுவே பார்ட் டைம் ஜாப் மாதிரி நல்ல பணம்னு சொன்னாங்க”.

    சற்று யோசித்த மினி, “ஐடியா! சுஜி வேணும்னா ஒண்ணு பண்ணு நீ இந்த அப்பிளிகேஷன் ஃபார்மை அனுப்பு. ஜாலியா என்ட்ரன்ஸ் எழுதிட்டு வா. நாளைக்குதான் லாஸ்ட் நாள் அப்ளை பண்ணுறதுக்கு. நீ ஃபில் பண்ணி வச்சுட்டு போ. அப்பாவ ஆபீஸ் போற வழில கொடுத்துட சொல்லுறேன்” என்றாள்.

    “நான் வீட்டுல இப்ப அந்த வேலையைத்தான் செஞ்சுட்டு இருக்கேன். காலேஜ்ல போயும் அதே செய்யணுமா?”

    “சும்மா போட்டு பாரு. சீட்டு கிடைக்குறது ரொம்ப கஷ்டம்னு சொல்லுறாங்க. அப்படியே கெடைச்சுட்டா வேணாம்னு சொல்லிட்டா போகுது” என்றாள்.

    சரி என்று ஜாலியாக நேம் என்று இருந்த இடத்துக்கு நேராக சுஜாதா என்று தனது பெயரை எழுத ஆரம்பித்தாள் சுஜி. அவளுக்கு தனது தலை எழுத்தைத்தான் தான் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்தால் இன்னும் சற்று சிரத்தையுடன் எழுதி இருப்பாளோ?

    8

    சுந்தரம், பிள்ளைகளை அருகில் இருக்கும் ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து விட்டார். அது நகரிலே சற்று புகழ்பெற்ற பள்ளிக்கூடம். அதனால் அதில் படிக்க இடம் கிடைப்பது கடினம். அதே பள்ளியில் வாணியையும் கூட சேர்த்தார்கள். அங்கேதான் சுஜி தனது மற்றொரு எதிரியை முதலில் சந்தித்தாள்.

    நாகரத்னத்தின் குணம் தெரிந்ததால், மெஸ்ஸில் இருந்து மதிய உணவு பள்ளிக்கு வந்து கொடுத்துவிடுவார். மாலை பள்ளி முடிந்து வரும் போது வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கும். வாணி பெரும்பாலும் தனது தாத்தா வீட்டிற்கே சென்று விடுவாள். அதுவே மூத்தவர்கள் இருவருக்கும் நிம்மதியும்கூட. விக்கி வரும்போது அப்பாவின் மெஸ்ஸில் இருந்து உணவு எடுத்து வந்துவிட, இருவரும் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். பக்கத்துக்கு வீட்டுக் கமலமும், மூர்த்தியும் முடிந்தவரை உதவி செய்வார்கள். நன்றாக படிக்கும் பிள்ளைகள் இருவரையும் எல்லோருக்கும் பிடித்து இருந்தது, ஒருவனைத் தவிர.

    பள்ளியில் சுஜி தினமும் மதியம் வந்து வாணி சாப்பிட்டு விட்டாளா என்று பார்த்து விட்டு போவாள். வாணி எதை பார்த்தாலும் வாயில் போட்டுக் கொள்வாள். இதனால் அடிக்கடி வயிறு வலியால் கஷ்டப்படுவாள். சுஜி பார்த்தால் அதனை வாயில் இருந்து எடுத்து விடுவாள். அன்றும் அப்படிதான் வாணி வாயில் என்னவோ போட்டு மென்று கொண்டு இருந்தாள்.

    “வாணி வாயில என்ன?”

    “சாக்லேட்கா”

    அது அவள் வழக்கமாக சொல்லும் பொய்தான். எனவே ‘ஆ காட்டு’ என்றாள்.

    “மாட்டேன் போ”

    சற்று வலுகட்டாயமாக அவள் வாயில் இருந்ததை எடுத்தாள். சற்று சுவைத்து பார்த்தாள் அது சாக்லேட் தான்.

    “யார் நீ? ஏன் சின்ன பிள்ளைகிட்ட வம்பிளுக்குற? சாக்லேட் வேணும்னா வாங்கி சாப்பிடுறது தானே” என்ற குரல் கேட்டு பயந்து நிமிர்ந்தாள்.

    அங்கே நல்ல உயரமாக அதட்டியபடி ஒரு பையன் நின்று கொண்டு இருந்தான்.

    அவனைப் பார்த்தவுடன், “அத்தான்” என்று கூறியபடியே வாணி ஓடினாள்.

    “நான் இவங்க அக்காதான்”.

    “ஒ! அதுதான் சின்ன பிள்ளைக வாயில இருந்து எடுத்து சாப்பிடுறியா? இதோ பார் இனிமே இத மாதிரி நடந்து கிட்டா உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்கோ” என்று மிரட்டினான்.

    பின்னர்தான் அவன் பேர் மாதவன் என்பதும், நாகரத்னத்தின் அண்ணன் மகன் என்பதும் தெரிந்தது. அதைவிட, தங்களை அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதும், கொடைக்கானலில் விடுதியில் தங்கிப் படித்து கொண்டு இருந்தவன், அந்த வருடம்தான் அவர்கள் பள்ளியில் வந்து சேர்ந்து இருந்தான்.

    நாகரத்தினம் தனது கணவரைப் பற்றியும், அவரின் முதல் தாரத்தின் குழந்தைகளைப் பற்றியும், தான் வீட்டில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியும் கூறி தனது அண்ணன் வீட்டினரிடம் அனுதாபம் சம்பாதித்து வைத்திருந்தாள். தன் அத்தையைத் துன்பப்படுத்துபவர்களைப் பார்க்கும் போதே எரிச்சலாய் வந்தது அவனுக்கு. அதைப் பல வகைகளில் காண்பிக்க ஆரம்பித்தான்.

    நேரில் பார்க்கும் போது முறைப்பது, பின்னலைப் பிடித்து இழுப்பது. அடிப்பது போல கையைக் கொண்டு வருவது என்று முடிந்தவரை தொந்திரவு செய்தான். அதன்பின் அவனுக்குப் படிப்பில் கவனம் போகவே தப்பித்தாள் சுஜி. சுஜியும் வேறு பள்ளி மாறிவிடவே அந்த முரட்டுப் பையனைப் பற்றி ஏறக்குறைய மறந்தேவிட்டாள் எனலாம்.

    9

    ருடத்துக்கு மூன்று, நான்கு முறையாவது நாகரத்னத்தின் வீட்டில் ஏதாவது விழா, கல்யாணம் என்று அழைப்பு வரும். எல்லா நிகழ்ச்சிக்கும் புது பட்டுப்புடவை, தன் குழந்தைக்கு புது உடை, தங்கம் வெள்ளி சீர் என்று ஜமாய்த்து விடுவாள் நாகா. இதைத் தவிர நல்ல ஹோட்டலில் வாணியின் பிறந்தநாள் நிகழ்ச்சி வேறு நடக்கும். சிறு வயதில் இந்த நாட்களை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள் விக்கியும், சுஜியும். அங்கே போய் குழந்தைகளுடன் விளையாட்டு, பின் புது வகையான இனிப்புகள், உணவுகள் என்று சந்தோஷமாக இருக்கும். பின்னர் தான் தெரிந்தது தாங்கள் அங்கு செல்வது வேலைக்காரர்களாக என்று.

    நாகரத்னத்தின் வீட்டில் நாகாவின் அம்மாவுக்கு அவளைப் போலவே குணம். வாணிக்கோ அவளது தாய் நாகரத்தினத்தின் குணம். ‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்பது அவர்களின் குடும்பத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை.

    மாதவனின் தாய் தனது மாமியார் மற்றும் நாத்தனாரின் வழிக்கே வரமாட்டார். ஆனால் தாயில்லாமல் ரத்தினத்திடம் கஷ்டப்படும் விக்னேஷின் மேலும் சுஜாதாவின் மேலும் அவரது மனதில் ஒரு மெல்லிய பாசம் ஓடிக் கொண்டிருந்தது. அதனாலோ என்னவோ அவரது மாமியார், நாத்தனார் கண்ணில் படாதவாறு விக்கிக்கும் சுஜிக்கும் பலகாரங்கள் தருவார். நெருக்கமாய் தொடுத்த மல்லியை தனது மகளுக்கும், சுஜிக்கும் வித்யாசம் பார்க்காமல் சூட்டிவிடுவார். அதனாலேயே மாதவனை வெறுத்தாலும் கூட சுஜிக்கு அவன் தாயார் மரியாதைக்குரியவரே. மாதவனின் தந்தை எப்போதும் தனது நண்பர்களிடம் பேசியபடியே தான் பார்த்திருக்கின்றனர். அவருக்கு உறவினர்கள் வட்டத்தில் மரியாதை மிக அதிகம் என்பது சுஜிக்குத் தெரியும். அதுவே தனது சித்தியின் எரியும் திமிருக்கு எண்ணை என்பதையும் அறிவாள்.

    ஒரு முறை நாகா தன் தோழியுடன் பேசுவதை கேட்க நேர்ந்தது சுஜிக்கு.

    “ஏண்டி உன் மூத்தாள் பிள்ளைகளையும் கூட்டிட்டு அலையுற.”

    “போடி இதுங்க வரதால பிள்ளையை பாத்துக்குற தொல்லை இல்ல. பாரு பம்பரம் மாதிரி வேல செய்யுதுங்க”.

    அவள் சொல்லுவதை நிரூபிப்பதற்காக, “டேய் விக்கி இங்க வாடா. ஆன்ட்டியோட பாப்பா மூச்சா போச்சு பார். டிரஸ் மாத்தி விட்டுட்டு போய் ஜட்டிய தொவைச்சுக் காயப் போடு” என்றாள்.

    “சரி சித்தி” என்று பார்த்துப் பத்து நிமிடங்களே ஆன அந்த பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே போனான் விக்கி.

    ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு இருந்த சுஜிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அழுதுக் கொண்டே உள்ளே சமையல் அறையை நோக்கி ஓடிய சுசி யார் மீதோ மோதி விட்டாள்.

    “சாரி தெரியாம” என்று சொல்லிக் கொண்டே அந்த உருவத்தைப் பார்க்க முயற்சி செய்தாள். கண்கள் பூராவும் நீருடன் இருந்ததால் அவளால் சரியாக பார்க்க முடியவில்லை. ஆதரவாக அவளது ஒரு கையை பற்றிக் கொண்ட அந்த உருவம், தன் கையில் இருந்த குளிர்பானத்தை அவள் கையில் கொடுத்தது. மடமடவென அந்தப் பானத்தைக் குடித்து முடித்தாள் சுஜி.

    “சாரி” என்று குரல் கேட்டவுடன் நிமிர்ந்துப் பார்த்த சுஜி திகைத்தாள். மாதவன் அல்லவா இது. அவளது ஆச்சிரியம், அவளது முகத்தில் பிரதிபலிக்க. அவள் கண்ணைப் பார்த்த அவனது முகத்தில் இனம் தெரியாத மாற்றம் மற்றும் கனிவு.

    அவள் கவனத்தைத் திசை திருப்ப எண்ணி, “சுஜி நீ நல்லா படம் வரைவியாமே மினி சொன்னா. என் ஃபிரெண்ட்க்கு பர்த்டே வருது. அதுக்கு, நீ மினிக்கு வரஞ்சு தந்தமாரியே ஒரு படம் வேணும். நீ, நான், விக்கி மூணுபேரும் வரையலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுறியா?”

    சந்தோஷமாக தலையாட்டினாள் சுஜி.

    ன்றிலிருந்து அவர்களே ஆச்சிரியப்படும்படி விக்கியிடமும், சுஜியிடமும் கனிவாக நடந்துக் கொண்டான் மாதவன். அவ்வப்போது படிக்க புத்தகங்களைத் தந்து உதவினான். இவன் கொஞ்சோண்டு நல்லவந்தான் போலிருக்கு என்று சுஜியும் தப்புக்கணக்கு போட்டு விட்டாள்.

    அடுத்த முறை எங்கும் வரவில்லை என்று சொல்லி விட்டாள் சுஜி. விக்கியும் சுஜி கூடத் துணை இருப்பதாக சொல்லித் தட்டிக்கழித்து விட்டான்.

    “சுஜி ஏன் வெளிய வரமாட்டேன்னு சொன்ன? நீ சொன்னது ஏதோ காரணத்துக்காகன்னு புரியுது ஆன என்னனு புரியல.”

    விக்கியை நிமிர்ந்துப் பார்த்த சுஜி, “அண்ணா நம்ம இதுவரை சித்தி வீட்டுக்குப் போனபோது நல்ல டிரஸ் பண்ணிட்டு போய் இருக்கோமா? அங்க போய் அவங்க வீட்டுப் பிள்ளைங்க கிட்ட போய் விளையாடி இருக்கோமா? அவங்க வீட்டுக்குள்ள போனதுண்டா? அவங்க சமையல் அறையும், தோட்டத்தையும் தவிர வேறு எங்கும் போய் இருக்கோமா? யோசிச்சுபாரு உனக்கே புரியும்”.

    விக்கி புரிந்ததின் அடையாளமாய் தலையாட்டினான். “நான் இனிமே எல்லாத்தையும் நல்லா கவனிக்கணும் சுஜி. இது மாதிரி அவமானம் இனிமே நமக்கு நடக்கக் கூடாது”.

    பாவம் அவர்களுக்குத் தெரியாது நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று.

  • மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 5,6

    ம்மன் கோவில் மணி சத்தம் தூரத்தில் ஒலித்தது. கவலைபடாதே சுஜி உனக்கு நானே துணை இருப்பேன் என்று கூறியது போல் இருந்தது. கடவுள் கண்டிப்பாக என்னைக் கைவிடமாட்டார். எனது வெற்றி தள்ளிபோகிறது அவ்வளவுதான் என்று எண்ணியபடியே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

    5

    வீட்டைத் திறந்து உள்ளே சென்ற சுஜி காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்தாள். மறுநாளுக்கு வேண்டிய வேலைகளை அவசர அவசரமாக செய்தாள். சித்தியும், வாணியும் இன்னமும் வீட்டுக்கு வரவில்லை. சித்தியின் அம்மாவுக்கு சற்று உடம்பு சரி இல்லை என்பதால் பாதி நாட்கள் அங்கேயே தங்கி விடுகிறார்கள். எப்போது வருவோம் என்று முதலிலே சொல்வதில்லை. திடீரென்று வீட்டுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்து விட்டு வீட்டில் இருந்த மிதுக்கு வத்தலை போட்டு குழம்பு வைத்தாள். தேங்காய் சில்லையும், பச்சை மிளகாயும் துளி புளியுடன் சேர்த்து துவையல் அரைத்தாள். இன்றும் நாளையும் இது போதும் அவர்கள் வரும் போது அப்பளம் பொரித்து சாதம் வடித்துக் கொள்ளலாம். முகம் கழுவி, விளக்கேற்றி விட்டு சுவாமி பாடல்களைப் பாட ஆரம்பித்தாள்.

    “தேமதுரத் தமிழ் முழங்கும் மாமதுரை நகர் தன்னில் பூ மகளாய் வந்த கயர்கன்னியே…”

    கால் மணி நேரம் பாடிய பின் அவள் மனம் லேசாகி இருந்தது.

    ‘Every cloud has a silver lining’ என்ற கூற்றை நினைவுப் படுத்திக்கொண்டாள்.

    இந்த துன்பம் தற்காலிகம் தான். இதற்கு பின் எனக்கு ஒரு பெரிய நன்மை வரப்போகிறது என்று மந்திரம் போல் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

    தோழியிடம் கடன் வாங்கி வந்திருந்த புத்தகத்தை விரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.

    இரவு தந்தை வந்ததும் அவருக்கு உணவைப் பரிமாறி விட்டு சமையல் அறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுஜி.

    “சுஜி சாப்பிட்டியா?” என்ற தந்தையின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

    “ம்ம்…” என்றவாரே திரும்பாமல் வேலையைத் தொடர்ந்தாள். இப்போதெல்லாம் தந்தையிடம் பேசுவது மிகவும் குறைந்து விட்டது.

    சமையல் அறையின் வாசலில் தயங்கி நின்றவர், “அப்பா உன்னை ரொம்ப நோகடிச்சுட்டேன்னு புரியுது. என்னை மன்னிச்சிடுமா”

    சுஜியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பாத்திரத்தில் இருந்த தண்ணீரோடு கலந்தது.

    அவளிடம் இருந்து பதில் வராமல் போகவும் ஒரு பெருமூச்சு விட்டபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் சுந்தரம்.

    பாயை விரித்துப் படுத்த சுஜிக்கு ஏகப்பட்ட குழப்பம். அப்பாவிடம் சொல்லாமல் தான் செய்யப்போவது சரியா என்று யோசனை. சரி தான் சொல்ல வந்த போது காது கொடுத்து கேட்டாரா என்ற வருத்தம். இது எல்லாவற்றிற்கும் காரணமானவனின் மேல் ஆத்திரம் என்று கலவையான உணர்வு.

    அவளது மனம் நடந்ததை அசை போடத் துவங்கியது.

    6

    சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில், கையில் அலுமினிய தூக்கு வாளியுடன் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தாள் சுஜி. கிளிபச்சையில் வெள்ளைப் புள்ளி வைத்த பாவாடையும் அதே துணியில் ஜாக்கெட்டும், கரும் பச்சை தாவணியும் அணிந்திருந்தாள். முகத்தில் முத்து முத்தான வியர்வைத் துளி. வழியில் தான் அண்ணாச்சி கடையில் சாமான் வாங்க, விட்டு போனது நியாபகம் வந்தது. திரும்பி கடைக்குச் சென்றாள்.

    “அண்ணாச்சி ஒரு கிலோ பட்ட மொளகா, மூணு கிலோ தனியா, கால் கிலோ மஞ்சள், ஒரு கிலோ மண்ட வெல்லம், ரெண்டு கிலோ சீனி இதெல்லாம் இப்ப குடுங்க. அப்பறம் இந்த வாரத்துக்கு அரிசி, பருப்பு, உளுந்து எல்லாம் கடைல போட்டுட்டு அப்பா கிட்ட காசு வாங்கிக்கோங்க” என்றாள்.

    “அப்படியே இந்த கோக்குக்கும் சேர்த்து அங்கேயே காசு வாங்கிக்கோங்க. என்ன சுஜி உங்க அப்பா தருவருல்ல?”

    “ஹே மினி எப்ப மெட்ராஸ்ல இருந்து வந்த?”

    “வந்து 30 மணிக்கூறுகளாகி விட்டன. என்னம்மா பச்சைக்கிளி கையில என்ன தூக்குச்சட்டி?”

    “மெஷினுக்கு போயிட்டு வரேண்டி. மாரியம்மன் கோவில் திருவிழா வருதில்ல. மாவிளக்கு போடணும், கொழுக்கட்டை செய்யணும் அதான்”.

    “சரி இப்ப வீட்டுக்கு வந்துட்டுப் போ.”

    “நாளைக்கு வரேனே. இதையெல்லாம் வீட்டுல கொண்டு போய் வெக்கணும்.”

    “கவலை படாதே கிளியே நான் உனக்கு லிப்ட் தரேன்.”

    “லிப்டா ஹே அப்ப வண்டி வாங்கிட்டியா?”

    “எஸ்… புது டிவிஎஸ் ஸ்கூட்டி ரெட் கலர். வா உன்னை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறேன். வீட்டுல வச்சுட்டு வந்துடலாம்.”

    “இரு தோழிகளும் பேசிக்கொண்டே சுஜி வீட்டில் பொருட்களை வைத்து விட்டு மினி வீட்டுக்குச் சென்றார்கள்.”

    “அப்போதுதான் டேபிளில் இருந்த அதிதியின் அப்பிளிகேஷன் ஃபார்மை பார்த்தாள் சுஜி”.

    “என்ன இது அப்பிளிகேஷன் ஃபார்மை இப்படிப் போட்டு இருக்குற?”

    “பச்… நான் அப்ளை பண்ண போறதில்ல”.

    “உனக்கு வேண்டாம்ன அப்பறம் ஏன் அப்பிளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்த?”

    “உனக்கு தான் தெரியுமே சுஜி எனக்கு மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, போடோனி, ஜூவாலஜி, அக்கௌன்டன்சி எதுவுமே பிடிக்காது. சோ இது எதுவும் இல்லாத கோர்ஸ் சேரலாம்னு அப்பாவ கேட்டேன். இத வாங்கிட்டு வந்திட்டாரு”

    “அப்ப ஏன் அப்ளை பண்ணல?”

    “நீ வேற அது ரெசிடென்சியல் காலேஜ். பாக்குற நேரமெல்லாம் படிக்க என்னால முடியாதுப்பா. நான் காலேஜ் போறது நெறைய என்ஜாய் பண்ணிட்டு, கொஞ்சமே கொஞ்சமா படிக்கணும். அப்பறம் இன்னொரு விஷயம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் வீட்டுக்கு விடுவானாம். இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது.”

    காபியும் டிபன் எடுத்தபடி வந்த மினியின் அம்மா ராஜி, “நல்லா சொல்லு சுஜி. இவ சொல்லுற கண்டிஷன் படி காலேஜ்ல சேர்க்கணும்னா நம்மளே ஒரு காலேஜ் ஆரம்பிச்சால் தான் உண்டு. மேத்ஸ் பிடிக்கலேன்னா எப்படி நாளைக்கு உன் புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லித் தருவ?”

    “கவலை படாதம்மா உனக்கு ஒரு இஞ்ஜினீயர் மருமகனா பார்த்திடலாம். அவன் மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் சொல்லித் தந்திடுவான். டியூஷன் செலவு மிச்சம்.”

    “வாலுத்தனதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல” என்றபடி தன் மகளின் காதை திருக…

    “அம்மா வேணாம்மா, ஏன் காதுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் நீ தான் வரதட்சணை ஜாஸ்தி தரணும்”.

    இடையே தொலைபேசி மணி அடிக்க ராஜி பேச ஆரம்பித்து விட்டார்.

    “மினி உங்க அம்மா கிட்ட என்ன சொன்ன? மாப்பிள்ளை பார்த்திடலாம்ன இல்ல பார்த்துட்டேன்னா?” என்றாள் சுஜி மெல்லிய குரலில்.

    “ச்சி போடி” என்றபடி நழுவப் பார்த்தாள் மினி.

    “உன் அண்ணனுக்கு தெரியுமா?”

    “அவனுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்”

    “பேர் என்னனு என்கிட்ட மட்டும் சொல்லு ப்ளீஸ்”

    “போடி இவளே அந்த ஆளே பிடி கொடுக்க மாட்டேங்கிறார். அவர் கிட்ட இருந்து ஒரு தெளிவான பதில் முதலில் வரட்டும்.”

    “பேர் வேண்டாம் யாருன்னு ஒரு க்ளு கொடுடி”

    “எங்க அண்ணனோட ஃபிரெண்ட் போதுமா?”

    “ஆளு எப்படி? நான் பார்த்து இருக்கேனா?”

    “சூப்பரா இருப்பாரு. உனக்கும் நல்லா தெரியும். இதுக்கு மேல என்னை கேட்காதே”

    “யார் மாதவனா?” என்று கேட்டாள் சுஜி. கேட்கும் போதே தன் மனம் ஏன் இப்படி படபடவென அடித்துக்கொள்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.

    மினி பதில் சொல்லவில்லை. ஆனால் மினியின் கண்களில் சட்டென்று தோன்றிய மின்னல் அது மாதவன்தான் என்பதை உறுதிச் செய்தது.

    இப்போது சற்று சுஜி பற்றி பார்போம். சற்றே ஒல்லியான உடல்வாகு. ஐந்திரை அடி உயரம். சுருட்டைமுடி. அதுவே அவளுக்கு ஒரு அழகாக இருந்தது. செதுக்கி வைத்தாற் போல் முகம். பொன்னிறம் என்று சொல்ல முடியாது அதற்கு சிறிது கம்மி. காதில் சிறிய பவளதோடு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல். எளிமையான சுடிதார். இதுதான் சுஜி. அவள் பேசுவதைவிட அவள்கண் ஆயிரம் கதை பேசும்.

    வீடு பூட்டி இருந்தது. எதிர்பார்த்ததுதான்.

     “சுஜி வழக்கம் போல உன் சித்தி ஊர் சுத்த போய்ட்டா. வந்து சாவி வாங்கிட்டு போ”என்றார் பக்கத்து வீட்டு கமலம்.

    உள்ளே செல்ல திரும்பிய கமலம் ஏதோ நியாபகம் வந்தவராக சுஜியிடம், “சாப்டியா?”என்றார்.

    “இதோ இப்ப வீட்ல போய் சாப்பிடபோறேன்”என்ற சுஜி பதிலில் திருப்தி அடையாமல்,

    “ஆமா நீ போய் சமைச்சு சாப்பிடறதுக்குள்ள மயக்கமே வந்திடும். கொஞ்சம் உட்காரு மத்தியானமே சாப்பிட்டியோ என்னமோ தெரியல” என்றபடியே ஒரு தட்டிலே சூடாக இரண்டு தோசையும் கொத்துமல்லி சட்னியும் கொண்டு வந்தார்.

    சுஜிக்கு உண்மையிலே ரொம்ப பசி. வீட்டில் ஒன்றும் இருக்காது. இப்போது உள்ள மனநிலையில் சமைத்து சாப்பிடுவது முடியாத காரியம். தன் முடிவைச் சொல்லி வாதாடுவதற்கு நிறைய தெம்பும் தேவை. மறுப்பேதும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

    “நில்லுடி போய்டாதே, இன்னொரு தோசை கொண்டு வரேன்”என்று சூடாக ஒரு கையில் தோசையையும் இன்னொரு கையில் பில்ட்டர் காபியும் எடுத்து கொண்டு வந்த கமலத்தைப் பார்க்க அன்னபூரணி போல் தோன்றியது சுஜிக்கு. ஆமாம் வயிற்றுப் பசி அறிந்து அன்போடு சாப்பாடு தருபவர் எல்லாம் அன்னபூரணிதானே?

    “என்னடி இப்படி பார்க்குற?”

    “இல்லத்த உங்கள பார்க்க இப்ப அன்னபூரணி போல தோணுது”.

    “போடி ஊருக்கே சமைச்சுபோடுறார் உங்கப்பா. என்னமோ, ரெண்டு தோசைக்காக எனக்கு அன்னபூரணி பட்டம் கொடுக்கற” என்றார் சிரித்தபடி.

    சுஜி தோசை சாப்பிடுவதை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள். இந்த பதினெட்டு வருஷத்தில் இந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். கடவுளே இனிமேயாவது இந்தக் கொழந்தைக்கு வாழ்க்கைல நிம்மதிய கொடு.

    “என்னடி முடிவடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

    “அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.

  • மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2,3,4

    2

    ன்னடி முடிவெடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

    “அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.

    “என்னடி உளறுற. இவ்ளோ மார்க் வாங்கிட்டு பேசுறத பாரு. உன்னை எப்படியாவது நல்லா படிக்க வைக்கணும்னு நானும் மாமாவும் நினைச்சுகிட்டு இருக்கோம். கண்டதை உளறாதே”.

    “இல்லத்த நிஜமாவேதான். எனக்கு நீங்கதான் உதவி செய்யணும்” என்றபடி தனது முடிவைக் கூற ஆரம்பித்தாள். இடையில் கமலத்தின் கணவர் மூர்த்தியும் வந்துவிடவே என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஆலோசனை கேட்டு கொண்டாள். சுஜியின் வாதத்தைக் கேட்ட அவர்களுக்கும் அவளின் முடிவு சரி என்றே பட்டது.

    அடுத்த இரண்டு மணி நேரத்தில் சுஜி நல்ல தெளிவாகி இருந்தாள்.

    “சுஜி அந்த பையன பார்த்தேன்” என்று ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து,
    “வேணாம் மாமா இப்பதான் கொஞ்சம் தெளிவா இருக்கேன். அவன பத்தி பேசி என்னை கோவப்படுத்தாதிங்க. உலகத்திலே நான் வெறுக்குற முதல் ஆள் அவன்தான். பாவி என் வாழ்க்கையே திசை மாத்திட்டான். எவ்ளோ ஆசையோட இருந்திருப்பேன். என் கனவுகளை நாசபடுத்திட்டான்”.

    அவளின் வேதனை புரிந்து சற்று மௌனமாக இருந்த மூர்த்தி பின்னர் மெதுவாக கேட்டார்.

    “சுஜி உன் அண்ணா கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?”

    “வேணாம் மாமா அவன் இப்பதான் வீட்டுக் கவலை இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கான். அவனை தொந்திரவு பண்ணவேண்டாம்.”

    “உங்க அப்பா?”

    “இப்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம் மாமா.”

    “அதுவும் சரிதான். சுஜி எனக்கு இந்த வாரம் டைம் கொடு. என்னால முடிஞ்ச உதவி செய்யுறேன். எல்லாம் கூடி வந்தப்புறம் வீட்ல சொல்லு” என்ற மூர்த்தி மாமாவின் வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    நிறைவுடன் வீட்டுக்குச் சென்றாள் சுஜி.

    3

    சுந்தரமும், மீனாட்சியும் அழகும் அன்பும் சேர்ந்த தம்பதிகள். அவர்களுக்கு பேர் மட்டும் பொருத்தமில்லை மனமும் கூடத்தான். சுந்தரம் மதுரையில் அம்மன் சன்னதியில் சிறிய மெஸ் ஒன்று நடத்தி வந்தார். அவரது கைமணத்துக்கும் தரத்துக்கும் ஏராள ரசிகர்கள். அவரது மெஸ்ஸின் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் மாத சம்பளக்காரர்கள். சுந்தரமும் கறாரான பேர்வழி இல்லை. பத்து பேர் காசு குடுத்து சாப்பிட்டால் இருவர் காசு தராமல் சாப்பிட்டு செல்வார்கள். என்னதான் கூட்டம் வந்தாலும் அவரது வருமானம் என்னவோ நடுத்தர குடும்ப வருமானம்தான். மீனாட்சி என்றாள் அவரது உயிர். அந்த அந்நியோன்ய தம்பதிகளின் அன்புக்கு சாட்சியாக பிறந்தவர்கள்தான் விக்னேஷும், சுஜாதாவும்.

    பெண்களிடம் அதுவும் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் நல்ல பேர் வாங்குவது ரொம்பக் கஷ்டம். நாம் என்னதான் நல்லது செய்தாலும் அவர்களுக்கு நினைவில் இருக்காது. ஒருநாள் நம்ம தராத காபிபொடியும், பட்டு சேலையும்தான் அவர்கள் நினைவில் இருக்கும். அதிலும் மீனாட்சி பாசாகிவிட்டாள். எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் மீனாட்சியை அனைவருக்கும் பிடிக்கும். கடவுளுக்கும்கூட அப்படித்தான் போல. அதனால் அவளை சீக்கிரம் கூப்பிட்டுக் கொண்டார்.

    விபத்தில் மீனாட்சி இறந்த போது விக்னேஷுக்கு மூன்று வயது சுஜா ஒரு வயது குழந்தை. சுந்தரம் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தபோது தான் வயதான தன் அம்மாவின் வற்புறுத்தலுக்காக மறுமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மனைவிதான் நாகரத்னம். நீண்டநாள் ஜாதகதோஷம் காரணமாக அவளது திருமணம் தள்ளிபோனது என்று சொல்லபட்டது. சொல்லபடாத மற்ற காரணம் நாகங்களுக்கே ராணி போன்ற அவளது குணம்தான். எப்போது படம் எடுப்பாள் எப்போது கொத்துவாள் என்றே சொல்ல முடியாது. சுந்தரத்தை கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னதே ஆச்சிரியம்தான். முதலில் சுந்தரத்தின் அழகும் அமைதியான குணமும் கவர திருமணம் நடந்தது. ஆனால் அவரின் குழந்தைகளை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    நாகரத்னத்தை மணம் செய்து கொடுத்த போது சாதாரணமாக இருந்த அவளது பிறந்தவீடு அவளது அண்ணனின் திறமையால் நல்ல நிலைமைக்குவர அவளால் பெருமை தாங்க முடியவில்லை. தினமும் உள்ளுரிலே இருக்கும் தனது தாய்வீட்டுக்கு சென்று விடுவாள். நினைத்தால் புடவை, நகை எல்லாம் வரவேண்டும். இதற்கிடையில் வாணி என்ற பெண் குழந்தை வேறு.

    4

    சுந்தரம் காலையில் போனால் இரவுதான் வருவார். விக்கி, சுஜி நிலைமைதான் பரிதாபம். எவளோ பெத்து போட்டதுக்கு நான் ஏன் சேவகம் செய்யணும் என்ற மனநிலை நாகரத்னதுக்கு.

    சிறுவயதில் ஏன் திட்டு எதற்கு அடி என்று தெரியாமலே வளர்ந்தார்கள். ஓரளவு விவரம் புரிந்தவுடன் ‘துஷ்டரை கண்டால் தூரவிலகு’ என்ற பழமொழிப்படி முடிந்த வரை சித்தியை விட்டு விலகியே இருந்தார்கள்.

    காலையில் எழுந்து விக்கி தண்ணி பிடித்து வைத்து விட்டு பால்வாங்கி வருவான். அதற்குள் சுஜி வாசல் பெருக்கி, கோலம் போட்டு விட்டு காபி டிகாஷன் தயாரித்து விடுவாள். அதற்குள் சுந்தரமும் வந்துவிட எளிமையாக காலை உணவு தயாரித்துவிடுவார்கள். வாணி எழுந்தால் பூஸ்ட் கொடுத்துவிட்டு இருவரும் பள்ளிக்கு கிளம்ப ஆரம்பிப்பார்கள்.

    சரியாக எட்டு மணிக்கு, “எங்கடி காபி?” என்ற சத்தம் கேட்டவுடன் காபி சூடாக கொண்டு செல்ல வேண்டும் அவளது சித்திக்கு.

    “ஏண்டி சமையல்காரன் பொண்ணுக்கு காபிகூட ஒழுங்கா போட துப்பில்லை” என்பாள்.

    விக்கி சிறிது பயந்த சுபாவம், அதனால் பதில் பேசமாட்டான். சுஜி சற்று துடுக்கானவள். “நான் சமையல்காரன் பொண்ணுனா வாணி யாராம்?” என்று கேட்டுவிடுவாள்.

    “அம்மாவை முழுங்கிட்டு பேச்சைப் பாரு” என்று பதிலுக்குக் கொட்டுவாள் நாகம்.

    “ஏன் சுஜி வாய் குடுத்து வாங்கி கட்டிக்கிற?” என்பான் விக்கி.

    “போண்ணா நம்ம இப்படி அடங்கி போக போக இப்படிதான் படுத்துவாங்க. நம்ம ஸ்கூல் போயிட்டு இவங்களுக்கும் வேல செய்யணுமா? உனக்கு தெரியுமா இவங்க டிரஸ், ராணி, வாணி டிரஸ் எல்லாம் நான்தான் துவைச்சு போடுறேன். கை எல்லாம் புண்ணு பாரு” என்று காட்டிய குட்டி தங்கையை அணைத்து முத்தமிடதான் முடிந்தது விக்கியால்.

    “இத அப்பாகிட்ட சொல்லாதேடா”.

    “சரிண்ணா”.

    ஒரு முறை சுந்தரம் நாகரத்னத்தைக் கண்டிக்கபோய் அவள் பெரிய பிரச்சனையாக்கி விட்டாள். பின்னர் அவள் பெற்றோர், உறவினர் அனைவரும் வந்து சமாதானம் செய்து வைத்துவிட்டு போயினர். தனது வாழ்க்கையே தியாகம் செய்து விட்டு அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகவும், வீட்டுக்குச் சம்பளமில்லா வேலைக்காரியாகவும் இருக்கும் தங்கள் பெண்ணை எப்படி நீங்கள் கொடுமை படுத்தலாம். இனிமேல் தங்கள் வீட்டுப் பெண் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அவர்கள் குடும்பமே பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்ற மிரட்டல் வேறு. அதிலிருந்து சுந்தரம் அவளிடம் அனாவசியமாய் வாயே திறப்பதில்லை.

    “சுஜி நான் பெரிய இஞ்ஜினீயர் ஆகி உன்னை நல்லா ராணி மாதிரி பார்த்துப்பேன்”

    “நிஜமாவாண்ணா எனக்கு நிறைய பட்டுபாவாடை, கொலுசு எல்லாம் வாங்கித் தருவியா?”

    “உனக்குப் பிடிச்ச குலாப்ஜாமூன் கூட வாங்கித் தருவேன். எத்தனை குலாப்ஜாமூன் வேணும்?”

    “1000 நோ 1 லட்சம் குலாப்ஜாமூன் வேணும்”.

    “வாங்கிட்டாப்போச்சு “.

  • மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 1

    ம்மன் கோவில் மணி சத்தம் தூரத்தில் ஒலித்தது. கவலைபடாதே சுஜி உனக்கு நானே துணை இருப்பேன் என்று கூறியது போல் இருந்தது. கடவுள் கண்டிப்பாக என்னைக் கைவிடமாட்டார். எனது வெற்றி தள்ளிபோகிறது அவ்வளவுதான் என்று எண்ணியபடியே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

    இப்போது சற்று சுஜி பற்றி பார்போம். சற்றே ஒல்லியான உடல்வாகு. ஐந்திரை அடி உயரம். சுருட்டைமுடி. அதுவே அவளுக்கு ஒரு அழகாக இருந்தது. செதுக்கி வைத்தாற் போல் முகம். பொன்னிறம் என்று சொல்ல முடியாது அதற்கு சிறிது கம்மி. காதில் சிறிய பவளதோடு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல். எளிமையான சுடிதார். இதுதான் சுஜி. அவள் பேசுவதைவிட அவள்கண் ஆயிரம் கதை பேசும்.

    வீடு பூட்டி இருந்தது. எதிர்பார்த்ததுதான்.

     “சுஜி வழக்கம் போல உன் சித்தி ஊர் சுத்த போய்ட்டா. வந்து சாவி வாங்கிட்டு போ”என்றார் பக்கத்து வீட்டு கமலம்.

    உள்ளே செல்ல திரும்பிய கமலம் ஏதோ நியாபகம் வந்தவராக சுஜியிடம், “சாப்டியா?”என்றார்.

    “இதோ இப்ப வீட்ல போய் சாப்பிடபோறேன்”என்ற சுஜி பதிலில் திருப்தி அடையாமல்,

    “ஆமா நீ போய் சமைச்சு சாப்பிடறதுக்குள்ள மயக்கமே வந்திடும். கொஞ்சம் உட்காரு மத்தியானமே சாப்பிட்டியோ என்னமோ தெரியல” என்றபடியே ஒரு தட்டிலே சூடாக இரண்டு தோசையும் கொத்துமல்லி சட்னியும் கொண்டு வந்தார்.

    சுஜிக்கு உண்மையிலே ரொம்ப பசி. வீட்டில் ஒன்றும் இருக்காது. இப்போது உள்ள மனநிலையில் சமைத்து சாப்பிடுவது முடியாத காரியம். தன் முடிவைச் சொல்லி வாதாடுவதற்கு நிறைய தெம்பும் தேவை. மறுப்பேதும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

    “நில்லுடி போய்டாதே, இன்னொரு தோசை கொண்டு வரேன்”என்று சூடாக ஒரு கையில் தோசையையும் இன்னொரு கையில் பில்ட்டர் காபியும் எடுத்து கொண்டு வந்த கமலத்தைப் பார்க்க அன்னபூரணி போல் தோன்றியது சுஜிக்கு. ஆமாம் வயிற்றுப் பசி அறிந்து அன்போடு சாப்பாடு தருபவர் எல்லாம் அன்னபூரணிதானே?

    “என்னடி இப்படி பார்க்குற?”

    “இல்லத்த உங்கள பார்க்க இப்ப அன்னபூரணி போல தோணுது”.

    “போடி ஊருக்கே சமைச்சுபோடுறார் உங்கப்பா. என்னமோ, ரெண்டு தோசைக்காக எனக்கு அன்னபூரணி பட்டம் கொடுக்கற” என்றார் சிரித்தபடி.

    சுஜி தோசை சாப்பிடுவதை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள். இந்த பதினெட்டு வருஷத்தில் இந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். கடவுளே இனிமேயாவது இந்தக் கொழந்தைக்கு வாழ்க்கைல நிம்மதிய கொடு.

    “என்னடி முடிவடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

    “அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.