வீடு திரும்பி என்ன ஆக வேண்டும், இப்படியே இந்தச் சந்தடியைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று தோன்றுகிறது.
சுஜி… கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.
“நீ உன் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கும் விதம் போதும். என் குழந்தையை நீ குலவ வேண்டாம்…” என்பது போல், இவளை நிராகரித்து விட்டு, எங்கோ இருக்கும் குழந்தைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறாள்.
“அபிராமி, உன் பிரார்த்தனை பலிச்சாச்சு. ரிடயராகிப் போனா, வீட்டில பேரனோ பேத்தியோ இருக்கும்…பேச. நீயும்… அந்தக் காலத்தில் சீனியக் கையில புடிச்சிட்டு, சந்து வீட்டில குடித்தனம் பண்ண வந்தது இன்னிக்குப் போல இருக்கு. இருபத்தேழு வருஷம் ஓடிப்போச்சு!” என்று சுந்தரம்மா இவளுக்கு விடைகொடுத்தாள்.
வீடு திரும்பி என்ன ஆக வேண்டும், இப்படியே இந்தச் சந்தடியைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று தோன்றுகிறது.
சுஜி… கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.
“நீ உன் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கும் விதம் போதும். என் குழந்தையை நீ குலவ வேண்டாம்…” என்பது போல், இவளை நிராகரித்து விட்டு, எங்கோ இருக்கும் குழந்தைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறாள்.
“அபிராமி, உன் பிரார்த்தனை பலிச்சாச்சு. ரிடயராகிப் போனா, வீட்டில பேரனோ பேத்தியோ இருக்கும்…பேச. நீயும்… அந்தக் காலத்தில் சீனியக் கையில புடிச்சிட்டு, சந்து வீட்டில குடித்தனம் பண்ண வந்தது இன்னிக்குப் போல இருக்கு. இருபத்தேழு வருஷம் ஓடிப்போச்சு!” என்று சுந்தரம்மா இவளுக்கு விடைகொடுத்தாள்.