அத்தியாயம் – 21
“ நீங்க என்னை அடிச்சுட்டிங்க. உங்க மேல நான் கோபமா இருக்கேன். இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல” என்று தெய்வானையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவரது தோளில் தலைசாய்த்தபடி தன் தாய் ஹிமாவிடம் சொன்னான் துருவ்.
“ஸாரி குட்டி… அம்மாவை பதிலுக்கு அடிச்சுடு ஆனால் இப்படி எல்லாம் பேசக் கூடாது” என்று அவனைத் தாஜா செய்தாள் ஹிமா.
“அம்மா மேலக் கோபக் படக் கூடாது கண்ணு. உன்னை ஆசைப்பட்டா அடிக்கிறாங்க. அடிச்சது அவங்களுக்குத்தான் வலிக்கும்”
“ஆமாவாம்மா”
“ம்…” வேகமாகத் தலையாட்டினாள் ஹிமா.
“பாட்டி நான் பேட் டான்ஸ் ஆடினதாலதான் அடிச்சிங்கன்னு சொன்னாங்க. அந்த ஆன்ட்டி ஆடினதுதானே ஆடினேன். அந்த ஆண்ட்டி பேடா…” மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் திணறினாள்.
அவளுக்கு உதவிக்கு வந்தார் தெய்வானை “பின்னே… அந்த ஆண்ட்டியும் பேட், அவங்க டான்சும் பேட்… இனிமே அவங்களைப் பார்க்க வேண்டாம்” என்றார் முடிவாக.
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகி விட்டதைக் கண்டு தனது விழிகளாலேயே மன்னிப்பை வேண்டினாள் சரத்திடம்.
கண்களை மூடி அவளை அமைதிப் படுத்தியவன் “மாமியாரும் மருமகளும் ஒரு காப்பியோடையே காலை சாப்பாட்டை முடிச்சுடலாம்னு ப்ளான் பண்ணிட்டிங்களா” என்று அவர்கள் கவனத்தை திசை திருப்பினான்.
மணியைப் பார்த்த ஹிமா பதறி “ஐயோ ஸ்கூலுக்கு லேட்டாச்சு. துருவ் வா… வா… குளிச்சுட்டு வரலாம்” என்றாள்.
“நீங்களா…” அனைவரும் ஒரு சேரத் திகைத்தனர்.
“ம்ஹும்… கண்ணு எரியும்” என்றான் துருவ்.
“ஹிமா, நீ கிளம்பு நான் துருவுக்கு குளிப்பாட்டுறேன். பாட்டி கண்ணு எரியாம ஊத்தி விடுறேன்” என்றார் தெய்வானை.
“வெல்டன் பாய்… நம்ம ரெண்டு பெரும் சாயந்தரம் ஸ்விம்மிங் போகலாம். இன்னைக்கு ஷவர் பண்ணலாம் வா…” என்று அவனை அப்படியே அணைத்து ஒரு ஆட்டுக்குட்டியைத் தூக்கி செல்வது போல ஹிமாவின் அறையிலிருந்த குளியலறைக்குத் தூக்கிச் சென்றான்.
“பேசாம நீயும் ஒரு சொம்பு தண்ணி ஊத்திட்டு வந்துடு” என்றார் தெய்வானை.
“பாட்டி நான் டிரஸ்சே போடல” குளித்துவிட்டு துண்டு கூடக் கட்டிக் கொள்ளாமல் பிறந்த மேனியாக நின்ற துருவ் சொன்னான்.
“நீங்க கேர்ள், உங்க முன்னாடி ட்ரெஸ் போடமாட்டேன். கண்ணை மூடிக்கோங்க” என்று சொன்னதும் கொல்லென சிரிப்பு பிறந்தது அவ்விடத்தில்.
அவன் உடை மாற்றும் வரை கண்களை இரு கைகளாலும் மூடிக் கொண்டு “ஆச்சா, ஆச்சா” என்று உறுதி படுத்திகொண்டு கண்ணைத் திறந்தார் தெய்வானை.
அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் “தாங்க்ஸ் ஹிமா… இந்த மாதிரி குடும்பத்தோட வாழ எங்கம்மா முகத்தில் மறுபடி சிரிப்பைப் பார்க்க எவ்வளவு ஏங்கிருக்கேன் தெரியுமா? உன்னோட அசௌகரியங்களைப் பொறுத்துட்டு என் அம்மாவை ஒரு மகள் மாதிரி பாத்துக்குற. ஆனால் இது தற்காலிகம்தான்னு நினைச்சா எனக்கு வருத்தமா இருக்கு”
“எதையும் போட்டு மனசை குழப்பிக்காதிங்க சரத். நக்ஷத்திராவைக் கல்யாணம் பண்ணிட்ட கையோட ஒரு பிள்ளையைப் பெத்துத் தாங்க. அத்தை ஹேப்பியாயிடுவாங்க. நீங்க நினைச்ச சந்தோஷம் திரும்ப கிடைச்சுடும்”
“நீ போடா நான் குளிச்சுட்டு வரேன்”
“என்ன சரத்”.
களுக் என்று சிரித்தபடி இரண்டு துண்டினை எடுத்து நீட்டினாள். ஒன்றினை இடுப்பில் கட்டிக் கொண்டு மற்றொன்றை மேலே போர்த்திக் கொண்டு வெளியே வந்தான்.
வெளியே சென்றுவிட்டு வந்தவள். “உங்கம்மா இல்லை”
“அவசரக் குடுக்கை… உங்க மாமா ஹால்ல உக்காந்திருக்கார்”
“ம்ஹூம்…” உதட்டைப் பிதுக்கினாள்.
“நான் வேணும்னா மாடில போயி உங்க ட்ரெஸ்ச எடுத்துட்டு வரட்டுமா”
“வெரி குட் ஹிமா… முடிஞ்சா என் சூட்கேஸை எடுத்துட்டு வந்துடு”
சின்னசாமி ஹாலில் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் அவருக்கு தோல்விதான்.
“வந்து முழு பேரும் ஜான்தான்”
“கண்டிப்பா இங்கதான் அட்மிட் பண்ணிருக்காங்க… வேணும்னா இங்கிருக்குற எல்லா ஜானையும் சொல்லுங்க நான் ஒவ்வொருத்தரா போயி பார்த்துக்குறேன்”
எரிச்சலாக முறைத்த வரவேற்பாளன் “பேஷண்ட் விவரம் எல்லாம் தர முடியாது. நீங்க முழு பேரையும் தெரிஞ்சுட்டு வாங்க… தள்ளி நில்லுங்க சார்… அடுத்த ஆள் வாங்க…” என்று தொடர்ந்தான்.
“அவங்க கிட்டா கேட்டா எப்படி ஸார். கேட்க வேண்டியவங்க கிட்ட கேக்குற முறையில் கேட்டா தெரிஞ்சுட்டு போகுது” ஆபத்பாந்தவனாக ஒரு குரல் ஒலித்தது. அந்த மருத்துவமனையின் சீருடையுடன் தலையை சொறிந்தபடி ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
“தெரியும்…”
“முக்கியமான பேப்பர் வரலையே… வந்தாத்தானே கூட்டிட்டு போக முடியும்”
நைசாக ஒரு அறைக்கு அழைத்து சென்றான் அந்த சிங்காரம். அங்கு பிறந்து ஒரு நாளே ஆனா பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது.
“உன்னைப் பார்க்க தாத்தா வந்திருக்காரு பாருடா சிரி… அய்யா முதன் முதல்ல பேரனைப் பாக்க வந்திருக்கிங்க கைல காசு கொடுங்க” என்றான்.
“நீங்க இவன் அப்பாவோட சொந்தக்காரங்களா… காதல் கல்யானம்னால போக்கு வரத்து இல்லையா… அதுதான் தெரியல” என்றாள் அந்த ஜானி.
“ஏண்டா ஜானைக் கண்டுபிடிக்க வந்தா ஜானிகிட்ட கொண்டு போயி விட்டுட்ட”
“ஜான்னு மொட்டையா சொன்னா எப்படி ஜான்சனா, ஜான் ஆப்ரஹாமா, ஜானர்த்தனா…” அடுக்கினான்.
“இந்த விளகெண்ணையெல்லாம் தெரிஞ்சா ஏன் உன்னை மாதிரி திருட்டுப் பயலுக்கு தண்டம் அழுகுறேன். ஒழுங்கு மரியாதையா ஜானைக் கண்டுபிடிச்சுத் தரல உன்னை பெரிய டாக்டர்கிட்ட மாட்டி விட்டுருவேன்”
“மெட்ராஸ்காரன்…”
“இதெல்லாம் அடையாளமா ஸார். இங்கிருக்குற பாதி பேரு மெட்ராஸ்தான். வெளி ஸ்டேட் போனா நான் கூட அப்படித்தான் சொல்றது”
“உன் விவரம் எனக்கு ரொம்ப முக்கியம் பாரு. ஜான் பொண்டாட்டி பேரு கிறிஸ்டி”
“தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ”
“ஏன் ஸார் தூக்கி அடிக்கணும். பொண்டாட்டி பேரை சேர்த்து வச்சுக்குறதுதான இப்ப பேஷன். டிவில பார்க்கல “
“நீ பேசுறது அரசியல். அதுக்கு இந்த நாவலில் ஸ்கோப் இல்லை. இது குடும்பக் கதை அதனால கிறிஸ்டியோட வீட்டுக்காரனை மட்டும் கண்டுபிடி. ஒவ்வொரு ஜானோட ரூமுக்கும் போயி அவன் பொண்டாட்டியப் பத்தி விசாரி”
மண்டையில் பளீரென பல்ப் எரிந்தது சின்னசாமிக்கு.
“சிங்காரம் நல்ல ஐடியா கொடுத்த… என் சொந்தக்கார பொண்ணு ஹிமாவோட அம்மாவும் இங்கதான் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்களுக்கு ஜானைப் பத்தித் தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு. அவங்களைக் கண்டுபிடிச்சாக் கூடப் போதும்”
“பேரு… பேரு தெரியாதே… ஆனா அவங்களை இங்க கொண்டுவந்து சேர்த்தது சரத்சந்தர், என் மாப்பிள்ளை”
“உங்களோட பெரிய ரோதனை ஸார். பேஷண்ட்டோட பேரு தெரியாமலேயே பாக்க வந்துடுவிங்களா… போயி யாராவது ஒருத்தர் பேரையாவது தெரிஞ்சுட்டு வாங்க”
கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பினான். அவனது போன் நம்பரை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
ஹிமாவின் அம்மா பேரை எப்படிக் கண்டுபிடிப்பது யோசனையுடன் அமர்ந்திருந்தவரைத் தாண்டி சரத்தின் துணிகள் அடங்கிய சூட்கேஸை அவர் கண்ணுக்கு உறுத்தாதபடி நைசாக எடுத்து சென்றாள் ஹிமா.
தன் கையில் இருந்ததைக் கூட கவனிக்காமல் யோசனையில் இருந்த சின்னையனைப் பார்த்து அவளுக்கு ஒரே ஆச்சிரியம்.
“ஏம்மா… காலைல ஒரு போன் வந்தது. யாரோ சிவகாமியம்மாவைக் கேட்டாங்க… எனக்கு யாருன்னே தெரியல. உனக்குத் தெரியுமா”
“சிவகாமியா தெரியலையே…”
“சௌந்திரவல்லி”
Wow awesome
Thanks Sumathi Siva