Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 56

நிலவு 56

 

கிறு, மற்றும் தெலுங்கானா சென்டர் பிளேயர் எழுந்து நிற்க இருவருக்கும் மீண்டும் டொஸ்அப் செய்பட்டு பந்து தெலுங்கான அணிக்குச் சென்றது. அதில் பந்து வேகமாக மாற்றபட்டு தெலுங்கான அணிக்கு இன்னுமொரு புள்ளி கிடைத்தது. அத்தோடு முதலாம் இடைவேளையும் வழங்கப்பட்டது. 

 

குமார் : இப்போ ஸ்கோர் தமிழ்நாடு vs தெலுங்கானா 2:3 இருக்கு. இப்போ பிரேக். பார்க்கலாம் அடுத்து என்ன நடக்க போகுதுன்னு?

 

காவ்யா : ஆமா குமார், தெலுங்கானா பிளேயர்ஸ் ரொம்ப நல்லா விளையாடுறாங்க. இரண்டு அணிகளும் தங்களோட ஸ்டேட் வெற்றி பெற வைக்கனும் விளையாடுயாடுறாங்க.

 

குமார் : தமிழ் நாடு சென்டர் பிளேயர் எந்த ஒரு கவலையும் இல்லாமல் கூலாக குளுகோசு சாபிடுறாங்க. 

 

காவ்யா : குமார் சென்டர் மட்டும் இல்லை, அந்த டீமோட அத்தனை பிளேயர்சும் அப்படி தான் இருக்காங்க, டென்ஷனே இல்லாமல் இருக்காங்க. இங்கே நமளுக்கு தான் ஹார்ட் பீட் எகிறிட்டே இருக்கு.

 

குமார் : பிரேக் நேரம் முடிவடைந்து இப்போ சைடு மாறுகிறாங்க. மெச் ஆரம்பிக்க போகுது, 

 

காவ்யா : இப்போ சென்டர் பாஸ், தெலுங்கான செனடர் பந்தை அவங்க. WA நோக்கி வீசுறாங்க, வாவ் தமிழ்நாடு WD பிடிச்சுட்டாங்க. வாவ் நைஸ் சுப்பர் WD to C to WA to GA to GS. தமிழ் நாடு இன்னும் ஒரு புள்ளியை பெற்று இரண்டு அணிகளுமே ஒரெ எண்கிக்கையான புள்ளிகளை பெற்று இருக்காங்க. 

 

குமார் : இப்போ சென்டர் பாஸ் TN அணி செனடர் பிளேயருக்கு கொடுக்கபடுகிறது. வாவ் செம செம C to WA to C to GA to GS to GA சூட் பன்னிட்டாங்க. இப்போ தமிழ்நாடு VS தெலுங்கானா 4: 3 

 

காவ்யா : தெலுங்கானா இப்போ இன்னொரு கோலைப் பெற்று 4:4 என்ற புள்ளிகள் அடிபடையில இருக்கு.

 

குமார் : இப்போ தமிழ்நாடு சென்டர் பிளேயரோட கையில் இருக்கு செம செம தெலுங்கானா சென்டர் பிளேயர் பந்தை பிடித்து pass செய்து இன்னொரு புள்ளியைப் பெற்று தெலுங்கானா 5 புள்ளிகளையும், தமிழ்நாடு 4 புள்ளிகளையும் பெற்று இருக்கு.

 

காவ்யா : தமிழ்நாட்டு ரசிகர்கள் பதட்டமாக இருக்காங்க. இப்போ இரண்டாவது பிரேக் கொடுத்துட்டாங்க, ரொம்பவே ஆர்வமா இருக்கு, யாரு வெற்றி பெற போறாங்கன்னு பார்க்க 

 

குமார் : ஆமா காவ்யா, எனக்கும் ரொம்ப டென்ஷனா தான் இருக்கு. தமிழ் நாடு பிளேயர்ஸ் சிரிச்சு பேசிட்டு இருக்காங்க. பட் தெலுங்கானா பிளேயர்ஸ் சீரியசா பேசிட்டு இருக்காங்க. இதை எல்லாம் பார்க்கும் போது நம்ம ஹார்ட் பீட் அதிகரிச்சுட்டே இருக்கு.

 

காவ்யா : குமார் இன்னும் ஒரு நிமிஷத்துல பிரேக் முடிந்துடும். பார்க்கலாம்.

 

குமார் : பிளேயர்ஸ் கோர்டுக்குள்ள வராங்க சைடும் மாறி விளையாட போறாங்க.

 

காவ்யா : டொஸ் அப் வாவ் TN சென்டர் பந்தை தன்னோட பக்கம் எக்கி தட்டிவிட்டு பிடிச்சிட்டாங்க.

 

குமார் : பார்க்கலாம் சூப்பரா பந்தை கொண்டுபோகிறாங்க, ஒரு கோல் 

 

காவ்யா : தமிழ்நாடு VS தெலுங்கானா 5:5 புள்ளிகளா இருக்கு டப் கம்படிஷன் தான்.

 

இவ்வாறு மூன்றாவது பிரேகிற்கு முன்னால் இரு அணிகளும் 8:8 என்ற புள்ளிகளுடன் இடைவேளையைப் பெற்றுக் கொண்டது 

 

கிறு ” ஒகே கேர்ள்ஸ் இப்போ உங்க பார்ட்னரை பற்றி முழுமையா தெரிந்து வைத்திருப்பிங்க. இப்போ நம்ம ஆட்டம்” என்றாள்.

 

“இப்போ 3 pass மட்டும் தான் C to WA to GA to GS தான், மற்றவர்கள் எல்லோருமே தன்னோட பார்ட்னர்சை பிரீ ஆகவிடவேணாம்” என்றாள் சௌமி.

 

மீண்டும் மெச் ஆரம்பமாக ஒரு புள்ளியைக் கூட எதிரணி பெறவிடாமல் தமிழ்நாடு 3 pass மூலமாக 8 : 13 என்ற புள்ளிகளைப் பெற்று வெற்றியை பெற்றது. இன்னும் ஆறு நாட்களில் தமிழ்நாட்டிற்பான அடுத்த மெச் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

கிறுவை அழைத்துக் கொண்டு ஆரவ் சென்றான். அன்றிரவு,

 

“விழுந்தியே அடி எதுவுமே பட இல்லை போலவே ஒரு லுக்கை விட்ட, நெஜமாவே வலிக்க இல்லையா?” என்று ஆரவ் கேட்க,

 

“நான் தமிழ்நாட்டோட சென்டர் பிளேயர் டா, கெத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கனும். அதான் உண்மையான வலியை வெளி காட்ட இல்லை. பட் ரொம்ப வலிச்சிது” என்றாள் முகத்தை சுளித்து.

 

“நான் கூட வலிக்க இல்லையோன்னு நினைத்தேன், என்னமா அக்ட் பன்னி இருக்க?” என்று அவன் கூற

 

“உன் பொன்டாட்டியாச்சே! நீ என்னை காதலிக்கவே இல்லைன்னு அக்ட் பன்ன பாரு, அதை விட கம்மி தான்” என்றாள். 

 

“உன் கூட எனக்கு சண்டை போட இப்போ முடியாது டி, நீ ரொம்ப டயர்டா இருக்க, நாளைக்கு மீராவோட மெகந்தி பங்ஷன் இருக்கு அடுத்த நாள் கல்யாணம் அதற்கு அடுத்த நாள் ரிசப்ஷன் இருக்கு, அதிலும் ரொம்ப டயர்டாகுவ, அதான் சொன்னேன்” என்று கூறி அவளை உறங்க வைத்தான்.

 

அவளும் சிரித்து அவனை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

 

அடுத்த நாள் காலையில் இருந்தே மாலை வேளை நடைபெற இருக்கும் மருதாணி இடும் விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற ஆரம்பித்தது. வீடே மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இவர்களுக்கான ஆடைகள் அனைத்தும் வந்தது. சௌமி, கீது, ஜெசி, கிறு அனைவரும் வேலை செய்ய தர்ஷூ, ஜீவி இருவருமே ஒரே இடத்தில் அமரவைக்கப்பட்டனர். 

 

மாலை நேரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருகை தருவதோடு விருந்தினர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகைத்தர ஆரம்பித்தனர். வீடே கோலாகலமாக இருந்தது. 

 

கிறு மீருவின் ஒரு கைக்கும், ஜெசி மற்றைய கையிலும் மருதாணி இட அஸ்வின் இருகைகளையும் பிடித்துக் கொண்டு இருந்தான்.

 

“பிரோ உங்களுக்கு கைவலிக்குது இல்லையா?” என்று ஷ்ரவன் கேட்க,

 

“எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு” என்றான் அஸ்வின் புன்னகைத்தபடி.

 

“என்ன? எப்படி?” என்று ஹபீஸ் கேட்க,

 

கிறு தன் திருமணத்தின் போது நடந்த அனைத்தையும் கூறினாள்.

 

“அடிபாவிங்களா? யேன்டி உங்களுக்கு இந்த கொலைவெறி?” என்று ஹபீஸ் கேட்க,

 

“மீராவிற்கு மருதாணி இட்ட பிறகு மருதாணி இட வந்த லேடிஸ் எங்களுக்கு வைப்பாங்க, நீங்க தான் கைபிடிச்சு இருக்கனும்” என்று ஜெசி கூற

 

ஹபீசை இருவரைத் தவிற மற்ற ஆண்கள் அனைவரும் முறைத்தனர். வினோவும், ஷ்ரவனும் இப்போதே கனவுலகில் மிதக்க ஆரம்பித்தனர். 

 

மீராவிற்கு மருதாணி இட்ட பிறகு மற்ற பெண்களுக்கு இட ஆரம்பித்தனர். அனைவரும் தத்தமது துணைகளின் கைபிடித்து இருக்க சௌமி மாத்திரம் தனியாக நின்றாள்.

 

“சௌமி நீ மருதாணி வைக்க இல்லையா?” என்று கிறு கேட்க,

 

“இல்லை டி” என்றாள்.

 

“நீ மருதாணி வைக்குற” என்று கூறி வினோவின் புறம் திரும்பியவள் 

 

“டேய் வினோ, வெட்டியா தானே நின்று இருக்க, சௌமி கையை பிடிச்சிக்க” என்று கிறு கூற

 

“ஏய் வேணான்டி” என்று கூறி முடியும் முன்னே சௌமியை அமரவைத்து அவள் கைகளை பிடித்துக் கொண்டான். 

 

“நான் பிடிக்க இல்லைன்னா கிறு என்னை கொன்னுடுவா” என்றான்.

 

அனைவரும் அவனை ‘ நீ நடத்து ராஜா நல்லா நடத்து’ என்று பார்க்க பெரியவர்கள் தம்முள் அரத்தப் பார்வை பார்த்தனர்.

 

சௌமியின் காதோரத்தில் “ஐ லவ் யூ” என்று கூற அதிர்ந்து அவனைப் பார்த்தாள். “வாழ்க்கை பூரா இப்படியே பிடிச்சிருக்க ஆசையா இருக்கு, என்னை கல்யாணம் பன்னிக்கிறியா?” என்று கேட்க, சௌமி அவனைப் பார்த்து திரு திரு என பார்த்தாள்.

 

“இது சரியா வராது இரு” என்று கிறுவை அழைத்தான். 

 

அவன் கண்களால் பெரியவர்களைப் பார்க்க, அதைப் புரிந்துக் கொண்டவள்,

 

“அம்மா, அப்பா, மாமா, அத்தை எல்லோருமே இங்க வாங்க” என்று கத்த அனைவரின் குடும்பப் பெரியவர்களுமே அங்கு வந்து சேர்ந்தனர்.

 

“மாமா நான் வினோவோட மனைவியை தெரிவு செய்வேன் சொன்னேன், ஞாபகம் இருக்கா?” என்று கேட்க,

 

“ஆமா மா” என்றார் அருண்.

 

“நான் தெரிவு செய்துட்டேன், வேறு யாரும் இல்லை என் பிரன்டு சௌமியா” என்றாள்.

 

அனைவரும் புன்னகைக்க சௌமி பயத்தில் தன் பெற்றோரைப் பார்க்க,

 

“அங்கிள் ஆன்டி, உங்க பொண்ணை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன், எனக்கு அவளை கல்யாணம் பன்னி கொடுக்குறிங்களா?” என்று வினோ கேட்க, இருவரும் புன்னகைத்து தமது சம்மதத்தை தெரிவிக்க அந்த திருமண வீடு இன்னும் கலைகட்டியது இரட்டை சந்தோஷத்தில்.

 

தேவி சௌமியின் அருகில் வந்து உச்சிமுகர்ந்தார். அனைவரும் இதைப் பார்த்து நிம்மதியாக புன்னகைத்தனர்.

 

ஆரவ் அன்று போலவே கிறுவை கையிலேந்தி கார்டினிற்கு அழைத்துச் சென்றான். 

 

அவன் மடியிலே அவளை அமர வைக்க அவன் நெஞ்சிலே சாயந்துக் கொண்டாள். 

 

“ஆரவ் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள்.

 

“என்ன கண்ணம்மா?” என்று கேட்க,

 

“நான் அதர்வாவை மீரா, அஸ்வினோட நிச்சயதார்தத்தில் பார்த்தேன்” என்றாள். 

 

ஆரவோ அதற்கு மேல் அவளுக்கு ஏதாவது ஞாபகம் வந்துவிடுமோ என்று பயப்பட வினோ அவர்கள் இருவரின் அருகில் வந்து தொண்டையை செரும இருவரும் விலகினர்.

 

“அடேய் கரடி, இப்போ எதுக்கு டா வந்த? அதான் உனக்கு ஆள் செட் பன்னி வச்சாச்சுல?” என்றாள் கிறு கடுப்புடன்.

 

“அதற்கு நன்றி சொல்ல வந்தேன் டி, அது சரி என்னை பார்த்துட்டு அண்ணாவோட மடியில இருந்து இறங்கலாம் இல்லையா?” என்று கேட்க,

 

“இவன் என் புருஷன் நான் எங்க எப்போ வேணுன்னாலும் உட்காருவேன், நீ தான் நேரங் கெட்ட நேரத்துல வந்து நன்றி சொல்லுற எருமை” என்றாள் கிறு. 

 

ஆரவ் இருவரையும் பார்த்து புன்னகைத்தான். 

 

“சரி நான் அப்பொறம் வரேன்” என்று கூற

 

“டேய் நீ இப்போவே நன்றி சொல்லு, திரும்ப வராத” என்றாள்.

 

“போடி, ஒன்னும் தேவை இல்லை” என்று சென்றான்.

 

“அச்சு பசிக்குது டா” என்றாள் மீரா.

 

“கொஞ்ச நேரம் இரு, மருதாணி காய்ந்துவிடும், அப்பொறம் கைகழுவி சாபிடலாம்” என்று கூற

 

“ஒரு வார்த்தை நான் ஊட்விடுறேன்னு சொல்றியா பாரு, உனக்கு விட்டு இருக்கேனே டா” என்று உதட்டைச் சுளிக்க,

 

“நான் உனக்கு ஊட்டிவிட மாட்டன் டி , முதன் முதலா என் பொன்டாட்டிக்கு தான் ஊட்டிவிடுவேன்” என்று கூற அவன் நெஞ்சிலே சாயந்தாள் மீரா.

 

“தர்ஷூ” என்று மாதேஷ் கூற, கவின் ” ஜீவி” என்றான். 

 

“ஐயோ தயவு செஞ்சு இரண்டு பேரும் இந்த ஜூசை குடிங்க டி, இல்லைன்னா உங்க மாமியாருங்க கிட்ட நாங்க திட்டு வாங்கனும்” என்றான் கவின்.

 

“மாமியார் மருகள் அடிசிக்கிட்டு இருந்தால் எல்லா புருஷன்களும் நிம்மதியா அன்பு தொல்லைகள் இல்லாமல் இருப்பாங்க” என்றான் மாதேஷ்.

 

ஜீவி, தர்ஷூ இருவருமே தத்தமது துணைகளை முறைத்து முகத்தைத் திருப்ப சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர் அந்தக் கணவன்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 28

நிலவு 28   அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அது கோயிலின் மகா பூஜைக்கு முன்னைய தினமாகும். அனைவரும் காலை உணவை உண்ட பிறகு, சோபாவில் அமர்ந்து இருக்க,   சாவி, “இன்றைக்கு கோயிலுக்கு போகனும், சீக்கிரமா ரெடியாகுங்க” என்று

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 41

நிலவு 41   “கண்ணா உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியாது. நாம எல்லோருமே இந்த வாட்டி வீட்டிற்கு போன நேரம் நான் தோட்டத்தில் வெளியே உட்கார்ந்து இருந்தப்போ நீ என் கூட பேசின அப்ப கூட நான் வெளிச்சம் இருக்கிற

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 19

காலை 6 மணிக்கு ஹொஸ்டலின் முன் கார் வந்து நின்றது. வார்டன் அறைக் கதவைத் தட்ட, ஒருவரும் விழிக்காமல் தூங்கினர்.   “மீரா” என்று பலமாகத் தட்ட அதில் விழித்த கிறு, அறைக் கதவை திறக்க வார்டன் கார் வந்திருப்பதாகக் கூறி