Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50

50 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

இங்கே வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் ஆதர்ஷ் இன்னொரு சிறுவனுடன் கோவிலினுள் நுழைய கையில் வைத்திருந்த காத்தாடி பறந்து சென்று மரத்தின் அருகே விழுந்துவிட அதை எடுத்தவன் பின்னால் இருந்த பொம்மையை பார்த்தான். அதை எடுத்தவன் அச்சு எங்க போனா? என்றவன் அம்பிகாவிடம் சென்று வினவ அவரோ “உன்னை அச்சு ரொம்ப நேரமா தேடுனா, அவங்க அம்மா அப்பா வேலை இருக்குன்னு அவளை சீக்கிரம் கூட்டிட்டு போய்ட்டாங்க. புள்ளைக்கு முகமே வாடிடுச்சு…நீ எங்க தான் போன?” என வினவ

அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கையில் இருந்த காத்தாடியை காட்டி “அச்சு காத்தாடி வேணும்னு கேட்டா. இங்க யாருகிட்டேயும் எக்ஸ்ட்ரா இல்லை. அருகில் இருந்த குட்டி பையனை காட்டி இவன் வீட்டுல ஒன்னு இருக்குன்னு சொன்னான். அதான் அச்சுவுக்காக எடுத்துட்டு வரப்போனோம்.” என கூற

அம்பிகாவிற்கு பாவமாக போய்விட்டது..”சரி சரி நீ பீல் பண்ணாத.. அடுத்த வருஷம் அவள கூட்டிட்டு வரலாம்.” என்றார்.

அவன் அமைதியாக நிற்க “கையில என்ன? இந்த பொம்மை அச்சு தானே எடுத்துட்டு போனா..?”

ஆதர்ஷ் “தெரில.. அந்த மரத்துக்கிட்ட கீழ இருந்தது.” என

அம்பிகா “அச்சு அவங்க மாமாகிட்ட குடுத்து உள்ள வெக்க சொல்லிட்டு தான்  உன்னை தேடப்போனா… விடு..அவங்க லக்கேஜ் எடுத்து வைக்கும் போது தெரியாம கீழ விழுந்திருக்கும்… நான் தான் சொல்றேன்ல நாம அவளை அடுத்த வருஷம் கூட்டிட்டு வரலாம் சரியா?.” என

ஆதர்ஷ் “இப்போவே போயி கூட்டிட்டு வரலாமா?” என்றான்

அம்பிகா சிரித்துவிட்டு “உனக்கு ஸ்கூல் இருக்கு.. அச்சு பாப்பாவும் படிக்கணும்ல.. ஸ்கூல் லீவு போட்டா மிஸ் திட்டுவாங்க தானே. அச்சு திட்டுவாங்குனா அடிவாங்குனா உனக்கு ஓகேவா?” என கேட்க

ஆதர்ஷ் வாடிய முகத்துடன் “இல்லை வேண்டாம். ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா அச்சு வருவாள்ல?” என்று உறுதி செய்துகொண்டு சென்றுவிட்டான். ஆனால் அடுத்து மிகவும் அமைதியாகிவிட அன்றே ஊருக்கு கிளம்பவேண்டும் என கூறி சென்றுவிட்டான். அம்பிகாவிற்கு தான் கஷ்டமாக போய்விட்டது.

பின் வீட்டுக்கு போயி அம்மா சித்திகிட்ட எல்லாம் ஆதர்ஷ் அச்சுவை பற்றி சொல்லி, அச்சு என்கிட்ட சொல்லாம போய்ட்டான்னு புலம்ப…..

அவங்க “நீ எங்க போனேன்னு தெரியாம அவ எவ்ளோ நேரம் தேடிருக்கா..அவகிட்ட நீ ஏன் சொல்லாம போன? பாப்பாவும் பீல் பண்ணிருப்பால்ல? பொம்மை கூட அவ வெச்சுக்கிட்டே தானே சுத்துனா. அவங்க வீட்டுல யார்கிட்டேயோ குடுத்துத்தானே மிஸ் பண்ணிட்டாங்க.. இதுல அச்சு என்ன பண்ணுவா சொல்லு?” என கல்யாணி வினவ ஆதர்ஷ் “கரெக்ட் தான்..அச்சு பாப்பா மேல தப்பில்லை தான்..” என்றான்.. ஆனாலும் அவன் முகம் வாடியே இருக்க கல்யாணி “ஆதர்ஷ் கண்ணா இங்க பாருங்க. எதுக்கு இப்போ முகம் வாடுது? அச்சு பாப்பாவுக்கு நீ இப்டி இருந்தா புடிக்குமா சொல்லு?” என்றதும்

ஆதர்ஸ் “சுத்தமா பிடிக்காது.. அவ நாங்க விளையாடிட்டு இருக்கும்போது நான் அவளை கேம் நான் சொன்னமாதிரி செய்யாம மாத்தி விளையாண்டதுக்கு கோவிச்சுக்கிட்டேன்..அப்போ , சொன்னா தர்ஷு நீ ஏன் சில நேரம் முறைக்கிற, கோவிச்சுக்கற… நீ சிரிச்சிட்டே இருந்தா தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு..” என கூற கல்யாணி “சோ, நீ எப்போவுமே சிரிச்சிட்டே இருந்தாதான் அச்சு பாப்பா உன்னை சீக்கிரம் மீட் பண்ண வருவா..” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட

ஆதர்ஷ் அடுத்து சகஜநிலைக்கு திருப்பிவிட்டான்.

இங்கே அக்ஸாவும் அழுது அழுது இரு நாட்கள் காய்ச்சலில் வாடிவிட பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவிட இருப்பினும் தர்ஷு பற்றி இவர்கள் விளையாடியது பற்றி எல்லாமே கூறிக்கொண்டே இருந்தாள். கிருஷ்ணர் கதைகள் அதிகம் விரும்பி கேட்க, அவன் அளித்தது போன்ற பொம்மையை தேட என தர்ஷுவை சுற்றியே அவளது எண்ணம் இருந்தது. அவ்வப்போது எப்போ கோவிலுக்கு போவோம்? எப்போ தர்ஷு பாப்போம் என கேட்க அடுத்த வருஷம் தான் என்றனர். ஆனால் சூழ்நிலை காரணமாக அந்த வருடம் அக்ஸாவின் குடும்பத்தினரால் போகமுடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் ஆதர்ஷ் வரவில்லை என இருவராலும் அடுத்து சந்திக்கவே முடியாமல் காலம் கடந்துவிட்டது.” என ஆதர்ஷ் கூறிமுடிக்க அக்ஸா அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவளை பார்த்தவன்

“என்ன ?” என்பது போல கண்ணில் கேட்க அக்ஸா “அப்டியே அப்புறம் மறந்துட்டோமா? என

ஆதர்ஷ் “எங்க முழுசா மறக்கறது காலப்போக்குல முகத்தை பேசுனதை வேணும்னா கொஞ்சம் மறந்திருக்கலாம். ஆனா அதோட தாக்கம் இரண்டுபேர்கிட்டேயும் இருந்திருக்கு …, உங்க வீட்டுல எல்லாரும் சொன்னாங்க – நீ என்னோட பேர் கிருஷ்ணன் பேரு சொன்னதால கிருஷ்ணர் பத்தியே கதை கேப்பியாம். கொஞ்ச நாள் உங்க பேரையும் தர்ஷு தர்ஷுனு சொல்லிட்டு இருந்தா. அதனால எங்களுக்கு இதோட சம்மந்தபடுத்தி பாக்கவும் தெரில.. அடுத்த வருஷம் கோவிலுக்கு கூப்பிட்டு போகணும்னு ஒரே அடம். எப்போவுமே அவ்ளோ பிடிவாதம் எல்லாம் இருக்காது. ஆனா முடியவே முடியாது இங்க வேலை இருக்குனு அவகிட்ட சொல்லியும் கேக்காம கடைசியா திட்டி இனி தர்ஷுவ பாக்கணும்னு சொல்லிப்பாரு… இந்த தடவை மட்டும் தான் இப்போ கூட்டிட்டு போகல. இப்டியே அடம்பிடிச்சு உடம்பை கெடுத்துகிட்டா எப்போவுமே  கூட்டிட்டே போகமாட்டோம் என மிரட்டி அவ அழுது அப்புறம் தான் அமைதியானா…ஆனா என்ன நினைச்சாலோ தெரில அதுக்கப்புறம் தர்ஷு பேரவே அவ சொல்லல..அனீஸ், ரானேஷ் நேம் கூட அவதான் கிருஷ்ணர் பேர்ல இருந்து வெக்கணும்னு தேடி புடிச்சு வெச்சா. கிருஷ்ணரை பிடிச்சதால அவ இப்டினு நினைச்சோம் இப்போதான் தெரியுது உங்கள பிடிச்சதால தான் கிருஷ்ணரையே பிடிச்சிருக்கு…அவளே அறியாம இத பண்ணிருக்கா… அந்த பொம்மை அவளுக்கு பிடிக்கும்னு தெரியுது.. ஆனா ஏன் அவ்ளோ பிடிக்கும்னு கேட்டா அவளுக்கு சொல்ல தெரியாது. அச்சுனு நேம் சொல்லி கூப்பிட்டா நோ நீங்க யாரும் கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டு போவாளே தவிர ஏன் பிடிக்காதான்னு கேட்டா அப்டி எதுவும் தோணல. ஆனா யாரும் அந்த பேர் சொல்லி கூப்பிடாதிங்க ப்ளீஸ்னு சொல்லிட்டு போய்டுவா. பிரியா அவ பிரண்ட்ஸ்க்குள்ள எல்லாம் பிரச்சனை பண்ணா அக்ஸாவை வெறுப்பேத்தறதுக்காகவே அப்டி கூப்பிடுவாங்க. ஆனா ஒரு கட்டத்துல அவளுக்கு பதிலும் தெரியாம அத விட்டு விலகியும் வரமுடியுமா ரொம்ப அமைதியாகிட்டா.. அப்புறம் நாங்க யாருமே அவகிட்ட  இந்த மாதிரி ஏன் கிருஷ்ணர் பிடிக்கும், ஏன் அச்சுனு கூப்பிடக்கூடாது, ஏன் அந்த பொம்மை மட்டும் உனக்கு ஸ்பெஷல்னு கேள்வியே கேக்கறதில்லை…” என அக்ஸாவின் குடும்பத்தினர் கூறியதை கூறினான்.

அதோடு “நான் இங்க ஊர்ல இருந்து வந்து அடுத்த வருஷம் வரைக்கும் உன்னை பாப்பேன்னு நினச்சு நினைச்சே உனக்காக நிறையா திங்ஸ் எல்லாமே வாங்குவேனாம். முக்கியமா என் பிறந்தநாள் வந்த போது எனக்கு வந்த கிப்ட்ல எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்லி அதை உனக்காகனு சொல்லி எடுத்து வெச்சேனாம். எது பண்ணாலும் இது அச்சு பாப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். இது அவளுக்கு குடுப்பேன்னு சொல்லி சொல்லி ஒரு பாக்ஸ்ல எடுத்து எடுத்து வெப்பேனாம். ஆனா அடுத்த வருஷம் உன்னை பாக்க முடிலேன்னு வந்து ரொம்ப பீல் பண்ணேனோம். ஆனா உன் மேல கோபம் எல்லாம் படலையாம். அப்போ அப்போ உனக்கு பிடிச்ச அந்த பொம்மை உனக்காக எடுத்து வெச்ச திங்ஸ் மட்டும் எடுத்து பாத்துட்டு வெச்சிட்டு போய்டுவேணாம்.”

இரண்டுபேருக்கும் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. ஆனா சொல்ல தெரில..என அவளை பார்க்க அவள் கண்கள் பனிக்க ஆதர்ஷ் “ஹே என்னடி இப்போ என்னாச்சு.. அதான் இப்போவும் நீ என்கிட்ட வந்துட்டேயே?”

அக்ஸா “இல்ல, நான் வேணும்னு வராம இருக்கல.. உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்…” என

ஆதர்ஷ் அவளை அணைத்துக்கொண்டு “செல்லம் இது என்ன, நீ அப்போ ரொம்ப குட்டி பொண்ணு… உன்னை விட பெரியவன் எனக்கே கொஞ்ச வருசத்துல மறந்திடிச்சு.. அப்படியிருக்க நீ மறந்திருந்தாலே நான் தப்பா எதுவும் நினைக்கமாட்டேன். உன்னை குறை சொல்லமாட்டேன். ஆனா நீ அதுக்கு மேல போயி என்னை பத்தி நினச்சு அழுது புலம்பி உனக்கு உடம்பு சரில்லாத அளவுக்கு போயிருக்கு. கோவிலுக்கு வராததும் உன் தப்பு என்ன இருக்கு. அந்த வயசுலயே எவ்ளோ பாசமான்னு நினைச்சு நானே பூரிப்புல இருக்கேன். நீ என்னடான்னா கண் கலங்கிட்டு… நீ என் கியூட் அச்சு, தைரியமான சாரா தான் வேணும். இந்த அழுமூஞ்சி வேண்டாம்.. நீ ஒழுங்கா இருந்தாதான் நான் இன்னும் எல்லாரும் என்ன சொன்னாங்கன்னு சொல்லுவேன்…” என சமாதானம் செய்தான்.

அவளும் சிரித்துவிட்டு “சரி சரி அழுகல.. சொல்லுங்க..இது எல்லாம் உங்களுக்கு யாரு சொன்னது? அன்னைக்கு ருத்திரா கேக்க சொன்னது இத பத்தியா? பெரியவங்களுக்கும் அப்போவே யாரை சொல்றோம்னு தெரியலையே எப்படி இத்தனை விஷயம் சொன்னாங்க?” என வினவ

அவளது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு இந்த இன்வெஸ்டிகஷன் எல்லாம் கரெக்ட்டா பண்ணிடு சரியா?” என கிண்டல் செய்தவன்

ஆதர்ஷ் “பாதி கரெக்ட் தான். முதல ருத்திரா தான் சொன்னான். எல்லாமே இல்லை. நாம குட்டிஸ்ல மீட் பண்ணது.. அதோட அவன் நம்மகிட்ட ப்ரோப்லேம் பண்ணது எல்லாமே.. அம்பிகா ஆண்ட்டிகிட்ட மீதி கேட்க சொன்னான். அவங்களுக்கு இந்த ப்ரோப்லேம் டென்ஷன்ல யோசிச்சிருக்க முடியாது. நீ அவங்ககிட்ட ஞாபகபடுத்தி கேளுனு.. சோ நானும் வீட்டுக்கு வந்திட்டு பேசிட்டு ஆண்ட்டிகிட்ட ருத்திரா சொன்னதை வெச்சு கேட்டேன். அப்புறம் தான் ஆண்ட்டி எல்லாமே சொன்னாங்க. கூட அம்மாவும் இருந்ததால ஒஹ்ஹ அப்போ அந்த அச்சு தான் இந்த அக்ஸாவா? அப்போவே அச்சு அச்சுனு சொல்லிட்டு இருப்பியேன்னு இங்க நான் பண்ண சேட்டை எல்லாம் சொன்னாங்க. அதுல ஒரு டைம் அண்ணா கல்யாணத்தை பத்தி ஏதோ டவுட் கேட்டுட்டு கல்யாணம் எதுக்கு ஏன் யாரை பண்ணனும்னு கேள்வியா கேட்டேனாம். அப்டி பண்ணா அவங்க நாம கூடவே இருப்பாங்க. நாம எல்லா விஷயமும் அவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு இவங்க பொதுவா ஏதோ சொன்னதும் அப்போ நான் அச்சு பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கவா? என்கூடவே இருப்பால்லனு வேற கேட்டேனாம்.. சொல்லிட்டு எல்லாரும் கலாய்ச்சு சிரிச்சிட்டு இருந்தாங்க.”

“தென் உனக்கு வெச்ச திங்ஸ் அந்த பொம்மை வெச்சிருந்த பாக்ஸ் ஸ்டார் ரூம்ல போயி கலைச்சிட்டு இருந்தபோது தான் உன் அம்மா அப்பா மாம்ஸ் அத்தைஸ் எல்லாரும் வந்து  பேசிட்டு இருந்து பொம்மையை பத்தி கேட்டு பேசி அப்புறம் அவங்க மூலமா வந்தது சில விஷயம்..” என கூறினான்.

அக்ஸா “ஓ.. அப்போதான் சார் ரொம்ப சந்தோஷத்துல வந்து என்ன ஹக் பண்ணது கிஸ் பண்ணது எல்லாமா?” என கேட்க

ஆதர்ஷ் “அதே அதே.. எனக்கு எல்லாமே கேட்டு ரொம்ப ஹாப்பி.. அந்த குட்டிலியே உனக்கு என் மேல எவ்ளோ பாசம்..” என சிலாகித்தான்.

அவள் அவன் கூறிய விதத்தில் சிரித்துவிட அவனே தொடர்ந்து சொன்னான் “என்னதான் எல்லாருமே சொன்னாலும் எனக்கு என் அச்சு பேபிக்கும் நடுவுல இருந்த அந்த உறவு இப்பவும் எப்படி உன் மனசுல எந்தளவுக்கு இருக்குனு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது. அதுனால தான் ஒன் வீக் கழிச்சு உன் பர்த்டே அன்னைக்கு இத சொல்லணும்னு முதல நினைச்சதோட சேத்தி இன்னைக்கு காலைல இருந்து பண்ண எல்லாமே. அன்னைக்கு உனக்கு எடுத்து குடுத்த டிரஸ் கலர்ல தான் இன்னைக்கு சாரீ குடுத்தேன். அத பாத்ததும் உன் ரியாக்ஷன் அதுலையே பிளாட்.. அதோட நீ என்கிட்ட தான் முதல காட்டணும்னு யாருக்கும் தெரியாம மாடிக்கு வந்து வெயிட் பண்ணியே அவ்ளோ பிடிச்சது….”

அவளோ “பிராடு… எங்கேயோ நின்னு பாத்தீங்கள்ல.. வந்து ஒரு வார்த்தை நல்லா இருக்குனு சொல்லிருக்கலாம்ல? நான் நீங்க முதல பாக்கலேன்னு பீல் பண்ணேன் தெரியுமா?”  என முகம் சுருக்க

ஆதர்ஷ் “தெரியுமே கீழ நீ வந்தும் என்னை எட்டி எட்டி பாத்துகிட்டே தான் இருந்த… நான் உள்ள இருந்து பாத்தேனே..”

அவள் அவனை செல்லமாக அடித்துவிட்டு “நீங்க உள்ள சமைச்சிட்டு இருந்திங்கனு எல்லாரும் சொன்னாங்க.?” என கேள்வியாக வினவ

அவன் சிரித்துவிட்டு “அது எல்லாம் அப்போவே முடிச்சிட்டேன்.. உன்னை தவிர நம்ம வீட்ல எல்லாருக்கும் விஷயம் தெரியும்.. சோ எல்லாரும் எனக்கு சப்போர்ட்..உன்னோட ஒரு ஒரு ரியாக்ஷனும் எனக்கு எவ்ளோ பெரிய கிப்ட் தெரியுமா? மிஸ் பண்ணது எல்லாமே திரும்ப கிடைச்சமாதிரி.. இப்போகூட நீ முகத்தை சுருக்கி பாக்கிறியே.. இதுக்காக தான்.. இத பாக்கணும்னு தான் சில நேரம் உன்னை வெறுப்பேத்துனது, யோசிக்கவெச்சது .. எல்லாமே எல்லாரும் சொன்னது வெச்சு யோசிக்கறதா விட திரும்ப அது நடந்தா நமக்கு ஈஸியா ஞாபகம் வரும்ல அதோட எனக்கு மறுபடியும் எல்லாமே பாக்கணும்னு நினச்சேன்… அது நடந்திடிச்சு…  உனக்கு பால் கொழுக்கட்டை ஊட்டிவிடும் போது சூடா ஊட்டிவிட்டது.. நீ திருதிருன்னு

முளிச்சியே… எனக்கு அந்த குட்டி அச்சு அப்டியே தெரிஞ்சமாதிரி இருந்தது..

பூ வாங்கும்போது அன்னைக்கு இருந்த மாதிரியே ரோஸ் இல்லை மல்லிகைபூனு இரண்டையும் பாத்துட்டு நீ நின்னது.. அன்னைக்கு இரண்டுமே உனக்கு குடுக்க சொல்லியும் நடக்கல.. ஏன்னா குட்டி பாப்பா.. முடி கொஞ்சமா தான் இருக்குனு சொல்லிட்டாங்க.. ஆனா இன்னைக்கு அந்த பிரச்சனை இல்ல. சோ அதையும் நிறைவேத்திட்டேன்.

உன்னை வெளில கூட்டிட்டு போனது, ஒரு ஒரு நிமிஷமும் உன்னோட ஹாப்பினஸ் உன்னோட அந்த ஆனந்த அதிர்ச்சி ரியாக்ஷன் எல்லாமே  என்னால ரசிக்கமா இருக்கவே முடில.. எல்லாத்துக்கும் மேல அந்த பொம்மையை நீ கையில வாங்கும்போது அப்புறம் உன்னை அச்சுன்னு கூப்பிட்டபோது நீ என்னை பாத்தியே.. என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை… அதனால தான் அப்போவே சரி சாப்பிட போலாம்னு அங்க இருந்து போய்ட்டேன்.. எப்படியும் நீ தூங்கமாட்டேனு தெரியும்.. மேடம் உடனே வந்ததுமே இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாதுனு தான் எல்லாமே சொல்லிட்டேன்..”

அவள் “அப்போ என் பர்த்டே தெரிஞ்சது எப்படி? அண்ட் பைக்ல போகணும்னு நினைச்சது?”

அவன் “நீ குட்டில ஊருக்கு வந்திருந்த போது சொன்ன எனக்கு இன்னும் 15 டேஸ்ல பர்த்டேனு… ஆண்ட்டிகிட்ட பேசிட்டு கதை எல்லாமே கேட்டதுக்கு அப்புறம் ஒரு டவுட் எப்போ அந்த கோவில் பங்க்சன்னு கேட்டேன். இதே மாசம் தான் நடந்ததாம் அதோட அப்போ உன் பிறந்தநாள் வரப்போகுதுனு தான் உனக்கு டிரஸ் எடுத்தோம்னு எல்லாம் சொன்னாங்க .. அப்போதான் தேதி கால்குலேட் பண்ணி இந்த பொறந்தநாள்க்கு நானே எடுத்து கொடுக்கணும்னு நினச்சேன். அண்ட் பைக் அது எதேச்சியா நடந்தது.. எனக்கும் பிடிக்கும் அதனால எடுத்துட்டு வந்தேன்.”

அக்ஸா “உங்கள என்னதான் பண்றதோ? எல்லாமே ரீவைண்ட் பண்ணி பாத்திட்டு இருந்திங்களா?” என கிண்டல் செய்ய ஆதர்ஷ் “ம்ம்.. இருக்கலாம்.. அன்னைக்கு நான் பண்ண தப்பு மிஸ் பண்ண எல்லாத்தையும் இந்த தடவை சரி பண்ணிட்டேன்ல..அதுக்காக கூட இருக்கலாம்..கொஞ்சம் மேஜிக்கா கூட இருக்கலாம்..”

அவள் “அப்டியா? எந்த அளவுக்கு சார் சரி பண்ணீங்க? என்ன என்ன மேஜிக் நடந்தது?”

ஆதர்ஷ் “ம்ம்ம்..” என யோசித்துவிட்டு “நாம பஸ்ட் டைம் மீட் பண்ணது ஞாபகம் இருக்கா.. குழந்தைல இல்ல இப்போ..”

“ம்ம்.. தோட்டத்துல.. நான் ஓடி வந்தேன் உங்கள கவனிக்காம விழுக போனேன். நீங்க என்னை விழாம பிடிச்சிட்டீங்க.. அப்போதான் முதல பாத்தது..” என்றவள் அவனை விழி விரித்து பார்த்து “ஆமால .. நாம சின்னவங்களா இருக்கும் போதும் அப்டி தோட்டத்துல தானே பாத்தோம்.?”

ஆதர்ஷ் சிரித்துவிட்டு “ம்ம்..அதுமட்டும் இல்ல. அப்போ நீ என்னை பாக்க ஓடி வந்து விழுந்திட்ட.. அப்போ நான் உன்னை விழாம பாத்துக்கல. ஆனா இப்போ அது சரி ஆகிடுச்சு.. நீ மிஸ் பண்ண உன்னை பீல் பண்ண வெச்ச அந்த பொம்மையை திரும்ப உனக்கே பத்திரமா குடுத்திட்டேன்..”

“குட்டிஸ்ல உன்கிட்ட நான் சொல்லாம அன்னைக்கு கிளம்புனதுதான் தப்பு.. சொல்லிட்டு போயிருந்தா மிஸ் பண்ணிருக்க மாட்டேன்.. ஆனா இந்த தடவை இங்க நான் வரும் போது உன்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். எனக்காக ஒருத்தி இருக்கான்னு ஒரு நினைப்பு என் மனசுல ஓடிட்டே இருந்தது. அதுவே உன்னை சீக்கிரம் என்கிட்ட கூட்டிட்டு வந்திடுச்சு. இனிமேலும் அப்டித்தான்.. உன்கிட்ட சொல்லாம உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்.” என கூறியவன் எழுந்து “ஷ்ஷ்ஷ்ப்பா.. என்னால இந்த மொமெண்ட் இந்த சந்தோசத்தை எக்ஸ்பிரஸ் பண்ணக்கூட தெரில.. என் அச்சு, என் சாரா, என் லைப், என் லவ் எல்லாமே திரும்ப எனக்கு ஒண்ணா கிடைச்சிருக்கு என் வைஃப்பா நீ என் வாழ்க்கை முழுக்க இருக்க போற…” என அவன் மகிழ்ச்சியில் கத்த  அவன் அன்பில் தன்னை மறந்து பார்த்தவள் புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்துகொண்டு “சரி ருத்திரா குடுத்த அந்த கிப்ட்ல என்ன இருக்கு?”

அவன் அவளை ஓரமாக பார்த்துவிட்டு “என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்?”

அவளுக்கு புரிந்துவிட “பிராடு.. ஒழுங்கா உண்மைய சொல்லுங்க.. உங்களுக்கு தெரியும்..” என அவனும் சிரித்துவிட்டு “இது எல்லாம் கண்டுபுடி டி. சரி எனக்கு தெரியும் தான். ஆனா அதையும் நீயே ஓபன் பண்ணி பாரு…அப்போ உன்னை நான் பாக்கணும்..” என்றான்.

அவள் “அச்சோ ஆதவ் உங்களுக்கு உண்மையாவே ஏதோ ஆகிடுச்சு… இன்னுமா நீங்க ரியாக்ஷன் பாக்குறத விடல?” என வெளியே கிண்டல் செய்தாலும் உள்ளே ரசித்துக்கொண்டே அந்த கிப்ட்டை எடுக்க அவளது அறைக்கு சென்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 13சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 13

துளிதுளியாய் சேர்த்து வைத்த உன் நினைவுகளில் காற்றெல்லாம் உன்வாசத்தை சமைக்கிறேன்…. சமைத்த உன் நினைவுகளை துளி துளி தேனாய் அருந்தியே உயிர் வாழ்கிறேன்…. **************************************************************************************************************** ஸ்வேதா  இறந்து பத்து நாட்கள் முடிந்திருந்தன, ஸ்ருதி மருத்துவமனையிலிருந்து வந்து மூன்று நாட்கள் முடிந்திருந்தன. அன்று

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09

9 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டிற்கு ராஜலிங்கமும், மகாலிங்கமும் வர அவர்களை அனைவரும் வரவேற்க எழுந்து சென்ற சந்திரசேகர் “ஹே வாங்கப்பா, இங்க தான் இருக்கீங்க வரதே இல்ல.. இப்போவது வரணும்னு தோணுச்சே” என்று குறைபட்டு கொண்டே ஆனால் நண்பனை

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9

பாகம் – 9 நினைவுகளின் சுகங்கள் என்னை தாலாட்டும்   நொடிகளில் எல்லாம் காற்றில் உன் வாசங்கள் என்னை தழுவிச் செல்கின்றன !!! ********************************** ஸ்ருதியின் கோபமுகத்தை பார்த்து கொண்டே குமார் புன்னகையுடன் வழி சொல்லிக் கொடுத்தான். “பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு! அவ்வளவுதான்