Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47

47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து முடிவானது, ரஞ்சித் – சாந்தி திருமணம் கோவிலில் சிம்பிளாக  வைத்துகொள்ளலாம் என இருவரும் கேட்க பெரியவர்களும் அவர்கள் விருப்பப்படி விட்டுவிட்டனர். சாந்தியின் பெற்றோர்களுக்கும் இதில் மனப்பூர்வமான சம்மதம் தெரிவிக்க 3 வாரத்தில் கோவிலில் அவர்கள் திருமணம் என முடிவானது. ஆதர்ஷ் திருமண பரிசாக வாசு மற்றும் விக்ரம் ஒரு பத்திரத்தை கொடுத்தான். அதில் இருவருக்கும் தங்களது பிஸ்னஸை அவர்களுக்கே முழு அதிகாரம் எனவும் ஆதர்ஷ், ரஞ்சித் சைலண்ட் பார்ட்னர் என்ற முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது. விக்ரம், வாசு முதலில் திட்டி ஒப்புக்கொள்ள மறுக்க அவனோ “டேய், உங்களுக்கே தெரியும் எனக்கு இந்த பீல்ட்ல ரொம்ப விரும்பம் இல்ல. ஆனா உங்க இரண்டுபேருக்கும் இந்தமாதிரி பிஸ்னஸ் இம்போர்ட், எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் எல்லாமே ரொம்ப விருப்பம் இருக்கு. எப்டின்னாலும் நீங்க ஒரு பிஸ்னஸ் கொஞ்ச வருசத்துல ஆரம்பிக்கனும்னு தானே இருந்திங்க. இதுவே எடுத்துக்கோங்க. நம்ம பிஸ்னஸ் வெளில போகவேண்டிய நிலைமையும் வராது.”

விக்ரம்,வாசு “அது எல்லாம் சரி, ஆனா இதுல இவளோ நாள் இருந்த பிரச்சனை எல்லாமே நீதானே சால்வ் பண்ண.. உனக்கு திறமை இல்லேன்னு யாரு சொன்னது.. நீயும் பாத்துக்கோ. அம்மா அப்பா சித்தி என்ன எல்லாரும் இப்டி பாத்துட்டு இருக்கீங்க.. அவன்கிட்ட பேசுங்க. இவன் இவளோ கஷ்டப்பட்டு எல்லாமே ஒழுங்கு பண்ணி எங்ககிட்ட குடுத்திட்டு போகவா?” என

அவர்களோ “அவன் ஆல்ரெடி எங்ககிட்ட பேசிட்டான்பா. உனக்கும் வாசுவுக்கும் ஓகேனா எங்களுக்கு ஓகேனு சொல்லிட்டோம். எனக்கு நீங்களும் பசங்க தான். அதனால எந்த வருத்தமும் இல்ல.” என

விக்ரம் “இது சரிவராது. உங்க எல்லாரையும் இவன் மண்டைய கழுவிருப்பான். அக்ஸா எங்க? சஞ்சு அக்ஸாவை கூட்டிட்டு வா…அவகிட்ட இத நான் பேசிக்கறேன்.” என

ஆதர்ஷ் புன்னகைக்க வாசு “என்னடா சிரிக்கிற..”

அக்ஸா வந்ததும் அவளிடம் கூறி “அவன்கிட்ட சொல்லு இது எல்லாம் ஒத்துவராது. அவனை இந்த பிஸ்னஸ பாக்க சொல்லு. நாங்க வேணும்னா கூட இருக்கோம். ஹெல்ப் பண்றோம்..” என

அக்ஸா திருதிருவென விழிக்க வாசு “என்ன அக்ஸா முழிக்கற?” என

ஆதர்ஷ் சிரிப்புடன் “உங்க இரண்டுபேருக்கும் குடுக்க சொன்னதே அவதான். அதான் மேடம் முழிக்கிறாங்க..” என விக்ரம் “இது உன் வேலையா? உனக்கு என்னதான் ஆச்சு.. எல்லாத்தையும் தூக்கி தூக்கி குடுக்கிறது என்ன பழக்கம்? சித்தப்பா, ஆனந்த் அண்ணா எல்லாரும் இருந்திருந்தா ஆதர்ஷ் தானே இந்த பிஸ்னஸ ரன் பண்ணனும்னு நினைப்பாங்க. அத பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” என பொரிய

அக்ஸா “வெயிட், வெயிட்.. ரிலாக்ஸ் விக்ரம்.. இத யோசிக்காம டிசைட் பண்ணல. அவங்க எல்லாரும் இருந்திருந்தாலும் அவருக்கு இந்த லைன்ல விரும்பம் இல்லேன்னு சொன்னா கம்பெல் பண்ண மாட்டாங்க. அதோட உனக்கும், வாசு அண்ணாவுக்கும் தான் அடுத்து இன்ச்சார்ஜ்னு சொல்லிருந்தா ரொம்ப சந்தோசம் தான் பட்டிருப்பாங்க. சோ நீ அதெல்லாம் யோசிக்காத. தூக்கி கொடுக்கறது எல்லாம் இல்லைப்பா. நீ ஏன் அப்டி எடுத்துகிற.. உன் அப்பா அவரோட பிஸ்னஸ், எஸ்டேட் இதெல்லாம் கூட தான் நீ நிர்வாகம் பண்ணனும்னு ஆசைப்பட்டிருப்பாரு. ஆனா உனக்கு அது பிடிக்கலேன்னதும் கம்பெல் பண்ணாம விட்டுட்டாரு. அதோட நீங்க எல்லாரும் பிளான் பண்ணி அத ஆதவ்கிட்டையும் குடுத்திட்டீங்க. அவரு அத பாதில விட்டுட்டா வரமுடியும். அண்ட் எங்களுக்கும் அங்க தான் எல்லாமே செட் ஆனமாதிரி ஒரு பீல். சோ இங்க இருக்கற பிஸ்னஸ் வீடு எல்லாமே நீங்க பாத்துக்கோங்க. ஊட்டில பெரியம்மா பெரியப்பாகூட இருந்து அங்க இருக்கற பிஸ்னஸ் வேலை எல்லாம் அவரு பாத்துக்கிட்டும். மொத்தமா நம்ம பேமிலி பிஸ்னஸ்னு எதுவும் வெளில குடுக்கவேண்டியதும் இல்ல. மனசார நமக்கு பிடிச்சமாதிரி ஒரு வேலை ஜெஞ்சோம்னு திருப்தியும் இருக்கு. சோ இதுல எந்த பிரச்சனையும் இல்லையே..” என

விக்ரம், வாசு இருவரும் ஆதர்சை பார்க்க அவர்களிடம் வந்தவன் “டேய், அண்ணா என்கிட்ட இங்க இரு பிஸ்னஸ் பாத்துக்கோனு கேக்கும்போது நான் மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டேன். ஒருவேளை நான் இருந்திருந்தா அவங்கள இழந்திருக்க மாட்டேனோன்னு எண்ணம் உள்ள ஒரு உறுத்தல் இருந்திட்டே இருக்கு. இப்போ அவங்க போனதுக்கு அப்புறம் என்னால மனசார அத எடுத்து நடத்த முடியும்னு தோணலடா. வெளில விடவும் மனசில்லை. இது அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்குனது. சோ நீங்க இதப்பாத்துக்கிட்டா எங்களுக்கு ரொம்ப சந்தோசம் தான். நான் எங்க போகப்போறேன். இங்க பக்கத்துல தானே இருக்கபோறேன். எந்த பிரச்னைனாலும் இல்லை என்ன தேவையிருந்தாலும் உடனே வரப்போறேன். உங்களுக்கு செய்யப்போறேன் அது லைப்லையும் ஆகட்டும், பிஸ்னஸ்லையும் ஆகட்டும் கண்டிப்பா நான் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பேன்… தென் வாட்.?” என

அவர்களும் அவனது உணர்ச்சிக்கு மதிப்பு குடுத்தனர். இறுதியில் ஒப்புக்கொண்டனர். அக்ஸா சிரிப்புடன் அவர்களிடம் வந்து “அப்புறம் mr.விக்ரம் ஆசைப்பட்ட மாதிரி பிஸ்னஸ் மேன். இந்த ஹாப்பி மொமெண்ட்ட நீங்க எப்படி பீல் பண்றீங்கனு ஷேர் பண்ணிக்க முடியுமா? என கிண்டலாக கேட்க விக்ரம் அக்ஸாவை முறைத்தான்.

அக்ஸா “பாருங்க ஆதவ், எதுக்கு எடுத்தாலும் திட்றது, வம்பிழுக்கறது, முறைக்கறது.. உங்க தம்பிக்கு அண்ணின்னு கொஞ்சம் கூட பயம் பாசம் மரியாதை எதுவுமே இல்ல. சொல்லிவைங்க..” என முகம் சுருக்கி அவள் புகார் கொடுக்க

ஆதர்ஷ் “கண்டிப்பாடா.. டேய் விக்ரம், இன்னைக்கு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. என்ன இருந்தாலும் இன்னும் ஒரு மாசத்துல அக்ஸா உனக்கு அண்ணியாக போறா.. இப்டியே நீ அவளை டீஸ் பண்ணிட்டு இருந்தா நல்லாயிருக்காது சொல்லிட்டேன்.”

அக்ஸா “எஸ் சூப்பர். ம்ம்.. சொல்லுங்க..” என

ஆதர்ஷ் “சோ, அந்த ஒரு மாசம் வரைக்கும் தான் உனக்கு வேலிடிட்டி அதுக்குள்ள அவளை எவ்ளோ டார்ச்சர் பண்ணமுடியுமோ பண்ணிக்கோ. சரியா?” என அனைவரும் சிரிக்க

அக்ஸா அவனை ஸ்லொ மோஷனலில் திரும்பி முறைக்க

ஆதர்ஷ் “என்னடா மா பண்றது, தம்பி சின்ன பையன் வேற.. ஆசைப்படுறான்.. அதான் போனாப்போகுதுன்னு கொஞ்சம் பெர்மிஸ்ஸின் குடுத்தேன். ஜஸ்ட் ஒன் மந்த் தான். என்ன விக்ரம்.. அதுக்கு மேல அண்ணிகிட்ட மரியாதையா தான் பேசணும் இருக்கணும் சரியா?”

விக்ரம் “கண்டிப்பா அண்ணா உன் பேச்ச மீறவே மாட்டேன். ஒன் மந்த்குள்ள ஒரு வழி பண்ணிட்றேன்.” என அக்ஸா இருவரையும் “இருங்கடா.. உங்க இரண்டு பேரையும் இன்னைக்கு நான் ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்.” என அடிக்க துரத்த இளையோர் அனைவரும் துரத்த, அடிக்க என அங்கே சிரிப்பொலி மட்டுமே இருந்தது. இத்தனை வருடத்திற்கும் சேர்த்தி ஒன்றாக எல்லா மகிழ்ச்சியும் கிடைத்தது போல பெரியவர்கள் நிம்மதியாகினர்.

அன்று அக்ஸாவின் பிறந்தநாள் என்று ஆதர்ஷ் அவளது அறைக்கு சென்று உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பி அவளது நெற்றியில் இதழ் பதித்து “ஹாப்பி பர்த்டே சாரா..” என்றான்.

அவளும் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக்கொண்டு “தாங்க்யூ சோ மச்… என் பர்த்டே உங்களுக்கு யாரு சொன்னது… ” என்றாள். ஆதர்ஷ் “நீதா” என்றான்.

அடுத்து இளையோர்கள் (வாசு, ப்ரியா, ரஞ்சித், சாந்தி, விக்ரம், சஞ்சு) அனைவரும் அங்கே கூடி அவளுக்கு வாழ்த்து கூறிவிட்டு மாற்றி மாற்றி கிண்டல் செய்துகொண்டே 2 மணி வரை நேரம் போக அக்ஸா ஆதர்ஷின்  தோளில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தவள் அப்டியே உறங்கிவிட அதற்கும் அவளை கிண்டல் செய்துவிட்டு பின் அனைவரும் உறங்க சென்றனர். ஆதர்ஷ் அவளை நன்றாக படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

மறுநாள் லேட்டாக எழுந்தவள் இரவு பேசியதை எண்ணி பார்த்தாள். அவள் ஆதர்ஷ்க்கு தன் பிறந்தநாள் தெரியவரும் அவன் முதல் ஆளாக வாழ்த்துக்கூறுவான் என எதிர்பார்க்கவில்லை. நேத்து கூட எல்லாருமே கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க. “இதுவே எங்க பொறந்தநாள் எப்போன்னாவது ஞாபகம் இருக்குமா இவனுக்கு.. நாங்களே வந்து டேய் இன்னைக்கு எனக்கு பொறந்தநாள்னு சொன்னா ஓ.. வாழ்த்துக்கள் அப்டினு சொல்லிட்டு போயிடுவான். ஆனா இன்னைக்கு சார் டேட் ஞாபகம் வெச்சு நைட் எழுப்பி விஷ் பண்றாரு எல்லாமே நேரம்..” என வாசு குறை கூற

ப்ரியா “ஆமா இவரு பெரிய அயல்நாட்டு அதிபரு பாரு.. ஞாபகம் வேற வெச்சுக்க….. ஏதோ சொன்னதும் விஷ் பண்றதே பெரிய விஷயம் இதுல குறை வேற சொல்றியா?” என வாசு முறைக்க

பிரியா “பின்ன என்ன அவங்க லவர்ஸ் சந்தோசமா செலிப்ரட் பண்ணட்டும் விஷ் பண்ணட்டும்னு விடாம இதுக்கே குறை சொல்லி பொறாமை பட்டா உங்கள என்ன பண்றதோ? நீ என் பொறந்தநாள் அன்னைக்கு எல்லாமே பிளான் பண்ணி எல்லாமே சொதப்புன…இதுல சார்க்கு ஆதர்ஷ் அண்ணாவை பாத்து கம்பளைண்ட் வேற” என தலையில் அடித்துக்கொணடாள்.

சஞ்சு “கரெக்ட்டா சொன்னா ப்ரியா… இங்க மட்டும் என்னவாம்… இதோ இங்க ஒருத்தன் இருக்கானே என விக்ரமை கை காட்டி என் பர்த்டேக்கு பார்ட்டி வெச்சு செலிப்ரட் பன்றேன்னு சார் புல்லா அடிச்சுட்டு மட்டையாகியாச்சு…நைட் 12 மணிக்கு இவன் என்ன எழுப்பி விஷ் பண்ணுவான்னு வெயிட் பண்ணி கடைசில காலைல 12 மணிக்கு நான் தான் இவனை எழுப்பிவிட்டேன். இந்த லட்சணத்துல சார் வீட்ல யாருக்கும் தெரியத்துலனு கேள்வி வேற.. அப்போ கூட விஷ் பண்ணல. இப்போதான் இதேமாதிரி பேசி வாங்கி கட்டிகிட்டு வந்தான். நீங்க எல்லாம் அடங்கவே மாட்டிங்களா? மங்கி தான் கெட்டது பத்தாதுன்னு வனத்தையும் சேத்தி கெடுத்துச்சாம்… நீங்க தான் ஒழுங்கா எதுவும் பண்றதில்லை. பண்ற அவர்கிட்டேயும் கேள்வி குறை..” என பொரிய வாசு, விக்ரம் அமைதியாக அமர்ந்திருக்க அனைவரும் சிரித்தனர்.

அக்ஸா “இவங்களும் யாரும் சொல்லல. என்கிட்டேயும் நீங்க கேட்டமாதிரி நியாபகம் இல்லை. அப்புறம் எப்படி தெரிஞ்சது.. அம்மா அப்பா யாராவது என் பொறந்தநாள்னு சொன்னாங்களா?” என ஆதர்ஷ் இல்லை என்பது போல தலையசைத்து “என் வைப் நீதாண்டி சொன்ன.. இப்போதைக்கு அவ்ளோதான் பதில்.. எப்போன்னு நீ யோசிச்சு பாரு.. இல்லாட்டி எனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்றேன்..” என அவளும் அவனது பிடிவாதம் அறிந்ததால் எப்படியும் கேட்டாலும் சொல்லமாட்டான்னு யோசித்துவிட்டு அப்டியே தூங்கியதுதான் ஞாபகம் வந்தது.

சரி இன்னைக்குள்ள யோசிப்போம் என அவள் குளிக்க சென்றாள். அவள் வெளியே வரும்போது மெத்தையில் ஒரு பார்சல் இருக்க அதை பிரித்தாள். பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் பூ டிசைன் வைத்து ஒரு புடவை இருக்க அதன் மேல் “ஹாப்பி பர்த்டே டு மை லிட்டில் ஏஞ்சல்” என இருக்க அவள் சிரிப்புடன் மனதில் ஆதர்ஸை “ஸ்வீட் இடியட்” என திட்டிக்கொண்டே அந்த புடவையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். அந்த புடவையில் அவன் தான் முதலில் பார்க்க வேண்டுமென்று அவள் மாடிக்கு சென்று தேடி பார்க்க அங்கே யாருமே இல்லை. சிறிது நேரம் காத்திருந்து விட்டு கீழே வர அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூற ஆசிர்வதிக்க, சாமி கும்பிட சொல்ல அடுத்து சிந்து, அனிஷ், ரானேஷ் வந்து அவளோடு சற்று நேரம் பேசிவிட்டு வாழ்த்து கூறிவிட்டு விளையாட அங்கே ஆதர்ஷ் தவிர அனைவரும் இருந்தனர். ஒரு அரைமணிநேரம் தாண்ட இதற்கு மேல் என்ன என்று நினைத்தவள் வாய் திறந்து அனைவரிடமும் கேட்டே விட்டாள். ஆதவ் எங்க அவரை காணோம்?” என

அனைவரும் தங்களுக்குள் சிரிக்க என்னவென்று அவள் புரியாமல் விழிக்க “உன் புருஷன் உனக்காக ஏதோ உள்ள சமைச்சிட்டு இருக்கான்.” என

அக்ஸா முதலில் சிரிப்புடன் “என்ன சொல்றிங்க.. சரி, எல்லாரும் இங்க இருக்கீங்க.. ஹெல்ப்க்கு கூட?” என அவள் கேள்வியாக வினவ

அக்ஸாவின் அத்தைகள் “நாங்க என்ன மா பண்றது.. அது முழுக்க முழுக்க அவரு மட்டுமே தான் உனக்காக செய்யணுமாம்.. நாங்க கூட இருந்தா எங்களுக்கு கிரெடிட் வந்திடும் பாரு.” என கிண்டல் செய்ய

அவளுக்கு கூச்சமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

அக்ஸா “சரி நான் போயி பாக்கறேன்.”

அம்பிகா “அய்யய்யயோ உன்ன வந்தாலும் விடக்கூடாதுன்னு சொல்லிருக்கான்..நீ இங்கேயே இரு.. வந்திடுவான்..” என அவளை நிறுத்தி வைக்க சிறிது நேரத்தில் வெளியே வந்தவனிடம் “என்ன செஞ்ச அவளுக்கு? என்னது? முடிஞ்சதா? காட்டு எப்படி செஞ்சிருக்க?” என பல கேள்விகள் அவன் “அடடடா.. பால் கொழுக்கட்டை பண்ணிருக்கேன். அவளுக்கு தானே பண்ணேன். சோ அங்க தான் பஸ்ட்.. என்றவன் அவளிடம் திரும்பி நாம கார்டன்ல போயி உக்காந்து சாப்பிடலாமா?”  என அக்ஸா அனைவரையும் சுற்றி பார்க்க ஆதர்ஷ் கண்டுகொள்ளாமல் அவங்கள என்ன பாக்குற.. அவங்க எல்லாருக்கும் உள்ள இருக்கு.. அவங்க சாப்பிட்டுக்குவாங்க ..நீ வா..” என தனம் பின்னாடி நின்று கொண்டு “டேய் ஆதர்ஷ், நீ ரொம்ப சேட்டை பண்ற?” என மிரட்ட

அவனோ “என்ன பெரியம்மா, இன்னைக்கு என் வைப் பொறந்தநாள் வேற.. சோ நானே அவளுக்கு பிடிச்சதை செஞ்சு ஊட்டிவிடணும்னு ஆசைப்பட்டேன்… என்னதான் அம்மா, ஆண்ட்டி, தங்கச்சி, அத்தை சித்தினு எல்லாருக்கும் நான் ஊட்டிவிட்டாலும் அவங்கவங்க ஆளுங்க கொஞ்சம் கோபப்படுவாங்கள்ல. சோ நமக்கு எதுக்கு அந்த பாவம் எல்லாம், பிரச்சனை பண்ணாம அவங்களையே ஊட்டிவிட சொல்லிடலாம்னு தான்.. நான் சாராவுக்கு மட்டும் ஊட்டிவிட எடுத்துட்டு போறேன்..பாருங்க பெரியப்பா என்னை இப்போவே முறைச்சு முறைச்சு பாக்கறாரு.. நீங்க போயி அவருக்கு எடுத்து குடுங்க…” என “வாலு.. போடா.” என அடிக்க அனைவரும் சிரித்தனர்.

ஆதர்ஷ் அக்ஸாவை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவளை ஊஞ்சலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து வேண்டுமென்றே அவளுக்கு ஒரு உருண்டையை எடுத்து சூடாக ஊட்டிவிட அவள் வாயில் போட்ட பின் முதலில் கண்களை விரித்து விழித்தவள் அப்படியே வைத்து ஊப்..ஊப்..என ஊதினாள்.”

அவன் புன்னகையுடனே “சூடா இருக்கா, துப்பிடு…” என அவள் வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு மெதுவாக உண்ண அவனிடம் “ஆதவ்.. பாத்து ஊட்டிவிடுங்க..சூடா இருக்கு.. “என்றாள்..

அவனும் சிரிப்புடன் அதன் பின் அவளுக்கு பார்த்து ஊட்டிவிட அவளும் பேசிக்கொண்டே உண்டு முடித்தாள். இடையில் “உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு இது பிடிக்கும்னு…”

அவன் அவளது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “நீதான் சொன்ன… ” என்று கூற அவளுக்கு எப்போது சொன்னோம் என ஞாபகம் வராமல் அப்டியே உண்டு முடிக்க அதன்பின் “அட்சச்சா.. ஆதவ் சாரி.. நீங்க கொஞ்சம் கூட சாப்பிடலல்ல..நான் வேணும்னா எடுத்துட்டு வரவா?” என வினவ அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் அவனை உலுக்கி “ஆதவ் உங்ககிட்ட தான் கேட்கிறேன், உங்களுக்கு நான் எடுத்துட்டு வரவா?” என

அவன் வேண்டாம் அப்புறமா சாப்பிட்டுக்கறேன். நாம கோவிலுக்கு போகணும்.. நீ ரெடியாகு.. நானும் ரெடியாகிட்டு வந்துடறேன்..” என்றான்.

இருவரும் தயாராக செல்ல அக்ஸாவிற்கு “பைக்கில போனா நல்லா இருக்குமே…

ம்ச்ச்.. ஆனா இங்க கார் தானே இருக்கு..

அவர்கிட்ட பைக் இல்லையோ. அது சரி.. அவரு எங்க இங்க இருந்தாரு.. பைக் இருந்தாலும் அவர் வேலை பாத்தது பெங்களூர்ல அங்க தான் வெச்சிருப்பாரு. இங்க யாரு பைக் ஓட்டுவாங்க..

அவர்கிட்ட கேட்கலாமா?

சரி வேண்டாம்..கேட்டா பாவம் அதுக்காகவே ஏதாவது அரேன்ஜ்மென்ட் பண்ணுவார்.

ஒரு நேரம் வெளில போறதுக்கு எதுக்கு. அவர்கூட தானே போறோம்.. எதுல போனா என்ன?” என தனக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தவள் கிளம்பி வெளியே வர அவள் மீண்டும் விழியகல அவன் பைக் எடுத்துவைத்து தயாராக இருந்தான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 50Chitrangatha – 50

ஹலோ டியர்ஸ், எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது. உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா

வார்த்தை தவறிவிட்டாய் – 4வார்த்தை தவறிவிட்டாய் – 4

ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமண்ட்ஸ் போட்டவங்களுக்கும் லைக்ஸ் போட்டவங்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம். சின்ன சின்ன ஆசைகள் நமக்கு நிறைய  உண்டு. வெண்ணிலவு தொட்டு முத்தமிடக் கூட  ஆசைதான். ஆனால் நிலாவில் கால் பதிக்கும் வாய்ப்பு மனிதரில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது.