Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 35

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 35

35 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷின் இந்த முடிவை எதிர்பார்க்காத ஆனால் சுதாரித்த செல்வம் “இல்லை பரவால்லை ஆதர்ஷ், நீயும் அண்ணா குடும்பம் மேல இருக்கற பாசத்துல அப்படி பேசிட்ட.. நான் அத பெருசா எடுத்துக்கல. இதுக்காக கோபத்துல இங்க இருக்கேனு நீ முடிவெடுத்து உனக்கு பிடிக்காத வேலைய செஞ்சு கஷ்டப்படவேண்டாம்.” என கூற

ஆதர்ஷ் “எனக்கு வேலை பிடிக்கும் பிடிக்காதுன்னு நான் யாருகிட்டேயும் சொல்லல அங்கிள். இந்த மாதிரி பிரச்சனைஎல்லாம் இருக்கு. குடும்பத்துக்காகன்னு வேலை தொழில்னு கஷ்டப்பட்டு கடைசில அந்த குடும்பதையே கண்டுக்கமுடியாம போறதால தான் அந்த மாதிரி மெஷின் வாழ்க்கை வேணாம்னு சொன்னேன். ஆனா இன்னைக்கு நான் நினைச்சதை விட அதிகமான பாதிப்பு என் குடும்பத்துக்கு நடந்திருக்கும் போது எனக்கு இந்த மாதிரி காரணங்களை சொல்லி என் கடமையை தட்டி கழிக்கமாட்டேன்.” என்றான் அவன் தெளிவாக.

செல்வம் ” ஆ… ஆமா அது கரெக்ட் தான் ஆதர்ஷ். ஆனா இதேமாதிரி பிஸ்னஸ் பிரச்சனை நாளைக்கு உனக்கு வராதுன்னு என்ன நிச்சயம்? உன்னையும் அதேமாதிரி பிஸ்னஸ்ல எதிரிங்க கொல்ல ட்ரை பண்ணமாட்டாங்களா?” என இழுவையாக கேட்க

ஆதர்ஷ் “அதுக்கு என்னை பயந்து போகசொல்றிங்களா? அப்டி ஒரு சம்பவத்துக்காகதான் நானும் வெயிட் பண்றேன். அப்டி எவனாவது வந்தா நான் நேரா அதுக்கு காரணமானவங்களை கண்டுபுடிச்சு அவனுக்கு செய்யவேண்டியதை எல்லாம் செஞ்சு அனுப்பறேன்.  இதுல வேலைக்கு ஏவிவிட்டவன், பிளான் போட்டவன், செஞ்சவன் ஹெல்ப் பண்ணவன்னு எல்லாரையும் கண்டுபுடிக்கறேன்.. இந்த விசயத்துல சம்பந்தபட்ட எல்லாருக்கும் நான் தரப்போற பனிஷ்மென்ட் ரொம்ப கொடூரமா தான் இருக்கும்.” என செல்வம் அவன் கோபம் கண்டு அஞ்சியபடியே நின்றிருக்க இருந்தும் இவன் இங்கே இருந்தால் பிரச்சனை என்பதனால் தொடர்ந்து “அதுக்கு சொல்லல ஆதர்ஷ். உன்னை யாராவது ஏதாவது பண்ண வந்தா நீ திருப்பி அடிப்ப, சமாளிப்ப, தாங்கிக்குவ.. ஆனா உன் அம்மா, அண்ணி குழந்தைங்க இவங்கள ஏதாவது அட்டாக் பண்ண பாத்தா நீ என்ன பண்ணமுடியும் சொல்லு?” என  எமோஷனலாக அவனை அடக்க முயற்சி செய்ய

 

ஆதர்ஷ் “அதையும் பாத்துக்கலாம். இன்னும் சொல்லபோனா அப்டி நடந்தா அது எனக்கு இன்னும் நல்ல வாய்ப்பு தான். அப்போதான் கோபம் வெறி இன்னும் அதிகமாகும். பயந்து போயி விலகி நின்னு இப்டி ஒருஒருத்தர பலி குடுக்கறதுக்கு பதிலா அவங்கள பணயம் வெச்சு இந்த பிரச்சனைய நான் முடிக்கிறேன். எனக்கு என் குடும்பத்தை இப்டி பண்ணவனை, முக்கியமா எனக்காக மட்டுமே இருந்த என் அண்ணனை கொன்னவனை கண்டுபுடிக்கறதுதான் எனக்கு இப்போ தேவை. வேற எதுவும் முக்கியமில்லை. யாரும் பெருசில்லை. என்ன இவங்க புள்ளையா நினைச்சிருந்தா இந்த வீட்டு பையனா நினைச்சிருந்தா என்னை நம்பிருப்பாங்க. என்கிட்ட விஷயத்தை முன்னாடியே சொல்லிருப்பாங்க, ஆனா என்னை அவங்க உணர்ச்சியுள்ள ஒரு மனுசனா கூட மதிக்கல. என் கோபம் கொலை பண்ணவங்க மேல மட்டுமில்ல அந்த விஷயத்தையே என்கிட்ட இருந்து மறச்ச எல்லார்மேலையும் தான். நீங்க அது எனக்காக, உயிரை காப்பாத்த, இந்த குடும்பத்தோட வாரிசுக்காக அது இதுனு என்ன சொன்னாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன். குடும்பமே இல்லாம எல்லாரையும் இழந்துட்டு இந்த சொத்து பணம் மட்டும் வெச்சு நான் மட்டும் வாழ்ந்துடுவேன்னு நினைச்சீங்களா? அப்போ இனிமேலும் அப்டியே எடுத்துக்கோங்க. நான் இங்க இருந்தாலும் எனக்கு சொந்தபந்தம்னு ஒருத்தரும் வேண்டாம். என்கிட்ட யாரும் எந்த காரணமும் சொல்லி பேச ட்ரை பண்ணாதீங்க. என்னை கடைசிவரைக்கும் நம்புனா ஒரே ஜீவன் என் அண்ணா தான். இப்போ நான் பண்ணப்போற எல்லாமே அவனுக்காக மட்டும் தான். இந்த சொத்து எனக்கு வேண்டாம்னு நான் சொல்லிட்டேன். ஆனா அண்ணாவோட பையன் இந்த வீட்டோட வாரிசு, அதோட  இன்னும் ஒரு பொண்ணு இருக்காள்ல, அவங்களுக்கு வேண்டாம்னு நான் முடிவு பண்ணமுடியாது. அவங்க ஒரு வயசு வந்து இதை டேக் கேர் பண்ணிக்கற வரைக்கும் அதை பத்திரமா காப்பாத்தி அவங்ககிட்ட ஒப்படைக்கவேண்டியது என் கடமை. எல்லாத்தையும் விட இத என் அண்ணாவோட ஆசையும் கூட. அன்னைக்கு அவன் என்கிட்ட சொன்னபோதே இங்க இருந்திருந்தா என் அண்ணாவை நான் இழந்திருக்கமாட்டேன். அவனோட கடைசி ஆசையை நான் கண்டிப்பா நிறைவேத்துறேன்…”

 

செல்வம் எதோ கூற வரும்முன் ஆதர்ஷ் “இந்த முடிவை நான் கோபத்துல எடுக்கல. தெளிவா தான் முடிவெடுத்திருக்கேன். டிசைட் பண்ணதுக்கு அப்புறம் நான் அதுல இருந்து பின் வாங்குறது நடக்காத காரியம்னு உங்களுக்கே தெரியும். சோ என்கிட்ட பேசி இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. எனக்கு பிஸ்னஸ், குவாரி, கடை எல்லாத்துலையும் என்ன இன்வெஸ்ட் பண்ணிருக்காங்க, யாரெல்லாம் கஸ்டமெர்ஸ், பிஸ்னஸ் மீட்டிங்ல இருக்கறவங்க, நம்மகூட போட்டினு  யார் யாரெல்லாம் இருக்காங்க? இப்போ கம்பெனியோட நிலைமை என்ன எல்லா டீடைலும் இன்னைக்கு நைட்குள்ள வேணும்… நாளைல இருந்து நான் இன்ச்சார்ஜ் எடுத்துக்கறேன். மீட்டிங்க்கு அரேஞ்சு பண்ண சொல்லிடுங்க.” என அவன் கூற செல்வம் சற்று வெடவெடத்து போனான். அதோடு “இந்த ஆக்சிடென்ட் சம்பந்தமா யாரு கேஸ் எடுத்திருக்காங்க, என்ன ஸ்டேட்டஸ்ல இருக்குனு எனக்கு தெரியணும். அவரோட போன் நம்பர் குடுங்க.” என செல்வம் தயங்க

ஆதர்ஷ் “என்ன அங்கிள், கேஸ் ஹண்டில் பண்ற ஆஃபீஸர் நம்பர் கூடவா இல்லை.?” என அவன் மிரட்டும் தோணியில் கேட்க

செல்வம் “இல்லை அப்டிஇல்லை… டிஸ்டர்ப்பா இருக்கும்னு அவங்க ரொம்ப எமெர்ஜென்சினா மட்டும் தான் காண்டாக்ட் பண்ணச்சொன்னாங்க. அதுவும் ஸ்டேஷனுக்கு. கேஸ் டீடெயில்ஸ் ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் வந்தா இன்ஸ்பெக்டரே சொல்றேன்னு சொல்லிட்டாங்க.” என அவன்திக்கி தடுமாறி கூற

ஆதர்ஷ் “இது சரிவராது..”. என்றவன் யாருக்கோ கால் செய்ய செல்வம் “யாருக்கு போன் போடுற ஆதர்ஷ்?”

ஆதர்ஷ் “அசிஸ்டன்ட் கமிஷனர்.. என்னோட பிரண்ட்க்கு.. என்றவன் மறுமுனையில் கால் அட்டென்ட் செய்ததும் பொதுவான விசாரிப்பு இரண்டுவார்த்தை பேசிவிட்டு வீட்டுக்கு அப்பா, அண்ணா,சித்தி ஆக்சிடென்ட் பற்றி கூறிவிட்டு இந்த கேஸ் டீடைல்ஸ் எல்லாமே தெரியணும்டா என்றவன் தான் செல்வத்திடம் கேட்ட பிஸ்னஸ் மட்டும் ஆக்சிடென்ட் விபரங்களை நாளை தருவதாகவும் கூறினான். இருவரும் பேசிவிட்டு வைத்தவுடன் வாசுவிற்கு கால் செய்து “எங்கடா இருக்க? நீ இன்னைக்கு நைட் இல்லை நாளைக்குள்ள வீட்டுக்கு வா. என்றவன் அவனிடமும் விஷயத்தை கூறிவிட்டு யாரெல்லாம் இதுக்கு பின்னாடி இருக்காங்கனு கண்டுபுடிக்காம விடக்கூடாதுடா. நீ நாளைக்கு வா. நேர்ல சொல்றேன். அதோட எனக்கு ஒரு பிஏ வேணும். நீ என்கூட இருப்ப. நானும் நீயும் நிறைய வேலை பாக்கவேண்டியது இருக்கும். பிஸ்னஸ்ல என்ன நடக்குதுன்னு முழுசா தெரிஞ்சுக்க எனக்கு சரியான ஒரு ஆள் வேணும். ஏற்பாடு பண்ணனும் .

பேசிக்கொண்டே செல்வத்திடம் “அங்கிள் உங்க பிஏ பேரு சங்கரமூர்த்தி தானே. ஆள் எப்படி?” என்றதும் ஏற்கனவே பயத்தில் இருந்தவர் ஆதர்ஷ் தன்னிடம் கேள்வி கேட்டதும் முதலில் புரியாமல் இருந்தாலும் அவன் பதிலுக்கு காத்திருப்பதை உணர்ந்து “அது, ஆமா ஆதர்ஷ். சங்கரமூர்த்தி தான். அவன் ரொம்ப நம்பிக்கையானவன். பல வருஷமா என்கூட தான் இருக்கான். சொன்ன வேலைய கரெக்டா செய்வான். எந்த பிரச்சனையும் இருக்காது. இருக்கற இடமே தெரியாது.” என

ஆதர்ஷ் “ம்ம்.. அது நல்லாவே தெரியுது. பாவம் வந்து ரொம்ப நேரமா உங்க யாருக்குமே தெரியாம வெளில மறைஞ்சு நின்னிட்டு இருக்காரே. இருக்கற இடமே தெரியாதுன்னு சொல்றது உண்மைதான். உள்ள வரச்சொல்லுங்க அவரை…ஆ…வேண்டாம்.. அங்கிள் எப்படியும் நான் பேசுறது உங்களுக்கே கேக்குமே தெரியாம நின்னு உளவு பாத்தது போதும்…உள்ள வாங்க ” என்றான்.

அடித்துபிடித்துக்கொண்டு உள்ளே வந்த சங்கரமூர்த்தி “தம்பி, அய்யோயோ, நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. செல்வம் சார் அவரை இங்க வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னார். அதான் வந்தேன். நீங்க கோபமா பேசிட்டு இருந்ததால பயந்து போயி அங்கேயே நின்னுட்டேன். வேற எதுவுமில்லை தம்பி..”

ஆதர்ஷ் செல்வத்தை பார்க்க அவரோ “ஆமா ஆதர்ஷ், ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறம் காரை சர்வீஸ் கொடுத்திருந்தது. வாங்கவே இல்லை. இன்னைக்கு நீ வரேன்னு சொன்னதால அப்டியே வாங்கிட்டு உன்ன பிக்கப் பண்ணலாம்னு ஏர்போர்ட் வந்துட்டேன். இங்க இருந்து நான் போகணும்ல அதான் இந்த சங்கரனை வரச்சொன்னேன். அவன் வந்தவன் வெளியவே நின்னுட்டான் போல. அவன் கொஞ்சம் பயந்த சுபாவம், மத்தபடி உளவு பாக்கிறது எல்லாம் பண்ணமாட்டான்.” என தன் ஆளுக்காக பரிந்து பேச ஆதர்ஷ் இருவரையும் கூர்மையாக பார்த்துவிட்டு சரி “அந்த ஆக்சிடென்ட் பண்ணவன்,நீங்க சொன்னமாதிரி அந்த பிஸ்னஸ் எதிரியை கண்டுபுடிக்கணும்ல? அதுக்கு நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்..” என

இருவரும் கண்டிப்பா கண்டிப்பா..” என வேகமாக கூற “ரொம்ப நல்லது, சரி.. நீங்க இரண்டுபேரும் இப்போ கிளம்புங்க.. நான் கேட்ட டீடைல்ஸ் முடிஞ்சா கொண்டுவந்து குடுங்க, இல்லாட்டி மெயில் அனுப்பிச்சிடுங்க.” என சங்கரன் “தம்பி உங்க மெயில் ஐடி?”

ஆதர்ஷ் அவரை நேருக்கு நேராக பார்த்து “ஏன் உங்களுக்கு தெரியாதா? அண்ணாவுக்கு நான் அனுப்பிச்ச மெயில் மெசேஜ் எல்லாமே நீங்க தானே பாத்தீங்க. அதுல இருந்து எடுத்துக்கலாமே?”

அவர்கள் தயங்க செல்வம் “ஆதர்ஷ் அது வந்து உனக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவேன்னு..” என முடிப்பதற்குள் ஆதர்ஷ் அதாவது என்னை சங்கடப்படுத்தவேண்டாம்னு மறைக்கறதுக்காக அண்ணா இருக்கான்ங்கிற மாதிரியே எல்லாமே பாவம் கஷ்டப்பட்டு நீங்க எல்லாரும் செட் பண்ணீங்க..என்ன பண்றது விதி இப்டி கொண்டு வந்து எனக்கு தெரியவெச்சிடிச்சு… பரவால்லை அங்கிள். அதான் நான் வந்துட்டேனே.. நம்ம எல்லாரையும் இவளோ கஷ்டப்படுத்துன அவனை சும்மா விடமாட்டேன். சீக்கிரம் கண்டுபுடிச்சிடறேன். ஆனா இதுக்கு மேல அண்ணாவோட எல்லா அக்கவுண்டும் கிளோஸ் பண்ணிடுங்க. வேற யாராவது மிஸ்யூஸ் பண்ண சான்ஸ் இருக்கு.” என அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்கள் கிளம்பியதும் ஆதர்ஷ் சோபாவில் அமர சாந்தியும், பைரவியும் அவனிடம் “இங்க என்ன நடக்கிது ஆதர்ஷ், குழந்தைங்க எங்க? நீ மட்டும் வந்திருக்க? என்ன பண்றேன்னு ஒன்னும் புரியல…” என வினவ

ஆதர்ஷ் “இத நீங்க எந்த முறைல கேக்கறீங்க? குழந்தைங்களோட பாட்டி அம்மாங்கிற முறைல கேக்கறீங்களா? இல்லை இங்க ஏன் வந்து இருக்கேன்னு கேக்கறீங்களா?”

பைரவி “உன் அம்மாங்கிற முறைல கேக்கறேன்டா… ” என்றாள் கோபமாக

ஆதர்ஷ் மெலிதாக புன்னகைத்துவிட்டு “ஓஹ்… எனக்கு என் அண்ணா இறந்தவிஷயம் தெரியும்போதே என்னோட மொத்த சொந்தமும், உறவும் இல்லேன்னு என் அம்மா மூலமாவே தெரியவந்தது…நானும் அப்டியே நினச்சு வாழ பழகிட்டேன். ஜஸ்ட் அந்த குழந்தைங்களையும் பாதுகாப்பா பாத்துக்கற வேலைய தான் செஞ்சிட்டு இருந்தேன்.  மத்தபடி எனக்கு உணர்ச்சி அன்பு பாசம் எல்லாம் எதுவுமே இல்லை…” என்றதும் பைரவி தான் சொன்ன சொல் அவனை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அதை எண்ணி அவர் வருந்தாத நாளே இல்லை. அவர் ஆதர்ஷ் என அழைக்க எதுவும் கூறாமல் திரும்பியவன் “இப்போவும் இந்த வீட்டு குழந்தைங்களை பத்திரமா தான் விட்டுட்டு வந்திருக்கேன். என்னை நம்பலாம்.” என சாந்தி “என்ன தம்பி இப்டி சொல்ற? உன்னை நம்பாம அப்டி கேக்கல… எங்களை விட நீ நல்லா பாத்துப்பேன்னு எங்களுக்கு தெரியும். இருந்தாலும் எங்களுக்காகன்னு பாத்து  இங்க உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றதுனு தான் எங்க கவலை…” என

ஆதர்ஸ் “ரொம்ப தேங்க்ஸ்…. எனக்காக நீங்க யோசிச்சதுக்கு…. ஆனா இதுக்கான பதில் நான் அவங்க இருக்கும்போது சொன்னதே தான். என் அண்ணாவோட கடைசி ஆசை. அதோட அவனோட உழைப்பு அவனோட குழந்தைக்கு தான் போயி சேரணும். கண்டவனுக்கு எல்லாம் இல்லை. என் மேல நம்பிக்கை வெச்ச என் அண்ணாவுக்காக தான் இது எல்லாமே தவிர மத்த யாருக்காகவும் இல்லை.” என்றான்.

பைரவி “ஆதர்ஷ், நீ சொல்றது எல்லாம் சரி, ஆனா இருக்கற ஒருத்தனையும்…” என அவர் முடிப்பதற்குள்

ஆதர்ஷ் “நான் உங்க யார்கிட்டேயும் இங்க இருக்கவா இன்ச்சார்ஜ் எடுத்துக்கவான்னு கேக்கல… எல்லாருக்கும் என்னால தனி தனியா பதில் சொல்லிட்டு இருக்கமுடியாது. அன்னைக்கு நீங்க 2பேரும் கேட்டீங்க. நாங்க இருக்கோம்ங்கிறதையே மறந்திடுன்னு… …. உங்களுக்காக நான் அத செஞ்சுட்டேன்.. இப்போ உங்க முன்னாடி இருக்கறதை அந்த எமோஷனல் பீலிங்ஸ்க்கு பணிஞ்சு போற உங்க பையன் ஆதர்ஷ் இல்லை. நான் என்ன பண்ணனும்னு நான் முடிவு பண்ணிட்டேன். என் மேல கொஞ்சம்கூட நம்பிக்கையே இல்லாத நீங்க கேட்டதையே நான் செஞ்சுட்டேன்…. என்னை முழுசா நம்புன என் அண்ணனுக்காக தான் இனி நான் பண்ணப்போறது எல்லாமே. சோ என்கிட்ட யாராவது பேசி கண்ட்ரோல் பண்ணனும், என்னை மாத்தணும்னு நினைக்காதீங்க… அது யாருக்குமே நல்லதில்லை…” என கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

சாந்தி, பைரவி இருவரும் எதுவும் கூறம் வழியின்றி கண்ணீருடன் உள்ளே சென்றுவிட்டனர். அறைக்கு வந்த ஆதர்ஷ்க்கு தன் கோபம் வேதனை அனைத்தும் தாண்டி இதன் முடிவு இதற்கு காரணம் யாரென்று தெரிந்துகொள்ளும் வரை தனக்கு வேறு வழியில்லை என தீர்மானமாக இருந்தான்.

 

ஆதர்ஷ் வீட்டில் இருந்து கிளம்பிய செல்வம், சங்கரமூர்த்தி இருவரும் புலம்பிக்கொண்டே சென்றனர். “சார், என்ன இந்த ஆதர்ஷ் இவளோ வேகமா எல்லாமே செய்றான். இவன் என்னஎன்ன இன்னைக்கு செய்ய சொன்னான்னு எனக்கு புரிஞ்சுக்கவே திரும்ப ஒரு தடவை கேக்கணும் போல. அவனை பாத்தாலே பயமா இருக்கு. ரொம்ப கோபத்துல இருக்கான். நாளைக்கு நாம தான்னு விஷயம் தெரிஞ்சது செத்தோம்..”

செல்வம் “ம்ச்ச்… கொஞ்சம் சும்மா இருய்யா.. நானும் அதே நினைச்சுத்தான் பயந்துட்டு இருக்கேன். ஒருவேளை நம்ம மேல சந்தேகம் வந்திடுச்சோ? கொஞ்சம் வண்டியை ஓரம்கட்டு.” என்றவன் யாருக்கோ கால் செய்து நடந்த விஷயத்தை கூற எதிர்முனையில் “நான் தான் உங்ககிட்ட சொல்லி அனுப்பிச்சேன்ல, அவனை சீண்டுற மாதிரி எதுவும் பேசாதிங்கனு… உங்கள யாரு அவ்ளோ அக்கறை இருந்தா நீ இங்க இருந்திருக்கணும் பாத்திருக்கணும்னு எல்லாம் பேச சொன்னது?”

செல்வம் “அவன் சந்தேகமா கேக்கும்போது எங்க பயத்துல ஒளறிடுவேனோனு தான் கொஞ்சம் அவனை குறை சொன்னா அமைதியாகிடுவான்னு பேசுனேன். ஆனா அவன் அதை இப்டி புரிஞ்சுகிட்டு நமக்கே ஆப்பு வெச்சுடுவான் போலவே. அவனுக்கு சந்தேகம் வந்திடுச்சோன்னு பயமா இருக்கு. நாளைக்கு ஆபீஸ் வேற வரப்போறானாம்.”

மறுமுனையில் “நீங்க பயந்து திரும்ப காட்டிகொடுத்திடாதீங்க…. நீங்க சொல்றத வெச்சு பாத்தா அவன் அம்மா, அண்ணி எல்லாரும் சொல்லி வரதுக்கு சான்ஸ் இல்லை….அவன் இப்போ எல்லார்மேலையுமே  கோபத்துல இருக்கான். முக்கியமா யாரையுமே நம்பாம இருக்கான். அது நமக்கு சாதகமா இருக்கும்… அவனோட நம்பர் எல்லாம் ட்ரேஸ் பண்ண சொல்லுங்க. அவன் ஒன்னு அவனோட அண்ணா குடும்பம் ஆக்சிடென்ட் விஷயம் இதுல கான்செண்ட்ராட் பண்ணுவான், இல்லை பிஸ்னஸ்ல பண்ணுவான். ஒன்னுல இருந்திட்டு இன்னொன்னு பாக்கிறது கஷ்டம்…. ஏன்னா இரண்டுஇடத்துலையும் நடக்கறதை அவனுக்கு சொல்ற அளவுக்கு நம்பிக்கையான ஆள உடனே அவன் பாக்கிறது நடக்காத விஷயம்…, அதனால அவன் சொன்ன பிஏ வேலைக்கு வரவனை சரி கட்டி நம்ம வழிக்கு கொண்டுவரமுடியுமானு பாக்கலாம். இல்லை அவனை வெளியாள் வெச்சு ஏதாவது ப்ரோப்லேம் குடுத்து ஓரம்கட்டிடலாம்…..மீதி இருக்கறது அவனும், அவன் பிரண்ட் மட்டும் தான்… இரண்டு பேர் தானே.. சமாளிக்கலாம்… நாம பிஸ்னஸ்ல பண்ண குளறுபடி இப்போ ஏன் இவளோ லாஸ், இதுல என்ன பண்ணா சரி பண்ணமுடியும்னு எல்லாமே அவன் தெரிஞ்சுக்கறதுக்குள்ளையே டைம் முடிஞ்சிடும். அதுக்குள்ள அவனோட மூவ் வெச்சு என்ன பண்ணலாம்னு நான் சொல்றேன். ஆனா மறுபடியும் சொல்றேன்… அவன்கிட்ட ஜாக்கிரதை… வாய விட்ராதிங்க… அப்போ அப்போ என்ன நடக்கிதுன்னு எனக்கு சொல்லுங்க… ” என்று அவன் சில விஷயம் அடுத்து செய்யவேண்டியது கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 2நிலவு ஒரு பெண்ணாகி – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 2 இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு. அன்புடன், தமிழ் மதுரா

நிலவு ஒரு பெண்ணாகி – 11நிலவு ஒரு பெண்ணாகி – 11

வணக்கம் தோழமைகளே, போன பகுதியை ரசித்த அனைவருக்கும் நன்றி. எனது கேள்விக்கு தேவி பதில் சொல்லியிருந்தார். நன்றி தேவி. நான் படித்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாரதர் வாயுபகவானிடம் வளர்ந்து கொண்டே செல்லும்  மேருபர்வதத்தை அடக்கி வைக்க சொன்னாராம்.

நிலவு ஒரு பெண்ணாகி – 30நிலவு ஒரு பெண்ணாகி – 30

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்குக் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றி. இனி இன்றைய பதிவு. நிலவு ஒரு  பெண்ணாகி – 30 அன்புடன், தமிழ் மதுரா