Tamil Madhura சிறுகதைகள் மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

மைக்ரோ ஹாரர் கதைகள் – 1

கதை – 1 

அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று.

கதை 2

படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது நீண்ட கத்தி போன்ற ரத்தம் வழியும் நகத்தால் என் மார்பைத் துளைத்த அதே சமயம் என் சத்தம் வெளியே வராதவாறு மற்றொரு கையால் என் வாயை மூடியது. அந்தக் கடைசி வினாடிகளில் எனது அலாரம் மணியை 12:07 என்று காட்டியது. அப்பாடா என்ன ஒரு பயங்கரமான கனவு விழித்து வியர்வை வழிய எழுந்து மணியைப் பார்த்தேன் 12:06. படுக்கை அலமாரி கதவு மெதுவாகக் கிறிச்சிட்டது.

கதை 3 

நான் பூனைகளுடனும் நாய்களுடனும் இளம் வயதில் வளர்ந்ததால்  தூங்கும் போது நகத்தால் அவை கதவினைப் பிராண்டும் சத்தம் நன்கு பரிட்சியம். இப்போது நான் மட்டும் தனிமையில். அதே போல கதிவினை நகம் பிராண்டும் சத்தம் கேட்கிறதே…

கதை 4

ஷ்ஷ்… அப்பாடா நான் மட்டும்தான் இந்த வீட்டில் வசிக்கிறேன் என்று பெயர். ஆனால் நான் திறந்த கதவுகளை விட தினமும் மூடும் கதவுகள் அதிகம்.

கதை 5

“ராஜி…” கீழ்த்தளத்திலிருந்து தாய் அழைக்கும் சத்தம் கேட்டு அந்த சிறுபெண் மாடியிலிருந்து  இறங்கினாள். அவளை விருட்டென்று பின்னிருந்து பக்கத்து அறைக்குள் இழுத்தன தாயின் கரங்கள் “எனக்கும் அந்தக் குரல் கேட்டுச்சு… “

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)தூண்டில் – சிறுகதை தமிழ் மதுரா (Audio)

இருமருங்கும் வானைத் தொட்டு உயர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்களுக்கு மத்தியில், வளைத்து நெளிந்து சென்ற மலைப்பாதையில்… மெதுவாக ஊர்ந்தது அந்த இனோவா. மழையின் ஊடே உதகமண்டலத்தில் அந்த சரிவான பாதையில் வண்டியை ஓட்டுவது சிரமமாகவே இருந்தது காண்டீபனுக்கு. அதில் பயணித்த அனுஜா

பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை

“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு  பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே

வல்லிக்கண்ணன் கதைகள் – மூக்கபிள்ளை வீட்டு விருந்துவல்லிக்கண்ணன் கதைகள் – மூக்கபிள்ளை வீட்டு விருந்து

மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது. அது அப்படி விழிப்புற்று அரிப்புதருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும். சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்பு பெற்று, குடை குடை என்று குடைந்து, முன்