Tamil Madhura கவிதை,Uncategorized ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே!

நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே. 

அன்புடன் 
தமிழ் மதுரா.

நேசம் மறந்ததில்லை

நேசிக்க மறந்ததில்லை என் நெஞ்சம்
சூழ்நிலைகள் சூறாவளியாய்  எனைக் 
களம் மாற்றியதென்னவோ நிஜம் தான்
ஆனால் என் போர்க்களத்தில் – பந்தயக் 
குதிரையாய் ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலும் 
உன் நினைவு சுமந்தே ஓடுகின்றேன் 
உணர்வாயா நீ?

முடிந்ததெனவே எண்ணினேன் நம் உறவு – ஆனால் 
முடியாதெனவே அடம்பிடித்து அழும் சிறுமியாய் – என் இதயம்
இலையுதிர் காலத்தின் சருகுகளாய் – சட்டென
இறங்குகின்றன உன் நினைவுகளும் நாம் சந்தித்த நாட்களும் 
கோடையிலும் பனி தரித்த அல்ப்ஸ் மலைச் சிகரங்களாய்
குற்றால அருவியாய் சில்லென எட்டிக் குதித்து – எனைத் 
தகித்து தான் செல்கின்றன நம் காதலின் மிச்சங்களும் !

~ ப்ரியவதனா ~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 25ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 25

25 – மனதை மாற்றிவிட்டாய் அவரு லைப்ல என்ன மறக்கவே முடியாதமாதிரி ஒன்னு பண்ணப்போறேன்” என அவள் சொல்லி கண்ணடித்து சிரித்தாள். “சரி பசிக்கிது, வாங்க எல்லாரும் சாப்பிடலாம். நான் போயி எடுத்துவெக்கிறேன் என திவி செல்ல ஆதி மனதில் இப்போ

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

21 – மனதை மாற்றிவிட்டாய் திவியோ “என்னதான் இருந்தாலும் நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கக்கூடாது. ச்ச… சரியான லூசு திவி நீ…. உண்மையாவே அவரு பாவம் தான்… அத்தை சொல்லி வந்தாரோ இல்ல இவரா வந்தாரோ எனக்காக தானே வந்தாரு. அப்போகூட

சிநேகிதனேசிநேகிதனே

வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்