Tamil Madhura கவிதை,Uncategorized ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே!

நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே. 

அன்புடன் 
தமிழ் மதுரா.

நேசம் மறந்ததில்லை

நேசிக்க மறந்ததில்லை என் நெஞ்சம்
சூழ்நிலைகள் சூறாவளியாய்  எனைக் 
களம் மாற்றியதென்னவோ நிஜம் தான்
ஆனால் என் போர்க்களத்தில் – பந்தயக் 
குதிரையாய் ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலும் 
உன் நினைவு சுமந்தே ஓடுகின்றேன் 
உணர்வாயா நீ?

முடிந்ததெனவே எண்ணினேன் நம் உறவு – ஆனால் 
முடியாதெனவே அடம்பிடித்து அழும் சிறுமியாய் – என் இதயம்
இலையுதிர் காலத்தின் சருகுகளாய் – சட்டென
இறங்குகின்றன உன் நினைவுகளும் நாம் சந்தித்த நாட்களும் 
கோடையிலும் பனி தரித்த அல்ப்ஸ் மலைச் சிகரங்களாய்
குற்றால அருவியாய் சில்லென எட்டிக் குதித்து – எனைத் 
தகித்து தான் செல்கின்றன நம் காதலின் மிச்சங்களும் !

~ ப்ரியவதனா ~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது. “இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்…” “அம்மா…! என்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65

உனக்கென நான் 65 அனைவரும் ஓய்வு எடுத்தாலும் இந்த சூரியன் மட்டும் அதன் வேலைகளை செவ்வனே செய்துகாலையில் உதயமாகிகொண்டு காவேரியை காண வந்தது. அந்த சூரியனை ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தாள். அதைவிட அவளுக்கு இருக்கும் ஆச்சரியம் சூரியனைவிட வேகமாக ஓடும் தன் தந்தை

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 38மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 38

38 காலம் அப்படியே உறைந்து விடக் கூடாதா என்று சுஜி எண்ணினாள். எண்ணியது எல்லாம் நடந்து விடுமா என்ன? அவள் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கவே கிளம்ப ஆரம்பித்தாள். விடியும் முன்பே குளித்துவிட்டு, ஆகாய நீல நிறத்தில் புடவை அணிந்து கொண்டு,