Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் கவிதை – என்னை அறிவாயோ??!

அர்ச்சனாவின் கவிதை – என்னை அறிவாயோ??!

63917d416e7160f64db9193c7cbcf1f9
தூரத்து நிலவு கூட மனமிரங்கி
தரை சேர்ந்து என்னோடு துணை நடக்கும்
துப்பட்டா புது மலரே நீ மட்டும்
காத்திருக்கும் எனை கடந்து போவதென்ன?

தினம் நடக்கும் ஓராயிரம் ஒத்திகை
கண்ணாடியும் கை நீண்டு எனை அணைக்கும்
கருணை இல்லா பெண் பூவே நீ
கண்கொண்டு எனை பார்த்தால் என்ன?

வணக்கங்களோடு வாழ்த்துக்களும் கூறி
தினமும் குறுஞ்செய்தியில் உனை துரத்த
பன்னீர்ப்பூ விரல் கொண்டு நீயும்
ஒரு ‘மின்’நகை பகிர்ந்தால் என்ன?

நேற்று கடலோரம் காதல் நட்டவர்
இன்று மணமுடித்து தொட்டில் ஆட்டுகிறார்
ஆண்டுகள் ஆறு ஓடியும் நீ
என் பெயராவது அறிந்துகொண்டால் என்ன?

– அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்

ஏக்கங்கள் (கவிதை)ஏக்கங்கள் (கவிதை)

  ஏக்கங்கள் வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ? என்ற பூவின் ஏக்கம் தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும் வண்டின் ஏக்கம் மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ? என்ற நிலவின்