Tamil Madhura கவிதை அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

63917d416e7160f64db9193c7cbcf1f9
தஞ்சம் வரவா?!!
 
விழியைத் திருப்பி என்னைப் பாரடா
எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா
உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ?
என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ?

சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட
வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட
மலர்களைக் கையேந்தி என்மீது தூவடா
வளர்பிறை கொண்டு ஊஞ்சலும் செய்யடா

ஆலமரமாகிய காதலைத் தருகிறேன்
ஆணிவேராகி உயிரை சுரந்திடு
ஆலங்கட்டிகளைத் தூவிச் செல்லாதே
காதல் குமிழிகளை உடைத்துப் போகாதே

அரை நிறைவு சித்திரம் நான்தானோ?!
விரல் தூரிகை எனக்காகத் தாராயோ?!
பகல் நிலவு நான்தானே தெரியாதோ?!
உன் கனவுகளில் உலவிட நான் வரலாமோ??!!

நெஞ்சக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்திடு
வஞ்சி எந்தன் முகத்தை அங்கே தேடிடு
நெஞ்சம் கொண்ட காதலை உணர்ந்திடு
தஞ்சம் வர தவிப்பவளின் கைக்கோர்த்திடு!!

— அர்ச்சனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அவனவளின் ஆதங்கம்அவனவளின் ஆதங்கம்

அவனவளின் ஆதங்கம்   குடும்பமே குழந்தையின் வருகையை குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர் அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர் குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர் நாட்கள் நகர்ந்தது வசந்தம் வந்தது

ப்ரியவதனாவின் காதல் மனதுப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்,

ஏக்கங்கள் (கவிதை)ஏக்கங்கள் (கவிதை)

  ஏக்கங்கள் வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ? என்ற பூவின் ஏக்கம் தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும் வண்டின் ஏக்கம் மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ? என்ற நிலவின்