Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03

3 – மனதை மாற்றிவிட்டாய்

இங்கே ஆதியின் வீட்டிலோ இரவு உணவிற்கு அனைவரும் அமர ராஜலிங்கம், ” ஆமா எங்க திவிய இன்னைக்கு காலைல இருந்து காணோம்,நீங்க 2 பேரும் ஒரு நாள் முழுக்க பாக்காம இருந்தா உலகம் என்னாகுறது? ” என்று சந்திராவிடம் கேட்டார்.

அவரோ “அவள பத்தி பேசாதீங்க நான் அவமேல கோவமா இருக்கேன்.” எனவும்

“ஏன் மா உன் பையன் வந்ததும் அவளை மறந்திட்டயா?” என்க

“நேத்து காலைல பாத்தது ..இன்னைக்கு காலைல வருவான்னு பாத்தேன் வரல. ராஜா வந்திருக்கான்னு நானும் அவகிட்ட சொல்லலாம்னு பாத்து கால் பண்ணா அதுவும் எடுக்கல. சாய்ந்தரமா வந்தா ‘வராத போடின்னு’ சொல்லிட்டு அவளுக்காக நிலக்கடலை உருண்டை பிடிக்குமேன்னு எடுத்துட்டு வர உள்ள போய்ட்டு வந்து பாக்கறேன் ஆள காணோம் ..கிளம்பி போய்ட்டா அவளுக்கு என்கிட்ட இவளோ கோவம் காட்டமுடியுமா? பாத்துக்கறேன் அவளை..இனிமே மதி அத்த மதி அத்தனு வருவாள்ல அப்போ இருக்கு.” என்று சந்திரா கத்திக்கொண்டிருந்தாள்.

ஆதிக்கு அம்மா யாரை சொல்ராங்கன்னு புரியாம வினவ சந்திரசேகர் கூறினார் “திவி நம்ம பக்கத்து வீட்டு பொண்ணுபா, இங்க அவங்க பேமிலி வந்து 9 வருஷம் ஆச்சு. ரொம்ப நல்ல டைப் எல்லாரும். திவி ஸ்கூல் படிக்கும் போது இங்க வந்தா, உன் அம்மாவும் அவளும் ரொம்ப குளோஸ். பெஸ்ட் ப்ரண்ட்ஸ் னு சொல்லலாம் .. 2 பேரும் நல்லா சண்டை போட்டுப்பாங்க, ஆனா இவங்கள நம்பி உள்ள போகமுடியாது. உங்க அம்மாவ ஒன்னு சொல்லிட்டா போதும் அவளுக்காக சப்போர்ட் பன்ன வந்தாங்கனு மறந்திட்டு உங்க அம்மாவ திட்டுனவங்களுக்கு திட்டு விழும். எப்பவும் மதி அத்தை தான்.

நானே அப்டி அவகிட்ட 2 தடவ மாட்டிகிட்டேன்னா பாரு. உங்க அம்மா அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தா அவ கேக்கமாட்டேனு சொல்லிட்டுஇருந்தா அவள திட்டறாளேனு புள்ளைய அவ இஷ்டத்துக்கு விடுன்னு சப்போர்ட்க்கு நான் போனா “ஏன் மாமா அத்தைய திட்டறிங்க அவங்க என் நல்லதுக்கு தானே சொல்ராங்க. இந்தா மாறி இருந்தா நாளைக்கு என்ன பத்தி வேற யாராவது எதாவது சொல்லுவாங்கனு தானே எனக்கு அட்வைஸ் பண்ராங்க. நீங்க அவங்கள எப்படி தப்பு சொல்லலாம். அப்டினா நான் சொன்ன பேச்ச கேப்பேனு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, நான் தப்பு பண்ணி எல்லார்கிட்டயும் திட்டுவாங்கணும்னு நினைக்கிறிங்களா? “னு ஒரு புடி புடிச்சிட்டா. எனக்கே என்ன சொல்றதுன்னு தெரில. அவங்க அம்மா மகா “நீதானே டி அண்ணி சொல்றத கேக்கமாட்டேனு சொன்னா இப்போ சப்போர்ட்க்கு வந்த என் அண்ணாவை கொர சொல்றியா” என வினவ திவியோ “சொல்றத கேக்கமாட்டேனு தானே சொன்னேன் ..ஆனா அவங்க சொல்றத கேக்காம இதுவரைக்கும் இருந்துஇருக்கேனா? நமக்கு புடிச்சவங்ககிட்ட தானே வம்பிழுக்க முடியும். அத செய்றேன்னு பொய் சொல்லிட்டு செய்யாம இருந்ததா தப்பு. நான் சும்மா சொல்லுவேன். அதுக்காக நீங்க எல்லாரும் எனக்கும் அத்தைக்கு பஞ்சாயத்து பண்ண வந்துடுவிங்களா?” என்று திவியும் மதியும் சிரித்து கொண்டு கட்டிக்கொண்டனர்.

இவர்களை என்ன செய்வது என்று அனைவரும் சிரிப்புடனே இந்த அன்பை என்றும் இருக்க செய்யவேண்டுமென வேண்டிக்கொண்டனர். அதை சொல்லி விட்டு சிரித்து கொண்டிருந்தார். என்கிட்டேயும் பாசம் அவளுக்கு. உங்க அம்மாக்கு தெரியாம ஸ்வீட் சாப்ட்டா கரெக்டா கண்டுபுடிச்சிடுவா. ஆனா டேஸ்ட்டா எனக்கு புடிச்சமாறி ஆயில் கம்மியா செய்ய சொல்லி சண்டையும் போடுவா. எனக்காக பாத்து பாத்து செய்வா எல்லாமே. என்கிட்ட எவ்வளோ வம்பிழுத்தாலும் வெளியாளுங்க என்ன ஏதாவது சொன்னா அவளுக்கு வருமே கோவம். ஆனா அத காட்டிகாம அவங்களுக்கு சரியான பதிலடி குடுத்திடுவா. அவளோட யோசனையே வேற மாறி இருக்கும்.

நம்ம உறவுக்காரன் செல்வத்துக்கு மாசாமாசம் பணம் தருவேன் உங்க அம்மா அத பெருசா ஒத்துக்கமாட்டா ஆனா வேண்டாம்னு தடுக்கவுமில்லை எனக்கு அவளுக்கு இதில விருப்பமிலேன்னு புரிஞ்சாலும் உங்க அம்மாட்ட நான் கேட்டுக்கல.

ஒருதடவை என்கிட்ட திவி கேட்டா ” நீங்க பணம் இருக்கே குடுக்கலாமேன்னு நினைக்கிறீங்க ஆனா எனக்கு என்னவோ நீங்க அவங்க வளர்ச்சியை கெடுக்கறமாதிரி தான் தெரியுது. ஒருவேளை கடைசிவரைக்கும் இப்படியே எல்லாரும் உங்ககிட்ட கை ஏந்தனும்னு நினைக்கறீங்களோ?” என்றாள். அனைவரும் அவளை அடக்க முயல ‘தப்பா சொல்லல்ல மாமா நீங்களே அவங்களுக்கு பாத்து பாத்து செஞ்சா அவங்க வாழ்க்கையை யாரு வாழறது..நாளைக்கு அவங்க புள்ளைங்க வெளில என்ன சொல்லிப்பாங்க எங்க அப்பா எனக்காக இதெல்லாம் பண்ணாங்கன்னு சொல்லி பெருமைப்படுவாங்களா இல்ல எங்க அப்பா இப்படி சொந்தத்துல உதவி கேட்டு எங்களை வளத்தாருன்னு சொல்லி பெருமைப்படுவங்களா’ என்று வினவ இவரே வாயடைத்து போய்ட்டார். இந்த விதத்தில் நான் யோசிக்கவே இல்லையே என்று நினைத்து கொண்டிருக்க அவளோ “எதுமே அளவா இருந்தா தான் மதிப்பு. மாமா நீங்க கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்ச பணம், யாருக்கு குடுக்கணும் குடுக்கக்கூடாதுனு நீங்க தான் முடிவு பண்ணனும். நிறைய இருக்குன்னு தூக்கி குடுத்து அவங்கள சோம்பேறியாக்கணுமா? அதுக்கு வேலை போட்டு குடுத்தா உதவி பண்ணனும்னு நினைக்கற உங்க ஆசையோட அவங்களும் கவுரவமா இருக்கலாமே.தோணுச்சு சொல்லிட்டேன் மாமா ஓவர்ரா பேசிருந்தா மன்னிச்சிடுங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

சந்திரசேகரோ இந்தமுறை செல்வம் வரும்போது வேலையை பற்றி கூறினார். முதலில் அவன் ஏற்கும் நிலையில் இல்லை என்பதோடு அவன் சோம்பேறித்தனத்தை தான் வளத்திவிட்டதை எண்ணி வருந்தினார். இதோடு அவன் வெளியில் இவரை கஞ்சம், பணத்திமிர் என்று கூறியதை அறிந்து கவலையுற்றார்.

ஆனால் திவி அதை அறிந்ததும் முதலில் கோபம் கொண்டவள் அடுத்து செல்வத்தை பார்த்த போது என்கிட்ட பேசிய விஷயங்களை சொல்லியும் இருக்கிறாள். நீங்க சம்பாரிக்கலானே உங்க புள்ளைங்களே நாளைக்கு உங்கள மதிக்கமாட்டாங்கனு பயமுறுத்திருக்கா. பேசாம மாமா சொல்ற மாறி வேலையாவது வாங்கிக்கோங்க. மாமா சிபாரிசு பண்ண உங்களுக்கு ஒரு மரியாதையும் இருக்கும்னு சொல்லிருக்கா அவன் என்கிட்ட வந்து அப்பறோம் வேலையை பற்றி கேட்டான். இப்போ அவங்க குடும்பமே கையெடுத்து கும்பிடுது. மனசு நிறைஞ்சு இருந்தது அப்போ.

எனக்கு இதெலாம் தெரியும்போதும் அவளை கூப்பிட்டு கேட்டேன். அதுக்கு அவ “எல்லாம் அத்தைக்காக தான். அத்தைக்கு அவங்க சரிலேன்னு தோணிருக்கு பணம் குடுக்கவேணாம்னு சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு கவலை. அவங்க அம்மாட்ட சொலிட்டுஇருந்தாங்க அதுனால தான் மாமா அன்னைக்கு நான் அப்படி பேசுனேன். கொஞ்சம் அதிர்ச்சியானதால தானே நீங்க நான் சொல்லவரதையே கேட்டீங்க. இல்லாட்டி கண்டுக்கவேமாட்டீங்களே.” என்று கண்ணடித்து சிரித்தாள்.

சரிடா மா செல்வத்துக்கிட்ட போயி ஏன் பேசின என்றவரிடம் “அது அந்த அங்கிள் உங்கள பத்தி வெளில பணத்திமிரு அது இதுனு சொன்னாங்கள? அதுதான் அப்டி பயமுறுத்தற மாதிரி பேசி அதும் உங்க மூலமா வேலைக்கு போறதுதான் நல்லதுன்னு கொஞ்சம் சொல்லி உங்ககிட்டேயே வரவச்சேன். வேற யார்கிட்டேயோ வேலைக்கு போறது பெரிய விஷயமில்லை. ஆனா அப்படி போன வெளில இவரு பேசனதும் உண்மை ஆய்டும்.

கொஞ்ச நாள்ல அந்த அங்கிள்ளே வெளில “சந்திரசேகர் பணம் குடுக்கலேனாலும் நான் நல்லாத்தான் இறுக்குக்கேனு பில்டப் பண்ணுவாங்க”.

உங்களை பத்தி கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கமாட்டாங்க. உங்க மரியாதையும் வெளில முக்கியம்தானே மாமா. ஆனா இப்போ அவங்களுக்கு வேலை செஞ்சு சொந்த காசுல வாழற சந்தோஷமும் இருக்கும். உங்க மனசும் புரிஞ்சுஇருக்கும்ல. அதோட என் மாமவ தப்பா பேசிட்டு வெளில ஒருத்தர சும்மா போகவிட்ருவேனா, உங்கள எப்படி அவரு கொர சொல்லலாம். உங்ககிட்டேயே வரவெச்சு மன்னிப்பு கேக்கவெக்கணும்னு நினச்சேன். அதான் மாமா என்றாள். இப்போ அவரு உங்களுக்கு பிரீ மார்க்கெட்டிங் பண்ணிட்டு இருக்காரு போல. எங்க சந்திரசேகர் அண்ணா தான் நல்லவரு வல்லவரு தெய்வம்னு எல்லாம்,” என்று கமெண்ட் செய்தாள்.

அவள் செய்தது என்னவோ சின்ன விசயம் தான் ஆனால் பேசியே எத்தனை காரியங்கள் சாதித்து விட்டாள் என்று அவளை நினைத்து ஆச்சிரியமாகவும், எவ்வளவு தனக்காகவும், தன் மரியாதைக்காகவும், தன் மனைவிக்காகவும் யோசித்திருக்கிறாள் என்று மகிழ்வாகவும் இருந்தது. அப்போ இருந்து அவ எது சொன்னாலும் அதில் ஒரு விஷயம் இல்லாம சொல்ல மாட்டான்னு நம்பிக்கை அவருக்கு. அந்த நினைவில் தன்னை மறந்து உதட்டோரம் புன்னகையோடு இருக்க

அமுதாவும் “ஆமா சரியான வாலுண்ணா அவ. அவள கண்ட்ரோல் பண்றதே கஷ்டம். பேசிட்டே இருப்பா. ஆனா ரொம்ப ஸ்வீட், ரொம்ப பாசம். எனக்கு பெஸ்ட் பிரண்ட் . ஒரே காலேஜ் வேற. எனக்கு ஏதாவது ப்ரோப்ளேம்னா கண்டிப்பா அவதான் ஹெல்ப் பண்ண பஸ்ட்டா நிப்பா, என்கிட்ட யாராவது சேட்டை பண்ணாங்க அவகிட்ட அவ்ளோதான். அவங்களுக்கே தெரியாம பிரச்னை பண்ணிவிட்ருவா ” என்றாள் .

அனுவும் “ஆமா அண்ணா திவி செம ஜாலி அம்மு அக்கா பேசவேமாட்டா, ஆனா திவியும் நானும் சேந்தா பேசிட்டே இருப்போம். எனக்கு பிரண்ட்ஸோட வெளில போறது, ஸ்போர்ட்ஸ், டூர் இந்தமாறி நிறைய விஷயம் திவினால தான் கரெக்ட் பண்ணி வாங்கிப்பேன். பட் எல்லாத்தையும் பிராங்க்கா வீட்ல சொல்லணும் இல்லாட்டி சப்போர்ட் பண்ணமாட்டேனு சொல்லிடுவா. .பட் ரீசன் உண்மையா சொல்லிட்டா எப்படியும் அதுக்கு பெர்மிஸ்ஸின் வாங்கி குடுத்திடுவா.” என்றாள்

சந்திராவும் “இவ்வளவு ஏன் நம்ம நந்து பையன் வந்தாலே அவகிட்ட ஒட்டிப்பான். வரவே மாட்டான். திவி ஒரு நாள் கூட என்ன பாக்காம இருக்க மாட்டா, காலைல எந்திரிச்சதும் வந்திடுவா. வேலைன்னாலும் போன் பண்ணி சொல்லிடுவா. சனி ஞாயிறு இங்கேயேதான் இருப்பா. ஆனா இன்னைக்கு வரல. எங்க போனானும் என்கிட்ட சொல்லவே இல்ல அதான் கோபம் ” என்று மகிழ்வில் ஆரம்பித்து குற்றப்பத்திரிக்கையோடு முடித்தாள்.

தன் மொத்த குடும்பமும் கவர்ந்த அந்த திவியை பார்க்கவேண்டுமென ஆவல் எழ, ஏதோ நினைவில் கை கழுவ எழுந்து செல்லவும் மகா வீட்டினுள் வரவும் சரியாக இருந்தது. “என்ன அண்ணி அவ மேல கோபம் உங்களுக்கு” என்று பிரசாதத்தோடு உள்ளே நுழைந்தாள்.

சந்திராவும் ” வா மகா எல்லாம் உன் பொண்ணு மேல தான். காலைல வரவேயில்லை. சாய்ங்காலம் வந்தவளும் உடனே போய்ட்டா, இரு அவளுக்கு புடிச்ச உருண்டை செஞ்சு வெச்சுயிருக்கேன் கொண்டு போயி குடு. நான் குடுத்தேன்னு சொல்லாத” என்றாள்.

மகாவோ சிரித்துவிட்டு “சரி அண்ணி, அவளும் உங்ககிட்ட அம்மன் கோவில் பிரசாதத்தை குடுக்கச்சொல்லி குடுத்தா உங்ககிட்ட அவகுடுதான்னு சொல்லாம குடுக்க சொன்னா” என்று கண் சிமிட்டினாள். இதை கேட்டு அங்குள்ள அனைவரும் சிரித்தனர். 2 பேரையும் என்ன பண்றது என்று அமுதா மகாவிடம் வந்தவள் “இவங்களுக்குள்ள சண்டைன்னா நம்மள தான் டார்ச்சர் பண்ராங்க அத்த.” என்று விட்டு “என்ன விசேஷம் மேடம் கோவிலுக்கு போயிருக்கா இனிக்கு?” என்று வினவினாள்.

“இந்த வாரம் ஆதி தம்பி வராப்ல கோவிலுக்கு போகணும் பூஜை பண்ணனும்னு நீங்க சொல்லிட்டிருந்திங்களாம்” திடீர்ன்னு காலைல கோவிலுக்கு போய்ட்டு வந்து “மதி அத்தை கால் வலி கோவிலுக்கு போகமுடிலேன்ன்னாக அவங்க பையன் வரும்போது பிரசாதம் குடுக்கணும்னு சொன்னாங்க சோ நா கோவிலுக்கு போயி அவங்க பையன் பேருக்கு அர்ச்சனை பண்ணியாச்சுன்னு” சொன்னா, என்றதும் அனைவருக்கும் ஆச்சரியம்.

“எனக்கு கொஞ்சம் ஆஃபீஸ்ல் வேலை அதனால நீங்க பிரசாதத்தை குடுத்திடுங்கமா . நான் சாயந்தரம் வந்து பத்துக்கறேன்னு” சொல்லிட்டு போய்ட்டா. சாயந்தரம் பிரசாதம் குடுக்கறேன்னு எடுத்துட்டு இங்க வந்திட்டு ரூம்க்கு போயி தூங்கனவதா எந்திரிக்கவே இல்ல. இப்போதான் பாத்தேன் பிரசாதம் அங்கேயே இருக்கு, ஆதி எப்போ அண்ணி வரான் ” என்றாள்.

சந்திராவோ “அட, அவன் இன்னைக்கு தான்ம்மா வந்தான்”, என்று ஆதியை அழைத்து அறிமுகம் செய்துவைத்தார். சிறிது பொதுவான விஷயங்கள் கேட்டதுக்கு அவன் பதில் மட்டும் அளித்து கொண்டிருந்தான். பிறகு மகா சந்திரா கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டாள். சந்திராவோ மகனிடம் வந்து விபூதியை வைத்துவிட்டு ராஜலிங்கத்திடம் சென்றாள். “பாத்திங்களா என் மனச புரிஞ்சுக்கிட்டது அவதான் நான் சொன்னத ஞாபகம செஞ்சிருக்கா” என்று மெச்சிக்கொள்ளவும்,

“ஆனா அவள தான் நீ திட்டி அனுப்பிச்சிட்டேயே” என்றவுடன் முகம் வாட அவளுக்கு கால் செய்தாள் சந்திரமதி.

திவி ஆன் செய்ததும் அனு போனை வாங்கி ஸ்பீக்கர்ரில் போட்டு “திவி நீ அம்மாட்ட பேசாத அவங்க உன்ன சாய்ங்காலம் திட்டுனதால தானே நீ கோவிச்சிட்ட? அப்போ திட்டிட்டு இப்போ உன்ன கொஞ்ச கூப்பிட்றாங்க ” என்றவளிடம் திவி “ஏய் வாலு, மதி அத்தைய பத்தி என்கிட்டேயே கம்பளைண்ட் பண்றியா? மதி அத்தை எல்லாம் என்ன ஒன்னுமே சொல்லல” என்றாள் அப்பறோம் ஏன் வந்ததும் சாயந்தரம் போயிட்ட? என அமுதா கேக்க ” எனக்கு வேலை இருந்தது, அதுதான் வந்ததும் போயிட்டேன்”, என்றாள்.

சந்திரசேகரும் விடாம அப்பறம் ஏன் மா பிரசாதம் கூட குடுக்காம போன, அதுக்கு தானே வந்த,அதுவுமில்லாம சொல்லாமகூட போய்ட்டியமா அவ்வளோ கோபமா ?” என அவர் பங்குங்கு கேள்வி கேட்க “அடடா இதென்ன வம்பா போச்சு காலைல கொடுக்கலாம்னு பாத்தேன் டைம் ஆயிடிச்சு ஆபீஸ் போய்ட்டேன். சாயந்தரம் வந்திட்டு எடுத்திட்டு வந்தேன். நானும் அத்தையும் பேசிட்டு அவங்க ஏதோ எடுக்க உள்ள போனதும் பிரண்ட் சொன்ன வேலையும் அவ கால் பண்ணதும் ஞாபகம் வந்தது, சரி நம்ம அத்தைகிட்ட அப்புறம் சொல்லிக்கலாம்னு வந்துட்டேன். நீங்க எல்லாம் நினைக்கிற மாறி என்ன அத்தை திட்டவும் இல்ல எனக்கு அவங்க மேல கோபமும் இல்ல. எல்லாரும் என்ன பண்றீங்க. அத்த எங்க சாப்டங்களா? ” என்றாள்.

அனைவரும் சிரித்து விட்டு “அப்பா என்ன பண்ணாலும் இவ அம்மாவ விட்டுகுடுக்கமாட்டா, ஏய் திவி, அம்மாவும் கேட்டுட்டு தான் இருகாங்க நீயே கேட்டுக்கோ ” என்று அமுதா சொன்னாள்.

சந்திரா “நான் சாப்பிட்டேன் டி தங்கம், என் மேல கோபமா?” என வினவியவரிடம் “அட்ச்சோ, அத்தை உங்கமேல எல்லாம் எனக்கு கோபமே வராது. நீங்க எப்போ என்ன திட்டுனீங்க நான் கோபப்பட. அவங்க பில்டப் பண்றதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்றாள்”

சந்திராவும் “சரிடா மா என்கிட்ட உண்மையை சொல்லு அப்புறம் ஏன் நான் வரதுக்குள்ள போயிட்ட?” என்றவுடன் திவிக்கு , என்ன சொல்வதென்றே தெரியவில்லை, உங்க மகன் தான் அடிச்சு அனுப்பிச்சிட்டாருன்னா சொல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டு “அட டோன்ட் ஒர்ரி அத்த நாளைக்கு கண்டிப்பா மீட் பண்றேன். புள்ளைய இவ்வளோ நேரம் கேள்வி கேட்டிங்களே நான் சாப்பிட்டேனான்னு கேட்டுக்கிங்களா?” எனவும் சந்திரா “இன்னுமா நீ சாப்பிடல ஏன் இப்படி பண்ற, உடம்ப கெடுத்துக்கப்போற.. என்று பொரிய அவளோ “ஆமாமா, உங்க உருண்டைக்கு தான் வெயிட்டிங் வந்ததும் விரதத்த கலச்சிட்டேன்” என்று அங்கு அவள் சாப்பிடுவது கேட்க, சந்திரா “வாலு,சரி காலைல கண்டிப்பா எழுந்ததும் வந்திடு.” என்று போனை வைத்தாள்.

இந்த உரையாடலை கேட்டவனுக்கு ஒரு நிமிடம் அவளாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது . அடுத்த நொடியே “இல்லல.. கண்டிப்பா அவளா இருக்காது. சாயந்தரம் அம்மாவே அவள யாரு என்னன்னு கேட்டாங்க வெளில போக சொன்னாங்க. கோபமா தான் பேசுனாங்க, ஆனா அம்மாவும் திவியும் எவ்வளோ பாசமா இருகாங்க, சோ கண்டிப்பா அவ இல்ல” என்று முடிவெடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றான் .

[வெளியில்நின்று அவர்கள் பேசியதை மட்டுமே கேட்டானே தவிர அவர்களை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் இருவரும் சிரித்துக்கொண்டும் முகத்தை திருப்பிக்கொண்டும் சண்டை என்ற பெயரில் விளையாடிக்கொண்டிருந்ததை.]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பழனி என்னும் – சூலமங்கலம் சகோதரிகள் பாடல்பழனி என்னும் – சூலமங்கலம் சகோதரிகள் பாடல்

  https://youtu.be/1iN7km4Ar98   பழனி என்னும் ஊரிலே பழனி என்ற பேரிலே பவனி வந்தான் தேரிலே பலனும் தந்தான் நேரிலே – முருகன் பலனும் தந்தான் நேரிலே பழமுதிரும் சோலையிலே பால்காவடி ஆடி வர தணிகைமலைத் தென்றலிலே பன்னீர்க் காவடி ஆடிவர

Chitrangatha – 55Chitrangatha – 55

ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதியை நீங்க ரசிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ் தந்த நண்பர்களுக்கு நன்றி. இன்னமும் உங்களுக்குக்  கேள்விகள் இருக்கு. என் டீச்சர்ஸ் கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்டதுல்லைப்பா. உங்கள் வினாக்கள் எல்லாம் கதையில் உங்களுக்கு இருக்கும்

உள்ளம் குழையுதடி கிளியே – 7உள்ளம் குழையுதடி கிளியே – 7

கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான்.  அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பல நிறங்களில் பூக்கள், புல்வெளிகள் என்று வடிவமைக்கபட்டுப் பராமரிக்கப்படும் தோட்டம், நடுவே வீடு.