Tamil Madhura கதைகள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்

உனக்கென நான் சுபம்…..

“ஏய் ஜெனி கதை ஏதோ ஒகேதான் ஆனா யாருடி ஹீரோ ஹீரோயின்” அப்படின்னு நித்தியா வந்து நின்னா. அட நித்தியா கூட படிக்குற பிரண்டுங்க அவகேட்டதும் எனக்கும் ஒரு குழப்பம் ஆமா யாரு கதாயாகன் அப்புறம் கதநாயகி. என் வாயிலிருந்து “எல்லாரும் தான்டி” அப்புடின்னு சொலிலட்டு ஓடி வந்துட்டேன. இல்லைனா அவகிட்ட பேசி ஜெயிக்க முடியாது அவகிட்ட நான் இல்ல நாங்க மாட்டிகிட்ட பட்ட பாட இன்னொரு நாள் சொல்லுறேன்.

சரி உங்களுக்கு புதுசா பழக்கமான எல்லாத்துக்கும் ஒரு இன்விடேசன் போட்டுடேன். யாருக்கெல்லாம் போட்டேன் ம்ம் திங்கிங்கப்பா….

அன்பரசி(அரிசி) – சந்துரு

சுவேதா-சுகுமார்

மஞ்சுளா-பாலாஜி

ஜான்சி- கோபிகிருஷ்னன்

சேகர்-வளர்மதி

பார்வதி – சந்திரபோஸ்

காவேரி – சன்முகம்

செல்வதனசேகர் – கங்கா, அபிநயா, நந்தினி.

சந்திரசேகர்

சுந்தரலிங்கம் – சரஸ்வதி

மலர்விழி(மலை) – ராஜேஷ்

ஆசிக் – ஜெனிபர்(போட்டோகிராபர்), ஜெனிபர்(செவிலியர்)

சஞ்சிவ்(நம்ம ஆயுதபடை தலைவன்)

அப்பறம் அவரு ஆளு கல்பனா

மனோரமா(தலைமை ஆசிரியர்)

இந்திரா டீச்சர்

சங்கீதா மற்றும் சிந்துஜா, பூஜா (கல்லூரி தோழிகள்)

கேன்டின் பாட்டி (பெயர் அவங்க சொல்லலப்பா)

மணிகன்டன் டாக்டர்

பூசாரி தாத்தா

கோடாங்கி (ஊர் காவலர்)

மாந்தோப்பு கோனார்

மாரியம்மாள் பாட்டி

டேவிட் (அமெரிக்கா தோழன்)

மேரி (ஜெனி அக்கா)

சிதம்பரம் (கார் டிரைவர்)

முனியம்மாள் (சமையல்)

ஸ்வர்னா

அய்யாசாமி தாத்தா

வள்ளிபாட்டி.

அப்புடின்னு முடிஞ்சவரைக்கும் கூப்பிட்டுருக்கேன்பா நீங்களும் வந்துடுங்க அப்புறம் உங்கள கூப்புடலைனு சொல்லகூடாது. யாரெல்லாம் வர்ராங்கனு பாக்கலாம்.

………………………………………………

ஐய்யோ கொஞ்சம் அமைதியா இருங்கப்ப! முடியலப்பா என்னால; இருங்க அதைதான் சொல்லபோறேன். இந்த அனுவ அனு அனுவா கத்த வைக்குறாங்கப்பா.

ம்ம் என்ன உங்க அக்கா தங்கச்சியா ஏத்துகிட்ட என்னோட அக்கா தங்கச்சி அண்ணா தம்பிக்கு இந்த பாசமலரின் வணக்கம். இவங்கள இங்க நான் ஒன்னுசேக்குறதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துடுச்சு. இவங்க உங்க எல்லார்கிட்டயும்  ஏதோ பேசனுமாம்.

“சரிம்மா ஜெனிகுட்டி நாங்க பேசிக்குறோம் நீ கீழ வா” இது அபி அம்மா.

“ஏய் வாலு அத்தை சொல்றாங்கள கீழ வாடி வாயாடி”

“அரிசி உத்தரவுகுடுத்துட்டாங்க நான் கடைசிய பேசறேன் பிரன்ட்ஸ்”

நான் கீழே இறங்கி வர அன்பரசனும் குட்டிஜெனியையும் பிரியாகுட்டியும் என் மடியில் ஓடிவந்து என் மடியில் அமர்ந்துகொண்டனர். நான் அவர்களை கட்டிபிடித்து கொஞ்சினேன். என் இரு கன்னத்திலும் முத்தம் பரிசாக கிடைத்தது.

“ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங் செக் செக்”

எனக்கு சிரிப்பு வந்தது.

“சுகு அண்ணா நீங்க கம்ப்யூட்டர் கிங்தான் அதுக்காக மைக் என்ன பன்னுச்சு” என நான் கூற அருகிலிருந்த சுவேதா “ஏன்டா சுகு குட்டிபொண்ணுலாம் அட்வைஸ் பன்றமாதிரி வைக்குற” என எனக்கு பல்பு கொடுத்தனர். சுவேதா அக்காகிட்ட என் வாய் பலிக்காது நான் சற்றுநேரம் மௌன விரதம்.

சுகு: ஹாய் பிரன்ட்ஸ் எப்புடி இருக்கீங்க? என தன் மனைவி சுவேதாவை அனைத்துகொண்டே பேச ஆரம்பித்தார். இவங்க என் காதலி இப்ப மனைவி ஆமா உங்களுக்குதான் தெரியுமே. அது என் குட்டி பையன் அன்பு அன்பரசன். இந்த பேர் வைக்குற பொறுப்பு சுவேதா எடுத்துகிட்டா! அடக்குமுறைனு சொல்லி நான்தான் அடங்கி கிடக்குறேன் இப்ப. (அப்போது சுவேதா சுகுவ இடுப்புல கிள்ளுனத நான் பாக்கலைங்க) சும்மா இருடி உண்மையதான சொல்லிகிட்டு இருக்கேன்.

சுவேதா: நீங்க போங்க விட்டா என்ன திட்டுறதே வேலையா போச்சு நான் பேசறேன்.என கூற சுகு சரிம்மா பேசு என தன் மனைவியை பின்னாலிருந்து கட்டிகொண்டார்.

(சுகு அண்ணா இதெல்லாம் ஓவர்) இது நான்.

அன்புகுட்டி வாங்க! என சுவேதா அக்கா அழைக்க குடுகுடுவென ஓடிவிட்டான் பாவி எனக்கு குடுத்த அதே முத்தம் அவங்க அம்மாவுக்கும்.

அன்பரசிய எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க அதான் அவங்கள மாதிரா பாசமா கொஞ்சம் இல்ல இல்ல நிறைய சேட்டை பன்னுற பையன் வேனும்னுதான் இந்த பேர் வச்சோம். அதுக்கு ஏத்த சேட்டைதான். சரி என பையன ஆசிர்வாதம் பன்னுங்க. அப்புறம் மஞ்சு பாலாஜி குடும்பம் வரைலைனு கோவபடாதீங்க அவ கன்சிவா இருக்கா சோ ஸ்ட்ரைன் பன்னகூடாதுனு டாக்டர் சொல்லிடாரு. ம்ம் எங்க அம்மா அபி அடுத்து வந்து பேசுவாங்க. என சுவேதா குடும்பம் கொஞ்சல்களுடன் கீழே இறங்கியது.

(என்ன ஜெனி ஓகேவா இது சுகு அண்ணா! போங்க சுகு அண்ணா சுவேதா அக்காதான் பெஸ்ட்! எனக்கு ஒரு கொட்டு வைத்தார்! வலிக்குது அண்ணா! சிரித்துகொண்டே அமர மைக்கின் முன் அபி அம்மாவும் நந்தினி அம்மாவும் சேர்ந்து நினறிருந்தனர்.)

அபி: எனக்கு எல்லாமே என் பொண்ணு சுவேதா குட்டிதான். அவ பொறந்தப்போ நான் அவ்வளவு சந்தோஷபட்டேன் அப்புறம் அவ பெரிய மனுசி ஆனப்போ அப்புடியே ஒரு பொம்மைகுட்டிமாதிரி அழகா இருந்தா!(என கண்ணில் தண்ணீர் வந்தது. அக்கா அழாதிங்க என சமாதானபடுத்தினார் நந்தினி) அவ ஒன்னும் தெரியத பொண்ணு என் செல்லம். இப்போ அவளுக்கு ஒரு குழந்தை இருக்குன்னு நினைகும்போது சந்தோஷமா இருக்கு அப்புறம் இன்னொரு குழந்தைக்கும் தாயா ஆகபோறா இன்னும் ஏழு மாசத்துல (சுகு சுவேதாவை பார்த்து அப்புடியாடி! அவள் ஆமாங்க என வெட்கபட்டாள்.)  எனக்காக தன் வாழ்கைய தியாகம் பன்ன என தங்கச்சி பேசுவா

நந்தினி:  எனக்கு வாழ்கை தந்தது என அக்கா அபிதான். அவங்களுக்காக நான் உயிர குடுத்திருந்தாலும் தகும். நான் என் பொண்ணதான வளத்தேன் இதுல என்ன தியாகம் இருக்கு. சுவேதா என் பொண்ணு. என அவர் கண்ணும் கலங்க இருவரும் கீழே இறங்கினர்.

நான் அவர்கள் கண்ணீரை துடைத்துவிட்டு திரும்பினாள். அவரும் கங்கா அம்மாவும் நின்றிருந்தனர்.

செல்வதனசேகர்: கங்கா என்ன முதல்ல மன்னிச்சிடுடி அப்புறம் காவேரி உன்ன நான் ரொம்ப டார்சர்பன்னிட்டேன்மா அபி நந்தினி உங்க முகத்துல முழிக்ககூட எனக்கு அருகதை இல்லமா என்ன மன்னிசிடுங்க. எல்லாரும் என்ன மன்னிசிடுங்க. அப்பா பன்ன தப்பு பிள்ளைங்கள பாதிக்குமுனு சொல்லுவாங்க! அதான் இப்ப எனக்கு பயமா இருக்கு எந்த தண்டனாவேனாலும் எனக்கு தாங்க! என புள்ளைங்க சுவேதா சந்துரு ஜானசி சேகர் எல்லாம் நல்லா இருக்கனும். நான் திருந்திவாழனுமுனு நினைச்சப்போ அந்த ஆண்டவர் எனக்கு அந்த பாக்கியத்த தரல. என கண்ணீர் வடிக்க கங்கா அவரை தேற்றினார். கீழே இருந்த அபியும் நந்தினியும் தன்னவரின் கண்ணீரை தாங்க முடியாமல் மேலே ஏறி தேற்ற அப்போதுதான் சிரித்தார் லேசாக.

கங்கா: எனக்கு எல்லாமே என் தங்கச்சி காவேரிதாங்க என் முதல் பிள்ளை அவதான் நல்ல அறிவான பொண்ணு என்ன எதுக்கெடுத்தாலும் அழுவா கோழை மனசு அவளுக்கு. ஆனா சந்துரு என் மகன் அப்புடி இல்ல. அவனும் அன்பரசியும் நல்லா இருக்கனும்.

(அடுத்து யாருப்பா என நான் கேட்டிருக்ககூடாது ஆமா அடுத்து ஏறுனது ஜான்சி அப்புறம் சேகர் அண்ணா! நான் வாயில் விரல் வச்சுட்டு உட்காந்துட்டேன் நமக்கு எதுக்கு வம்பு)

ஜான்சி: என்ன ஜெனி அமைதியா உட்காந்துட்ட(நம்ம வாய கிணாடம விடமாட்டாங்க போல “இல்லக்கா சும்மாதான்” ) என்னமா நான் அந்த ஜெனிய கொண்ணதுக்குதான் இன்னும் மனசுகுள்ள புலுங்கிகிட்டு இருக்கேன் நீயாவது எனகிட்ட பேசுமா(எனக்கு கண்ணீர் வந்துவிட்டது)

ஜான்சி நீ எங்கவீட்டு மூத்த பொண்ணுமா நீதான் எல்லாரையும் வழிநடத்தனும் எதுக்கு அழற என சன்முகமும் போஸும் கூற ஜான்சி அக்கா அழுதது எனக்கே கண்ணு கலங்குது.(அவர்கள் பேசிகொண்டிருக்கும்போதே கோபிகிருஷ்ணன் மேலே ஏற சற்று நிதானத்துக்கு வந்தேன்)

கோபிகிருஷ்ணன்: “இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க நீ” சந்தோஷமான குடும்பம் கிடைச்சுருக்கு இன்னும் பழசையே நினைச்சுகிட்டு இருப்பியா. அப்புடின்னு கோபி சார் திட்டுனது எனக்கு பிடச்சிருந்த்து. “சரிப்பா எல்லாரும் இவள மன்னிச்சுடேன்னு சொல்லுங்க அப்பதான் இவளுக்கு மனசு நிம்மதியா இருக்கும்” (அனைவரும் சிரிக்க) என்ன ஜான்சி போதுமாமா”

(ஜான்சியோ சிரிக்க முயல) “சும்மா ஃபிரியா இருங்க ஜான்சி அக்கா” இது நானு. “சரிடி கடைசியா உன் டயலாக் சொல்லிடு” அதற்கு ஜான்சி அக்கா “ச்சி போங்க”

“ம்ம் மேடம்க்கு வெட்கமா! சரிப்பா என் ஒயிப்க்கு பதிலா நான் சொல்லுறேன் மன்னிச்சிகோங்க” என “டிக்டாக்”

“அது அப்புடி இல்லைங்க டிக்டாக்” என தனது கட்டைவிரலை ஆட்டிவிட்டு வெட்கத்தில் கீழே இறங்கி வந்தார் ஜான்சி பின்னாலயே வந்த கோபி மனைவிதான் உலகம் என நினைத்திருப்பார் போலும்

சேகர்: “என்ன அக்கா என்ன ஸ்டேஜ்ல தனியா விட்டுடுட்டு  போயிட்ட சரி நம்ம எப்பவும் சிங்கிள்தானா” என கூறும்போதே அனைவருக்கும் கூல்டிரிங்கஸ் குடுத்துகொண்டிருந்த வளர்மதி பக்கம் பார்வை செல்ல.

“சேகர் அண்ணா தங்கச்சி இன்னும் கம்ப்யூட்டர்ல பாஸ் பன்னல” என இழுத்தேன் நான்.

“அட ஏன் ஜெனி நீ வேற நானே இப்பதான் லவ்வு செட் ஆகிறுக்குனு இருக்கேன் வளர் இங்க வா!” என அவர் கூற “நான் மேடைக்கெல்லாம் வரல மாமா” என ஓடிவிட்டாள்.

“சரிப்பா என் இந்த இனிய குரலால உங்கள டார்ச்சர் பன்ன விரும்பல நல்லா என்ஜாய் பன்னுங்க பாய்” என கீழே இறங்கிவந்து என்னிடம் “என்ன ஜெனி எப்புடி என் பர்பார்மன்ஸ்” அப்புடின்னு கேட்டா நான் என்ன சொல்றது. “அண்ணா நீங்களும் வளர்மதியும் அங்க ஆத்தங்கரையிலேயே இருந்திருக்கலாம்” என சிரித்தேன் நக்கலாக.

“இதெல்லாம் ஓவர்மா” என வளர்மதி பக்கதில் போய் அமர்ந்துகொணாடார். (ஒரு சீக்ரட்பா ஆமா அவ இந்த வாட்டியும் பெயில்தான் அதனால ரிசல்டா ஹேக் பன்னி பாஸ் பன்னிடாங்க. அதனால அடுத்த மாசம் கல்யானம்ப்பா: முக்கிய குறிப்பு வளர்மதிக்கு தெரிய வேனாம். அப்புறம் சொந்தமாதான் பாஸ்பன்னுவேன் இல்லைன பஸ்ட் மார்க் எதுட்டுட்டு தான் கல்யானம் பன்னுவனேன்னு சொல்லிட்டா சேகர் அண்ணாவ நினைச்சு பாருங்க பாவம் இல்லையா சொல்லடாதீங்கப்பா)

“ஏய் யாருப்பா அது மேடைல…

ஜெனிபர்( கழுத்தில் அந்த கேமிராவுடன்): ஏய் அன்பு ராட்ச்சி எப்புடி இருக்க

“எனக்கு என்னடி குறை சந்துரு நல்லா பாத்துகிறாரு.”

“அப்ப அவன டீல்ல விட்டுடியாடி”

“ஏய் ஜெனி” என கண்களை சுருக்கிகொண்டு வாயில் விரல் வைத்துகாட்டினாள் அரிசி.

“என்னமோ பன்னுடி” என கூறிவிட்டு “ஆமா நீ யாரும்மா” என என்னை பார்த்து கேட்க எனக்கு சிறிது கோபம் “ஜெனி”

“அப்ப நான் யாரும்மா”

‘என்னடா இது சத்தியசோதனா’ இது என் மைன்ட் வாய்ஸ்.

“அக்கா நான் அனுபாரதி”

“ம்ம். ஆமா எல்லாரும் எதுக்கு இங்க வெட்டியா உட்காந்துருக்கீங்க போய் வேலைய பாருங்க. அப்புறம் எல்லாரும் இருக்கீங்கள்ள ஸ்மைல் ப்ளீஸ்” என தனதுகேமிராவில் படம் பிடித்துகொண்டாள்.

ஆசிக்ஜெனிபர்: “ம்ம் எல்லாம் எப்புடி இருக்கீங்க!” என கூறிவிட்ட ஆசிக் “தயவுசெஞ்சு நல்லா இருக்கேன்னு சொல்லிடுங்கப்பா அப்புறம் இவ ஊசி போட்டு விட்டுடுவா” என ஆசிக் கூறும் போது ஜெனி அவன் கையை கிள்ள. “ஏய் வலிக்குதுடி லூசு”

“ம்ம் வலிக்கட்டும்”

“சரி இவ இப்புடிதான் செல்லமா எதாவது பன்னிகிட்டு இருப்பா ஆனா ஜெனி மறவாழ்வு மையத்துக்கு இன்சார்சா இருடின்னு சொன்னா அவங்க பெரியவங்க ஜெனி அக்கா அளவுக்கு என்னால முடிவு எடுக்க முடியாதுன்னு சொல்லுறா”

“ஆமாங்க அவங்க கிரேட்ங்க”

“ம்ம் போதும் போதும்”

“நான் சொல்லுவேன் அவங்கள பத்தி உங்களுக்கு என்ன”

“சரி நீ சொல்லுறதுக்குள்ள விடஞ்சிடும் நான் வந்த விசயத்த சொல்லிடுறேன். எனக்கு வரதட்சனை வாங்குறது பிடிக்காதுங்க ஆனா இவ வீட்டுல விட்டாங்களா விடலையே இவ அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க கூட எனக்கு ஹாப்பிதான். அதனாலதான அவங்க அப்பாவ குடில இருந்த மீட்க முடஞ்சது. அப்புறம் என்ன நிறையபேர் கேட்டீங்க அவங்களுக்கு நன்றி அப்புறம் சாரிப்பா! எங்க கல்யானம் ஒரு போர்மாதிரி நடந்துச்சுப்பா முடிஞ்சா ஜெனிய எழுத சொல்லுறேன். என்ன ஜெனி எழுதுறியா” என என்னை பார்க்க “அய்யோ ஆசிக் அண்ணா ஏன் என்ன கோர்த்து விடுறீங்க” என்றேன்.

“சரிப்பா இருக்கட்டும் நானே எழுதி தாரேன்! அப்புறம் அது ஒரு திருட்டு கல்யானம் அதனால உங்கள கூப்பிட முடியல மன்னிச்சிகோங்க! அப்பறம் திபாவளி பொங்கலுக்கு ஒரு நூறோ ஐநூறோ உங்களாள முடஞ்சத பக்கதுல இருக்குற ஆசிரமத்துக்கு அனுப்பிவச்சா அவங்க உங்களோட சொந்தகாரங்களா ஆகிடுவாங்க! சொல்லனும்னு தோனுச்சு சொல்லிடேன்”

(அண்ணா சூப்பர்னா ஐயோ எனக்கு விசில் அடிக்க வராதே-இது நானு)

மாரியம்மாள்: இது என்னது

(பாட்டி அது மைக் பாட்டி)

“இதுல கரண்ட் அடிக்குமா”

( இல்ல பாட்டி பேசுங்க)

“போம்மா எனக்கு பயமா இருக்கு நான் வரலப்பா” என ஓடிவிட்டார்.

(என்ன அப்பா பிரன்ட பிரிய மாட்டீங்க போல எல்லாரும் ஒன்னா மேடை ஏறிட்டீங்க)

பார்வதிபோஸ்: சன்முகம்காவேரி:

“நீ பேசுடா” இது சன்முகம்

“நீ பேசுடா” இது போஸ்.

(நீங்க இப்புடியே பேசிகிட்டு இருங்க அப்பா நாங்க வெளிய வெயிட் பன்றோம்)

“நீங்க தள்ளுங்க ஜெனி கோவபடுறா நான் போசுறேன்” என பார்வதி முன்னால் வந்தார்.

(அப்புடி வாங்க அம்மா அவங்க சரியில்ல)

“எப்புடி இருக்கீங்க எல்லாரும்; அப்புறம் ஜெனி நீ சரியா சாப்புடுறது இல்லையாம் உங்க பாட்டி கம்ப்ளைன்ட் பன்னுச்சு”

(‘ஐயோ என்ன ஏன் கிண்டுறீங்க மைன்ட் வாய்ஸ்’ ஆனால் சிரித்துகொண்டா “இல்ல அம்மா அப்புடி இல்ல நல்லாதான் சாப்புடுறேன்”)

“ம்ம் நம்பிட்டேன் பிச்சுபுடுவேன் பாத்துக்க! அன்பு அக்கா உன்கூட தான் இருப்பா எதாவதுனா அடிக்க சொல்லிருக்கேன உன்ன அப்புறம் சேட்டைலாம் பன்னகூடாது”

(சரிம்மா இதுக்கு)

“ம்ம் அன்னி பேசுங்க” என மைக்கை காவேரிக்கு குடுக்க “நான் என்ன சொல்றது!! ம்ம் எனக்கு கிடைச்சமாதிரி எல்லாருக்கும் நல்ல குடும்பம் அமையனும். அதனால யாரும் ஒருத்தர்கூட ஒருத்தர் சண்டபோடாம இருங்க மாசத்துக்கு ஒருவாட்டியாவது உங்க சொந்தகாரங்கள பாத்துட்டு வாங்க! மனசுவிட்ட பேசுங்க! என்ன சண்டை இருந்தாலும் எப்புடி இருக்கீங்க அப்புடின்னு ஒரு வார்த்தை அவங்கள அன்பால கட்டி போட்டுரும். அப்புறம் அன்பரிசி உன்ன தொட்டு பாக்ககூட அத்தைக்கு குடுத்தவைக்கல வா செல்ல்ம் ஒருவாட்டி தொட்டு பாத்துகிறேன்” என அழைக்க அரிசி தன் அத்தையை கட்டிபிடித்தாள்.

காவேரி அரிசியின் கன்னத்தை பிடித்துகொண்டு “அழகுதேவதைம்மா நீ! என்பையன நால்லா பாத்துகோ! டேய் சந்துரு அன்பு என்வாரிசுடா அவள கண்கலங்காம் பாத்துகனும்”

“சரிம்மா” என சந்துருகூற சிறிது கண்ணீல் வெள்ளம் பாய்ந்தது காவேரிக்கு.

“ம்ம்” என போஸ் உறும சரிசெய்து கொண்டனர்.

போஸ் முன்னாள் வந்தார். “குட்டிங்களா அப்பா சொல்றத கேளுங்க பிரன்ட்ஸ்ஸ  நல்லா பாத்துகோங்க! நம்மலுக்கு இந்த பூமில ரத்தபந்தம் இல்லாம கிடைக்குற நல்ல சொந்தங்க அவங்கதான். எனக்கு சன்முகம்னா அவ்வளவுபிடக்கும் என்ன ஜெனி சொல்லிடவா”

(அப்பா வேனாம் உங்க பிரன்ட்ஷிப் வச்சு ஒரு கதை இருக்கு)

“சரிம்மா டேய் நீ எதாவது பேசுடா” என சன்முகத்திடம் கூற “இல்லடா நீ பேசிட்டேல அதுபோதும்” என சிரித்தார் சன்முகம்.

“சரிங்க நாங்க வாரோம்” என அனைவரும் இறங்க பொடுசுகள் வந்து தாத்தாகளிடம் ஒட்டிகொண்டன. என் கண்ணுமுன்னாடி (அதுங்களுக்க நான் சாக்லட் வாங்கிதந்து காசு காலி ஆகிடுச்சு ஆனா ஒட்டுறது அங்க எனக்கு அழுகை வருதுப்பா)

“ஏய் மலை வாடி” என அன்பு குரல் கொடுக்க மலர்விழியும் ராஜேஷும் மேடை  ஏறினர்.

மலருவிழிராஜேஷ்: மலர்விழி மேடே ஏறியதும் அந்த செம்பருத்தி பூவை பிய்த்து வாயில் போட்டாள் அரிசி. “இதுக்குதான்டி கூப்பிடேனு எனுக்கு தெரியும்டி”

“சும்மா பேசுப்பா” என அரிசி சிரிக்க ராஜேஷ் பார்த்தான் அவளை அன்பு சிறிது நடுங்கிதான் போனாள். அதை புரிந்த சந்துரு மேடைக்குவந்த தன்னவளை அனைத்துகொள்ள அவள் தன்னவன் காதில் ஏதோ ரகசியம் ஓதினாள்.

மலர்: இந்த அரிசிகிட்ட செம்பருத்திபூ வச்சிட்டு யாரும் வராதீங்கப்பா பிச்சு தின்னுபுடுறா. அப்புறம் நான் அவகிட்ட வாங்காத அடி இல்லப்பா. ஆனா எனக்குனா எதுனாலும் பன்னுவா லூசு. ஆனா என்க்கு அவள அடிக்கனும்னு தோனும் சில நேரம் ஆனா என்ன பன்றது எனக்குனு இருக்குற ஜீவன் அவதான. நாங்க ஒரே வயித்துல பிறக்கல ஆனா எனக்கு அக்கா மாதிரி அவ! எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்பா கன்டிப்பா உங்களுக்கும் பிடிச்சிருக்கும் அவள அப்புடின்னு நினைக்குறேன்.

“நான் ஒருமடச்சி இது யாருன்னு உங்களுக்கு தெரியாதுல்ல இதுதான் என் மாமா ராஜேஷ். உங்களுக்கு தெரியாதுல பாத்துகோங்க” என காட்ட எனக்கு சிரிப்பு வந்தது ஆனாலும் அடக்கிகொண்டேன்.

“சரிப்பா இவரு கடைக்கை லேட் ஆச்சு நாங்க கிளம்புறோம்” என கிளம்பினர்.

(ம்ம் அரிசி பேசுங்க) என குரல் கொடுத்தேன்.

அரிசி சந்துரு: “இவரு அலும்பு தாங்கலைங்க எதுக்கெடுத்தாலும் அரிசி அரிசி அரிசிதான் ஒருவேலையகூட ஒழுங்கா செய்யமாட்டேங்குறாரு ஓலபட்டாசு” என கடைசிவார்த்தையை ரகசியமாக திட்டினாள்.

“அதான் எனக்கும் சேத்துதான் நீ பாத்துகிறியே அப்புறம் என்னடி என் செல்ல பொன்டாட்டி அரிசி” என தன்னவளை கையால் ஏந்திகொள்ள “இறக்கிவிடுங்க எல்லாரும் பாக்குறாங்க”

(சந்துரு அண்ணா இது ஓவர் பாத்துகோங்க) என்றேன் நான் சிங்கிள்னா இந்த சீன் பாத்து கொஞ்சம் கான்டு ஆகுதா இல்லையா.

“என் பொன்டாட்டி நான் தூக்குறேன் உனக்கு என்ன அரிசி”

“அதுக்கு ஏங்க நம்ம குழந்தையும் சேத்து தூக்குறீங்க”

“என்னமா சொல்ற”

“ஆமாங்க” என வெட்கபட “சரி ஜெனி நான் அரிசிக்கு ட்ரீட் வைக்கனும் அப்புறம் என்ன பேர்வைக்கலாம்னு கேட்டு சொல்லு நாங்க கிளம்புறோம்” என அரிசியை தூக்கிகொண்டே நடந்து வெளியேற நான் மேடை ஏறினேன்.

(ம்ம் என்னப்பா எல்லாரும் போயிடீங்க கொஞ்சம் உட்காருங்கப்பா)

முடியாதுமா எங்களுக்கு காதல் வேலைகள் இருக்கு நீ தனியா பேசிகிட்டு இரு என சேகர் அண்ணாவின் நக்கல்.

இப்போது என் எதிரில் சுவர் மட்டும்தான் இருக்கிறம் அப்புறம் கொஞ்சம் காலி சேர்கள் “சரி பேசுவோம்” அப்புடின்னு பைத்தியம்மாதிரி தனியா பேச ஆரம்பிச்சேன்பா என் நேரம் நீங்களாவது கேளுங்க.

ஹாய் சொந்தங்களா நான் உங்க தங்கச்சி ஜெனி அப்புறம்! எனக்கு கதை எழுதி பழக்கம் இல்ல. சும்மா கவிதைனு கிறுக்கிட்டு இருப்பேன். இங்க வந்து சும்மா ட்ரை பன்னேன். அப்புறம் தொடர் கதை எழுதலாமானு கேட்டுட்டுதான்பா ஆரம்பிச்சேன் என்மேல தப்பு இல்ல. ஆனா இத கதையா மதிச்சு என்ன உங்க வீட்டுல ஒருத்தியா ஏத்துகிட்ட உங்களுக்கு நன்றிங்க. அப்புறம் அரிசியையும் சந்துருவையும் சேத்துவைக்க சொல்லி என்கிட்ட சண்டைபோட்ட உங்க அன்ப நான் ஏத்துகிறேன். அடுத்த கதைல டுவிஸ்ட் வைக்கவா இல்ல வேனாமானு சொல்லுங்க பிரன்ட்ஸ். ஓகே பாய் என்றும் உங்கள் அன்பு தோழி ஜெனிபர்@அனுபாரதி.

கொஞ்சம் இருங்கப்பா யாரோ வர்ரமாதிரி இருக்கு.

“என்னக்கா பாப்பா குயூட்டா இருக்கு நீங்களும் அழகா இருக்கீங்க”

“மனசினுள்ள பிரேம்ம் உண்டு…” என அவள் கூறும் போது “அக்கா எனக்கு மலையாளம் தெரியாது” என நிறுத்த காதில் ரகசியமாக கூறினார்.

“பிரன்ட்ஸ் அவங்க பேரு ராதாவாம் உங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்”

“எப்பக்கா சொல்றீங்க”

“….”

“ம்ம் சரிக்கா நான் சொல்லிடவா”

“ம்ம்” என தலையாட்டினார்.

நான் மைக்கின் அருகில் வரும்போது உள்ளோ ஒரு இளைஞன் நுழைந்தான் முறைத்துகொண்டே. ராதா மௌனமாக அவன் பின்னாள் நடந்தாள். அவள் கையிலிருந்த குட்டிபெண் என்னை பார்த்து அழகாக சிரித்தாள்.

“என்ன ஒரு சிரிப்பு ஆஹா.. சரி கவனிங்க.. ராதை மனதில் அப்புடின்னு ஒருவாரத்துல ராதா  உங்கள பாக்க ஆன்தி வே!!!!!….

உனக்கென நான் சுபம்…..

2 thoughts on “ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்”

  1. Hi mam, janshi has to be punished for Jeni murder and Sekar has to be punished for Ezhilarasi murder. After they completing their punishment they can be joined in Chandru’s family.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07

அரசன் : (புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழியோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?   திவான் : நான் போனதில்லை.   அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன்

பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்புபொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு

வணக்கம் தோழமைகளே, பொன்னியின் செல்வன் இத்தனை பாகமா என்று மலைத்து படிப்பதைத் தள்ளிப் போட்டிருப்பவர்களுக்கும், ஒரு ரிவிஷன் பண்ணனும் என்று ஆசைப் படுபவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். இத்தகைய அருமையானதொரு நூலைத் தந்த  தேமொழி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47

47 – மனதை மாற்றிவிட்டாய் தனக்குள் சிறிது நேரம் பல மன போராட்டங்களில் இருக்க அவளிடம் வந்து நின்றனர் அபி, அம்மு, தர்ஷி, ரஞ்சி அனைவரும். அபி நேராக திவியை பார்த்து “என்ன திவி, உன் லவர் தயா வ நினைச்சிட்டு