Tamil Madhura கதைகள்,தொடர்கள்,Uncategorized ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65

உனக்கென நான் 65

அனைவரும் ஓய்வு எடுத்தாலும் இந்த சூரியன் மட்டும் அதன் வேலைகளை செவ்வனே செய்துகாலையில் உதயமாகிகொண்டு காவேரியை காண வந்தது. அந்த சூரியனை ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தாள். அதைவிட அவளுக்கு இருக்கும் ஆச்சரியம் சூரியனைவிட வேகமாக ஓடும் தன் தந்தை சுந்தரம்தான். காவேரிக்கு மனதில் இருந்த அந்த எண்ணம் எல்லாம் காதல்தான் வேறுஎன்ன தன் தந்தையிடம் எப்படிகூறுவது என தயங்கிகொண்டிருந்தாள்.

“என்னடி லீவு விட்டா எழுந்திரிக்குறது பத்து மணி அதுலையும் வானத்த பாத்துகிட்டு என்ன யோசிச்சிட்டு இருக்க”

“அக்கா எப்ப வந்த” என ஆர்வமாக எழுந்துகட்டிகொண்டாள் தன் உடன் பிறப்பான கங்காவை.

“ஆமாடி நீ நாளைக்குதான் எந்திரிப்பேன்னு பாத்தேன் பரவாயில்ல எந்திரிச்சுட்ட இந்த டீ சாப்புடு”

“நான் என்ன உன்ன மாதிரியா பிரஸ்பன்னிட்டுதான் சாப்புடுவேன்” என கண்ண்டித்தாள் காவேரி.

“அடி கழுத ஒன்னு வச்சா தெரியும். உனக்கு முதல்ல பிரஸ் பிடிச்சு பல்லு விளக்கிவிட்டுது இந்த அக்காதான் தெரிஞ்சுகோ”

“ஆமா ஆமா சீமைல சொன்னாங்க” என அந்த கோபால் பல்பொடியை தட்டினாள் தனது குதிரைமுடி பிரஸ்ஸில் மகளுக்கு வாயில் கீறிவிடும் என வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்தார் காவேரியின் தந்தை லிங்கம்.

“கேட்டுபாருடி சொல்லுவாங்க” என கங்கா வேலைகளை தொடர்ந்தார். சிறிது நேரத்தில் காவேரி உள்ளே வரவே “டீய குடுக்கா குடிப்போம்” என நின்றாள்.

“வாய திற”

“எதுக்குனு சொல்லுறீங்கள”

“திறடி” என்றதும் தன் அக்காவின் வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லை திறந்தாள் காவேரி. “இந்த சர்கரை” என வாயில் போட “எதுக்கு அக்கா”

“ம்ம் நம்ம வீட்டுக்கு இன்னோரு குட்டிவாரிசு”என கங்கா கூற “ம்ம் கலக்கு மூனாவதா!! ஏன் மாமவுக்கு ஜான்சியும் சேகரும் போதாதா” என்று கிண்டல் செய்தாள்.

“ஏய் எனக்கு தெம்பிருக்கு நான் பெத்துபோடுறேன் உனக்கு என்ன”

“ஆமா அக்கா அதுவும் சரிதான் ஆனா ஒரு கன்டிஸன் அந்த ரெண்டும்தான் அப்பாவீட்டு வாரிசு மாதிரி ஸ்வர்னா அத்த வீட்டுலயே தங்கிடுச்சுங்க இதாவது நம்ம வீட்டுல கிடக்குற மாதிரி பெத்துபோடுமா மகராசி” என தன் அக்கா இல்லை தாயை கிண்டல் செய்துகொண்டிருந்தாள்.

“ம்ம் என்கிட்ட ஏன்டி கேக்குற பிறந்ததும் தூக்கிட்டு வந்துடு”

“சொல்லிடேல பன்னிடலாம்” என காவேரி அந்த சீன கண்ணாடியால் செய்யபட்டிருந்த டம்ளரின் தன் தேன் இதழ்களை அமிழ்த்தி எடுக்க உதட்டில் ஒட்டிய சிறு துளிகள் மின்ன வைரமாக ஜொலித்தன.

காவேரி வீட்டின் செல்ல குழந்தை கடைகுட்டி என்றால் அப்படிதான் அதுபோல தவமிருந்த பிறந்தவள். இவளது துயரம் தன் தாயை பார்க்க ஆசையாக வந்தால் அவளுக்கு பதில் அங்கு இருந்தது அக்கா கங்காதான். ஆம் தாய் சரஸ்வதி காவேரி பிறக்கும்போது காலமாகிவிட்டார். அந்த கவலை தன் சகோதரிக்கு சிறிதும் வரகூடாது என்பது கங்காவின் ஆசை. புன்னிய நதிகளாய் தன் மகள் இருவருக்கும் கங்கா காவேரி என பெயரிட்டிருந்தார்.

தன் தங்கைக்காவே வாழவேண்டும் என நினைத்திருந்தாள் கங்கா. ஆனால்  கடவுள் கணக்கு என்பது வினோதம். அந்த நாள் அறங்கேறியது. இருபத்திரண்டு வயது அழகுடன் அந்த கோவிலை சுற்றிவந்தாள் கங்கா. பார்ப்பவர் கண்களை எடுத்தாள் நினைவுகளில் ஒட்டிகொள்ளும் பேரழகி.

அவள் பின்னால் அழகிய பதினைந்துவயது சுட்டிபெணாக காவேரி வர அங்கு படிகட்டில் அமர்ந்திருந்தனர் ஓர் பையனும் அவரது தாயும். “அம்மா இங்க வந்து என் டைம் வேஸ்ட் பன்றியா” என திட்டிகொண்டிருக்க

“இங்க பாருடா நீ கல்யானத்துக்கு ஒத்துகோ அப்பதான் நான் வருவேன்” என அடம்பிடித்தாள்.

“அட போமா நான் கட்டிகிற அளவுக்கு அழகி இங்க பிறக்கல நீ வந்தா வா இல்லைனா நடந்துவா” நா கிளம்புறேன் “ என கார் சாவியை சுழற்றிகொண்டு படியிலிருந்து கீழே இறங்க அவள்மீது மோதி இருவரும் சரிந்தனர். அருகிலிருந்த காவேரி “ஐயோடாடா” என ராகம்பாடினாள்.

“உடனே எழுந்துகொண்டவன் ஏம்மா பாத்துபோகமாட்டியா” என திட்ட காவேரிக்கு கோபம் அனைகட்டை உடைத்தது. “ஏய் நீதான்டா எங்க அக்கா மேல இடிச்ச ஒரு சாரி கேக்காம என்னடா தெனாவட்டா பேசுற” என பாய்ந்தாள். ஆனால் “சும்மா இரு காவேரி கோவில்ல என்ன சத்தம் போட்டுகிட்டு” என அவளை அமைதியாக்கினாள்.

அவர்கள் சென்றதும் சிலையாக நின்றான் எல்லாம் அவள் அழகில் மயங்கிதான். “என்னடா செல்வம் பேசிடலாமா”

“ம்ம் பேசிருமா”

“அட பாவி இது உங்க மாமா சந்திரசேகர் இருக்கரே அவரோட பார்ட்னர் பொண்ணுடா”

“என்னமா சொல்லுற நான் பாத்தது இல்லையே”

“சரியா போச்சு வா” என இருவரும் கிளம்பி நேராக சந்திரசேகர் வீட்டை அடைந்தனர்.

அங்கே “வாம்மா ஸ்வர்னா என்ன திடிர்னு”

“இல்லனா கோவிலுக்கு போயிட்டு வந்தேன் அப்புடியே உங்கள பாத்துட்டு போகலாம்னு” என இழுத்தாள். அவள் இப்படி இழுத்தாள் பெரிய தொகை கேட்பாள் என்று அர்த்தம். இப்படி பல லட்சங்கள் செல்வம் தொழில் ஆரம்பிக்கிறான் என வாங்கி சென்றுள்ளார். ஆனால் அந்த தொழிலைதான் காணவில்லை.

“உள்ள கணக்குபிள்ளை இருக்காருமா வாங்கிட்டு போங்க நான் கொஞ்சம் முக்கியமான வேலையா போறேன்” என முன்னால் செல்ல ஸ்வர்னா குறுக்கே வந்து நின்றாள்.

“என்னமா”

“இல்லனா உங்க பார்ட்னர் சுந்தரலிங்கம் இருக்காருல அதான் SS-COMPANY ஓனர்”

“ஆமா அவன் இன்னைக்கு என்கிட்ட காவேரி மில்ஸ்னு புதுசா ஒன்னு ஓபன் பன்னி ஒப்படைக்கபோறான் அதுக்குதான் இப்ப கிளம்பிகிட்டு இருக்கேன்”

“அவங்க பொண்ண என் பையனுக்கு” என மீண்டும் இழுத்தாள்.

ஆனால் சந்திரசேகர் யோசித்தார். “இல்லமா மாப்ள எதுவும் தொழில் இல்ல அதான் எப்புடி நான் அவன்கிட்ட பொண்ணுகேப்பேன்”

“அவங்க மில்ல பாத்துகுவான் அண்ணா”

“அதிக்கில்லமா” என மறுத்தார்

“உனக்குதான் கல்யானம் ஆகல ஒன்டிகட்டயா கிடக்க இப்புடி சொத்து சேத்து என்ன பன்னபோற. அதுமாதிரி என் பையனும் ஆகனும் அதுதான உன் ஆசை” என கண்ணை கசக்கினாள்.

இது தன் அண்ணனிடம் காரியம் சாதிக்க பன்னும் வேசம் “சரிம்மா நான் கேக்குறேன்” என கிளம்ப வழியெல்லாம் யோசனை அவள் கூறிய வாசகம் திரும்ப திரும்ப கேட்டது. ஒன்டிகட்டதான நீ

உலகமே அப்படி கூற பழகிவிட்டது சந்திரசேகருக்கு பின் என்ன செய்ய முடியும் கல்யானம் ஆன சில நாட்களிலேயே கனவனை பறிகொடுத்து வந்த தங்கையை கண்ணாக பார்த்தார். ஆனால் ஸ்வர்னாவுக்கு புது காதல் பூக்க ஓடி சென்று இப்போது செல்வதனசேகர் வளர்ந்துநிற்கிறான்.

ஒன்டிகட்ட என்ற வார்த்தையை கேட்கும்போதெல்லாம் திரும்பி பார்ப்பார் அதிர் முழுவதும் கஷ்டமும் ஸ்வர்னாவம்தான் இருப்பார்கள். இதில் தன் வாழ்கை எங்கு என அவர் தேடும்போதுதான் அதில் மின்மினி பூச்சியாய் காவேரியின் அன்பு இருக்கும்.

காவேரி பிறந்தவுடன் தன் வீட்டிற்கு தூக்கிவந்துவிட்டார் அல்லவா! அவரிடமிருந்து தனது குழந்தையை வாங்க சுந்தரலிங்கம்பட்ட பாடு சொல்லிமாலாது கேட்டாள் “டேய் சரஸ்வதியும் இறந்துபோயிடுச்சு பாவம் இந்த குழந்தைய நான் வளக்குறேன்டா” என சந்திரசேகர் கேட்க “சித்தப்பா இவ என் தங்கச்சி நான் வளக்குறேன்” என்ற கங்காவின் வார்த்தைக்குதான் இசைந்தார்.

தினமும் காவேரியை பார்க்காமல் நாட்கள் நகறுவதில்லை. சிறுவயதில அவளை தோளில் தூக்கி நடப்பதும் யானை சவாரி காட்டுவதும் என காவேரிக்கு தன் அப்பா சந்தரசேகர்தான் என்ற குழப்பம் வந்துபோகும். ஆனால் சுந்தரலிங்கம் கம்பெனியை வளர்ப்பதிலேயே கண்ணாக இருந்தார். இப்போது பதினைந்து வயது பெரியமனுசி அதனால் மடியில் வந்து அமர்ந்துகொள்ள சந்திரசேகர் அனுமதிப்பதில்லை. ஆனாலும் காவேரி தன் தந்தையை ஒட்டிகொண்டுதான் அமர்வாள். வளர்ப்பு தந்தையா இல்லை உண்மையான தந்தை இவர்தானா என பலர் குழம்புவர்.

பிஸினஸில் சந்திரசேகருகும் சுந்தரலிங்கத்திற்கும் நல்ல இனக்கம் உள்ளது. ஆனால் தன் தங்கை மகனுக்கு எப்படி கங்காவை பெண் கேட்பது தன் நண்பனிடம் என்ற குழப்பம் இருந்தது.

காவேரி மில்ஸ் முன் வண்டி நிற்க அங்கு சுந்தரலிங்கம் நின்றிந்தார்.

“டேய் சந்துரு வர்ரதுக்கு இவ்வளவு நேரமாடா”

“டேய் தங்கச்சி வந்திருந்திச்சுடா”

“ஓ சரிடா! சரி இந்த கம்பெனிய உனக்கு நான் தர்ரேன் ஆனா எனக்கு போட்டியா நீ நடத்துவியா அவ்வளவு திறமை இருக்கா” என சிரித்தார்.

“டேய் சின்னவயசுல ஓட்ட போட்டில நீ அழகூடாதுனாதான் விட்டுகொடுத்தேன். இந்த பிஸினஸ்ல விட்டு கொடுப்பேன்னு எதிர்பாக்காத” என கூற இருவரும் சிரித்தனர் அந்த பத்திரத்தில் கையொப்பமிட SS-COMPANY தனக்கான போட்டியாளரை தானே உருவாக்கியது.அதுவும் தன் நண்பன். அப்போதுதானே வேகமாக முன்னேற முடியும் என்ற யுக்திதான் அது.

கையெப்பமிட்டு வெளியே வர சுந்தரலிங்கம் தன் நண்பனின் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டார். “என்ன ஜீ உடம்பு மட்டும்தான் இங்க இருக்க ஆள் எங்கடா இருக்க”

“ஒன்னுமில்லடா”

“அப்ப ஏதோ இருக்கு சொல்லுடா” என சுந்தரலிங்கம் விடவில்லை.

“உன்கிட்ட எப்பிட சொல்றது”

“என்னடா இது நமக்குள்ள சும்மா சொல்லு”

“இல்லடா உன் பொண்ண என் தங்கச்சி கோயில்ல பாத்திருக்கும் போல அதான்”

“அவ பையனுக்கு கேட்டாங்களா” என சுந்தரலிங்கம் முடித்தார். ஆனால் சந்திரசேகர் குற்ற உணர்வில் நிற்க “இதுக்கு என்னடா தயக்கம்! டேய் கங்காவ என் மாப்ளைக்கு கட்டிகுடுடா அப்புடின்னு உத்தரவு குடுடா நாம எல்லாம் ஒன்னுகுள்ள ஒன்னு” என அவன் கூறுவான் என சந்திரசேகர் சிறிதும் சிந்திக்கவில்லை.

அடுத்ததாக பெண்பார்க்கும் படலம் அங்கு தன் தாயிடம் “அம்மா நான் கங்காவ கேக்கலமா என்ன திட்டுச்சே அந்த பொண்ணு அததான் கேட்டேன்” என காவேரியை கூற “டேய் அவ சின்ன பொண்ணுடா அதுவுமில்லாம அக்காவ கட்டிகுடுக்காம தங்கச்சிய எப்புடிடா” என அவர் தன் மகனிடம் ரகசியம் பேசினார்.

அதை பார்த்த சுந்தரலிங்கம் “என்னமா பொண்ணுக்கு என்ன போடுவோம்னு பேசிகிறீங்களா! நம்ம கம்பெனிய மாப்ளயே பாக்கட்டும் அதுவுமில்லாம நானும் என் பொண்ணுங்கிட்ட அன்பா பழகி நாள் ஆச்சு அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்குறேன்” என கூற ஸ்வர்னாவுக்கு பணத்தில் ஆசை தொற்றிகொள்ள “டேய் இப்ப அக்காவ கட்டிக்க அப்புறம் நொண்டி சாக்கு சொல்லி தங்கச்சிய கேக்லாம்” என திட்டம் முடிவானது.

பின் திருமனம் முடிய காவேரி தவித்தாள். இந்த உலகத்தில் யாருக்கும் வராத சோதனை அது ஆம் தாய் கல்யானமாகி வேறு வீட்டிற்கு தன்னைவிட்டு செல்வதை யாரால்தான் தாங்கிகொள்ள முடியும்.

“அக்கா விட்டுட்டு போகாதக்கா” என அழுதாள். ஆனால் சம்பிரதாயம் பிரித்தது அவர்களை. அந்த தனிமையை விரட்ட புத்தகங்களில் மூழ்கினாள் காவேரி. கல்லூரி என மேற்படிப்பு தொடர ஒருநாள் அந்த சந்தையில் அந்த சம்பவம் நடந்த்து.

பொம்மையில் அழகாக தெருக்கலில் விற்றுவரும் அந்த பொம்மை குழந்தைகளை பார்த்தாள் கைதட்டும். மழலைகள் கூட்டமாக கூடவே வாட்ச் பாம்பு மீசை செயின் என மிட்டாயால் செய்து மாட்டிவிடுவார் அந்த மாமா. அந்த மிட்டாய் என்றாள் காவேரிக்கு ஆசை. மாடியிலிருந்து ஒரு ஜவ்வுமிட்டாய் காரன் சந்தை நோக்கி செல்வதை பார்த்தாள். உடனே இறங்கி சந்தையை நோக்கி ஓடினாள் சாப்பிட்டு பல நாள் ஆச்சு அல்லவா. இருபது வயது பெண் தன்னை ஒரு குழந்தையாக எண்ணிகொண்டு ஓடினாள். ஆனால் அந்த மாபெரும் சந்தையில் அவன் எங்கு சென்றான் என்பது தெரியவில்லை.

ஜல் ஜல் என்ற சத்தம் காவேரியின் பின்னால் ஒலித்தது. சட்டென திரும்பி பார்க்க அந்த ஜவ்வுமிட்டாய்காரன் நின்றிருந்தான். காவேரியின் வாயில் நீர் சுரக்க அவனது காலுக்கடியில் சில குழந்தைகள் நின்றிருந்தனர். அவர்களுடன் குழந்தையுடன் குழந்தையாக ஒருவன் அமர்ந்திருந்தான். ஆம் அந்த பேட்டையில் வாழும் அனைத்து குழந்தைகளும் ஆசைபடும் என நினைத்து அனைவரையும் அழைத்து வந்து ஆளுக்கு மீசை வாட்ச் மற்றும் கொழுசு வரை போட்டுவிட்டார் அந்த பொம்மை மிட்டாய்காரர்.

காவேரி அவர் அருகில் வந்து நின்று “அண்ணா எனக்கு ஒன்று” என கேட்கவே சிரித்துகொண்டே பார்த்தார் அந்த மிட்டாய்காரர் பின் ஒரு செயின் செய்து மாட்டிவிட்டார். ஆர்வமாக அதை பார்த்தவளுக்கு நாக்கில் உமிழ்நீர்  வர கையில் அந்த ஜவ்வுமிட்டாயை இழுத்துகொடுக்க வாங்கி வாயில் போட்டாள்.

அப்போதுதான் உணர்ந்தாள் வந்த அவசரத்தில் காசு இல்லையென அந்த மிட்டாய்காரரை பார்த்து “அண்ணா காசு நான் வீட்டல விட்டு வந்துட்டேன்” என கூற அவரை பார்க்க பாவமாக இருந்தது.

“நீங்க போங்க நான் குடுத்துகிறேன் ஆசையா குழந்தை மாதிரி வந்தீங்க உங்களையும் ஒரு குழந்தையா எடுத்துகிறேன்” என சன்முகம் கூறிவிட்டு நகர்ந்தார் கையில் அந்த சிறுகுழந்தையை தூக்கிகொண்டு. காவேரியும் தனக்கு கிடைத்த மிட்டாயை சுவைத்துகொண்டே வர அந்த மிட்டாய் செயின் பாதுகாத்து வைத்தாள் மெழுகை உருக்கி.

அவனது கண்கள் இவளை இரவில் தொந்தரவு செய்ய தூங்காமல் விழித்தாள். இது என்ன பந்தம் ‘நான் அவனை பார்த்து ஒருநாள்தான் ஆகிறது. கண்டதும் காதல் இதில் என்ன நம்பிக்கை இருக்கிறது.அதிலும் பல புலவர்கள் விழிதான் காதல் நுழையும் பாதை என வர்ணித்த நூல்கள் இவள் கண்ணில் வந்துபோக சிரித்தாள். தன்னை அறியாமல் அவன் வசம் சேர்ந்தாள்.

ஆம் சன்முகமும் சாதாரனமாக இல்லை இவளுக்காகதான் தன் சொந்த கடையை விட்டுவிட்டு இங்கு மூட்டை தூக்குகிறான். ஆம் சந்தை பராமறிப்பு என கல்லூரியிலிருந்து வந்தபோது இவளை பார்த்தான். காதல் அதிலும் அவள் அனைவரிடமும் பழகிய விதம் அன்பு என ஈர்த்துவிட்டாள். உடனே இவளது ஊருக்கு வந்த பின்தான் தெரிந்தது அவள் பொரும் செல்வ சீமாட்டி என அந்த ஈர்ப்புதான் இன்று அவளை பாடாய் படுத்துகிறதோ தெரியவில்லை.

ஆனால் சன்முகத்தின் நிலைபாடு வேறுவிதமாக தெரிந்தது. “நாம தினமும் சாப்பிடுவதற்கே கஷ்டபடடுறோம் ஆனா அவங்க பணத்துல தூங்குறவங்க. எதுக்கு இந்த ஆசை பேசாம ஊருக்கு போயிடலாம். அதான் அவங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்சத வாங்கிகொடுத்துட்டேன்ல, சாமிய கும்பிடதான் முடியும் வீட்டுக்கு கூட்டிவரனும்ங்குறது பேராசை சரி நாளைக்கு ஊருக்கு வண்டியகட்ட வேண்டியதுதான்” என சன்முகம் முடிவெடுத்துருக்க காலையில் தன் முதலாளியிடம் சென்றான்.

“ஐயா நான் ஊருக்கு போறேன்”

“ஏன்டா சம்முவம் நல்லாதான வேலை பாக்குற ஏன் என்ன ஆச்சு”

“இல்ல ஐயா ஒரு உறுத்தலா இருக்கு மனசுல வீட்ட தேடுது”

“ம்ம் சரிடா இன்னைக்கு லோட் அதிகம்ல அதனால இன்னைக்கு நில்லுடா பொழுதுசாய போயிக்கலாம் ரெட்டை சம்பளம் தரேன்டா எனக்கு யாரு இருக்கா பாரு” என அவர் கேட்க சிறிது பறிதாபம்தான். காதலுக்காக வந்தவன் கடமைக்காக தங்கினான்.

அந்த மாலை பொழுதில் அடைமழை பிடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த பழைய கோணியை பொத்தினாலும் அவன் சிரிது நனைந்துகொண்டிருக்க அங்கிருந்த ஓட்டை செட்டுக்குள் சென்றான் சற்று இருள் சூழ்ந்துதான் இருந்தது. ஒருவர் ஒழுங்காக நிற்கலாம் அவ்வளவுதான். அதனால் சிறிது நனைந்தான். தன்னவள் (மன்னிக்கவும் நினைவு தேவதை) சினிமா ஹீரோயின் மாதிரி மழையில் ஆடுவதாக நினைத்துகொண்டான்.

ஆனால் அவளுக்கு அவ்வளவு தைரியம் இல்லை. எப்படியும் மாடியில் நின்றுகொண்டு இந்த சந்தையை பார்த்துகொண்டிருக்க வேண்டும்.

மழையின் அளவு அதிகரிக்க சிறிது உள்ளே நகர்ந்தான் அங்கு யார் காலிலோ மிதிக்க “ஆஆ” என சத்தம் வந்தது

“ஏங்க நீங்க இங்க என்ன பன்றீங்க”

“இல்லங்க உங்களதான் பாக்க வந்தேன்” என குளிரில் பற்கள் தட்டச்சு செய்ய கூறிகொண்டிருக்க அந்த கோணியை அவளுக்கு போர்த்திவிட சிறிது கதகதப்பாக உணர்ந்தாள்.

“என்ன பாக்கவா! என்னங்க விஷயம்”

“இல்ல நீங்க மிட்டாய் வாங்கி தந்தீங்கள்ள அந்த காசு” என தாளை நீட்டினாள்.

“இதுக்கு சில்லரை சேக்கவே நான் நாலு நாள் மூட்டை தூக்கனும்” என சிரித்தான்.

“என்கிட்ட இதுதாங்க இருக்கு” என பறிதாபமாக பார்க்க

“நான் கேட்கவே இல்லைங்க நீங்களே வச்சுகோங்க”

“ஏங்க”

“நான் என்ன சொன்னேன் உங்கள குழந்தையாதான் பாத்தேன் அதான் குழந்தைகிட்ட காசு வாங்குவாங்களா”

“அது இல்லைங்க கடன் அன்பை முறிக்கும்னு சொல்லுவாங்க”  என அவள் இழுக்க

“அன்பா” என சன்முகம் கூற

“ அன்பு காதல் வேற எதாவதுஉஉஉ” என இழுத்தாள்.

“புரியல”

‘மரமண்ட நான் எவ்வளவு கஷ்டபட்டு சொல்லிகிட்டு இருக்கேன் புரிஞ்சுகிறானா பாரு’ என திட்டியவள். “இல்லைங்க நான் யாருன்னு தெரியுமா”

“ம்ம் தெரியும் சுந்தரலிங்கம் ஐயாவோட பொண்ணு அப்புறம் இந்த சந்தை உங்க மாமா தனசேகர் கன்ட்ரோல்ல இருக்கு”

“இது எப்புடி உங்களுக்கு” என அவள் கேட்க

“எனக்கு ஒழிச்சு பேச தெரியலைங்க நான் எங்க ஊர்ல உங்கள பாத்தேன் அழகா ரோஸ் புடவை கட்டிகிட்டு நடந்துவந்தீங்க அப்போவே எங்க அம்மாவ பாக்குற மாதிரி இருந்திச்சு. எங்க அம்மா டேய் நான் சாகுறதுக்குள்ள ஒருத்திய கூட்டிவா அவ இப்புடிதான் இருக்கனும் அப்புடின்னு உங்களதான் சொல்லிருக்காங்க! நான் என்ன பன்றது நீங்க சின்ன இடத்துல இருப்பீங்கனு பாத்தேன் ஆனா கோபுரத்துல இருக்கீங்க அதனால தான் உங்கள பக்கத்துல ஒருவாட்டி பாக்கனும்னு ஆசை அதுவரை இங்க மூட்டை தூக்குனேன். நேத்து பாத்துட்டேன் வேறஎன்ன வேனும் வாழ்கைல அதான் இன்னைக்கு ஊருக்குகிளம்புறேன்” என அவன் கூற அவளது கண்ணில் நீர் இருந்தது அது மழைதுளிதான் என எண்ணிணான் அனால் அவள் குரல் காட்டிகொடுத்த்து.

“ஏங்க நீங்க இங்கயே இருங்களேன் ஊருக்கு வேனாம்” என சிறுவயது குழந்தை தந்தையிடம் கெஞ்சுவதைபோல கெஞ்சினாள். சிறுவயதிலிருந்த எதுவும் பணத்தால்கிடைக்கும் என்று நினைத்திருந்தவளுக்கு அன்பு அப்பாற்பட்டது என்பது அறியும் தருனம் தன் அக்கா கங்கா இல்லை. அவள் தனது குழந்தைகளை பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் மாமியார் கொடுமை வேறு. அப்போது அன்புக்கு ஏங்கியதருனம்தான் சன்முகத்தை பார்த்தாள். தனக்காக ஒருவன் இவ்வளவு கஷ்டபடுகிறான் என நினைக்கும்போது அந்த வயதிற்கு உண்டான ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. இருவருள்ளும் காதல் மலர்ந்தது.

“ஐயா நான் இனிமே ஊருக்கே போகலைங்க” என ஆயுள் அடிமையாக பாவித்துகொண்டான் காவேரி என்ற இந்த மானிக்கத்தை பார்த்து மகிழ அவளும் தினமும் மாலை இவனை காணாமல் வீட்டிற்கு செல்வதில்லை. வீட்டிலும் அப்பா லேட்டாகதான் வருவார் அதனால் கேட்க ஆட்கள் இல்லை.

ஆனால் அன்று சந்திரசேகரிடம் சிக்கினாள். “எதுனா வேனும்னா அப்பாகிட்ட சொல்லுமா நீ ஏன் சந்தைக்கு போயி கஷ்டபடுற” என அவர்கூற அன்றுதான் அவரை பார்த்து அமைதியாக சென்ற நாள். பின் அவர் வந்து தன் கணக்குபிள்ளையிடம் “அந்த பையன பத்தி விசாரிங்க” என உத்தரவு பிறப்பித்தார்.

இப்படியாக இருவருக்கும் காதல் பூத்து குலுங்கியது.

ஏழைக்கு வயிரெனும் வாய் மூட

முட்டிஉழைக்கும்போது சிந்திய

வியர்வையின் முத்தாய்

ரசித்த மங்கையை கைபிடிக்க

எண்ணி கன்டம் கடந்தான்

அவளோ தங்க்கூண்டு கிளி

இவனோ புழுவாய் துடிக்க வந்தாள்.

அமிர்தமாய் தேனதையூட்டி

அந்த வாய்மொழியொன்று

இவனது காலத்தை நகர்த்த

காதலும் நகர்ந்தது.

அந்த தாலியை கட்டினான் அவள் கழுத்தில்

அவள் மறைத்து வாழ்ந்தாள்

பிறந்தவீட்டில் வாழ்வை எதிர்நோக்கி

அவனும் காத்திருந்தான் அவளை கன்டம் கடத்த

“ஏங்க நான் இன்னைக்கு சந்திரசேகர் அப்பாகிட்ட சொல்லிடுறேங்க இனிமே உங்கள பிரிஞ்சு என்னால இருக்கமுடியாது. அவரு எங்க அப்பாவ சம்மதிக்க வச்சிடுவாறு”  என அழுதாள்.

“ஏய் லூசு இப்ப எதுக்கு கண்ணீல் விட்டுகிட்டு இருக்க எல்லாம் நல்லது நடக்கும்” என அவன் ஆறுதல் கூற இந்த நினைவுகளுடன் தன்அக்கா கொடுத்த தேநிரும் முடிய தனது தாலியை ஒருமுறை சரிபார்த்துகொண்டாள்.

முதலில் தனது தாயான அக்காவிடம் கூறுவதாக முடிவு “அக்கா நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்”

“நீ என்ன சொல்லபோற எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குடி அப்பா வர்ரதுக்குள்ள எதாவது சமைக்கனும் இன்னைகு வேலைகாரங்களாம் லீவு”

“அக்கா “ என சினுங்கினாள்.

“இங்க பாரு நான் வெளியே போறேன் மரியாதையா நீயும் கிளம்பி வா”

“போக்கா நான் வரல”

“சரி அந்த அஞ்சுகன்னி பேய் வந்தா நான் கேட்டதா சொல்லு”

“இருக்கா நானும் வாரேன் பயமா இருக்கும் தனியா” என சினுங்க கங்கா சிரித்துகொண்டே “சரி போய் குளிச்சிட்டு வாடி அக்கா தலைவாரி விடுறேன்”

சிறிது நேரத்தில் சிட்டாக வந்தவள் தன் தாலியை மறைத்துகொண்டாள். “என்னடி இது முடிய இப்புடி வச்சிருக்க”

“ஆமா நீ இருந்த எதாவது தலைவாரி விடுவ இப்ப அந்த செல்லதாயி பாட்டி எப்பவும் ஒத்தசடைதான். அதுல பாவம்அதுக்கு கண்ணுவேற தெரியல”

“அப்ப நான்வேனா இங்கயே இருந்து மேடம்க்கு தலைவாரி விடவா”

“இல்லக்கா நான் வாரேன் அங்க ஜான்சி பிறந்தப்போ பாத்தது அத்த அவங்கள இங்க வரவே விடமாட்டேங்குது”

“சரி சரி இது என்னிடி உன் கழுத்துல எதோ புடைப்பா இருக்கு” என கங்கா கேட்கவம் பதறினாள் காவேரி. “அது சுடிதார்ல நூல் பிரிஞ்சிருக்கும் அக்கா” என சமாளித்துவிட்டாள்.

பின் இருவரும் நடக்க “ஏன்டி அப்பா உன் கல்யானத்த பத்தி என்கிட்ட பேசுனாரு பன்னையாராம் ஏக்கர் கணக்குல சொத்து இருக்கு அவரு மகன் உன்னளவுக்கு படிச்சிருக்கான் என்ன பேச சொல்லவா அப்பாவ” என கூற அவள் முகம் சுருங்கியது.

“அக்கா நான் இன்னும் படிக்குறேனே”

“சரிடி அம்மா உன் விருப்பம்” என அமைதியாக நடக்க காவேரி தலைகுனிந்துகொண்டு தன் அக்கா பின்னால் நடந்தாள்.திடீரென கங்காவின் கால்கள் நிற்க காவேரியும் நின்றாள்.

“சன்முகம் அந்த வென்டைகாய் எடுத்துபோடுப்பா” என கங்கா கூற சன்முகமும் காவேரியும் திகைத்து நின்றனர்.

“என்ன திருடய்ங்களா அப்புடி பாக்குறீங்க அக்காவுக்கு எதுவம் தெரியாதா கேட்டா இவங்களுக்கு நூல் பிரிஞ்சிடுச்சாம் அப்படியே ஒன்னு போட்டேனா தெரியும்! எல்லாம சந்திரசேகர் அப்பா சொல்லிட்டாரு அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லிடாரு என்ன இப்ப வெளியூர்ல இருக்காரு வந்த்தும் உங்க கல்யானத்த ஜாம்ஜாம்னு நடத்திடலாம் சரி இப்ப லவ்ஸ் ஓர்ம கட்டிட்டு புழப்ப பாருங்க” என கங்கா அவளை இழுத்து வர சன்முகம் ஏக்கதுடன் பார்த்த காட்சி நினைவைவிட்டு அகலாது.

வீட்டிற்கு வந்ததும் “ எத்தனநாள்டி ஆச்சு”

“போன மாசம் ஆடி வெள்ளி அன்னைக்குக்கா இருக்கன்குடி கோவில்ல”

“ம் தாலி மட்டும் தான இல்ல மத்தது எதாவது” என கங்கா கூற காவேரி புரிந்துகொண்டாள். “ஐயோ இல்லக்கா இது அப்பா சம்மத்ததுக்காகதான் மத்தபடி அவரு ரொம்ப நல்லவருக்கா இதுகூட நான்தான் கட்டாயபடுத்தி” என நிறுத்தினாள்.

“சரிடி மாமா தேடுவாங்க! நான் இத பத்தி பேசதான் வந்தேன் சரி அப்பா வந்தா கேட்டதா சொல்லு நான் கிளம்புறேன்”

“அக்கா இருக்கா இப்ப வந்திடுவாரு”

“இல்லடி நேரம் ஆச்சு” என கிளம்பிய கங்கா எப்பிட கூறுவாள் தன் கனவனின் மில் நிர்வாகம் சரியில்லை என அந்த ஆத்திரத்தில் சுந்தரலிங்கம் தனசேகரை தேடிகொண்டிருந்தார். பின்ன தன் நண்பன் சந்திரசேகர் நடத்தும் காவேரி மில்லின் பஞ்சில் எஸ்டரை கலந்ததாள் கடும் கோபத்தில் இருந்தார்.

“ஒரு மில் அமச்சு குடுத்தாகூட உம்புருஷன் ஒழுங்கா நடத்தமுடியலைல! பாரு ஒர்கர்ஸ்தெருல்ல நிக்குறாங்க” என SS-COMPANY யின் நிலையை கூறி திட்டுவார் என வேகமாக கிளம்பினாள். ஆனால் அவளுக்கு அதிரச்சி ஆம் தன் தந்தை அங்குவந்த மில்ல திரும்ப கொடுத்திட சொல்லுமா காவேரி நடத்திக்குவா என திட்டிவிட்ட வந்த கதைதான் தெரியுமே.

அதன்பின் வந்து சாப்பிட அமர்ந்த செல்வதனசேகரிடம் “அப்பா வந்தாரு” என கங்கா கூற “அது இருக்கட்டும் நீ அங்க போனியா”

“ஆமாங்க தங்கச்சிய பாக்க போனேன்”

“எதுக்குபோன”

“அவளுக்கு கல்யானம் பன்றதபத்தி பேச சொல்லி அப்பா சொன்னாருங்க” என சந்திரசேகரை மனதில் வைத்துகூற இவன் சுந்தரலிங்கம் என முடிவு செய்துவிட்டான்.

அப்படி அவர் செல்லும்போது காரினை மறைத்தவன். “மாமா எப்புடி இருக்கீங்க”

“டேய் நீ பன்ற காரியத்துக்கு என் பொண்ண உனக்குபோய் கட்டி வச்சேன் பாத்தியா என்ன சொல்லனும்டா” என பொரிந்தார்.

“சரி மாமா உன் ரெண்டாவது பொண்ணு காவேரிய எனக்கு கட்டி குடுத்துடு” சுந்தரலிங்கம் அதிர்ந்துவிட்டார்.

“என்னடா உளர்ர”

“ஆமா மாமா எனக்கு அவளதான் பிடிச்சிருந்தது. ஆனா அம்மாதான் சொத்துக்கு ஆசபட்டு கங்காவ கட்டிக்க வச்சிடுச்சு”

“டேய் காவேரிய பத்தி பேசுன உனக்கு மரியாத அவ்வளவுதான்”

“ம்ம் அப்ப அந்த மூட்டை தூக்குற சன்முகம் ஓகேவா” உன் பொண்ணுக்கு “அவன் தங்கமான பையன்டா உன்னமாதிரியா” என அவர் திட்ட தன்னைவிட ஒரு மூட்டைதூக்கும் பையனை உயர்த்திகூறியதாள் ஆத்திரம் அடைந்தவன் கத்தியை இறக்கினான் தன் மாமா மார்பில்.

துடித்துகொண்டிருந்த அவருக்கிருந்த ஒரு ஆறுதல் இவன் தன்னை எப்படியும் கொண்றுவிடுவான் என கனவில் வந்த்தாள் போன மாதம் தன் நண்பன் சந்திரசேகரிடம் சென்று.

“டேய் எனக்கு காவேரிய நினைச்சா பயமா இருக்குடா”

“என்னடா பயம் அதான் நானிருக்கேன்ல” என சந்தரசேகர் சமாதானம் செய்தார்.

“இல்லடா எனக்கு எதாவது ஆச்சுனா அவளுக்கு யாரும் இல்லடா”

“டேய் என்னடா பேச்சு இது அவள பாத்துக்கு நல்ல அன்பான இதயங்கள் இருக்குடா” என சன்முகத்தை மனதில் வைத்து கூறினார்.

“டேய் அவளுக்கு யாருமே இல்லைனா நீ அவள பாத்துகுவேன்னு சத்தியம் பன்னுடா” என சத்தியம் வாங்க சந்திரசேகரின் சத்தியத்துடன் நிம்மதியாக உயிரை விட்டார் சுந்தரலிங்கம் அந்த அரக்கன் கண்முன்.

“அப்பா அப்பா” என காவேரி அழுதுகொண்டிருக்க ஆட்டோவிலிருந்த ஜான்சி இறங்கிவந்து தன் தாத்தாவே கட்டி அழுதாள். பிறந்தபோது பார்த்தவளை இன்றுதன் தந்தைசாவில்தான் பார்க்கிறாள் காவேரி.

கங்கா மயக்கமடைந்து செல்ல “பிள்ளதாச்சி பொண்ணுப்பா மயங்கிடுச்சு” என அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி செல்ல காவேரியும் ஜான்சியும் தன் அப்பாவுக்காகவும் தாத்தாவுக்காகவும் அழுதனர்.

அப்போது அங்கு தன்னவளுக்கு ஆறுதல் அளிக்க வந்து நின்றான் சன்முகம் அவனை பார்த்த தனசேகர் “டேய் இங்க ஏன்டா வந்த”

“என்னங்க சொல்றீங்க”

“உன்னாலதான்டா எங்க மாமா இறந்தாரு”

“என்னாலையா” என பதறினார் சன்முகம்

“ஆமாடா அவர கொல்லதான வந்து திட்டம் தீட்டிகிட்டு உங்க ஊர்ல இருந்து வந்த இப்ப என்னடா நாடகம் போடுற அதான் வேலை முடிஞ்சிடுசுல கிளம்புடா” என தனசேகர் கூற காவரி சன்முகத்தை முறைத்தாள். தன் தந்தையை கொண்றவன் அல்லவா அந்த கோபம் அவளிடம் தெரிய அவன் நான் எதுவம் பன்னலம்மா என்பதுபோல அவளுக்கு சைகை செய்ய அவனை சட்டையை பிடித்து வெளியேற்றினர்.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 01ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 01

என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   உறவுகள் இருப்பினும் ஏமாற்றம், குழப்பம் என அன்பிற்கு அடங்கி தன் சுயத்தை இழந்து அனைவரையும் வெறுக்கும்  நிலையில் தனித்து வாழும் நாயகன். உறவுகளை இழந்தாலும் அன்பையே ஆதாரமாக கொண்டு மகிழ்ச்சியாக வாழும் நாயகி. விஷமென நினைத்து

கபாடபுரம் – 24கபாடபுரம் – 24

24. புதிய இசையிலக்கணம்   இரண்டுவிதமான இசைகளால் கொடுந்தீவுக் கொலை மறவர்களையும் அவர்கள் தலைவனையும் சாரகுமாரன் வசப்படுத்தினான். பாடலுக்கும், புகழுக்கும், சேர்த்தே இசை என்று இசைவாகத் தமிழில் பெயர் சூட்டியவர்களை வாயார வாழ்த்தினான் அவன். திரும்பத் திரும்ப மீட்டினாலும், பாடினாலும் கேட்பவனுக்குச்