Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57

உனக்கென நான் 57

‘ம்ம் அவன் ஆசையா கேட்ட போட்டோவ எடுத்து அவன்கிட்ட குடுத்து புரபோஸ் பன்னிடவேண்டியதுதான்.’ என நினைத்துகொண்டு எடுத்து வைத்தாள். சைக்கிளும் உருன்டது அவளது இதயதுடிப்புபோலவே அந்த மரத்தின் நிழலில் தன் தோழர்களுடன் நின்றுகொண்டு ஜெனியை பார்த்தால்தான் ஆசிக்குக்கு அன்றைய நாள் விடியும். இவளும் ஓரக்கண்ணால் சைட் அடிக்க தவறியதில்லை. ஆனால் அவன் நேற்று அப்படி கேட்டடிருக்ககூடாது. இன்று அவளது நிம்மதி சிறிது சிதறிதான் போனது.

சுவையான சம்பவமாக தன் தோழியிடம் மாட்டிகொண்டது கன்டிப்பாக நினைவைவிட்டு அகாலாது.

“இந்தாடி சாக்லெட்” என மேஜையில் அமர்ந்திருந்த அன்பயசியின் முன் வைத்தாள் ஜெனி. அன்று ஆசிக்கின் பிறந்தநாள் அது தெரிந்தவள் ஒரு உணர்ச்சி வேகத்தில் சாக்லெட் வாங்கிவந்து தன்க்கு இருக்கும் ஒரு மனதோழி அன்புதானே அவளிடம் நீட்டினாள். ஆனால் சாக்லெட் பிரியை அன்று ஜெனியிடம் கேள்வி கேட்டது ஏனோ தெரியவில்லை.

எதுக்குடி சாக்லெட்?” என அன்பரசி கேட்க அதான் நாம செகன்ட் இயர் வந்துட்டேம்ல அதான்என சிரித்தாள் ஜெனி.

அப்போ ஏண்டி காலேஜ் சேந்தப்போ தரலை?” என வக்கில் வண்டுமுருகனாக மாறினாள் அன்பரசி. “அப்போ தந்திருந்தா இதுல விசம் தடவிருக்கியானு நீ சாப்பிடாமல பேயிருப்பஎன கண்ணடித்தாள்.

நீ பேசறத பாத்தா..! ஏய் இதுல விசம் எதுவும் இல்லையேஎன சந்தேகமாக பார்த்தாள். “ஆமாடி நீ ஒரு ஆளு உன்னையெல்லாம் கொல்றதுக்கு நான் தீவிரவாதிகிட்ட பேயி சைனைடு வாங்கிட்டு வந்து சாக்லெட்ல தடவி கொடுக்க பேறேன் ஏண்டி காமெடி பன்ற நல்லா கொசு மாதிரி இருக்க அப்புடியே நசுக்கி கொண்ணுட மாட்டேன்என பேலியாக அன்பரசியின் கழுத்தை பிடிக்க அடுத்ததாக அந்த ஆல்பத்தை காட்டி அன்பை திசை திருப்ப அப்புறம்தான் நிம்மதி அவளுக்கு.

இன்னைக்கு அன்புகிட்டயும் சொல்லஏட வேண்டியதுதான். என முடிவுடன் வர ஜெனிக்கு ஏமாற்றம். ஆம் ஆசிக் அந்த மரநிழலில் இல்லை பதிலாக அந்த மரம் மட்டும் ஜெனியை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. அவனை கண்கள் தேட சைக்கிளை பூட்டாமல் சென்றாள்.

“அக்கா என்ன ஆச்சு உங்களுக்கு சைக்கிள் சாவி இந்தாங்க” என ஒருவள் தர “தாங்கஸ் பாப்பா அக்கா மறந்துட்டேன்” என்று மீண்டும் அவனுக்காக அந்த மரத்தின் முன் காத்திருந்தாள்.

“டேய் மச்சி போட சொல்லிரு” எனறு ஒருவன் கூற அவள் சைக்கிள் சிறிது நடுங்கதான் செய்யும்.

“இருங்கடா அவ ஆங்கரிபேடா மாரிட்டானா கஷ்டம்டா அப்புறம் இந்த மாதிரி பாக்ககூட முடியாதுடா” என்று ஒழிந்துகொள்வான் ஆசிக்

“என்னடா இப்புடி இருக்க அவ தைரியத்துக்கு நீ கொஞ்சம்கூட நிக்க மாட்ட போலியே” என்று ஒருவனும்

“கடைசிவரைக்கும் நீ இதயம் முரளிதான் மச்சி” என மற்றொருவனும் கூற “பரவாயில்ல மச்சி நான் அவள பாத்துகிட்டே வாழ்ந்துடுறேன்” எனபான்

“அப்ப வேற எவனாவது கட்டிகிட்டு போயிடாவான் அப்புறமும் பாத்துகிட்டு இருக்க முடியுமா”

“பரவாயில்லடா என் காதல அவள் உணரும் போது அவ வந்து சொல்லுவாடா” என ஆசிக் கூறும் தருனம் அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு இந்த கூட்டதை கடக்கும்போது ‘ஒரு பொண்ணா எப்புடிடா சொல்லுவா மரமன்டா’ என மனதிலேயே திட்டிவிட்டு நகர்வாள். அவன் ஒழிந்துகொள்வான்.

இன்று அந்த நாள் ஆம் அவன் காதலை ஜெனி புரிந்துகொண்டு அவள் எதிர்பார்த்து காத்திருந்த தருனம். ஆனால் அவன் இல்லை. அந்த மாநாட்டுகூட்டம் இடத்தை மாற்றி இருந்தனர். ஆனாலும் ஜெனியின் கண்ணில் பட்டுவிட்டனர்.

சட்டென சுவற்றுக்கு பின்னாலிருந்து கேட்க துவங்கினாள். அவர்கள் சுவர் மறைவில் நின்று பேச துவங்கினார்.

“டேய் என்ன சொன்னா”

“இல்லடா அவ என்ன போட்டோ எடுகலையாம்டா”

“அதான்டா சொல்றேன் அவள நீலாம் கரெக்ட் பன்னமுடியாது எனகிட்ட விடுடா நான் கரெக்ட் பன்னிகாட்டுறேன்” என்று கூற ஜெனியின் மனதில். ‘என்ன கரெக்ட் பன்னபோறியா அப்ப நான் என்ன பொம்மையாடா ஆளு ஆளுக்கு சூதாட்டம்மாதிரி விலையாடுறீங்க’ என மனதில் நினைக்க “நான் பன்றேன் மச்சி” என கூட்டம் கலைய கோவத்தின் சிகரத்தில் ஏறி அமர்ந்த முதல் பெண் அவளாகதான் இருக்கமுடியும். ஆனால் அவள் அதற்கு அடுத்து அவர்கள் பேசியதை கேட்டிருக்க வாய்ப்பில்லை.

“நீ வேற ஏன்டா அவன வெறுப்பேத்திகிட்டு இருக்க”

“நான் என்னடா பன்னேன் தங்கச்சிய உனக்கு கரெக்ட் பன்றேன்னு சொன்னது தப்பா”

“ஆமாடா இவன் மனசுல நினைச்சுகிட்டு அவ வருவான்னு உட்காந்துகிட்டு இருக்கான் நீ மேல ஏத்திவிடு! அப்புறம் ஜெனி கிட்ட போயி ஆசிக் உன்ன லவ் பன்றான்னு உளறிகிட்டு இருக்காத அவ கொஞ்சம் இல்ல நிறையவே கோவகாரி”

“என்னடா என தங்கச்சிகிட்ட நான் பேசமாட்டேனா! ஈவ்னிங் பாரு அவ உன்கிட்ட வந்து லவ்வ சொல்லுவா” என “டேய் வேனாம்டா” என பலர் தடுத்தும் அவன் கிளம்பி சென்றுவிட்டான்.

தன்னை ஒரு போதை பொருளாக நினைத்த ஆசிக்கின் மீது அவளுக்கு கோபம் வராமல் தன்னிலையை எண்ணி கண்ணீர் வந்தது. “அன்பு எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் தனிய விடு” என்று தன் தோழியை விரட்டி அடித்துவிட்டு தன் மனதில் ஆசிக்கை அகற்ற முடியாமல் அந்த கேன்டினில் தவித்து கொண்டிருந்தாள்.

அது யார் கெட்டநேரமோ தெரியவில்லை “ஹலோ” என அந்த கரெக்ட் பையன் வந்துநிற்க தன் கேமிராவை எடுத்து கழுத்தில் மாட்டிகொண்டு கிளம்பினாள்.

“ஹலோ நான் உங்க்கிட்டதான் பேசனும்”

“எனகிட்ட என்ன பேசபோற” என்றாள் எரிச்சலுடன்.

“லவ் மேட்டர்தான்”

கதை முடிந்தது. அவள் கொடுத்த அறையில் அந்த பையனது கடவாய் பல் வெளியில் வந்துவிட்டது. அவன் பேயறைந்ததுபோல நின்றான். கண்ணில் தானாக நீர் சுரந்தது.

“இங்க பாரு பேசாம போயிடுங்க எல்லாரும்” என தன் ஆட்காட்டிவிரலை அவனை நோக்கிகாட்டிவிட்டு கிளம்பினாள் வகுப்பறைக்கு.

ஆனால் அப்போதுதான் பிரட்சனை ஆரம்பித்தது. மொத்த கெமிஸ்டரி டிபார்ட்மென்டும் அங்கு அசம்பில். தற்போது அதன் இன்சார்ஜ் ஆசிக்.

“எதுக்குடி இவன அடிச்ச” ஆசிக் கோபத்துடன்

“அத அவன் கிட்டயே கேளு சொல்லுவான்” இது ஜெனி. காதலர்களாக வேண்டியவர்கள் எதிர் எதிரில் நின்றனர்.

“ம்ம் அவன் சொன்னதாலதான் உன்கிட்ட வந்துருக்கேன். நீ சொல்லு”

“இங்க பாருங்க தேவையில்லாம பிரட்சனை பன்னாதீங்க! அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்”

“இங்க பாருடி உனக்கு இவ்வளவு திமிர் இருக்ககூடாதுடி” என்று கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க. “ஆமாப்பா சாமிகளா ஒரு பொண்ணு தன்ன காப்பாத்திக்க கோவபடுறதுக்கு போரு திமிருனா நான் திமிரு பிடிச்சவதான். அப்புடி திமிர் இல்லாமதான் நியூஸ் பேப்பர்ல பொண்ணுங்கமேல அவ்வளவு வக்கிரம்”

“ஓஓ மேடம் அந்த ரகம்! ஏன்டி பொன்னுங்கள சீரளிக்குற பத்துபோருக்கு முன்ன இருக்குற அந்த நூறு நல்லவங்க உங்க கண்ணுக்கு தெரியமாட்டாங்களா” என்றான் ஆசிக்.

“ஆமாங்க நீங்க சொல்லுறமாதிரி ஆளுங்க இருக்காங்க! ஆனா இந்த கூட்டதுல இல்ல” என்று முகத்தை திருப்ப “உன்ன லவ் பன்னேன் பாத்தியாடி என்ன சொல்லனும்! அதுக்கு தூது வந்தவன இப்புடி ரத்தம் வரர அளவுக்கு அடிச்சுருக்க பாத்தியா உன்னலாம் ச்சை” என தன் தலையில் அடித்தவன் “வாங்கடா போகலாம் இந்த பக்கமே வரகூடாது” என அனைவரையும் அழைத்து செல்ல ஜெனிக்கு இதயத்தில் ஊசி குத்துவது போலதான் இருந்தது. ‘ஆசிக் என்ன மன்னிசிடுடா’ எனபது இதயத்தின் மொழி ஆனால் ஈகோவோ ‘இப்புடி பேசுறான் நான்கூட நல்லவன்னு நினைச்சேன் ஆனாதிக்கம் பிடச்சவன்’ என ஜெனியின் வாயை அடைத்தது.

“ஆசிக் அண்ணா என்ன இந்த பக்கம்” என்ற அன்பை கடக்கும் போது “உன் பிரன்ட கேளு” என்று நடக்க ‘ எந்த பிரன்ட சொல்லுறாரு’ என அன்பு நடந்தாள்.

அதற்கு அடுத்து வந்த ராஜேஷ் “என்ன மச்சி லேப்ல சோடியம் குளோரைடு தீந்துருச்சா இங்க வந்துருக்கீங்க”

“ஆமாடா அந்த ஜெனிதான் சோத்துல உப்பு போட்டு சாப்புடலையா நீ அப்புடிங்குறமாதிரி கேட்டுட்டா நீயும் அத கேட்டு கடுப்பு ஏத்தாத”

“என்னடா ஆச்சு ஜெனி லவ்வுக்கு ஒத்துகலையா”

“ஒத்துகலைனாலும் பரவாயில்லடா இவனையும் அறைஞ்சிருக்கா திமிரு பிடிச்சவ” என நகர ராஜேஷ் மௌனமாக நகர்ந்தான்.

இதுல என தப்பு என்னப்பா இருக்கு அவன்தான் எனகிட்ட வந்து நேர சொல்லலாம்ல நான் என்ன பன்னுவேன். எந்த பொண்ணா இருந்தாலும் மனசுகுள்ள ஒருத்தன் இருக்கும் போது வேற ஒருத்தன் வந்து வலிஞ்சா கோவம் வருமா வராதா. அதுக்கு அவன் எனக்கு வச்ச பேரு திமிருபிடச்சவ. ம்ம் அவனுக்கு நான் அப்புடியே இருந்துட்டு போறேன்பா. அவனா வந்து எனகிட்ட பேசட்டும் அதுவரைக்கும் அவன நான் பாக்கமாட்டேன். இது சத்தியம்.

என அந்த அர்த்தமற்ற டைரி நீண்டுகொண்டுபோக அதை வாசித்த அரிசிக்கு “அடி பாவி எனகிட்ட அப்பயே சொல்லிருந்தா சேத்து வச்சுருப்பேனடி” என திட்டிகொண்டிருக்க சந்துரு இன்றும் குளிரில் நடுங்க எழுந்து சென்றவள். அவன் தூங்க்கும்போது கழுத்திலிருந்து இப்போது நகர்ந்துசென்று கடைசியாக கனுக்காலை அடைந்தது. அதை பார்த்து விட்டு மீண்டும் எடுத்து போர்த்திவிட அவன் சினுங்கிகொண்டு அந்த தலையனையை இருக்கமாக கட்டி அனைக்க அன்புக்கு ஏதோ செய்தது. நேற்றைய நியாபகம் அது அந்த அரவனைப்பு இன்றும் அவள் உடலின் ரத்தங்களில் உணர்ந்தாள்.

‘ம்ஹூம் அரிசி கட்டுபாடு!! சந்துரு என்ன சொல்லிருக்கான்” என தனக்குள் கூறிகொண்டு மீண்டும் அமர்ந்தாள் அந்த டைரியில முகம் புதைத்து.

இன்னைக்கு அந்த வான்டுபையன் பன்ன சேட்டை முடியலடா சாமி இவன எப்புடிதான் விட்டுட்டு எங்க அப்பா இருக்காரோ தெரியல.

ம்ம் இன்னைக்கு ஒன்னுமே நடக்கலப்பா சொல்லறமாதிரி.

கடைசிய ஒருவாட்டி எங்க அப்பாகிட்ட பேசபோறேன். அப்புறம அந்த வாண்டு பையன நான் வீட்டுல வச்சு கொஞ்ச வேனாமா. பேசாம எங்க அக்ககிட்ட இவன எழுதிகேட்டுடலாம்.

இன்னைக்கு எங்க அக்காகூட சன்டைப்பா! என்னனு கேக்குறீங்களா! அதான் நேத்து சொன்னேனே அந்த சஞ்சிவ அதான் என வாண்டுகுட்டய நான் வளத்துகிறேன்னு கேக்க எங்க மாமா கூட ஒத்துகிட்டாருப்பா! இந்த மேரிக்கு என்ன குசும்பு இருக்கனும். அவள நீயாடி பெத்த அப்புடின்னூ கேக்குறா. அதான் பெரிய சன்டை. ம்ம் முக்கியமான விஷயம் அவன வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். டேய் பேனாவ கடிக்காதடா. அட கரும்மே இதையும் எழுதிட்டேனா. சரி விடுங்க இருக்கட்டும்.

என அந்த இடத்தில் ஜெனி இல்லை என்றாலும் சிரிக்க வைத்தாள். புன்னகையுடன் இதுதான் எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட் என நினைத்துகொண்டு அடுத்த பக்கத்தை திருப்ப சுற்றி இருந்த தேவதைகள் வேனாம் என ஓலமிட்டனர். தேவதைக்கு தேவதேகளின் குரல் கேட்கவில்லை.

இன்னைக்கு ஒரு தப்பு பன்னிட்டேன் அப்பா கொஞ்சம் பனம் கொடுத்து சென்னைல ஒரு சர்ச்க்கு மனிஆர்டர் அனுப்ப சொன்னாரு நான் சின்ன அட்ரஸ்ல மிஷ்டேக் பன்னிட்டேன். கொஞ்சம் பெரிய மிஸ்டேக்தான். ஆனாலும் முள்ளுக்குள் புன்னகை மாதிரி எனக்கு ஒரு பிரன்டு கிடைச்சுட்டாங்க. அட ஆமாம்பா அந்த மனி ஆர்டர் போனது ஒரு ஆசிரமத்துக்கு அங்க இருந்து ஏழில்னு ஒருத்தவங்க ரிட்டன் பன்னிட்டாங்க. ஆனா எங்க அப்பா திட்டுறத்தான் காதால கேக்கமுடியல. சில வார்தை சாம்பிளுக்கு. உங்கள படிக்க வச்சதுக்கு பன்னிமேய்க்க அனுபிருலாம். ஒருலட்டர்கூட அனுப்ப தெரியல. கேட்ட அவங்க ஆத்தா மாதிரி வாயிமட்டும் கிளியுது. கேட்டுகிட்டீங்களா.

இன்னைக்கு நான் பயந்துருக்கேன்பா எங்க ஊர சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலப்பா. ஆமா கேளுங்க.

அன்று அந்த புது கடித தோழி எழிலரசிக்கு கடிதம் அனுப்பிவிட்டு காத்திருந்தாள். அதிலும் முகம் பார்க்காத இவர்களின் நட்பு ஆழமாக இருந்தது. (உங்களையும் என்னையும் போல). இப்போதெல்லாம் யாரிடமும் விளக்கிகூற முடியாத முக்தி போன்ற வித்தியாசமான டாப்பிக்குகள் அனைத்தும் அந்த கடித்தோழியிடம்தான் பேசிகொண்டிருக்கிறாள். அதிலும் கடிதமே கானாத கிராமத்திற்கு பாவம் அந்த தபால்காரர் எப்படியும் நூறு முறை வந்து செல்லும்படி சென்றுவிட்டாள். பதிலுக்கு அவருக்கு என்றும் மோர் வழங்காமல் அனுப்ப மாட்டாள். அது அவள் இயல்பு அந்த மோருக்காவே அந்த தபால்காரர் ஆனந்தமாக வருவதுன்டு. கேட்டால் பாவம்பா வெயில்ல வர்ராஙகப்பா எனபாள்.

அன்புள்ள எழிலுக்கு என கடிதம் துவங்கி. எழில் அக்கா என திரிந்து. இன்று எழில் மேடம் இங்க ஜெனின்னு ஒருத்தி இருக்கேன் என மாறி இருந்தது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்க ஆசை. அதனால் அக்கா அடுத்து முறை எனது புகைபடம் நான் அனுப்புகிறேன். நீங்களும் அனுபுங்க. என வின்னப்பம் விடுத்திருந்தாள்.

ஜெனி பெரிய போட்டோகிராபர் ஆச்சே (அப்புடின்னு நம்பிகிட்டு இருக்கா விட்டுருங்க) அதனால் நல்ல இடம் தேடி அழைந்தாள். தன்னை அழகாக காட்ட வேண்டாமா புது தோழிக்கு. எந்த செல்பியும் அவளிடமில்லை. ஒரு வழியாக அந்த பிலிம் கேமிராவால் உலகிற்கு செல்பி அறிமுகபடுத்தினாள். அப்போது அந்த இடம் நல்லா இருக்கே என அந்த தென்னை தோட்டம் கண்ணில் பட்டது.

“யாரும்மா அது தோப்புகுள்ள” என்ற அன்பின் குரலை கேட்டு திரும்பினாள்.

“இல்ல பாட்டி போட்டோ எடுத்துக்க வந்தேன்”

“ம்ம் பாத்தும்மா கீழ குப்பையாகிடக்கு எதும் பூச்சிவட்டு கிடக்க போகுது”

“இல்ல பாட்டி நான் பாத்துகிறேன்”

“ஆமா உன் பேரு என்னமா பாக்க அழகா இருக்க”

“நான் ஜெனி பாட்டி ஜெனிபர்”

“ம்ம் இந்த சிலுவை கும்பிடுவாங்கள்ள அவங்களா?”

“ம்ம் ஆமா பாட்டி உங்க பேரு என்ன”

“மாரியம்மாமா” என்று அவர் கூறியது மேரி என ஜெனியின் காதில் விழுந்தது.

“எனக்கும் மேரின்னு அக்கா இருக்காங்க! நீங்களும் கிருஷடினா”

“அட கழுத நான் மாரியம்மா”

“ஓஓ சாரிபாட்டி”

“நல்லா பேசுறமா என பேத்தியும் இப்புடிதான் நல்லா பேசுவா வாயாடி வர்ரேனு சொன்னா ஆள கானாம்”

“பேத்தியா! அப்புடின்னா குட்டி பாப்பாவா”

“ஹாஹா” என சிரித்தவர் “உன் வயசுமா காலேஜ் படிக்குது ஏதோ எம்முனு ஏதோ படிப்பாம்.

“எம்னு படிப்பா”

“அப்புடிதான்மா சொல்லுச்சு! சரி நீ எடும்மா நான் வாய்கால பாத்துட்டு வந்திடுறேன்” என கிளம்ப.

“நீங்க இங்கதான் தங்கியிருக்கீங்களா பாட்டி”

“இல்லமா முன்ன தங்கியிருந்தேன் இப்ப என் பையன் வீட்டுல இருக்கேன். சாகபோற காலத்துல எங்க இருந்தா என்னமா அதான் பேத்திக்கு ஒரு கல்யானம் பன்னிபாத்துட்டா நிம்மதியா செத்துடுவேன்” என கிளம்ப அவருக்கு தெரியாமல் ஒரு அந்த பாட்டியின் நிழலை புகைபடம் எடுத்தாள் ஜெனி. அந்த டைரியில் அதை பார்த்த அன்புக்கு தன் பாட்டி என்ற ஆன்ந்தம். (ஏய் ஜெனி எங்க பாட்டிய நீ பாத்துருக்கியா) என்று மகிழ்ந்தாள்.

பின் லொகேஷ்ன் தேடி அழைந்தவளுக்கு ஒரு இடம் சிக்கியது அந்த புதருக்குள் இருந்த நாலைந்து கிளுக்குகள் கிளுக்கினாள். அப்போது ஒரு குரல்.

“மேடம் இந்த பிரிட் இங்க விட்டே ஆகனுமா”

“சொல்றத மூடிகிட்டு செய்றீங்களா”

“இல்லமா இந்த ஊரயே அழிச்சுடும் மேடம்” என்ற வார்தை வந்த திசையில் புதரை கிழித்துகொண்டு பார்த்தாள். அங்கு ஒரு படித்தவன் நின்றிருக்க கூடவே ஒரு பென் நின்றிருந்தாள். அவளது சத்தம் தான் பலமாக இருந்தது.

“மேடம் இது ஃபாரின் ரக பாம்புமா இந்த ஊர சுடுகாடா மாத்திடும் வேனாம்னு தோனுது” என்றான் அந்த இளைஞன் கையிலிருந்த கூண்டில் இருண்டு பாம்புகள் கோரமாக இருந்தன.

“இங்க பாரு இது வேகமா இனபெருக்கம் செய்யும் அப்புறம் சாகுறதுகுள்ள எப்புடியும் பத்து பாலூட்டியவாவது கடிக்காம விடாது. கடிச்சா அப்பயே மரனம்தான். இப்புடி எல்லாம் எனக்கு தெரியும் அதனாலதான் இங்க அதிக விலைகுடுத்து வாங்கி வந்துருக்கேன்”

“ஆனாலும் “ என அவன் இழுக்க.

“புல்சிட் ******மாதிரி பேசிகிட்டு இருக்க நான் சொல்றத செய்றியா இல்ல சாகுறீயா” என கூற அவன் “சரிங்க மேடம் “ என அந்த பாம்பை திறந்துவிட அவை அங்குகிடந்த தென்னை மட்டைகுளுக்குள் மறைந்தன. இவர்களின் செயலை ஜெனியின் கேமிரா படமெடுத்துகொணடே இருந்தது.

“மேடம் லேன்ட் கம்மி ரேட்ல கிடைக்குறதுக்கு இப்புடி உயிர்கூட விளையாடுறது சரியா”

“இது பிஷினஸ் இன்னும் கொஞ்ச நாள்ள இங்க பெரிய மில்ஸ் வர போகுது. இந்த நாயிங்கள காலி பன்ன சொன்னா விவசாயம் அது இதுன்னு ரூல் பேசுவானுக. ஆனா உயிர்னா பயப்படுவானுக. அதான் இந்த பாம்பு வைத்தியம். அது மட்டுமில்ல என் எதிரி கம்பெனி காவேரி லிமிடட்ல இங்க ஒரு மில் கட்ட பிளான் வச்சிருக்காங்க அங்க இருந்து ஒருத்தன் எனக்கு பார்வேர்ட் பன்னான். அதுக்கு முன்னாடி நாம இங்க கட்டனும்” என கூற அவளது முகத்தை தெளிவாக படமெடுத்தாள் ஜெனி. அந்த புகைபடத்தை பார்த்த அன்புக்கு தலை சுற்றியது. ஆம் இது ஜான்சி கல்யானத்தில் வந்து மிரட்டிய அதே பெண்.

பின் ஜெனி லாவகமாக எதுவம் தெரியாதவள் போல அங்கிருந்து நடக்க ஜான்சி அவளை பார்க்காமல் இல்லை கூடவே அந்த கேமிராவையும். “அந்த பொண்ண பாத்தீயா! எவ்வளவு அழகா நடிக்குறா” என ஜான்சி சிரித்துகொண்டே “கார்ல ஏறுங்க” என கூறி சென்றதை ஜெனி அறிந்திருக்கமுடியாது. அப்படி அறிந்திருந்தாள் இறந்திருக்க மாட்டாள்.

பின் அங்கிருந்த ஒரு பத்திரிக்கை நிறுவனத்திற்கு லட்டர் எழுதியவள் கூடவே அந்த புகைபடங்களை எடுத்து கவரில் போட்டாள். பின் தந்தை அழைக்க வெளியில் செல்ல நம்ம கூலிபடை தலைவன் சஞ்சீவ் அந்த லட்டரை எடுத்து. பிரித்தான். பின் தன் சித்தி வந்த அவசரத்தில் மேஜையின்மீது தன் கடிததோழி எழிலுக்கு எழுதபட்ட கடித்ததுக்குள் போக இரண்டு லட்டர்களின் உட்கருத்தும் மாறியது.

பணம் பத்தும் செய்யுமல்லவா ஜான்சியின் பணம் ஜெனியின் முகவரியிலிருந்து புறப்படும் லட்டரகளை கவனித்துகொண்டிருந்தது. அதில் சிக்கியது அந்த இரு லட்டர்களும்.

“ம்ம் ஜெனி நீ புத்திசாலிதான்டி! எங்கள குழப்ப இப்புடி பொய்யா லட்டர் எழுதி அட்ரஸ் மாத்தி அனுப்பிருக்க சூப்பர்” என அந்த லட்டர்களை கையில் வைத்துகொண்டு அந்த போஸ்ட் மாஸ்டருக்கு சில கட்டுகளை தள்ளினாள் ஜான்சி.

கூடவே இலவச இனைப்பாக “இந்த அட்ரஸ்ல இருந்து இதுவரைக்கும் சென்னைல ஒரு ஆசிரமத்துக்கு எழில்ங்குற பேருக்கு நூறு லட்டர் போயிருக்கும்மா” என அந்த போஸ்ட் மாஸ்டர் வழங்கினார்.

“ஏங்க மேடம் அந்த காவேரி கம்பெனி முதலாளி சன்முகம் நம்ம கம்பெனிய நோட்டம் பாக்க இந்த ஜெனிய அனுப்பிருக்கலாம் மேடம்”

“ஆமா நானும் அததான் சஸ்பெக்ட் பன்னுறேன். நல்லா யோசிச்சா. இந்த ஜெனிக்கும் சென்னைல இருக்கற எழிலுக்கு என்ன சம்பந்தம். ஏன் திடிர்னு இத்தன லட்டர் இவங்களுகுள்ள போகனும்”

“மேடம் அந்த சன்முகத்துக்கு ஒரு மகன் இருக்கான் தெரியுமா”

“ம்ம் சந்துரு” என்றாள்.

“அவனுக்கு இங்க ஒரு முறைபொன்னு இருக்கானு கேள்விபட்டேன்”

“அன்பரசி ஐ எம் ரைட்” என்றாள் ஜெனி.

“எப்புடி மேடம்?”

“எதிரிய அழிக்க முதல்ல அவங்கபத்தி தெரிஞ்சுக்கனுப்பா”

“ம்ம் அந்த ஜெனியும் இந்த அன்பும் ஒரே காலேஜ்ல படிக்குறாங்க”

“ம்ம் இதுதான் எனக்கு புரியாம இருந்துச்சு. இப்ப கிளியர்”

“அதோட மேடம்” என அவன் கூறும் முன். “ அந்த காவேரி கம்பெனில இருந்து அந்த ஆசிரமத்துக்கு பன்ட் போகுது கூடவே அந்த சந்துரு அந்த ஆசிரமத்துல எழிலரசிகூட அதிக நேரம் ஸ்பென்ட் பன்னுறான்.கடைசில எல்லாம் ஒரு கோட்டுல வந்துடுச்சு இனி இந்த ஜான்சியோட செக்மேட்தான்.”

“என்ன மேடம் பன்னபோறீங்க”

“அந்த அன்பு கன்னுமுன்னாடியே அந்த ஜெனிய முடிச்சாதான் சந்துருக்கு புத்தி வரும். சோ நாளைக்கு ஒரு லாரி வரவைங்க அப்புறம் நான் சொல்லுறமாதிரி பன்னுங்க கூடவே அந்த எழிலரசிய புலிகள் சரனாலயத்துல வச்சு முடிச்சிடலாம்” என திட்டுதீட்டியது அந்த டைரியில் இல்லை. அது ஜெனிக்கு தெரியாதல்லவா.

‘கர்த்தரே அந்த செய்தி சீக்கிரம் பேப்பர்ல வரனும் பாவம் அந்த மாரியம்மா பாட்டி என்ன பாவம். அந்த ஊர்காரங்கள காப்பாத்துப்பா நான் அவங்களுக்காக பிரார்தனைப்பன்னுறேன்பா. என குழம்பிகொண்டு சைக்கிளை எடுத்தாள்.

அப்போது ஒருகை ஜெனியின் சைக்கிளை பிடித்தது. “இப்ப உங்களுக்கு என்ன வேனும்” என்றாள் கோபமாக.

“என்ன மன்னிச்சிடு ஜெனி நான் தப்பா புரிஞ்சுகிட்டேன் ராஜேஷ்தான் எனகுக புரியவச்சான்”

“அப்ப என மனச உன்னால புரிஞ்சிக்க முடியல அப்புடிதான” என்றாள் கண்ணீர் வந்திருந்தது.

“இங்க பாருடி நீ இல்லாம என்னால வாழமுடியாதுடி ப்ளீஸ். இத்தன நாள் லவ்வ சொல்லமுடியாம நான் பட்ட கஷ்டம் எனக்குதான்டி தெரியும்”

“அப்ப உன்னயே நினைச்சுகிட்டு மனசுக்குள்ளேயே நான் அழுதுகிட்டு இருந்தது உனக்கு தெரியாதுல்ல” என்று அழுதாள்.

“நான் சொல்றத புரிஞ்சுகோடி”

“நீ என்ன புரிஞ்சுகிட்டியாடா”

“இல்ல என தப்புதான் அதுக்கு என்ன தன்டனை வேனா குடுடி நான் ஏத்துகிறேன்”

ஜெனி எதுவும் கூறாமல் நிற்க “அப்ப நீ எனக்கு தன்டனை குடுக்க மாட்ட நானே குடுத்துகேறேன்” என பிளேடை எடுத்து கையை வெட்ட போனான். அதற்கு அவனை அறைந்தாள்.

“ஏன்டா இப்புடி பன்னுற நீ இல்லாம மட்டும் நான் வாழுவேனா” என அழ அவன் அப்படியே நின்றான்

மொத்த ஈகோவும் தகர்ந்தது காதல் எனும் பூவின் முன். அதன் எச்சங்களாய் தன் கோபத்தை அவன் நெஞ்சின் மீது காட்டிவிட்டு அவனது மார்பில் தன் மென கரங்களால் அடித்ததில் வலித்திருக்கும் என நினைத்திருப்பாள் போலும் உடனே முகம் புதைத்துகொண்டாள். அவன் அவளை அரவனைத்தான்.

“ஜெனி இப்புடியே இருந்துடேன்”

“ம்ம் ஆனா வீட்டுல தேடுவாங்களே”

“அப்ப என்ன கல்யான்ம பன்னிகோ நான் பாத்துகிறேன் எந்த பிரட்சனை வந்தாலும் நீ என்கூட இருந்தா போதும்”

“எனக்கு ஒரு ஆசை இருக்கு” என்றாள் சினுங்களுடன்.

“ம்ம் சொல்லு பன்னிடலாம்”

“எங்க அக்கா அந்த வான்டு பயல தரமாட்டேங்குறா! நாம அவனமாதிரி ஒன்னு பெத்துகனும் அவன்கூட விளையாடனும்”

“ஒன்னுதானா?”

“ஹேய் நீ கெட்ட பையன்பா” லேசாக சிரித்துகொண்டே.

“ஒன்னு பெத்துக்க நான் எதுக்குப்பா உன்ன கல்யானம் பன்னனும் அதுக்கு நான் கோவமா போறேன்டி என் இதயத்த திரும்ப குடுடி” என ஆசிக் திரும்ப.

அவனது முகத்தினை திருப்பியவள் இதழுடன் இதழ் சேர்த்து முத்தமிட்டாள். அந்த காட்சிக்கு அவளது புகைபட கருவியும் கண்ணை மூடிகொண்டது.

பின் வெட்கபட்டு சிரித்தவள் “ஐ லவ் யூடா” என்றாள்.

“அடிபாவி நான் பர்ஸ்ட் சொல்லனும்னு இருந்தா நீ முந்திகிட்டியா எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல் இருந்து சொல்லுறேன்” என உதட்டை தடவினான்.

“போட ஒருநாளைக்கு ஒன்னுதான்” என அவள் சைக்கிளை எடுத்துகொண்டு பறந்தாள். அங்கு நடந்துசென்ற அன்பும் ராஜேஷும் கண்ணில் படவே எப்படியும் ராஜேஷ் தன்னை கலாய்க்கும் முன் அவர்களை கலாய்க்க எண்ணினாள்.

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்என சைக்கிளின் மணியோசையை எழுப்பிகொண்டு இந்த லவ்பேர்ட்ஸ் கொஞ்சம் வழிவிட்டு பறந்தீங்கன்னா நல்லா இருக்கும்என ஜெனி இருவரின் பின்னாடியும் சைக்கிளில் வந்தாள்.

ஏம்மா உனக்குத்தான் அவ்வளவு இடம் இருக்குள்ளஎன ராஜேஷ் சிரிக்க ஏய் ஜெனி நீதான் அப்போவே கிளம்பிட்டியே ஆனா இப்போ எங்க பின்னாடி வந்துகிட்டு இருக்கஎன சந்தேகமாக கேட்டாள் அன்பரசி.

அன்பரசி யின் கைகளை பிடித்திருந்த ராஜேஷோ அவ ஆசிக்கை கொஞ்சிட்டு வந்திருப்பாஎன ராஜேஷ் சிரித்தான். “என்ன ஆசிக்கா? யாரு அந்த கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டா?” என அன்பரசி கேட்கவே

ஆமா அந்த ஆசிக் முகமது தான் ராஜேஷ் கூறும் முன் ஜெனி இவர்களை கடந்து ஒரு ஐம்பது அடி சென்றிருப்பாள்.

உடனே அன்பரசி ஏய் ஜெனி நீ கூட லவ்பேர்ட் தானாஎன கத்தினாள் மகிழச்சியில். அன்பரசியின் ஓசை ஜெனியின் காதினை அடைய அவள் சைக்கிளை ஓட்டியபடியே தன் தோழியை திரும்பிபார்த்து சிரித்தாள்.

ஜெனி………” என அன்பரசியின் தொண்டையிலிருந்து பலத்த குரல்.

ஜான்சி ஜெனியின் தொன்டையை அறுத்துவிட்டு காரில் பறந்தாள். அவள் கழுத்தில் ரத்தம் வழிவதை கண்ணாடி வழியே பார்த்தாள் ஜான்சி. “இன்னும் சாகலையா ஜெனி உனக்கு ஆயிசு கெட்டிதான்” என்ற நேரம் ராஜேஷ் அங்கு ஓட பின்னால் வந்த ஜான்சியின் லாரி ஜெனியை ஏற்றியது. “ம்ம் செத்துட்டா! முடிஞ்ச்சு! அன்பு நீ இப்பவாவது திருந்துடி” என தன் கையை தலைகீழாக காட்டி அன்புக்கு சிக்னல் செய்து காரில் பறந்தாள்.

ஹாய் அன்பு நான் ஜான்சி, ஏன் ஜெனி டைரில நான் வந்திருக்கேனு பாக்குறியா. அவள கொண்ண்து உன் புருசன் சந்துரவ பலிவாங்கதான். ஒரேகல்லுல ரெண்டு மாங்கா மாதிரி நீயும் இப்ப அவன கல்யானம் பன்னி மாட்டிகிட்ட. என் அப்பாவ கொண்ண குடும்பத்த நான் முழுசா அழிக்காம விடமாட்டேன் அன்பு. மன்னிக்கனும் அவன் உன்ன எப்புடி கூப்பிடுவான் அரிசின்னுதான. ம்ம் சீக்கிரம் ஒரு குழந்தைய பெத்துகிட்டு சாக ரெடியா இரு இல்லைனா அவன் சாவ பாக்க தயாரா இரு டிக்டாக். இப்படிக்கு ஜெனியின் டைரியில் முடிவுரையாக ஜான்சி.

அப்புறம் ஒன்னு மறந்துட்டேன்மா அந்த பாம்பு அதுக்குள்ள கோவபட்டு உங்க பாட்டிய கடிச்சது எனக்கு தெரியாது. சாரி.

அன்புக்கு அழுகை வரவே தன்னவனை பார்த்தாள். அவன் குழந்தையென் உறங்கிகொண்டிருந்தான். அவனை கொல்வேன் என அவள் எழுதியிருந்தது சாதாரன விசயமாக தெரியவில்லை அன்புக்கு. ஜெனியின் கொலையை நேரடியாக பார்த்தவள் அல்லவா. மறுநாள் தன்னவனிடம் “எனக்கு குழந்தை வேனும்ங்க” என அடம்பிடக்கலாம் என மூளை அவளை உந்தியது. ஆனாலும் தற்போது தேவை அவனுது அரவனைப்புதான். மிகவும் பயந்திருந்தவள் அந்த டெடியை பிடுங்கிவிட்டு அந்த இடத்தை நிரப்பினாள். உடல நடுங்கியது பயத்தில்.

‘நான் உங்கள சாகவிடமாட்டேன்’ என மனதில் புலுங்கினாள்.

சட்டென அவனுக்கு முழிப்பு வர “யாரோ நான் உங்க பக்கதுல படுக்கமாட்டேனு சொன்னாங்கப்பா” என்றான் நக்கலாக அரைதூக்கத்தில்.

பதிலுக்கு அவள் அழுவது தெரியவே “அன்பு ஏன் அழற”

அவள் ஏதும்கூறாமல் திரும்பி படுத்துகொண்டு அழுதாள். அவனுக்கு குழப்பமாக இருக்க தன் கைகளால் அனைத்தான். ஏதும் சொல்ல மனம் வரவில்லை. அப்படியே உறங்கிபோனாள். அவன் அவள் தலையை கோதிவிட்டு உறங்க வைத்தான். பின் யோசித்துகொண்டே அமர்ந்தவனுக்கு அந்த நினைவு வந்தது.

“மாப்ள நாளைக்கு மறுவீட்டுக்கு போறதுக்க நாள் நல்லா இருக்க” என தன் மாமா கூறும் போது அன்பரசியின் முகம் ஒருவினாடி வாடியதை பார்க்க தவறவில்லை இவன்.

“அடி அரிசி இந்த ஊர என்னலையே பிரிய முடியல! நீ இங்க ஆட்டம் போட்டுகிட்டு சுத்துனவ இந்த ஊருதான் உன்ன பிரிய முடியாம அழனும் ஆனா நீ அழற! பயப்படாதமா நான் பேக்டரியோட சேத்து இங்க வீட்டையும் கட்டிடுறேன அப்புறம் நீதான்மா ராணி எனக்கு” என்று அவளது ஊர்பாசத்தை எண்ணி நெகிழ்ந்தான்.

பின் தன்னவள் தூங்கும் அழகை ரசித்தான். அவளது பால் முகத்தை மறைக்குமாறு விழுந்த அந்த கூந்தல்களை எடுத்து விலக்கி அவள் அழகை ரசித்துகொண்டு உறங்காமல் கழித்தான்.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 4நிலவு ஒரு பெண்ணாகி – 4

வணக்கம் தோழமைகளே, போன பகுதி பற்றிய உங்களது கருத்துக்களுக்கு நன்றி.  இன்றய பகுதியில் நான் முன்பே சொன்னதைப் போல நிலாப்பெண்ணின் சிறிய இன்ட்ரோ. அவளைப் பற்றிய பகுதிகளை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நான்காவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து

நிலவு ஒரு பெண்ணாகி – 10நிலவு ஒரு பெண்ணாகி – 10

வணக்கம் பிரெண்ட்ஸ். போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. பிண்ணணியில் நான் போட்டிருந்த யக்க்ஷி படத்தை சிலர் ரசிச்சிருந்திங்க. பாடலுடன் கேட்கும்போது நன்றாக இருப்பதாய் சொல்லிருந்திங்க. எல்லாவற்றிக்கும் நன்றி. இன்றைய பதிவில்  மஹாமேரு பத்தி என் அறிவுக்கு எட்டின வரை

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

கனவு – 19   அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான்.   “10.04.2015