Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 54

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 54

உனக்கென நான் 54

தன்னவன் உறங்க தன் தோழியின் நினைவுகளை தாங்கியிருந்த நினைவுகளை புரட்டினாள். அதில் மொத்த டைரிக்கான விதியையும் தகர்த்திருந்தாள் ஜெனினியின் புதுமை அப்படி. அன்புக்கும் அந்த எண்ணம்தான்.

இங்க பாருங்கப்பா எனக்கு டைரிலாம் எழுதுற பழக்கம்லாம் கிடையாதுப்பா அதுமில்லாம இந்த டைரி நான் பத்தாவது படிக்கும்போது எக்ஸிபிஸன்ல வாங்குனது இப்பதான் தூசி தட்டி எடுத்தேன். சும்மா எழுதலாம்னு ட்ரை பன்றேன். இந்த டேட் பத்தி கேக்காதீங்க எனக்கு டேட் நியாபகம் வச்சுகிறுது பிடக்காதுப்பா. அதனால எப்புடி இருந்தாலும் மன்னிச்சிடுங்க. அப்புறம் இத யாராவது கன்டிப்பா திருட்டுதனமா படிப்பீங்கனு எனக்கு தெரியும் அதனால இப்பயே சொல்லிடுறேன் உங்க இன்சூரன்ஸ் பாலிசிய ஒருவாட்டி செக் பன்னிக்கோங்க. நம்ம எழுத்தும் வார்த்தையும் அப்புடி. கொஞ்சம் நான் கோவகாரிப்பா அதனால இடைல சில வார்த்தை வந்தா மன்னிசிடுங்க

என அடுத்தவர் டைரியை எடுத்து படிக்கும் அரிசி போன்ற திருட்டு எலிகளுக்காக தன் வணக்கத்தை தன் பானியில் வைத்திருந்தாள் ஜெனி.

ம்ம் நான் இன்னைக்கு காலேஜ் போரேன்பா எனக்கு பிடக்கவே இல்ல எங்க அப்பாவ நான் போட்டோ எடுக்குற மாதிரி காலேஜ்ல சேத்துவிட சொன்னா நீ டீச்சர்தான் அப்புடின்னுட்டாரு. அப்ப நீ கேக்க வேண்டியதுதானனு கேக்குறீங்களா நீங்களே கேக்கும்போது நான் கேக்க மாட்டேனா எங்க அப்பாகிட்ட நீங்க ஒன்னும் சொல்லவேனாம். அதுக்கு அவரு உங்க அக்காமாதிரி யாரயாவது இழுத்துட்டு ஒடுறதுக்கா அப்புடின்னுடாரு. அவ்வளவுதான்பா நான் சைலன்ட். அப்புறம் ஒரு விஷயம் கர்தரே நான் இன்னைக்கு செம்ம கோவத்துல இருக்கேன் சோ எனகிட்ட யாரும் வந்து பிரன்டு பிடிக்குறேன்னு பேசி திட்டுவாங்காம பாத்துகோங்க. இல்லைனா நான் உங்க்கிட்ட பாவமன்னிப்பு கேப்பேன்னு நினைக்குறேன்.

என அன்பரசி படிக்கும்போது “நீ அப்ப இருந்தே அப்புடிதானா ஜெனி” என கூற “யாருங்க மேடம்” என்றான் சந்துரு.

“நீங்க இன்னும் தூங்கலையா”

“இல்ல ஒட்டுபாக்குறேன்” என சந்துரு கூற முறைத்தாள்.

“ஏம்மா நீ மட்டும் நான் தூங்குறத பாக்கலாம் நான் நீ பேசறத நான் கேக்ககூடாதா” என கண்களை திறக்காமல் கூறினான். “இப்புடி நீங்க பாத்தா நான் எப்புடி படிக்குறது” என சினுங்க “சரிம்மா அடுத்தவங்க ரகசியம் எனக்கு எதுக்குப்பா” என மீண்டும் தூங்க ஆரம்பித்தான். இல்லை நடிக்க ஆரம்பித்தான்.

ஹேய் நல்ல வேலைப்பா நானகூட காலேஜ்ல போர் அடிக்கும்னு நினைசேன்பா அங்க எனக்கு ஒரு பிரன்டு கிடைச்சுட்டா. அவள பாக்குறீங்களா  என கீழே ஒரு போட்டோவை இனைத்திருந்தாள்.

அது அன்பரசி பாவமாக முதல்நாள் அம்ர்ந்திருந்தபோது அவளுக்கே தெரியாமல் எடுக்கபட்ட புகைபடம். அதை பார்த்த அன்புக்கு உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

என்னப்பா போட்டோவ பாத்துட்டு இந்த வாயாடிக்கு இப்புடி ஒரு அமைதியான பிரன்டானு நினைச்சுடாதீங்க. என டைரியை வாசிக்க அந்த நாள் நினைவுகள் வந்தன.

‘எங்க அப்பாகிட்ட என்ன கேட்டேன் ஒரு ஸ்கூட்டர்தான! பாவம் பொண்ணு காலேஜ்க்கு முதல்நாள் போறாளே அப்புடின்னு வாங்கிதர்ராரா! ம்ம் என்ன அந்த கிளவிக்கு நான் ஸ்கூட்டர் ஓட்டி கால் உடஞ்சதால நான் என்னப்பா செய்வேன். சரி பிரேக்கு பதிலா ஆக்ஸிலரேட்டர் முறுக்கிட்டேன். சின்ன தப்புதான! இதுக்கு என்ன சைக்கிள்ல போக வச்சுட்டாரே” என சோகமாக அமர்ந்தருந்த தருனம்.

“ஹேய் நீ எந்த ஊர்டி” என முதல் பெஞ்சுக்காக சிலர் அவளிடம் வந்துநிற்க

“ம்ம் ஆஃபிஸ்ல போய் கேளுங்க சொல்லவாங்க” என்று முடிக்க ஜெனி ‘சம்திங்க இன்டரெஸ்டிங்க’ என ஆர்வமானாள.

“ஏன் உன் திருவாய திறந்து சொல்லமாட்டியா”

“ம்ம் சொன்னா என் வாயில இருக்குற முத்து உதிந்துபோயிரும்டி! நானே கடுப்புல இருக்கேன் பேசாம போயிருங்கடி” என்றாள். ஜெனிக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த துனிச்சல் பெண்ணை.

“என்னடி காலேஜ் முதல்நாள்ள உனக்கு கடுப்பு” என ஒரு பெணகூற “என்னடி ஓவரா பேசுறீங்க இப்ப என்ன வேணும் உங்களுக்கு”

“ம்ம் இந்த முதல் பெஞ்சு எங்களுக்கு வேனும்”

“ஓஓ அப்புடியா” என கூறியவள் எழுந்து “ஹேய் இங்க வாடி” என ஜெனியை அழைக்க ஜெனியின் கால்கள் ஏன் அவளை நோக்கி நகர்ந்தது என்று தெரியவில்லை. கேமிராவை கழுத்தில் மாட்டிகொண்டு அவளருகில் சென்றாள்.

“இத பிடிடி” என்றாள் அரிசி

“ம்ம்” என அந்த பெஞசை இருவரும் பிடிக்க அது முதலில் இருந்து கடைசி இருக்கைக்கு தள்ளபட்டது. இரண்டாவதாக இருந்த இருக்கை முதலாவதாக மாறி பல்லை காட்ட “இப்ப போய் எடுத்துகோங்கப்பா” என அதில் அமர்ந்தாள்.

“என்னடி கிண்டலா” என ஒரு பெண் கேட்க “பச்ச்” என எழுந்த அரிசியை பார்த்த இருவரும் தங்களை அடித்துவிடுவாள் என்ற பயத்தில் “அம்மா தங்கச்சி நாங்க இந்த டிபார்ட்மன்ட் செகரட்டரிம்மா. சும்மா ஜுனியருக்கு ரேகிங் விழிப்புனர்வு ஏற்படுத்த இந்த திட்டம் போட்டோம். ஆனா எங்களுக்கு இப்ப தனி கவுன்சிலிங்க் தேவைபடும் போல” என அந்த அக்கா சிரிக்க உடன் ஜெனிக்கும் சிரிப்பு வந்தது.

சொல்லுங்கப்பா இவளா பாவம் அந்த அக்காங்கதான் பாவம். அவள எப்புடியாவது பிரன்டு ஆக்கனும் எனக்கு. பாக்கலாம். என முடிய அன்பு சிரித்துகொண்டே அடுத்த பக்கத்தை திருப்ப அதில் ஒரு வருடம் கடந்து ஒரு தேதி இருந்தது.

ஹே சாரிப்பா சில நாட்களா உங்கள பாக்கமுடியல நான் அன்புகூட! அவ பேர் சொல்லலைல. அவ அன்பரசி. இல்ல அன்புனு நான் கூப்பிடுவேன். மத்தவங்களுக்கு ராட்ச்சி! ஆமா கொஞ்சம் வாலு! அவ எனக்கு பிரன்டா கிடைச்சுட்டா எப்புடின்னு கேக்குறீங்களா அது எப்புடின்னு இன்னும் எனக்கு தெரியல. சரி அத விடுங்க அவளோட சேட்டை இப்ப குறஞ்சிடுச்சு. ஆமா மேடம் காதல்ல விழுந்துட்டாங்க. ஆனா சொல்ல மாட்டாங்க. ஆனா எனக்கு இந்த அன்பு பிடக்கலப்பா. அதனால ஒரு ஐடியா பன்னிருக்கேன்.

ஆமா நாளைக்கு இந்த சங்கீதாவையும் சிந்துஜவையும் வச்சு ஒரு கேம் ஆட போறேன். ஆமா ஸ்கிரிப்ட் படி சங்கீதா இப்ப நம்ம ஹீரோ ராஜேஷ்கிட்ட லவ் சொல்ல போறாங்க! அப்ப நம்ம ஹிரோயின் அன்புக்கு கோபம் வரும் அப்புறம் என்ன காதல் ஸ்டார்ட் ஆகிறும் நாளைக்கு பாக்கலாம்பா என்ன நடக்குதுன்ன. ம்ம் நான் பிஸி ஆகிட்டா வரமாட்டேன் ஸோ வெயிட் பன்னனும்.

அதற்கு அடுத்து நடந்த அந்த டிராமாதான் அன்பரசி கேன்டினில் வைத்து காதல் சொன்ன கதை. அதில் நடித்த நடிகர்கள் சங்கீதா (இவளுக்கு பெரிய மனசுதான் ஆமா ராஜேஷ் மீது காதல் இருந்தும் தன் தோழிக்காக விட்டு கொடுத்தவள்). பின் சிந்துஜா. முக்கியமாக ராஜேஷ். அப்புறம் மிக முக்கிய ரோல் ஜெனி. பலி ஆடு அன்புதான். இயக்கம் திரைகதை வசனம் ஜெனி. என அரிசி அந்த டைரியை படிக்க சிரிப்பு வந்தது. “அடிபாவி என்னடி என்ன வச்சி இப்புடி விளையாடிருக்கீங்க” என்று இல்லாத ஜெனியிடம் கேள்விகேட்டாள்.

அடுத்த பக்கத்தை புரட்ட எனக்கு என்னப்பா ஆச்சு கொஞ்ச நாளா மனசு சரியில்ல. அது எனகிட்ட இல்லைனுதான் நினைக்குறேன்

என வாசிக்கும்போது சந்துருலேசாக உடலை அசைக்க புரன்டு படுத்தான். அந்த டெடிபியர் தலையனை அவனுக்கு கீழே சிக்குன்டது. அவன் படுத்திருந்த நிலைக்கு அவன் உடலில் சில பகுதிகளுக்கு ரத்தத்தை பாய்ச்ச நிச்சயம் இதயம் சிரம்படும்.

உடனே அரிசி அந்த தலையனையை இழுக்க முயன்றாள் முடியவில்லை. பின் வழுவாக இழுத்தாள். “சந்துரு எரும என்னடா நீ முன்னவிட வெயிட்டா இருக்கடா என்னால முடியல எந்திரிடா” என அவனை பார்த்து மெதுவாக திட்ட அவன் லேசாக சிரித்தான். அவனுக்கு என்ன கனவோ.

மீண்டும் விடா முயற்சி என இழுத்தாள். இம்முறை வெற்றி. அதற்கு விலை அரிசி டெடிபியர் தலையனை அப்புறம் அந்த டைரி என மூன்றும் கட்டிலில் இருந்து கீழே விழ “அம்மா” என இடுப்பை பிடித்தாள்.

“என்ன தள்ளிவிட்டுட்டு தூங்கறத பாரு” என இடுப்பே தேய்த்துகொண்டு எழுந்தவள். அவன் உடல் குளிரில் நடுங்கவதை பார்த்து அவனருகில் அமர்ந்து போர்வையை போர்த்தினாள்.

பின் அப்படியே அந்த டைரியை அவள் கைகளை விட்டு துலவ அந்த நேரம் தூக்கதில் அவன் டெடிபியரை தேட மாட்டியது அரிசிதான். நன்கு அனைத்துகொண்டான். அவனுது அனைப்பிலிருந்து வெளியே போக அவளால் முடியவில்லை. அவள் முயற்சிக்கவில்லை எனபதே உண்மை.

இந்த அனைப்பு அவள் ஏற்கனவே அனுபவித்த நியாபகம் லேசாக மூளையிலிருந்த கிளம்பி வந்தது. அன்று தாய் இல்லாத பையன் என பரிதாப்பட்டு அவனுக்கு போர்வை போர்த்திவிட்டு பின் தன் தாயின் சீலையை போர்வையாக்கியவள். நடு இரவில் குளிர் எடுக்க தன் போர்வேயை நாட அதிலிருந்த கூட்டுபுழு அந்த சின்ன சந்துரு.

குளிர் தாக்கத்தால் அரை தூக்கத்தில் புகுந்தவள் அவனை அனைத்துகொண்டு கதகதப்பு தேடியிருக்கிறாள். அன்றிலிருந்துதான் சந்துருவுக்கு இந்த டெடிபியர் பழக்கம் தொற்றிகொண்டுவிட்டது. அந்த தருனம் நினைவுக்கு வரவே சற்று வெட்கமாகதான் போய்விட்டது அரிசிக்கு பின் தன்னவன் மடியில் உறங்கிபோனாள்.

அரவனைப்பு யாதென தேடிய

அர்தங்கள் நிமிடத்தில்

உணர்த்தி துயில்கொள்ளும்

மன்னாளன் மனதில்

சுமக்கும் என்னை

எனக்கு பிடித்திருக்கிறத

ஒருபடி மேல் பொறாமை

அந்த கனவு பிம்பத்தின் மீது

எனக்கு!!! இந்த அனைப்பு

என் வாழ்வின் சொர்க்கமடா

இதுபோதும் நான் இங்ஙனம்

சாக ஆயத்தம்.

என அவனது கையை அனைத்துகொண்டு துயில் கொண்டாள். நிலா பல்வேறு கோணங்களில் இவர்களை அந்த சிறிய ஜன்னல் இடுக்கு வழியே ஆசையாய் நோட்டம் பாரத்து தோற்றது. அதற்கோர் ஆசை. எந்த கோணத்திலும் இயலாத காரணத்தால் சோகமாக தன் மன்னவன் சூரியனை அழைக்கும் நேரம். அன்புக்கு வழக்கம்போல முழிப்பு தட்ட அங்கிருந்த கடிகாரம் நான்கை காட்டியது.

இன்னும் அவன் அவளை சிறைபிடித்துதான் இருந்திருந்தான். அவனது கையிலிருந்து தப்பிக்க முயன்றாள். தோல்வி சதுரங்க ராணிக்கு வந்த சோதனை இது. “ஐயோ கடவுளே  அந்த டெடி பாவம்பா” என திட்டினாள்.

“சந்துரு விடுங்க நான் குளிக்கனும்” என்று சினுங்க அவனோ நன்றாக இருக்கிகொண்டான். சந்துருவை பொருத்தவரை தனது டெடி அவள். வேறு வழியில்லாம் சிறிதுநேரம் விழித்தவள். அந்த அனைப்பில் மயங்கி மீண்டும் துயிலுக்கு செனாறாள்.

“ஹலோ அரசி மேடம் குட் மார்னிங்” என்று அவளை எழுப்பினான் கையில் பூஸ்டுடன். “ஐயோ மணி ஏழு ஆச்சுங்க” என்று பதறினாள்.

“ஏன் ஸ்கூலுக்கு போகனுமா! நான் குளிச்சுட்டேன்மா பயப்படாத ரெஸ்ட் ரூம் ஃபிரியாதான் இருக்கு. அப்புறம் கார் ரெடிதான் வேனும்னா நான் டிராப் பன்றேன்” என்று பூஸ்டை அவளிடம் கொடுக்க. அவளது பயம் தன் பெரிய மனுசி ஆனதுக்கு அப்புறம் நான்குமணிக்கு எழுந்திரிக்கவேண்டும் எனபது பார்வதியின் உத்தரவு. ஒருமுறை ஆறுமணி வரை உறங்கியதால் பார்வதி அடித்துவிட்டார். அந்த பயம்தான் இன்று. தலையில் கைவைத்து தன் தாய் வருகிறாளா என்று பார்த்தாள்.

“என்ன மேடம் நான் உங்க கண்ணுக்கு தெரியுரேனா” என்ற சந்துருவை பார்த்தாள். “இந்தாங்க உங்க ஃபேவரட் பூஸ்ட் என் பிரபரேஷன்” என்றான்.

“இல்லைங்க பிரஸ் பன்னிட்டு” என்று கூறும்முன் “இன்னாரம் அரிசியா இருந்தா இப்புடி யோசிக்கமாட்டா” என்றவுடன் வாங்கி குடித்தாள்.கண்கள் பார்வதியை தேட பார்வதி வந்தார்.

“என்னமா இப்பதான் எழுந்திருக்கிறியா சரி குளிச்சிட்டு வா அம்மா சாப்பாடு எடுத்து வைக்குறேன்” என அமைதியாக கூறி செல்ல அன்புக்கு வித்தியாசமாக இருந்தது.

“அரிசி பாத்தியா எனக்கு தரனும்னு தோனுச்சா உனக்கு! நம்மக்குள்ள பார்லீஜி ஒப்பந்தம் மட்டும்தான் இருக்கு! பூஸ்ட் உடன்படிக்கை போடல சரியா” என அவள் குடித்துகொண்டிருக்க அதை பிடுங்கிஇவன் குடித்துவிட்டு. “மீசை நல்லா இருக்குடி டிரிம்மர் வேனுமா” என்றான்.

“நீங்கதான் பிடுங்கறேன்னு ஆட்டிவிட்டு இப்புடி ஆகிருச்சு” என வாயை துடைத்தாள். “ம்ம் மக்களே நம்புங்கப்பா” என சந்துரு கூற “நான் எப்ப இப்புடி குடிச்சுருக்கேன்” என முறைத்தாள்.

“எனக்கும் பொய்சொல்ல கத்துகுடு அரிசி”

“நான் பொய்யே சொல்லமாட்டேன்பா”

“ஓஓ அப்ப நீச்சல் கத்துதாரேன்னு சொல்லிட்டு யாருப்பா இன்னும் கத்துதராம சுத்திகிட்டு இருக்குறது இப்புடி மீசை வச்சுகிட்டு” என தன் உதட்டை தடவினான்.

“அரிசி நீச்சல்” என கன்மாய்கரையில் நடந்ததை நினைவுபடுத்த “அம்மா இருக்காங்க” என ஓடி குளியலறையில் பதுங்கினாள். மீதிமிருந்த தேன்துளியை ரசித்து பருக ஆரம்பித்தான்.

“ரஞ்சிதம் அம்மா தம்பி எழுந்துட்டானா”

“ம்ம் எழுந்துட்டாங்க பாபப்பா குளிக்க போயிருக்கு”

“ம்ம்” என டைனிங் டேபிளில் அமர்ந்தாள் ஜான்சி.

ரஞ்சிதம் அவர்கள் வீட்டில் நீண்ட நாட்களாக வேலை செய்யும் சமையல் ஆள். ஜான்சி மற்றும் சேகர் மீது பாசம் அதிகம் அவருக்க.

“இட்லி இருக்குமா சாப்புடுறீங்களா”

“இல்லமா தம்பி முதல்ல சாப்புடட்டும்” என அமைதியாக டைனிங்க டேபிளில் தாடையை வைத்து சோகமாக அமர்ந்தாள். ரஞ்சிதம் அம்மா அவளது சோகமான முகத்தை பார்த்து பெருமூச்சு விட்டு சென்றார். ‘ஐயா இருந்திருந்தா இதுங்க இப்புடி உறவு இல்லாம இருந்திருக்குங்களா! ஜான்சி பாப்பாக்கு இன்னாரம் கல்யானம் பன்னி குழந்தையோட விளையாடிட்டு இருந்திருப்பாரு’ என மனதிறுகுள்ளே பேசிகொண்டு சென்றாள்.

“அக்கா எப்ப வந்த” என படியிலிருந்து சுறுசுறுப்பாக இறங்கிவந்த சேகரை பார்த்ததும் ஜான்சி உற்சாகமாக நிமிர்ந்தாள். அவன் ஸ்பைடர்மேன் மாதிரி இது வரை அவனிடம் அந்த வேகம் குறையவே இல்லை.

“இல்லடா இப்பதான் வந்தேன்”

“சாப்புட்டியா”

“இல்ல நீ சாப்புடு முதல்ல”

“ச்ச்ச் இங்க பாரு எனக்கெல்லாம் வெயிட் பன்னாத சரியா உன் உடம்ப பாத்துக்க”

“அய்யோடா பெரிய மனுசனா ஆகிட்டியா அக்காக்கு அட்வைஸ் பன்றியே குட்”

“இதுல என்னக்கா அட்வைஸ் இருக்கு! நீ என்ன பாத்துகிற பதிலுக்கா நான் உன்ன பாத்துக்க வேனாமா”

“ஆரம்பிச்சுட்டியா வா உட்காரு” என இரண்டு இட்லியை எடுத்து வைத்தாள்.

“என்னக்கா இட்லி போர்க்கா”

“ரஞ்சிதம் அம்மா பாவம்ல அவங்களுக்கு வயசாகிருச்சுல நீ வேற சமையல்காரி வேனாம்னு சொல்லுற” என்று சேகரிடம்கூற.

“சரிக்க இட்லிவை” என்றான் சோகமாக.

சிறிது யோசித்தவள். “சரிடா இன்னைக்கு அவங்களுக்கு ரெஸ்ட் குட்த்துடலாம்”

“என்னக்கா பன்னபோற”

“கோட்டை உட்புகுதல்” எனகூற அவன் சிரித்துகொண்டே “சூப்பர்க்கா” என தட்டை எடுத்துகொண்டு சமையலறையில் புகுந்தான். ரஞ்சிதம் அம்மாவை தூக்கியவன் அங்கிருந்த ஒரு சேரில் அமரவைத்து “அம்மா டேக் ரெஸ்ட்” என்றான்.

பின் அந்த கேஸ் அடுப்பின் பக்கம் அவன் அமர தோசை கல்லை எடுத்து அடுப்பில் அதன் அடியில் நெருப்பு வைக்க அதன் மீது விழுந்த நீர்துளிகளின் மீது கோபத்தை காட்டியது. புஸ்ஸ்…

“பாப்பா தோசை கேட்டுருந்தா நான் சுட்டு குடுத்துருப்பேன்ல” என்றார் ரஞ்சிதம்.

“இது ஜான்சிராணி தோசைம்மா மை ஃபேவரட்” என்று சேகர் கூற முதல் தோசை சூடாக விழுந்தது தட்டில்.

“எல்லாம் சரி அன்னைக்குமாதிரி கைய சுட்டுகிட்டு வந்த எனக்கு கெட்ட கோபம் வரும்பாத்துக்கமா” என்றார் ரஞ்சிதம்.

“அத நான் பாத்துகிறேன் ஸ்வீட் மம்மி” என்று கன்னத்தை கிள்ளினாள் ஜான்சி. “என்னமோ பன்னுங்க நான் வீட்ட பெருக்குறேன்” என கிளம்பினார்.

“அவங்களவிட நல்லா சமைக்குறேன்னு பொறாமைக்கா” என்றான்.

“டேய் நெய் வேனும்னா கேளுடா அதுக்கு ஏன் ஐஸ் வைக்குற” என அவள் கூற தட்டை நீட்டினான் அனைத்து பற்களும் தெரிய.

“அக்கா மாமா குடுத்து வச்சவருதான் ஜான்சி தோசை போட்டே கவுத்துடுவ” என்றான் குறும்பாக. ஜான்சியின் முகம் மாறியது.

“என்னக்கா ஆச்சு சாரிக்கா” என்றான் சோகமாக. “ச்சீ லூசு அம்மா வெங்காயம் வெட்டி அப்புடியே வச்சிட்டு போயிருக்கு அதான் கன்னு கலங்குது” என்று சமாளித்தாள். ஆனாலும் சேகருக்கு மனதில் உறுத்தல் எவ்வளவு சொல்லியும் கல்யானம் வேனாம்டா நீ நல்லா இரு எனக்கு அது போதும் என கூறும் தன் அக்காவிடம் என்ன பேசுவான். அதனால் சோகத்தை காட்ட.

“டேய் யாருடா அந்த பொண்ணு ரொம்ப நேரமா கடலை போட்ட”

“யாருக்கா”

“அதான் கல்யானத்துல தாவனி கட்டிகிட்டு சுத்திகிட்டு இருந்தாலே! அக்கா உனக்கு போட்ட மோதிரம் நான் அங்கருந்து வரும்போது அவகிட்ட இருந்துச்சே”

“அக்கா பாத்துட்டியா”

“ஆமா அங்க இருந்த எல்லாரும் உன்னதான் பாத்துகிட்டு இருந்தாங்க”

“வளர்க்கா”

“என்ன வல்லாரைகீரையா” என்றாள் நக்கலாக

“வளர்மதிக்கா காலேஜ் பஸ்ட் இயர் படிக்குறா கம்ப்யூட்டர் சைன்ஸ்ம

“ஓஓ சார் அதான் டிப்ஸ் குடுத்துகிட்டு இருந்தீங்களோ”

“இல்லக்கா சும்மா போசிட்டு இருந்தேன்”

“அவள பிடிச்சிருக்கா”

“ம்ம்”

“இதோட நாலாவது லவ்வுடா உனக்கு”

மூனும் வெள்ளைகாரிங்க்ககா இது நம்ம ஊர் பொண்ணு”

“என்னமோபா அக்கவேனா பேசி முடிச்சிடவா! வேனாம் தரமாட்டனுக தூக்கிட்டு வந்திடலாம்” என்று கண்ண்டிக்க “ஆமா தூக்கிட்டு வந்து என்ன பன்றது” என்றான். “நல்லா கேக்குறடா கேள்வி” என்றுகூறிவிட்டு நல்ல நெய ஊற்றிய தோசையை வைத்தாள்.

“அக்கா ஒன்னு சொல்லவா”

“என்னடா”

“இல்ல எனக்கு கனவு வருதுனு சொல்லிருக்கேன்ல”

“ஆமா”

“அந்த கழுத்த அறுத்துகிட்டு சாகுற பொண்ணு வளர்மதிதான்க்கா”

“என்னடா சொல்லுற”

“அதான் அவ எனகிட்ட இருந்தா எதாவது பன்னிகுவானு பயமா இருக்கு”

“டேய் அது நீயா கற்பனை பன்னிகாதடா அவளுக்கு பதினெட்டு வயசு ஆகட்டு அக்கா பேசுறேன் இரு” என கூறிவிட்டு அடுத்ததோசையை வைத்தாள்.

“இல்லக்கா போதும்” என்று வைத்துவிட்டு செல்ல அடுப்பை அனைத்தவள் அவன் மீதம் வைத்த தோசையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். கையோடு ஃபோனை எடுத்தவள்.

“ஹலோ என்ன புடுங்கிகிட்டு இருக்கீங்க! அந்த கம்பெனி ஆர்டர் நம்மலவிட்ட போக்கூடாதுனு சொன்னேன்ல” என்றுகூற மறமுனை “இல்ல மேடம்” என்றது

“உங்கள வேலைக்கு வச்சேன்ல அது என தப்பு நீங்க *****தனம் பன்னிகிட்டு கம்பெனிய விட்டுடுறதா. ****மாதிரி பிகேவ் பன்னாம நான் சொல்றத கேளுங்க இல்லைனா வேலையவிட்டு மூடிட்டு போங்க”

“அந்த கம்பெனி புதுசு அதான் கோட் கம்மியா போட்டுருக்காங்க”

“அப்ப அந்த கம்பெனி பத்திரமும் அந்த முதளாலியும் நாளைக்கு என் ஆஃபிஸ்ல இருக்கனும்” மைன்ட் இட்” என துண்டித்தாள். அந்த நேரம் அவனுக்கு வைத்திருந்த அந்த மாத்திரையை சாப்பிடாமல் போயிருந்தான்.

“இன்னைக்கும் மறந்துட்டியா ஐயோ உன்ன ஒருத்திகட்டிகிட்டு என்ன பாடுபடபோறாளோ” என தண்ணீரை ஊற்றியவள். மாத்திரையை எடுத்துகொண்டு “தம்பி” என அவன் அறைக்கு சென்றாள்.

அன்பு குளித்து முடித்துவிட்டு வர சந்துரு பாத்திரங்களை எடுத்து வைத்துகொண்டிருந்தான். அன்பு வா சாப்பிடலாம் என்றான்.

அதற்குள் ஹாஸ்பிட்டலில் இருந்து அனைவரும் வந்திருந்தனர். “அப்பா மாமாக்கு சரிஆகிடுச்சா” என்றாள்.

“எங்க அப்பா உங்க அப்பா மாதிரியா அன்னி அவரு ஸ்ட்ராங் மேன்” என சுவேதா கூறினாள். “ம்ம் எங்க அப்பா மிலிட்டரி மேன்” என சிறுவயது குரலுடன் கூற.

“ஆமா மிலிட்டரில ரொட்டி சுட்டுபோட்டுகிட்டு இருந்தவரெல்லாம் மிலிட்டரி மேனா” என சுவேதா வம்பிழுக்க அன்புக்கு கோபம் வந்தது.”அவரு ரொட்டோலாம் சுடல” என சினுங்கினாள். மற்ற அனைவரும் அவளை சிரித்துகொண்டே பார்த்தனர்.

சுவேதாவுக்கு ஏதோ அடம் பிடிக்கும் சின்னுகுழந்தையிடம் பேசுவதை போல இருந்தது. மேலும் தொடர்ந்தாள். “அப்ப அப்பளம் சுட்டாரா”

“அவரு ஸோல்ஜர்”

“ம்ம் ரயில்ல ஏறி போயிட்டு பானிபூரி வித்துட்டு இங்க வந்து மிலிட்டரினு உங்கள ஏமாத்திருக்காரு அன்னி மாமா…. என்ன மாமா அப்புடிதான” என சுவேதா கூற “ஆமா காஷ்மீர்ல அன்பரசி பானிபூரிகடை பேமஸ்மா மாமாதுதான்” என்றார் அவரும் சிரித்துகொண்டே. அன்புரசி மௌனமாக நின்றாள்.

“அய்யோ அன்னி நாங்க உங்கள ஓட்டிட்டு இருக்கோம்” என கூறி அனைவரும் சிரித்தனர். அவள் சோகமாகதான் இருந்தாள்.

“அட சுவேதா இப்பதான் அவள சைலன்ட் மோட்ல இருந்து நார்மலுக்கு மாத்தினேன் நீ மறபடியும் சைலன்டல போட்டுடியா” என்றான் சந்துரு

“அரிசி நீ உட்காரும்மா” என அவளது தோளை பிடித்து அழுத்தி அமரவைத்தவன் அவளுக்கு பறிமாறினான். “ம்ம் அண்ணா சூப்பரா சமைச்சுருக்க அத்தைலாம் எந்த மூலைக்கு” என்று அடுத்து அவள் தாயை குறிவைக்க.

“எங்க அம்மாதான் நல்லா சமைப்பாங்க இது நல்லா இல்ல” என்று சினுங்கினாள்.

“இது உங்க அம்மா பார்வதி சமச்சதுதான் அத வைக்குற கைமட்டும்தான் சந்துரு” என கூற அன்புக்கு வெடகமாக போனது.

“சுவேதா சும்மா இரு பாரு அவள அழவைக்காம விடமாட்டியா”

“யாரு எங்க அன்னி அழுவாங்களா மை ஸ்வீட் டார்லிங்” என தன் இலையிலிருந்த அப்பளத்தை எடுத்து அன்புக்கு ஊட்டிவிட அப்போதுதான் சிரித்தாள் அரிசி.

“அப்பாடா என்னமா கோவம் வருது உங்களுக்கு டேய் சந்துரு இனிமே உன் கத அவ்வளவுதான்டா என்ட் கார்டு போட்டுடுறேன்”

“எனக்கு என்டு போடுறது இருக்கட்டும் இந்த ரெண்டு வானரங்க எங்க போச்சு ஆளேயே கானோம். சாப்பாட்டு நேரத்துக்கு சரியா பிரஸன்ட் ஆகிருங்களே”

“யாரு மஞ்சுவா”

“அந்த ஜீவ ராசிங்கதான்”

“அதுங்க நேத்தே கிளம்பிடுச்சுங்க”

“ஏய் என்ன சொல்ற”

“ஆமா சந்துரு” என்றார் சன்முகம்.

“என்னப்பா எனகிட்ட சொல்லவே இல்ல”

“மஞ்சுக்கு செக்கப்ப்பா” என்றாள் சுவேதா தெரியாமல்.

“செக்கப்பா என்ன பிரட்சனை அவளுக்கு”

ஐயோ உளறிட்டோமே என சுவேதா பயந்து “இல்லடா அவங்க டாக்டர் மாமா வந்துருக்காங்கலாம்” என்ற சுவேதாவின் ஓசையுடன் “அவங்க மாசமா இருக்காங்க” என்ற அரிசியின் குரல் வந்தது.

சந்துருவின் கண்கள் கலங்க உதட்டில் ஒரு புன்னகை. “நிஜமாவா அன்பு”

“ம்ம்”

“ஏன் எனகிட்ட சொல்லல”

“ஆமாடா கரு கலஞ்சப்ப ஹாஸ்பிட்டல்னுபாக்காம் அப்புடி அழுதா யாரு சொல்லுவாங்க உன்கிட்ட” என்றாள் சுவேதா.

சந்துரு அமைதியானான்.

சிறிது நேரத்தில் சாப்பிட்டு எழ வெளியே ஒரு பெரியவர் நின்றிருந்தார். “போஸ் போஸ்”

“வாங்க மாமா” என்றார் சன்முகம்.

“ம்ம் வாங்க பெரிப்பா” இது பார்வதி.

“பொண்ணுக்கு திடிர்னு கல்யானம் பன்னிட்ட என்னகூப்பிடனும்னு தோனலையா” என்றார் அவர்.

“இல்ல மாமா திடிர்னு முடிவாகிடுச்சு அதான்” என சமாளித்தார் போஸ்.

“சரிப்பா எங்க அந்த வாலுபொண்ணு கூப்பிடு” எனவே “அன்பு மாப்பிள்ளையகூட்டிட்டு வாம்மா” எனறார் போஸ். அந்த குரலில் மொத்த கூடவே சுகு சுவேதா என அனைவரும் வர.

அன்பரசியும் சந்துருவும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். பின் அவர்களுக்கு சந்தனம் வைத்தவர். அன்பரசியின் கையில் காந்திநோட்டை தினித்தார்.

“இங்க பாரும்மா போற இடத்துல ஊர்மானத்த காப்பாதனும்” என கூறிவிட்டு “மாப்ள பொண்ண நல்லா பாத்துகனும் அப்புறம் நீங்க கொஞ்சம் பாதுகாப்பா இருந்துகோங்க! ரொம்ப சுட்டி பொண்ணுப்பா எனகிட்டயே வேலை கட்டிருக்கா” என்று கூற போஸ் ஒரு கூல்ட்ரிங்கஸ் பாட்டிலுடன் வந்தார்.

“இல்லபா சுகர் பேக்டரியே என உடம்புலதான் இருக்கு” என கிளம்பினார். உள்ளே வந்த பார்வதி எதையோ நினைத்து சிரிக்க சந்துரு ஏன் அத்த சிரிக்குறீங்க என்றான்.

“இல்லப்பா சும்மாதான்” என மீண்டும் சிரித்தாள்.

“அத்த என்ன ஆச்சு” என சுவேதா கூற

“உங்க அன்னி கொஞ்சநஞ்ச வாலுதனமா பன்னி வச்சுருக்கா”

“அம்மா சொல்லாதமா” என்று சினுங்கினாள் அன்பு.

“நீங்க சொல்லுங்க அத்த” என்று சந்துருவும் சுவேதாவும் கோரஸ் பாடினர்.

-தொடரும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிவகாமியின் சபதம் – முதல் பாகம்சிவகாமியின் சபதம் – முதல் பாகம்

வணக்கம் தோழமைகளே, சில காவியங்கள் என்றுமே நம் நினைவில் நிற்பவை. அத்தனை முறை படித்தாலும் புதிதாய் படிக்கும் உணர்வைத் தருபவை. அதில் எழுத்தாளர் கல்கி அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’ எனும் இந்தப் புதினமும் ஒன்று. முதல் பாகம் உங்களுக்காக. [scribd id=380391362

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 04

சாந்தா எப்போதாவது சோமுவிடமிருந்து புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள். புராணக் கதைகளே சோமு தருவார். ஒருநாள் எனக்கோர் யுக்தி தோன்றிற்று. கண்ணபிரான் மீது காதல் கொண்ட ருக்மணியின் மனோநிலை வர்ணிக்கப்பட்டிருந்த பாகத்தை சோமு தந்தனுப்பிய பாரதத்தில் நான் பென்சிலால் கோடிட்டு அனுப்பினேன்.

ராணி மங்கம்மாள் – 9ராணி மங்கம்மாள் – 9

9. சகலருக்கும் சமநீதி  பாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்ககிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பது போல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபதோடும் விசாரித்தான் அவன்:   “பெரியவரே! நாடு எங்கும் நன்கு வாழக்