Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50

உனக்கென நான் 50

“என்னங்க அந்த பலசரக்கு கடையில வேலைக்கு ஆள் கேட்டாங்க அவங்களுக்கு வயசாகிருச்சுல அதான் முடியலையாம் கூடவே நானும் இருந்தா அவங்களுக்கும் பேச்சுதுனையா இருக்கும்ங்க நான் போகட்டுமா” என்று அனுமதி வாங்கிகொண்டிருந்தாள் காவேரி தன் கனவன் சன்முகத்திடம்.

“இல்லமா உனக்கு வீட்டுலையே வேலை சரியா இருக்கும்மா அங்கலாம் எதுக்கு வேணாம்மா” என தன் புது காதல் மனைவியிடம் பதிலுக்கு நின்றார் சன்முகம். அவருக்கு நன்றாக தெரியும் பணக்கார வீட்டில் வாழ்ந்தவள். இன்று தன்காதலால் இப்படி சிறிய வாடகை வீட்டில் கஷ்டபடுகிறாள்.

ஒரு நல்ல வீட்டையாவது கட்ட வேண்டும் எனபதுதான் சன்முகத்தின் இப்போதைய எண்ணம். சன்முகமோ கொடுத்து வாழ்ந்த வள்ளல் பரம்பரையின் வாரிசு. அந்த ஊரில் இயங்கும் அந்த பள்ளியும் கோவிலும் சில குளங்கள். அதன் பின் இருக்கும் இன்னும் சில இடங்களும் சன்முகத்தின் தாத்தாவின் பெயரை பறைசாற்றும் நினைவுகள். ஊரை ஊட்டி வளத்தவர்கள் தன் பரம்பரையை கேட்பாரில்லாமல் விட்டது ஏனோ தெரியவில்லை. அதிலும் சன்முகத்திற்கு கல்யானமாகி வந்த மனைவிக்கு ஒரு நல்ல வீடில்லாமல் பட்டபாடு அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

என்னதான் வீட்டு ஓனர் நண்பர் என்றாலும் வாடகை தராமல் இருக்க சன்முகத்திற்கு பிடிக்கவில்லை அதற்கு காரணம் காவேரிதான். “எனக்கு இந்த அடுத்தவங்க காசுல வாங்கிட்டு வந்த பூ வேனாம்ங்க” என காதலிக்கும்போது கூறிய அந்த தருனம் இன்றும் சன்முகத்தின் நினைவைவிட்டு அகலவில்லை. அதனால் ஒரு வைராக்கியம் சன்முகத்திற்கு தன்னை நம்பி வந்தவளை கண் கலங்கவிடகூடாது என்பதே. காவேரியும் அப்படியே தன்னவர் கஷ்டபடகூடாது.

நான் வந்த பிறகு அவரது மகிழ்ச்சி பறிக்கபட்டதாக நினைத்தாள். இன்றும் அதே பிரட்சனைதான். வீட்டல் அடுப்புகூட சன்முகத்தின் கையை நம்பியிருக்க இன்றும் அவருக்கு வேலை இல்லை. தன்னவளுக்காக அந்த பாட்டியிடம் இருந்து பாத்திரங்களை கழுவி விட்டு அந்த இட்லியை கொண்டுவந்துவிட்டார்.

ஆனால் “நான் நல்லா சாப்புட்டேன்மா! உனக்குதானு அசைவம் ஆகாதுல அதான் உனக்கு இட்லிமட்டும்தான் இருந்துச்சு” என ஒரு வழியாக ஊட்டிவிட்டுவிட்டார். காவேரி அதை மனமில்லாமல் உண்டாள்.

இரவில் குட்டிபோட்ட பூனை மாதிரி எழுந்து தண்ணீரை அடிக்கடி குடித்து தன் வயற்றை சமாதானம் செய்த தன் கனவனை நினைக்கும் அவள் போர்வையில்லாத அந்த இல்லத்தில் தன் முந்தானையை மூடிகொண்டு அழுதாள். அவளை கூர்ந்து பார்த்த சன்முகம் அவள் தூங்கிவிட்டாள் என நினைத்துகொண்டு பசியால் உறக்கமில்லாமல் எனபதைவிட தன்னவளின் எதிர்காரத்தை நோக்கி கற்பனைகளை காட்சிகளாய் பார்த்தார். அனைத்தும் பூதாகரமாக பயமுறுத்தியது.

இந்த நிகழ்வுதான் இன்று இந்த சிறிய சண்டை “இஙல்லைங்க எனக்கும் வீட்டுல பொழுது போகமாட்டேங்குது. அங்க கஷ்டமான வேலை இல்லைங்க நான் படிச்சுருக்குறதால கணக்கு எழுதுற வேலேதான். அப்புறம் எதாவது சார் இல்லைனா மட்டும் சரக்கு எடுத்து தரனும் அவ்வளவுதான்” என்றாள் அந்த நிர்வாகம் பயின்ற மங்கை.

‘என்ன காவேரி உன் மனசு எனகிட்டதான இருக்கு அப்புறம் எப்புடி உன்னால என்ன ஏமாத்த முடியும். அந்த கடைய பத்தி எனக்கு தெரியாதா! அந்த முதளாலி ஒரு அட்டை பூச்சிடி! அவனபோய் சார்னு கூப்புடுற. என்ன பாக்காம இருந்திருந்தா உன்ன நூறுபேர் முதளாலின்னு கூப்பிடுவாங்கடி” என மனதில் வருந்தினார்.

“என்னங்க நான் போரேனே!” என்று கெஞ்சினாள்.

“இங்க பாரு காவேரி! நான் செத்துக்கு அப்புறம் நீ வேலைக்கு போறதுன்னா போய்க்கோ! இல்ல அதுதான் உன் முடிவுனா நான் சொன்னதுக்கு அர்த்தம் உனக்கு தெரியும்னு நினைக்குறேன்” என கோபமாக கதவை அடித்துவிட்டு நகர்ந்தார் சன்முகம்.

உள்ளே தன்னவன் தனக்காக சிரம்படும்போதும் தன் மனைவி கஷ்டபடகூடாது எனபதில் உறுதியாக இருப்பதை நினைகும்போது கண்ணீர் பீறிட்டு வந்தது. தன்னவன் சென்ற வழியை பார்த்துகொண்டிருந்தாள்.

“டேய் சன்முகம் வீட்டுல இருக்கியா” என்று குரல் வர அந்த சாப்பாட்டு கடைகாரன் வந்துவிட்டான் என பயந்தாள். காலையில் இங்கிருந்த தினமும் காவேரிக்கு சாப்பாடு சென்றுவிடும். அவளுக்கு சமைக்க அவ்வளவாக தெரியாது என்றாலும். அங்கு சமைக்க பொருள் இல்லை எனபதே உண்மை. அன்று ஒருநாள் அந்த கடைகாரன் குடித்துவிட்டு வந்த காவேரியை திட்டியதை எப்படி கூறுவாள் தன்னவனிடம்.

இன்றும் அதே சத்தம் இதயதுடிப்பு அதிகரித்தது. அந்த கதவின் இடுக்கு வழியே பார்த்தாள். அங்கு அதிர்ச்சி அவளுக்கு.

“என்னம்மா என்ன கண்ணுல தண்ணி அவன் எதுவும் சொன்னானா?” கோபத்துடன் போஸ்.

“இல்லன்னா ஒட்டடை அதிகமா இருந்துச்சு அதான் அடிச்சேன் கன்னுல விழுந்திருச்சு அதான்” என்று சமாளித்தாள். “ம்ம் திட்டுனானா அண்ணானு ஒரு குரல்மட்டும் குடு தோல உறிச்சுபுடுறேன்” என்று தன் தொனியில் மிரட்டினார்.

தன் கனவனது கடை அடித்து நொறுக்கபட்டு இன்று கூலிவேலைக்கு கூட இன்று ஒருவரின்காலை பிடித்து தொங்கிகொண்டிருக்கிறார் என்று அவரது தோளனிடம் கூறினாள் அவ்வளவுதான். “இல்லன்னா கடைக்கு போயிருக்காரு நீங்க உள்ள வாங்கண்ணா”

“ம்ம் நம்ம வீடும்மா நான் வராமலா” என உள்ளே வந்தவர் அந்த சிறிய அறையை பார்த்தார். “இந்த புடவைதான அன்னைக்கு கட்டியிருந்த” என்றார் சந்தேகமாக.

“ஆமான்னா பத்துபுடவைய துவைக்க போட்டுருக்கேன் அண்ணா இது மட்டும்தான் இருந்துச்சு அதான்” என்று அவள் கூறினாலும் அதில் தண்ணீரில் மட்டும் ஊற வைத்து பிழிந்து அணிந்திருப்பதற்கான தடயமாக கறையும் அந்த கசங்கள்களுமிருந்தன.

“தண்ணி கொண்டுவாம்மா வெளிய சரியான வெயில்” என அந்த குளிர் காலையின்மீது பலிசுமத்தினார்.

குடுகுடுவென ஓடியவள் அங்கிருந்து எதையோ உருட்டும் சத்தம் கேட்டது. பின் ஒரு குவளையில் மோர் எடுத்து வந்தாள். அதுதான் அவளுக்கு மதிய உணவு எனபது போஸுக்கு தெரியாது.

“என்னம்மா இப்புடி குளிருது நீ மோர் தர்ர! தண்ணி போதும்” என அவளை கடந்து சமையலறைக்குள் சென்றார் போஸ்”

அங்கு அடுப்பு அதில் இருந்த சாம்பல் அளவு அங்கு இதுவரை நடந்த சமையலை விலக்கியது.அதிலும் அந்த மூலையிலிருந்த அந்த ஒரு பாத்திரம் அதன் இடுப்பில் இருந்த ஓட்டையால் நீரின் கொள்ளலவு குறைந்திருந்தது. அதேபார்த்த போஸ் அங்கிருந்த டம்ளரில் நீரை ஊற்றினார். பின் வெளியே வந்தவர்.

“ஏம்மா நானெல்லாம் செத்துபோயிட்டேனல”

“ஐயோ அண்ணா” என பதறினாள்.

“பின்ன என்னமா கஷ்டம்னா சொல்லங்கனு சொன்னேன்ல என்ன மறந்துட்டீங்கள்ள” என்றார் கையறுநிலையாக.

“இல்லன்னா” என கண்களில் நீர் வந்தது.

“கடை என்ன ஆச்சி”

“அது இப்ப கொஞ்சம் வியாபாரம் சரியா போகலைணா அதான்! அடுத்த மாசம் நல்லா போகும்னா சீசன் டைம்”

“எப்புடி அங்க அந்த ரவுடி ராணிகிட்டயா”

போஸ் முதலில் சென்று வந்தது அங்குதான் எனபது இவளுக்கு தெரியாது.

“மன்னிசிடுங்கண்ணா” என கீழே அமர்ந்து அழுதாள்.

“இங்கபாரும்மா எனக்கு தங்கச்சி இல்லைனு ரொம்ப கவலைம்மா! அத போக்கதான் நீ வந்தனு நினைச்சேன் ஆனா நீ என்ன உன் அன்னவா ஏத்துகல அப்புடி இருந்திருந்தா எதாவது பிரட்சனைனா எனகிட்ட ஓடி வந்துருப்பேல”

“இல்லனா அது வந்து” என்றாள் அழுதுகொண்டே

பின் எழுந்து சென்றவர் கைநிறைய காய் கறிகளும் பழங்களும் தின்பொருட்களும் கூடவே காவேரிக்கு சாப்பிட சாப்பாடும் வாங்கி வந்தார்.

“சாப்பிடும்மா”

“இல்லன்னா அவரு சாப்பிடல”

“உன்ன இப்புடி வச்சிருக்குறதுக்கு அவன் இன்னைக்கு என்கிட்ட செத்தான் நீ சாப்புடு அத பாக்க உனக்கு தெம்பு வேணுமில”

அவள் போஸை பாவமாக பார்த்தாள்.

“இப்ப சாப்புடுறியா என்னம்மா இருக்கு” என உறுமல் குரல் போஸிடமிருந்து வரவே கோழி தவிட்டை விழுங்கியதுபோல விழுங்கினாள்.

காவேரி சாப்பிட்டவுடன் “அவன் எப்பமா வருவான்”

“தெரியல்லண்ணா இன்னைக்கு வேலைய பொருத்து”

“ம்ம் சரிம்மா நான் இப்ப வந்துடுறேன்” என கிளம்ப காவேரி அமைதியாக அமர்ந்தாள்

சந்தைக்கு சென்ற போஸ் அங்கு பாத்திரங்களையும் துணிகளையும் வங்குவதற்காக சென்றார். அங்கு தன் நண்பன் இல்லை மச்சான் மட்டிகிட்டார். அதிலும் அந்த கனமான மூட்டைகளுடன்.

“தம்பி இந்த மூட்டையும் தூக்குறீங்களா” என்று போஸ் கூற திரும்பினார் சன்முகம். “டேய் நீ எப்படா வந்த”

“நீ என்னடா மூட்டை தூக்கிட்டு இருக்க?”

“நம்ம கடைக்கு சரக்கு ஏத்துற பையன் லீவுடா அதான் நானே கலத்துல இறங்கிட்டேன் எப்படி என் பலம்” என்று தன் கைகளை காட்ட

“எப்போல இருந்துடா காய்கறி கடைல உரம்விக்க ஆரம்பிச்சீங்க” அப்போதுதான் அந்த மூட்டையை கவனித்தான் சன்முகம்.

“இல்லடா”

“அப்புடியே ஒன்னு வச்சேன்னா தெரியும்டா! நான் தங்கச்சிய பாத்துட்டுதான் வாரேன்” என்று போஸ் கூற எதுவும் பேச முடியாமல் நின்றார் சன்முகம்.

“மரியாதையா கிளம்பு வீட்டுக்கு வா” என கூற அங்கிருந்த ஒரு நபரிடம் “கதிர் ஐய்யாகிட்ட சொல்லிரு வீட்டுக்கு சினேகிதன் வந்துருக்காங்க”

“சரி சன்முகம் நான் பாத்துகிறேன் போய்ட்டு வா”

இருவரும் கிளமப போஸ் கையில் நல்ல எடையுள்ள மூட்டையை தூக்கிகொண்டு வந்தார்.

“என்னடா இது மூட்டை” இது சன்முகம்.

“வாய மூடூடா எதாவது பேசுன அப்புறம் உன்ன கொண்ணுடுவேன் பாத்துக்க” தன் நண்பனின் கோபம் நன்கு அறிந்தவன் அதனால் அமைதியானான். பின்ன சிறு வயதில் சன்முகத்தை வாத்தியார் அடித்தற்கு அவரின் தலை உண்டிவில்லால் பிளந்தவன் அல்லவா!!

வீடும் வந்தது. “காவேரி வாம்மா” என சன்முகதின் குரல்,

அவள் வெளியே வந்து “என்ன அண்ணா இதெல்லாம்”

“ம்ம் இதுல பாத்திரம் இருக்கு அப்புறம் உனக்கு துணி எல்லாம் எடுத்து வச்சுருக்கேன் இவனுக்கும்தான்.”

“இதெல்லாம் எதுக்குன்னா”

“ஏம்மா நீ கஷ்டபடுறது சொல்லிதான் எனக்கு தெரியனுமா” சன்முகமும் காவேரியும் அமைதிகாத்தனர்.

“சரி எதுக்கு சோகம்! இனிமே எதாவதுனா இந்த அண்ணன நினைங்க நான் உடனே வந்துடுவேன்”

என சமையலறையில் புகுந்தனர் இரு நண்பர்களும். காவேரி அவர்களுக்கு உதவி செய்ய சிறிது நேரத்தில் சாப்பாடு ரெடியாகியது. அனறுதான் ஒரு நல்ல சாப்பாட்டை சாப்பிட்டால் காவேரி. காதல் புறாக்கள் இருவரையும் அமரவைத்து சாப்பாடு போட்டு மகிழ்ந்தார் போஸ்.

“அண்ணா நல்லா சமைக்கறீங்க எங்க கத்துகிட்டீங்க”

“இவன் கத்துகிறேன்னு எங்க வயித்தல பதம் பாத்தான்” என கடந்தகால நினைவுகளை ஓட்ட காவேரி அவர்களின் நட்பின் ஆழம் கண்டு வியந்தாள்.

“சரிடா பார்வதி என்ன பன்றா”

“அட கடவுளே வந்த விஷயத்தயே மறந்துட்டேன் பாத்தியா! எனக்கு அவளுக்கும் கல்யானம்டா அடுத்த வாரம்! அத சொல்லத்தான் வந்தேன்” என்று சிரித்தார்.

“அட பாவி! ஒரு வழியா பிரட்சனை முடஞ்சது! அம்மா என்ன சொன்னாங்க ஒத்துகிட்டாங்களா”

“இல்லடா அவங்களுக்கு சம்மதம் இல்ல! அப்பா சாவுல இருந்து அந்த குடும்பத்துமேல பகைதான். என்ன பன்றது பார்வதி அரலிகாய அரச்சு சாப்புட்டுருச்சு”

“ஐய்யோ என்னடா சொல்ற”

“நானும் அப்புடிதான்டா நினைச்சேன்! எங்க அம்மா சம்மதிச்ச அப்புறம்தான் சொல்லுச்சு எனகிட்ட அது வெள்ளரிகாயாம்! கேட்டா சாகுறதுக்கா மாமா உன்ன காதலிச்சேன் உன்கூட வாழனும்னு அழுதா அதுகப்புறம் என்னை என்ன செய்ய சொல்ற!” என கூறிவிட்டு “இந்த அரலிகாய் மேட்டர ரகசியமா வச்சுகோட” என சிரிக்கவே அனைவரும் சிரித்தனர்.

பின் தன் கையிலிருந்த சில நோட்டுகளை தன் தங்கையின் கையில் தினித்தார். “அண்ணா இதெல்லாம் வேனாம் அண்ணா”

“இப்ப நீ வாங்கலைனா நான் இங்க வரவே மாட்டேன் பாத்துக்க” என போஸ் கூறவே அரைமனதுடன் வாங்கினாள். “அப்புறம் இந்த ஊர் தலைவர்கிட்ட பேசுனேன் நாளைக்கு கடைய காலிபன்னி குடுத்துருவாரு நாளைல இருந்தாவது தொழில பாத்து தங்கச்சிய நல்லா பாத்துக்க” கூறி நடந்தார்.

சன்முகம் அவரின் கூடவே நடந்துசென்று வழியனுப்பி வைத்தார். காவேரிக்கு இப்படி ஒரு அண்ணன் தன் கூட பிறக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும புகுந்தவீட்டில் ஒரு அண்ணன் கிடைத்ததில் மகிழ்ச்சி.

அதிலும் போஸின் கல்யானநாளில் காவேரி தன் சொந்த அண்ணாவுக்கு கல்யானம் நடந்த்தை போல மகிழ்ந்தாள். அதிலும் தான் அசைவம் சாப்பிடாதவள் எனபதை கண்ணாலயே புரிந்துகொண்டு சைவம் ஏற்பாடு செய்த பார்வதி அன்னி கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. சொந்தம் என்று சொல்லிகொள்ள காவேரிக்கு இரு உயிர்கள் கிடைத்தன.

“அன்னி நல்லா இருக்காங்க”

“ஆமா சொந்த மாமா பொண்ணாங்க”

“காதல் கல்யானமா ஆனா அப்புடி தெரியலையே” என தன் கனவன் எத்தனை முறை கூறினாலும் திரும்ப திரும்ப தன் அன்னியின் புகழை பாடிகொணாடே வீடு வந்து சேர்ந்தாள்.

“ஏங்க அன்னி நல்லா சமைப்பாங்களா”

“ம்ம் கருவாட்டு குழம்புக்கு அடிச்சுக்க ஆளே கிடையாது. நாங்க எட்டாப்பு படிக்கும் போதே கம்மாயில மீன புடிச்சுட்டு பார்வதிகிட்ட போயிடுவோம். அவ வீட்டுக்கு தெரியாம அப்புடி அருமையா சமச்சு குடுத்து விடவா! அந்த சுவை நாக்குல இன்னும் இருக்குடி” என கனவில் மிதந்துகூறினார்.

“அப்ப எனக்குதாங்க ஒன்னுமே தெரியல நான் வேனும்னா அன்னிகிட்ட கட்டுகிடவா” என்றாள். காவேரிக்கு தன்அன்னி பார்வதியின் அருகிலிருந்து தன்னிடமிருந்த பறிபோன அன்பை திரும்ப பெறலாம் என நினைத்தாள்.

“அதுக்கு என்ன தாராளமா சொல்லி தருதவாங்கம்மா” என அந்த நாள் நகர இரவிலும் அதே பேச்சிதான். சன்முகமும் தன் மனைவி நீண்ட நாள் கழித்து பேசுவதை ரசித்து ஆனந்தமாக கேட்டுகொண்டிருந்தார்.

பேசிகொண்டிருந்தவள் அப்படியே உறங்கிபோக சன்முகம் அழகாக தூங்கும் அவளை பார்த்து “நீ ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான்டி சிரிச்சு சந்தோஷமா பேசுற! நான் உன்ன ரொம்ப கஷ்டபடுத்ததிட்டேன் காவேரி என்ன மன்னிச்சிடு” என மனதினுள்ளேயே பேசிகொண்டு தலையை கோதிவிட அவள் தன்னவனை இறுக கட்டிகொண்டு உறங்க சன்முகமும் அப்படியே உறங்கிபோனார்.

காலையில் சூரியன் அன்றாட வேலையே துவங்க கூடவை காவேரியும் தொடர்ந்தாள். “என்னங்க இந்தாங்க காஃபி”

“இன்னைக்காவது இதுக்கு காஃபினு பேர் வச்சுகலாமா”

“கொஞசம் அட்ஜஷ் பன்னிகோங்க அன்னி அளவுக்கு இல்லைனாலும் ஏதோ என்னால முடிஞ்சது” என சினுங்க

“ஏய் காவேரி வர வர நல்லா சமைக்க ஆரம்பிச்சுட்ட! காஃபி நல்லா இருக்கு” என சன்முகம் கூற.

காவேரியின் முகம் மாறியது வயிற்றை பிடித்துகொண்டு வந்தி எடுத்தாள். சன்முகம் டம்ளரை கீழே போட்டு விட்டு அவளது தலையை பிடித்தார். பின் அப்படியே மயங்கினாள்.

சன்முகம் தண்ணீர் தெளித்து எழுப்ப கூடவே அருகிலிருந்த பாட்டி இடம் பெற்று “மகராசன் உங்கவீட்டுக்கு வர போறான்பா” என காவேரியின் முகத்த்தில் சொடுக்கிட காவேரி வெட்கபட்டு சிரிக்க சன்முகத்தின் மகிழ்ச்சியை விளக்க தமிழ் கடலில் வார்த்தைகள் இல்லை.

“காவேரி இருக்கியாமா..” என வெளியிலிருந்து ஒரு குரல் வர மூவரும் திரும்பி பார்த்தனர்.

-தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 14பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 14

மகனே! என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 20ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 20

20 – மனதை மாற்றிவிட்டாய் திவி சாலையின் ஓரமாக எடுப்பான ஜொலிக்கும் சுடியில் மல்லிகை பூ சூடி நின்றிருக்க அவள் நின்ற இடத்திற்க்கு எதிர் வீட்டில் சன்னல் வழியே தெரிந்த பிள்ளைகளின் சண்டைகளை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அவள் கூறிய தெருவுக்குள்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

21 – மனதை மாற்றிவிட்டாய் திவியோ “என்னதான் இருந்தாலும் நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கக்கூடாது. ச்ச… சரியான லூசு திவி நீ…. உண்மையாவே அவரு பாவம் தான்… அத்தை சொல்லி வந்தாரோ இல்ல இவரா வந்தாரோ எனக்காக தானே வந்தாரு. அப்போகூட