Tamil Madhura கதைகள்,தொடர்கள் ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41

உனக்கென நான் 41

சந்துரு பயந்துகொண்டு வெளியே ஓடி வந்தான். அன்பரசியின் தாத்தாவும் சிறிது காலம் மாந்திரீகம் என்று சுற்றிதிரிந்தவர்தான். அதனால் பார்வதியும் “என்னப்பா ஆச்சு ” என்று உள்ளே சென்று பார்த்து சிரித்துவிட்டார்.

 

“அட என்னப்பா இதுக்குபபோய் பயந்துகிட்டு ” என்று மேரும் சிரிக்க அனைவரும் புரியாமல் வழித்தனர். பின் சுகு உள்ளே சென்று பார்த்தான். இந்தமுறை அதிக வெளிச்சத்துடன். அங்கே ஒரு குலுக்கை இருந்தது.ஆம் கிராமபுறங்களில் அன்று இருந்த ஒரு பொருள் இது.

அனைவரும் சிரிக்க சந்துருவுக்கு மிகவும் வெட்கமாக போனது. அன்பரசிக்கோ சந்துருவை அனைவரும் கேலி செய்வதில் வருத்தம். அது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது சோகமாக இருந்தாள். அதை கவனித்த சுகு பாலாஜியின் கையை பிடித்து அழுத்தினான். நண்பர்களுக்கிடையேயான கோட்வேர்ட். உடனடியாக செயல்படவே அனைவரும் சிரிப்பை அடக்கிகொண்டனர்.

சுகு அரம்பித்தான். “என்ன சித்தி இது பெரிய பானை மாதிரி இருக்கு?” என்று அந்த அறையின் பாதி இடத்தை அடைத்துகொண்டு வீட்டின் கூறையினை முட்டும் அளவு உயர்ந்த குடுவை வடிவ பெரிய இரும்பு ராட்சசன் அது. கிழே கதவு போன்ற ஒரு திறப்பும் இருந்தது. மூவர் சேர்ந்து கட்டி அணைத்தாள்கூட கைக்குள் அடங்காது. திருமலை நாயக்கர் மஹால் தூண்களை விட பெரியதுதான். அனைவரும் அதை கண்டு வியந்து நின்றனர்.

“இதுக்கு பேரு குலுக்கைப்பா!”

“அப்புடினா சித்தி?”

“இது பழைய வீடுங்கல்ல இருக்கும்; விவசாயம் பன்னி கிடைக்குற தானியங்கல்ல நல்ல தரமான நெல், தினை, வரகு, கம்பு, சோளம் இதெல்லாம் விதைக்குன்னு இதுல்ல போட்டு வச்சிடுவாங்க. அப்புறம் ஆடி மாசம் வந்ததும் இந்த கதவ திறந்து வெளிய எடுத்து விதைக்கு தயார் பன்னுவாங்க”

“அப்போ இது அந்த காலத்து கோல்டு ஸ்டோலேஜ்னு சொல்லுங்க” என்றான் பாலாஜி.

“சரி சித்தி இந்த எலிங்க இந்த விதைய நாசம் பன்னாதா?”

“அதுக்கு நிறைய பூனை வளப்பாங்கப்பா அதுவும் இல்லாம இவ்வளவு உயரத்துல பூனை ஏறாதுப்பா”

“ஓ அப்புடியா சித்தி; ஆமா நீங்க எத்தனை பூனை வளத்தீங்க?”

“நாங்க பூனைலாம் வளக்கலப்பா”

“ஏன் சித்தி?”

“ஒரே ஒரு குறும்பு பூனை வளத்தோம். அதுக்கு இன்னும் கொஞ்ச நாள்ள கல்யானம் ஆக போகுது; அதான் என்ன பன்றதுன்னு தெரியலை” என்றார் பார்வதி.!

“அது என் தங்கச்சி அன்பரசிதான சித்தி?” என்று கூற இந்த முறை சிக்கியது அன்பரசி. ஆனால் சந்துருவும் சேர்ந்து சிரித்தான். அவனது சிரிப்பை பார்த்த அன்பு வெட்கபட்டு கொண்டு தன் தாயின் பின்னால் மறைந்துகொண்டாள். ஆதவன் இல்லாத நேரத்தில் தலைகுணிந்துகொள்ளும் சூரியகாந்தி போல தலையும் கீழ்நோக்கி.

தன் தாய்க்கு மட்டும் கேட்கும்படி “ஏன்மா” என்றாள். அவள் முகம் சிவந்திருப்பதை பார்வதி கவனிக்காமல் இல்லை. “சரிங்க தம்பி உங்க்கூட பேசிகிட்டு இருந்தா நேரம் போறதே தெரியாது. எதுன்னா வேணும்னா அன்புக்கு ஃபோன் பன்னுங்க சரி நாங்க கிளம்புறோம்” என அவர்கள் கிளம்ப சந்துரு அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை வாலில் நின்று பார்த்தான்.

வீதியின் ஓரத்தில் செல்லும்போது அன்பு இவனை திரும்பிபார்க்க அவனோ காதில் ஃபோனை வைத்து திரும்பிகொண்டான். அவளோ இவன் முகத்தை காணமுடியாமல் ஏக்கமாக நடந்தாள்.

பின் அவள் சென்ற வழியில் அவளது சுவடை நினைவில் கண்டவன் பெருமூச்சுடன் வீட்டினுள் சென்றான். அப்போது அவன் எடுத்துகொண்ட சபதம்; இது என்ன குலிகையா? இல்லை இல்லை குலுக்கை அந்த அறை பக்கம் மட்டும் போகவே கூடாது என்பதாகும்.

அனபரசியோ வீட்டில் நுழைய அங்கே காத்துகொணாடிருந்தனர் மஞ்சுவும் சுவேதாவும்.

“என்ன அண்ணி எங்க அண்ணன சைட் அடிச்சே தேச்சுடுவீங்கபோல போனா சீக்கிரம் வரமாட்டீங்களா” என்றாள்.

“இல்லைங்க” என இழுத்துகொண்டே தன் தாயினை பார்த்தாள் அன்பு; சப்போர்ட்டுக்கு வருவார் என்று நினைத்திருப்பாள்போலும். கல்யானத்துக்கு முன் கிடைக்கும் ஒரு பெரிய சுகம் தோழிகளின் கிண்டல் பேச்சுதான். அதை இன்று நினைத்தாலும் பார்வதிக்கு வெட்கமாக இருக்கும். அதை தன் மகளும் சிறிது அனுபவிக்கட்டும் என்று “நீயாச்சு உன் பிரண்ட்ஸ் ஆச்சு என்னை ஆள விடுங்க” என்று அனபை கழற்றிவிட்டார்

“இல்லைங்க அம்மாதான் லேட் கொஞ்சம் அது வந்து” என உளறினாள்.

“ஹலோ அரிசி மேடம் என்ன வெட்கமா?” என்றாள் சுவேதா. அன்பரசியோ திடுக்கிட்டாள் உள்ளுக்குள் சிறிது மகிழ்ச்சி வேறு பூத்துகொண்டது. “என்ன அண்ணி அப்புடி பாக்குறீங்க நான் அப்புடி கூப்பிடலாமுல இல்ல அந்த சந்துரு மட்டும்தான் அப்புடி கூப்பிடனுமா?”

“அந்த பேர் எப்புடி உங்களுக்கு?” என இழுத்தாள்.

“கிழிஞ்சதுபோங்க! உங்களோட போட்டோவதான் சாமியா வச்சு கும்பிட்டுகிட்டு இருக்கான் அது மட்டுமா எப்பபாத்தாலும் உங்க புராணத்தையே பாடிகிட்டு இருந்தா உங்க பேர் தெரியாம இருக்குமா இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேனே அவனோட ரோல் மாடலே அரிசிதான்ல கடைசில நீங்களே அவனுக்கு லைப் பார்ட்னரா வந்துட்டீங்க இனி அவன் ஆட்டம் தாங்காது” என்று கூறினாள்.

அன்பரசிக்கு தன்னவன் தன்மீது வைத்திருக்கும் மதிப்பு புரிந்தது. ஆனால் அவளுக்கு தேவை காதல் அல்லவா.

பேசிகொண்டே மூவரும் அன்பின் அறைக்குள் சென்றனர்.அந்த சிறிய அறையின் சுத்த நேர்த்தியாக அடுக்கபட்டிருந்த புத்தகங்களையும் கண்டு வியந்தாள். அதிலும் அங்க தொங்கிய மெடல்கள் கண்ணை கவர்ந்தன.

“ம்ம் ரூம் நல்லா அழகாதான் வச்சுருக்கீங்க” என்று அன்பரசியின் ரூமினை நோட்டம் விட்டாள். பின் அந்த கட்டிலில் அமர்ந்தாள் சுவேதா. அவளை அடுதது மஞ்சுவும் அமர்ந்தாள்.

“வாங்க அண்ணி உட்காருங்க சும்மா பேசலாம்” என்று அரிசியை அழைத்தாள். “இல்லைங்க இருக்கட்டும்” என்று மறுத்தாள்.

“ஐயோ அண்ணி இந்த வாங்க போங்கன்னு சும்மா! எனக்கா ஏதோ பெரிய மனுசிமாதிரி ஃபீல் ஆகுது. நான் உங்க பிரண்டுனு சொன்னீங்கள்ள அப்புறம் பிரணட்ஸ்குள்ள இப்புடியா கூப்பிடுவாங்க?! சும்மா சுவேதான்னே கூப்பிடுங்க” என்று சிறிது கோபமாதான் பேசினாள்.

“சரிங்க” என்றாள். “மறுபடியும் பார்டா” என்று முறைத்தாள் சுவேதா. அன்பரசியோ அமைதியாகவே இருந்தாள்.

“சரி அப்போ அரிசிய பாக்க முடியாது விடுங்க! ம்ம் அது என்ன கம்பும் மெடலும் குவிஞ்சிருக்கு பெரிய அத்தலெட்டா?”

அவள் அப்புடி கூறியதும் அருகிலிருந்த மஞ்சு “அய்யோ சுவேதா இந்த மெடலுக்குதான் நானும் அன்பும் சண்டை போட்டோம்” என்றதும் மற்ற இருவரும் விழித்தனர்.

“அப்போ அன்பு என்னை நியாபகமே இல்லையா உங்களுக்கு” -இது மஞ்சு.

அன்பரசியோ இல்லை என்பதை போல பார்த்தாள். “அட போங்கப்பா ராணிய குடுக்குற மாதிரி குடுத்துட்டு ரெண்டு யானைய வச்சு என் ராஜாவை ரவுண்டு கட்டுனீங்களே மதுரை ஓப்பன் சேலஞ்ச் டோரனமன்டு ஃபைனல்” என்று நினைவுபடுத்திபார்த்தாள்.

“சாரிங்க எனக்கு நியாபகம் இல்லை அன்னைக்கு நான் வேற ஒரு நியாபகத்துல இருந்தேன். ஆக்சுவலா அன்னைக்கு எனக்கு விளையாட இன்டரெஸ்டே இல்லை. என் பிரண்டு ஜெனி தான் என்னை போர்ஸ் பன்னா அதான் விளையுடுனேன்” என்று முடித்தாள்.

மஞ்சுவுக்கு தூக்கிவாரிப்போட்டது. முழுகவனமும் இல்லாமலே ஜெயிக்க முடியுமா என்று நினைத்தவள். “ஆமா நீங்க ஜெயிச்சதும் ஒரு பொண்ணு வந்து கட்டி புடிச்சாங்களே அவங்கதான் ஜெனியா!?”

“ம்ம் அவதான்” அன்பின் குரலில் சிரத்தை இல்லை.

“நல்ல பிரண்டுதான்; ஆமா அவங்க என்ன பனாறாங்க? கல்யானம் ஆகிடுச்சா அவங்களுக்கு”

“அவ இறந்துட்டா” குரலில் வேதனை தெரிந்தது.

சுதாரித்தாள் மஞ்சு. “சரி விடுங்க இப்போ நாம ஒரு மேட்ஜ் ஆடலாமா?” என்று திசை மாற்றினாள். “அம்மா தாயே ஆரம்பிச்சுட்டியா உன் ஆனந்த் மூளைய; நீங்க விளையாடுங்க நமக்கும் இதுக்கும் செட் ஆகாது” நகர்ந்தாள் சுவேதா. “அம்மா அம்மா” என்று கிளம்பினாள் பாரவதியை தேடிகொண்டு.

இங்கு மஞ்சு ஒருவழியாக அனபரசியை அமர வைத்து விளையாட்டை துவங்கினாள். “சந்துருகூட பெரிய பிளேயர் தெரியுமா” என்று தன் குருவின் பெருமையைபாட ஆரம்பித்தாள் மஞ்சு. அன்பரசிக்கு லேசாக சிரிப்பு வந்தது. அன்று அவன் தோற்றதை நினைத்திருப்பாள்போலும்.

“ஏங்க சிரிக்குறீங்க அவன் ஸ்டேட் லெவல்ல ப்ரைஷ் வாங்கிருக்கான்” என்று மஞ்சு சொன்னதும் அன்பிற்கு திக்கென்று ஆனது. “என்னங்க சொல்றீங்க “ என்று கேட்டுவிட்டாள்.

“ஆமா அன்னைக்கு அவன் போட்டிக்கு வந்திருந்தா இந்த கப் அவன் வீட்டுல இருந்திருக்கும் இப்போ ஒன்னும் கெட்டு போகலை இப்போவும் அங்கதான வரபோகுது” என்று சிரித்தாள்.

தான் வெற்றி பெற வேண்டும் என விட்டு கொடுத்திருக்கிறான் பொறுக்கி என மனதினுள்ளிருந்த அரிசி அவனை செல்லமாக திட்டினாள். “ஓலைபட்டாசு ஓலைபட்டாசு” என லேசாக முனங்கினாள்.

 

பின் இருவரும் விளையாட துவங்கினர். அன்பரசியின் வேகம் சிறிதும் குறையவில்லை. அதை மஞ்சு நன்றாப உணர்ந்தாள். “இதுக்கெல்லாம் சந்துருதான் சரியா வருவான்னு நினைக்குறேன்” என பத்தாவது முறையாக தோற்று எழுந்தாள் மஞ்சுளா.

 

“நீங்க நல்லாதானே விளையாடுறீங்க ஆனா கொஞ்சம் கவனமா இருந்தா கரெக்டா இருக்கும்” என்று மஞ்சுவினிடம் சிறிது திணறிய அரிசி கூறவே “அப்பாடா ஒரு வழியா பேசிட்டீங்க; சரி எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது” என்றாள் மஞ்சு.

 

“இருங்க நான் டீ எடுத்துட்டு வாரேன்” என்று எழுந்தாள். “இல்ல நான் கொஞ்ச நேரம் தூங்கனா சரியா வரும்” என்று சென்றாள்.

 

“இந்த அரிசி” என கையில் ஒரு கின்னத்துடன் வந்தாள் சுவேதா. “இது என்னங்க”

 

“இந்த வாங்க போங்கனு கூப்பிட்டா நான் ஊருக்கு கிளம்பி போயிடுவேன்” என்று மீண்டும் கோபமடைந்தாள். “சாரி சுவேதா ஓகேவா” என்றாள் அரிசி. சுவேதாவும் சிரித்துகொண்டே “ஏதோ புட்டுனு அம்மா சொன்னாங்க” என்று நீட்டினாள்.

 

“அம்மாவா?” அனபரசயின் மனதில் அப்போ இவள் சந்துருவ சும்மாதான் அண்ணா அப்புடின்னு கூப்பிடுறாளா என்ற எண்ணம்.

 

“ஆமா அரிசி அவங்கள பாத்தா எனக்கு எங்க அம்மா நியாபகம் வருது. நான் ஒன்னுகேட்டா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே” என்று அனுமதி கேட்டாள்.

 

நீ சந்துருவை தவிர எது கேட்டாளும் சரி என நினைத்துகொண்டு “நான் ஒன்னும் நினைக்க மாட்டேன் சொல்லுங்க” என்றாள் அன்பு.

 

“இல்ல நான் எங்க அம்மாகூட ரொம்ப நாள் வாழ கொடுத்துவைக்கல அதான் எங்க அம்மாவ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடவா அப்பாவையும் சேர்த்து. நான் நல்லா பாத்துப்பேன் அன்பு ப்ளீஸ்” எனும்போது கண்ணில் அடமழை பெய்ய காத்திருந்தது.

 

சுவேதாவின் மூச்சு சீராக இல்லை. “சுவேதா என்னங்க ஆச்சு” என்று பதறினாள் அன்பு. அந்த நேரம் மஞ்சுவும் எதர்ச்சையாக வந்தாள். சுவேதாவை பார்த்ததும் ஓடி சென்று தலையை பிடித்தாள். சுவேதாவின் உடலில் உதறள் துவங்கியது. கட்டிலில் துடிக்க ஆரம்பித்தாள். வீட்டிலிருந்த அனைவரும் வரவே அன்பரசி சுவேதாவின் காலகளை தேய்த்தவிட்டாள். பார்வதி வந்து கைகளை தேய்த்துவிடவே மஞ்சு தலை ஆடாமல் பிடித்துகொண்டாள்.

 

ஒரு வழியாக சுவேதா கண்முழிக்க சுகு சோகமாக எதிரில் நின்றான். சந்துருவோ “மாத்திரை போடலையாடி லூசு” என்று திட்டினான். பார்வதியோ தன் கையில் மாரியம்மன் திருநீறு என எடுத்து வரவே. “அம்மா எனக்கு சாமின்னா பிடிக்காது” என்று தடுத்தாள். “நீ சும்மா இரும்மா நல்ல சக்தியுள்ள சாமிமா இன்னையோட நீ நல்லா ஆகிடுவ அம்மா சொல்றேன்ல கேளு.” என்று அதட்ட அவரது அனபில் சாமியையும் விரும்பினாள்.

 

பின் அனைவரும் வெளியே சென்றனர். அன்பும் மஞ்சுவும் மட்டும் காவலுக்கு இருக்க. “மஞ்சு நான் அன்புகூட தனியா பேசனும்” என்றாள். சுவேதாவின் கண்ணில் நீண்ட நாளாக பூட்டி வைத்திருந்த விஷயத்தை அரிசியிடம் கூற வேண்டும்போல இருந்தது. அதை தாங்கும் சக்தி அந்த குறும்பு பெண் அரிசிக்குதான் உள்ளது என்று நினைத்தாள் போலும். மஞ்சுவும் அதை புரிந்துகொண்டு ‘இன்னைக்காவது உன் மனசுல இருக்குறத சொல்லுடி’ என்பதுபோல எழுந்துசென்றாள். சுவேதா மயக்கமாக இருக்கும்போது சுகு புழம்பியது அன்பரசிக்கு நினைவுக்கு வந்தது. “ஏண்டி மனசுக்குள்ள எதையோ வச்சுகிட்டு கஷ்டபடுற” என வாய் திறந்து அழுதுவிட்டான். பின் சந்துருதான் அவனை சமாதானம் செய்தான்.

 

அப்போ சுவேதா மனசுக்குள்ள ஏதோ வச்சுகிட்டு இருக்குறதாலதான் வலிப்பு வருது. அதை சொல்லிடாங்கனா கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடுவாங்க என நினைத்தவள்.

 

“சுவேதா உங்களுக்கு என்ன பிரட்சனை?” என அன்பரசி கேட்கவும் “ஒரு தீபம் எறிய எத்தனை தீக்குச்சி எரியனும் அன்பு?” என சுவேதா கேட்கவும் ஒரே நேரம் எடுத்துகொண்டது.

 

இருவரும் சிறிதுநேரம் அமைதியாக இருந்தனர்.

 

-தொடரும்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45

உனக்கென நான் 45 “ம்ம் அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என சுவேதா கூற அன்பரசி “வேணாம் அன்னி என்று பதறினாள். சந்துருவோ “ம்ம் சரி நான் பன்னுறேன்! ஆனாஙஎன்ன கிப்ட் கொடுப்காங்க உங்க அன்னி” எனறான். “எங்க அன்னியே உனக்கு கிப்ட்தான்டா

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 8காயத்திரியின் ‘தேன்மொழி’ – 8

பாகம் 8 வீட்டில் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தன….அவள் புகுந்த வீட்டில் இன்முகத்தோடு விளக்கேற்றினாள். ஆஷா “அண்ணி வாங்க உங்களுக்கு நம்ம வீட்டை சுத்தி காட்றேன் என்றபடி எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டினாள்.மாடியில் புதுமண தம்பதிகளாகிய இவர்கள் வாழப்போகும் ரூமையும் காட்டினாள்.ரூம் நல்ல