Tamil Madhura கவிதை ஏக்கங்கள் (கவிதை)

ஏக்கங்கள் (கவிதை)

longing

 

ஏக்கங்கள்

வாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ ?
என்ற பூவின் ஏக்கம்
தனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும்
வண்டின் ஏக்கம்
மாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா ?
என்ற நிலவின் ஏக்கம்
தாவித் திளைக்காமல் என்றாவது அமைதியாக உறங்குவேனா ?
என்ற கடலின் ஏக்கம்
கோடையில் நிழலுக்கான ஏக்கம்
குளிரில் வெப்பத்திர்க்கான ஏக்கம்
மாலையில் மறைந்து விடுவேனோ ?
என்ற சூரியனின் ஏக்கம்
எப்போது தன்னை அழிப்பார்களோ ?
என்ற மரங்களின் ஏக்கம்
இரையாக மீன் கிடைக்குமா ?
என்ற கொக்கின் ஏக்கம்
தன் இருப்பிடம் விட்டு வெளிவந்தால் இரையாகி விடுவேனோ?
என்ற மீனின் ஏக்கம்
தன் இருப்பிடமே எதுவென அறியாமல் சுற்றித் திரியும்
பல பிஞ்சு உயிர்களின் ஏக்கம்
காலை எழும்போதே பள்ளி விட்டு வீடு திரும்பும் –
நேரம் கேட்கும் மழலையின் ஏக்கம்
என்றாவது பள்ளி செல்வோமா?
என்ற குழந்தைத் தொழிலாளர்களின் ஏக்கம்
சம்பாதித்த செல்வம் பாதுகாப்பாக இருக்குமோ ?
என்ற பணக்காரர்களின் ஏக்கம்
என்றாவது செல்வம் சேருமா ?
என்ற பாமரர்களின் ஏக்கம்
குடும்ப பொறுப்பு என்றாவது தீருமா ?
என்று பெற்றோர்களின் ஏக்கம்
பெற்றோர்கள் தங்களிடம் மனம் விட்டு பேசுவார்களா?
என்ற குழந்தைகளின் ஏக்கம்
பேரகுழந்தைகளின் நினைவுகளோடு
முதுமையை முதியோர் இல்லத்தில்
கழிக்கும் முதியோர்களின் ஏக்கம்

இந்த அனைத்து ஏக்கங்களும்
என்றாவது தீருமா?
மனிதர்கள் முற்றிலும் மகிழ்வடைவர்களா?
இவ்வுலகம் அனைத்தும் பெற்று நிறைவடையுமா ?
என்ற கடவுளின் ஏக்கம்
தெய்வமே அறியாத் தேடல்கள் இவை
மாற்றங்கள் மாறாதது – கீதை சொன்ன பாடம்
ஏக்கங்கள் தீராதது – வாழ்க்கை உணர்த்தும் பாடம்
வாழ்கையில் தேடலும் எதிர்பார்ப்பும் வேண்டும்
இதுவே நம் முன்னேற்ற பாதையின்
முன்னோடியாக அமையும்
கிடைக்குமா என ஏங்குவதை விடுத்து
கிடைக்கும் என நம்பிக்கையோடு
முயற்சிசெய்து எதிர்பார்த்து இருப்போம்
காலம் கைகூடும்
கனவுகள் நனவாகும்

~ஸ்ரீ !!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்லும் கற்சிலையும் (கவிதை)கல்லும் கற்சிலையும் (கவிதை)

கல்லும் கற்சிலையும்   என்னில் இருந்து உருவானவன் நீ.. மறவாதே (கல்) என்னால் தான் உனக்கு பெருமை… மறவாதே (கற்சிலை)   உன்னை உருவாக்க நான் பல வலிகளைத் தாங்கினேன். அது உன் கடமை.. தியாகமல்ல.   உனக்காக என்னில் பல

மலையின் காதல் – கவிதைமலையின் காதல் – கவிதை

மலையின் காதல் தன் கதிரவனைக் காணாமல் கண் மூடியவளே! கோபத்தால் பனிக்குள் மூழ்கியவளே! உன் காதலை உணராமல் எங்கே சென்றான் அவன்! உன் முழுமையான மலை முகத்தை வெளிக்கொணர புன்னகையோடு காலையில் சூரியன் வெளிவருவான் உன்னை சூழ்ந்துள்ள கருமேகங்களை விலக்கி உன்னிடத்தில்

ப்ரியவதனாவின் காதல் மனதுப்ரியவதனாவின் காதல் மனது

வணக்கம் தோழமைகளே நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் ப்ரியவதனாவை வரவேற்கிறோம். நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்,