Tamil Madhura Uncategorized அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்

[youtube https://www.youtube.com/watch?v=GWYq0zUwLts?rel=0&w=560&h=315]

 

காவிரிபோல் வளர்வோம் 

அரோகரா 

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்

கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்.

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்-சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!

கவியரசு கண்ணதாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 27

27 நாகலாந்தில் உள்ள ஒரு உணவு வகையை சேர்க்கலாம் என்று யோசனை சொன்னான் மாதவன். “இல்ல மாதவன் எந்த அளவு மக்களுக்கு பிடிக்கும்னு எனக்குத் தெரியல”. “ஏன்?” “நாகலாந்து, அஸ்ஸாம் இந்த பக்கம் எல்லாம் மசாலாவே சேர்க்கமாட்டாங்க. விதவிதமான பச்சை மிளகா

குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம் சகோஸ்,  நான் கௌரி முத்துகிருஷ்ணன், இது எனது பயணங்கள்  முடிவதில்லை கட்டுரை போட்டிக்கான எனது படைப்பு. கல்லூரி காலம் அனைவருக்கும் இனிமையானது, மறக்க முடியாதது நெஞ்சில் இனிமை சேர்க்கும் கல்லூரி சுற்றுலா பற்றிய கட்டுரை. இங்கு சில காரணகளுக்காக என்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02

2 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டை அடைந்ததும் அவனை அங்கு எதிர்பாராத அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவன் விரைந்து தன் தாயிடம் சென்று அவரை அணைத்துக்கொண்டு “சொன்ன மாதிரியே வந்துட்டேன் அம்மா. இனிமேல் எப்போவும் உங்ககூட தான் இருப்பேன் ” என்றவனை