Tamil Madhura கவிதை நிலவு – (கவிதை)

நிலவு – (கவிதை)

Image result for நிலா

 

நிலவு

 

இரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே
பகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே
கருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே
விண்மீன் கூட்டத்தின் தலைவனே!
ஒரு காலம் தோன்றுதலும்
ஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே
உன்னைக் காண மனம் துடிக்குதடா
உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்ததடா
உன் அழகைக் கண்டு வியக்கிறோம்
உன் பண்பாகிய குளிர்ச்சி கொண்டு வாழ்கிறோம்
தன் கலங்கத்தையும் மறைத்து பிறரை மகிழ்விப்பவனே
உன்னைப் போல் அனைவரும் வாழ வாழ்த்துவாயாக

~ஸ்ரீ!!~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!அர்ச்சனாவின் கவிதை – முத்தம் தந்திடு!!

முத்தம் தந்திடு!!   முட்களோடு சொற்கள் செய்து காயம் தந்தாய் – எனது கண்ணீரும் சிகப்பாய் மாறி சிறகு கிழிந்ததே! தென்றல் எந்தன் வாசல் வர காத்து நிற்கிறேன் – இன்றோ  புயல் வீசி என் கூடு சிதைய பார்த்திருக்கிறேன்!! மருகி

அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!அர்ச்சனாவின் கவிதை – தஞ்சம் வரவா!

தஞ்சம் வரவா?!!   விழியைத் திருப்பி என்னைப் பாரடா எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ? என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ? சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட மலர்களைக்