Tamil Madhura குறுநாவல்,மோகன் கிருட்டிணமூர்த்தி காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே,

எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்.

கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு சிறு விபத்தின் விளைவால் முப்பது பக்கங்களை காணாமல் போகின்றன. பதிப்பகத்தார் காணாமல் போன பக்கத்தில் விடுபட்ட பகுதியை  வாசகர்களின் கற்பனைத்திறத்தால் எழுத சொல்கின்றனர். சரியாக எழுதியவருக்குப் பரிசாக மணியுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்கின்றனர்.

வாசகர்களிடமிருந்து வந்த போட்டிக்க்கு வந்த  கதைகளைப் படிக்கும் மணி வியப்பின் எல்லைக்கே சென்று விடுகிறார். ஏனென்றால் காணாமல் போன பக்கங்களிலிருந்த கதையை வார்த்தை மாறாமல் பிரதி எடுத்தாற்போல வாசுகி எனும் பெண் ஒருவர் எழுதி அனுப்புகிறாள்.

பக்கங்களை வாசுகியே திருடியிருப்பாளோ என்ற சந்தேகத்திற்கும் இடமின்றி அவளோ சென்னையில் அந்த சமயத்தில் இல்லை. ஆனால் மணியின் தீவிர வாசகி. தீவிரம் அதிகமாகி மணி எழுதியதை அவர் எழுதும் சமயத்தில் வார்த்தை மாறாமல் எழுத ஆரம்பித்து விடுகிறார். அதன் பின்…

இதற்கு மேல் நீங்களேதான் படிக்க வேண்டும். படிங்க படித்துவிட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=377665869 key=key-67P0uq1BwPyMgHbu9CCr mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

3 thoughts on “காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்”

  1. நன்றாக இருந்தது. ஆனால் மூன்றாவது முடிவே ஏற்க கூடியதாக இருந்தது. அருணா கொலைக் காரணம் தெரியாதது சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள்.

Leave a Reply to umakrishnanweb Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மன்னிப்பு – 3 (நிறைவுப் பகுதி)மன்னிப்பு – 3 (நிறைவுப் பகுதி)

3 “என்னது? நான் மன்னிப்பு கேட்கணுமா? என்னம்மா இது சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு. அந்த ஆளு எனக்கு துரோகம் பண்ணிருக்கான். நல்லா சேர்லயே அடிச்சு அவனை அந்த இடத்திலேயே கொன்னுட்டு இங்க வந்து தண்டனை கூட வாங்கிருந்திருக்கலாம். ஆனால் இது என்ன

காஞ்சனை – 2காஞ்சனை – 2

காஞ்சனை –புதுமைப்பித்தன்  நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது. “ராத்திரி பூராவும்

மேற்கே செல்லும் விமானம் – 10மேற்கே செல்லும் விமானம் – 10

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பதிவில் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் எனக்கும். இந்தப் பகுதியில் கண் கெட்ட பிறகு ராஜ் செய்த சூரிய நமஸ்காரம் எந்த அளவுக்குப் பலனளித்தது என்பதைப் பார்ப்போம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் [scribd id=375052011 key=key-IN24FwxHdvm5BwsNr1GP