பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே – முருகன்
பலனும் தந்தான் நேரிலே
பழமுதிரும் சோலையிலே
பால்காவடி ஆடி வர
தணிகைமலைத் தென்றலிலே
பன்னீர்க் காவடி ஆடிவர
சாமிமலைக் கோயிலிலே
சக்கரைக் காவடி ஆடிவர
செந்தூரின் வாசலிலே
சந்தனக் காவடி ஆடிவர
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பலனும் தந்தான் நேரிலே – முருகன்
பலனும் தந்தான் நேரிலே