Tamil Madhura தொடர்கள் Chitrangatha – Epilogue

Chitrangatha – Epilogue

அன்புள்ள பங்காரம்ஸ்,

உங்களை ரொம்ப காக்க வைக்க விரும்பல. முதலில் எபிலாக்.  உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு. எபிலாக் முடிஞ்சதும் பேசலாம்.

Chitrangatha – Epilogue

சித்ராங்கதா இறுதிபகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா.

எல்லா கதைகளுக்கும் செய்த மெனக்கெடலுக்கு கொஞ்சம் அதிகமாவே  இந்தக்கதைக்கு செய்தேன். ஆனால் சித்ராங்கதா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்…  ஏனென்றால் இந்த சாதாரண கதைசொல்லிக்கு அவ்வளவு அன்பை சம்பாதித்துத் தந்திருக்கிறது.

நீண்ட நாட்களாய் சரயு என்னை எழுத்தில் வடிக்கச் சொல்லித் தொல்லை தந்தாள்.அப்போது உதயமானதுதான் சித்ராங்கதா. ஒரு டாம்பாயை காதலித்து மணந்த அர்ஜுனன்.அர்ஜுனன் நிறை குறைகள் நிரம்பிய சாதாரண மனிதன். அப்படித்தான் ஜிஷ்ணுவின்கதாபாத்திரம் இருக்கும். ஆனால் மறந்துவிடாதீர்கள் அந்த சாதாரணமனிதனுக்குத்தான் கிருஷ்ணன் சாரதியாய் நின்றான்.

ஜமுனாவுடன்திருமணம் முடிந்தும் சரயுவின் மீதான  அவனது காதலை நீங்கள் ஏற்பீர்களாஎன்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் மிக அற்புதமாய் புரிந்துக் கொண்டீர்கள்.நான் நினைப்பதை அப்படியே புரிந்து கொண்டதற்கும் உணர்ந்தததற்கும் நன்றி. சிலதோழிகள் சிலபடி அதிகம் போய் என் அலைவரிசையிலேயே சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். அதுதான் ஆச்சிரியம்.

இந்தக் கதைஆரம்பத்திலிருந்து என்னுடன் பயணித்து,  ஒவ்வொரு அத்தியாயத்திலும் சலிக்காமல் செப்பனிட்ட எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரனுக்கு என் முதல் நன்றி. வனிதா நான் முதல் அத்யாயம் போட்டதுமே கதையை அப்படியே சொல்லிடுவார். இன்னும் பெட்டரா, பெட்டரா பண்ணு என்று என்னை டிரில் வாங்கிடுவார். தப்புகள் சரியாய்அவர் கண்ணில் படும். நானும் திருத்தி விடுவேன். சுருக்கமாய் சொல்லப் போனால் என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட டீச்சர். இந்தக் கதையை அவர் கெஸ் பண்ணக்கூடாதுன்னு நினைச்சே எழுதினேன். முதல் முறையா ஓரளவு வெற்றி. நன்றி வனிதா உங்கள் உதவிக்கு.

அடுத்த நன்றி விஜிசுஷிலுக்கு. பதினைந்து பகுதிகள் வரை என் அரைகுறை தெலுகுலேயே ஓடியது.யாராவது தெலுகு அண்ட் தமிழ் தெரிந்தவர் இருந்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாக  இருக்கும் என்று நினைத்தேன்.ஒரு பெரிய வலையை எடுத்துட்டு தேடாதகுறை.

விஜியை முன்பே எனக்குத் தெரியும். விஜியோட கதைகளைப் படிச்சிருக்கேன். பேசிருக்கோம். ஆனா இந்த விஜிதான் விமர்சனம் எழுதுற ரவளிக்கா என்ற ராணுவ ரகசியத்தை என்கிட்டே மறைச்ச கள்ளியை  என்ன செய்யலாம்? விஜிகிட்ட “பேர் ரவளிக்காவா? அப்ப நீங்க  தெலுகா”ன்னு நான் கேக்க, விஜிட்ட இருந்து  என்ன ரிப்ளை தெரியுமா “நான் இந்தியன்”.  ‘வாம்மா மின்னல் உன்னைத்தான் தேடிட்டு இருந்தேன்’ அப்படின்னு அன்னைக்கு விஜியை சித்ராங்கதாவுக்குள்ள இழுத்துப் போட்டதுதான். இன்னைக்கு வரைக்கும் விடுதலை இல்லை. உங்களது சுந்தரத் தெலுங்கு இந்தக் கதையின் மிகப் பெரிய பலம் விஜி. நன்றி.

இந்தக் கதைக்கு ஆர்வமா பாட்டுக்களை, சஜசன்ஸ் தந்த தோழிகள், ஜெயசுதாவின் நோய் பற்றி விளக்கம் கேட்டதற்கு உடனே பதில் அனுப்பிய டாக்டர்.உமா,   கவிதையாய் கமெண்ட்ஸ்எழுதும் நீங்க,  கதையாய் நினைக்காமல் சரயுவையும் ஜிஷ்ணுவையும் உங்க நண்பர்களா தெரிஞ்சவங்களா நினைச்சு அவங்களுக்காக சண்டை போட்டவங்க. ஜிஷ்ணுவுக்கு காதல் கடிதம் போட்டு  என்னை போஸ்ட்மேன் ஆக்கினவங்க, சரயுவை ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம்னு கேட்டுகிட்டே ஆண் வாசகர்கள்,  வழக்கமா ஜிஷ்ணுவுக்குத்தான் வரும் இப்ப கொஞ்சம் மாத்தி என்னை பிடிச்சிருக்குன்னுசொன்னவங்க(கடவுளே இப்படியெல்லாம் அப்பாவிப் பிள்ளைங்க இருக்கே) எல்லாத்துக்கும் மேல விஷ்ணு சரயு ஒண்ணு சேரணும்னு பெருமாளை வேண்டிக்கிட்டவங்க  இப்படி சொல்லிட்டே போகலாம்.  இந்தக் கதையின் வெற்றிக்கு நீங்க எல்லாரும்தான்  காரணம் .

வாசகர்கள் மட்டுமின்றி என் தோழிகளான எழுத்தாளர்களும் விரும்பிப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

பலரை எனக்கும், என்னைப் பலருக்கும் அறிமுகப்படுத்திய பெருமை  சித்ராங்கதாவுக்கே…

அப்பறம் ஒரு வேண்டுகோள். என் மேல் கொண்ட அன்பால் இந்தக் கதையை காவியம்னு சொல்லுறிங்க. ஒருவேளை என்னோட மத்த கதைகளை படிக்கும் போது இது பெட்டரா தெரிஞ்சிருக்கலாம். அந்த வகையில் காவியம் எல்லாம் ஒண்ணு ரெண்டுதான் இருக்க முடியும். க.க.க.போகும்  உங்களுக்கு நான் சொல்ல வரது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அடுத்த கதையை, ஹீரோவை  சித்ராங்கதா கூட கம்பேர் பண்ணாதிங்க. ஒரு சரயு, ஒரு ஜிஷ்ணுதான் இருக்க முடியும். என்னால இவங்களோட ஆத்மார்த்தமான  காதலை பீட் பண்ணுற மாதிரி படைக்க முடியுமான்னு தெரியல.

உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். சித்ராங்கதா டீம் உங்களோட எண்ணங்களைத் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.  சரயு, ஜிஷ்ணுவோட சேர்ந்து நானும் உங்ககிட்ட  உத்தரவு வாங்கிக்கிறேன்.  மீண்டும்  சந்திப்போம்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

117 thoughts on “Chitrangatha – Epilogue”

  1. Hi mam recently I read chithrangatha novel.I am from Tirunelveli.enga area slanga superba use paniruntheenga Sarau charactera marakave mudiathu intha story la irundhu veliya varave mudiala hats off u mam

  2. Hello madam, I had completed ur novel 2 months before. but still i couldn’t come out d effect. great novel. wat to say i like all d things abt ths novel. especially d twists.great love bw sarayu n jishnu. best wishes fr d upcoming novels.

  3. Ena solrathune therila romba excited levela irukennu ninikren intha story avlo ena affect panittu ipa than padika start pana mathri irunthichi athukulla mudinchittu story padikum pothey eniye aariyama alugai vanthittu athum jishnu love faliure la oru song paduvane chance illa sema emotional scene story padikum pothu sarayuku marriage aanatha enala yethukave mudila last enga jishnuvum sarayuvum serama poiruvangalonu oru bayathodaye storya padichen superbbbbbb last ipdi oru twist irukumnu nenikave illa awesome evlo stories padichalum sila storiesa life fulla marakave mudiyathu antha mathri oru story than ithuvum hats off to you mam keep rocking

    1. சித்ராங்கதா உங்களால் மறக்க முடியாத கதையா இருந்ததுன்னு சொல்லிருக்கிங்க. இதுக்கெல்லாம் உங்களை மாதிரி ரசிகர்கள் எனக்களித்த என்கரேஜ்மென்ட்தான் காரணம். கதையைப் படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அகிதா.

  4. ‘உன்னிடம் மயங்குகிறேன்’ கதையின் லிங்க் உங்களுக்காக மறுபடியும் அக்டிவேட் செய்திருக்கிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.

  5. Hi.. i am reading this story for the third time. still feeling not fulfilled. inum padikanum padikanumnu than iruku. such a strong characters…may be once more once more nu padicha i feel bit satisfied nu nenaikaren..
    ungalidam irundu idhu pol inum neraiya aazhamana kadaigalai edhir parkiren….

    final words. i got such a lovely feeling while reading chitrangatha and the way the story was narrated and the language as well..

    Thanks……

    1. கோதை உங்க அன்புக்கு நன்றி என்ற வார்த்தையை விட மேலான வார்த்தை சொல்ல எனக்குத் தெரியல. தாங்க்ஸ், மெர்சி, தன்யவாதுலு, சுக்ரியா.

    1. நன்றி சியாமளா.. முழுக் கதையும் புத்தகமாய் வெளிவரப் போவதால் இப்போதைக்கு தர முடியல. மன்னியுங்கள்.

  6. ஹாய் தமிழ்மதுரா,
    சித்ராங்கதா,ச்சு என்ன தலைப்பு இது? அப்படிதான் எனக்கு தோன்றியது முதன்முதலில் பார்த்தபோது…ஏன்னா இந்த தலைப்பு வரலாற்று நாவலுக்கு பொருந்தும்,ஆனால் நீங்க எழுதுவதோ கற்பனை கதைதானே இதற்கு எதற்கு இந்த பெயர் என்று நினைத்து…….
    நான் உங்கள் கதையின் கடைசி பகுதியை தான் முதலில் படிக்க எடுத்தேன்…..
    ஆனால் திறந்த உடனே நான் பார்த்த படமும்(photo) கேட்ட பாட்டும் என்னை ஆச்சரியம்+மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டது..இதுவரை கதையில் யாரும் பாடல் போட்டு நான் கேட்டதில்லை…அந்த பாட்டில் இருந்த நெகிழ்ச்சியும், அதை நீங்க கடைசி பகுதியில் வைத்ததில் அப்படியென்ன இந்த கதையில் உள்ளது என்ற ஆர்வத்திலும் முதல் பகுதியில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்….ஆனால்… என்னால் படிப்பதை நிறுத்தவே முடியாத…அளவிற்கு சரயு,விஷ்ணு,ஜிஷ்ணு,உணர்வு போராட்டமும்,அதற்கு பொருத்தமான படமும்,பாட்டும் கட்டிப்போட்டு …என்னை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் திணறடித்துவிட்டன…..ஒவ்வொவொரு அத்தியாயமும் நட்பு,பாசம்,அக்கறை,காதல்,விசுவாசம்,கோபம், சுயநலம்,அமைதி,ஆக்ரோஷம் என சபாஷ் போடவைத்தது… எதை சொல்வது,எதை விடுவது எனத்தெரியாமல் தவிக்கிறேன்…என்னமாதிரி காதல்…அதை அழகாக எழுதிய உங்களின் தமிழ்+தெலுங்கு கலந்த எழுத்து நடை….என்று சொல்லிகொண்டே போகலாம்…நான் படித்து கிட்ட தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது ஆனாலும் என்னால் அதன் தாக்கத்தில் இருந்து முழுவதுமாக வெளிவர முடியவில்லை..இந்த அளவிற்கு வேறு எந்த கதையும் என்னை ஆக்கிரமித்ததில்லை… எந்த கதை படித்தாலும் என் சிந்தனை இதில் வந்தே முடிகிறது…அந்த வகையில் என்னால் இதை கதை என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை,இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்வாகவே பார்க்க முடிகிறது…இதுவும் ஒருவகையில் வரலாற்று கதைக்கு சமமாகவே தோன்றுகின்றது, அந்தவகையில் சித்ராங்கதா,என்ற இந்த தலைப்பை தவிர வேறு எதுவும் பொருந்தாது என்றே எனக்கும் தோன்றுகிறது….அதை தேர்ந்தெடுத்து பொருத்திய உங்களின் மெனக்கிடல் ரொம்பவே பிடித்தது…….இந்த கதை விரைவில் புத்தக வடிவில் வர என் வாழ்த்துக்கள்…..அத்துடன் நிச்சயமாக ஒரு சரயு,ஜிஷ்ணு,தான் இருக்க முடியும் இவர்களுடன் வேறு யாரையும் ஒப்பிடமுடியாது என்றாலும் வேறு பெயர்களில் இவர்களை விட வலிமையானவர்களாய் எங்கள் மனதில் புகுத்த உங்களால் நிச்சயம் முடியும்…..அதற்கு என் வாழ்த்துக்கள்…..
    (இதை எந்தவித compromises- இல்லாமல் படமாக எடுத்தால் நிச்சயம் நூறு நாள் ஓடுவதுடன்,படித்த எங்களின் மனதை போல் படம் பார்க்கும் பல பேரின் மனதை நெகிழ வைக்கும் என்பது நிச்சயம்)
    இனியாவது என்னால் நிம்மதியாக……(இந்த கதையின் குறுக்கீடு இல்லாமல்) அடுத்த கதை படிக்க முடிகிறதா என்று பார்கிறேன்…..

    1. நன்றி சங்கீதா உங்களது கமெண்ட்ஸ்க்கு. உங்களோட கமெண்ட்ஸ்-இல் இருந்தது நீங்க எவ்வளவு தூரம் இந்தக் கதையில் இன்வால்வ் ஆகி இருக்கிங்கன்னு புரியுது. உங்க எல்லாருக்கும் என் வழியா ஒரு நல்ல பொழுது போக்குக் கதையை தர வைச்ச ஆண்டவனுக்கு நன்றி.

      சித்ராங்கதா — இந்தக் கதையை உருவாக்கும்போதே இந்தத் தலைப்பைத்தான் வைக்கனும்னு நெனச்சேன். ஆனா நிறைய பேருக்கு இது ஒரு புது பேரா தோணுச்சு. சித்திரகதை-யா, நீ என்ன அம்புலிமாமா கதை எழுதப் போறியான்னு கேள்விகள். சோ வேற தலைப்பை வச்சு அறிவிப்பும் கொடுத்துட்டேன். அப்பறம் அதுவும் ஒத்து வரல. சோ பேஸ்புக்ல சித்ராங்கதா பத்தி ஷார்ட் இன்ட்ரோ தந்து இந்த பேருக்கு ஓகேயான்னு வோட் போட சொன்னேன். நிறைய பேருக்கு தலைப்பு வித்தியாசமா இருக்கு அப்ப கதையும் கொஞ்சம் வித்யாசமாத்தான் இருக்கும்னு தோணிடுச்சு. உங்களை மட்டுமில்லை கடந்த ஒரு வருடமாக நானும் சரயு ஜிஷ்ணு கூடவே பயணித்திருக்கிறேன். அவங்களை மிஸ் செய்வது எனக்கும் வருத்தம்தான். இவர்களுக்கு சமமான கதாபாத்திரங்கள் வடிவமைப்பது எனக்கு ரொம்ப சவாலான விஷயம்…. முயற்சிக்கிறேன். நீங்களும் என்னுடைய மற்ற படிப்புகளை இவர்களுடன் ஒப்பிடாமல் புது அனுபவமாய் எண்ணிப் படியுங்கள்.

  7. Tamil,

    Thousand thanks for this novel. I enjoyed it thoroughly. I read this novel 5 times. There were some days I was crying for Saraiyu. I was praying that you should make her happy at least at the end, finally that happened. You rocked. Great job. I will check your twice a day. I am working as Software Engg. I couldn’t open you calameo link from office. I was so upset. If you can please try to give google doc link for your next story. Waiting for your next one.

    1. Dear Bharani,
      Thousand and one thanks for loving sarayu, Jish and the novel Chitrangatha.. The end is not compromise or compulsion. After writing the first update, immediately I wrote the last update. So throughout the story we were slowly moving to the destination.
      Please read the calameo link in your laptop. Enable the audio. When you read uds 22, 55 you can feel the pain of separation. You can see the tearful eyes in background. ud – 35 how Jishnu’s soul longing for Sarayu. Please enjoy it and let me know.

  8. ஹாய் தமிழ் mam ,

    ஒரு அற்புதமான படைப்புக்கு நன்றி mam .

    தாமதத்திற்கு ஒரு சாரி .

    கடந்த செப்டெம்பர் மாதம் தொடங்கி இந்த ஜூலை வரையிலான ,
    பயணம் எங்களுக்கும் மகிழ்ச்சியே .

    சரயு -ஜிஜ்னு இவர்களுடன் பயணித்த பயணம் எல்லாவித உணர்வுகளையும் கொண்டதாகவே அமைந்தது .உங்கள் எழுத்தால்,எங்களை இந்த கதையில் இருந்து இடம் பெயராமல் இருக்க செய்து விட்டீர்கள் என்றால் ,அது மிகையில்லை.

    கதை சொல்லி என்று சொல்லியிருக்கீங்க.ரொம்ப அழகான வார்த்தையை பயன்படுத்தி இருக்கீங்க .இந்த கதையுடன் பயணித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .

    கத்தி மேல் நடப்பது போன்ற சாகசத்தை ஆரம்ப நிலையில் நிகழ்த்தியிருந்தீங்க.superb .

    எத்தனையோ கேள்விகளை ,எதிர்மறை எண்ணங்களை எங்களுக்கு அந்த ஆரம்பப்பகுதி தோற்றுவித்த போதிலும் இதிலிருந்து பிறள மனம் வரவில்லை .அது தான் உங்களுடைய சாதனை .எங்களை கட்டி போட்டு விட்டீர்கள் என்று தான் சொல்வேன் .

    இக்கதை முடியும் வரை ,உங்கள் blog யை ,தினமும் வந்து பார்வையிட்டு விட்டு தான் வேறு பகுதிக்கு செல்வேன்.அது தான் என் முதல் பணி .

    சில நேரங்களில் ,நான் பார்த்த பின்பு நீங்க கதைப்பகுதியை கொடுத்திருப்பீங்க .அப்போ என்னதிது நாம் மிஸ் பண்ணிட்டோமே ன்னு நினைப்பேன் .

    சரயு -ஜிஜ்னு வை மறக்க இயலாது .ராம் மறக்க முடியாத மனிதன் . ,பொற்கொடி என்ற தாயும் அற்புதமானவள் . சிவகாமி ,நெல்லையப்பன் இவர்களையும் தான் .லக்ஷ்மி,ஷண்முகம் என அதில் வரும் அனைவரும் நினைவில் இருக்கிறாங்க .ஜெயசுதா ,வெங்கடேஷ் ,ஜமுனா -மறக்க இயலா மனிதர்கள் .

    BMW,மிளகாய் ,கார உணவு ,கவிதைகள் என அற்புதம் .உங்கள் உழைப்புக்கு பலன் கிடைத்து விட்டது mam .excellent work.

    நிறைய தடவை ,எனக்குள்ளே ஆந்திராவின் கார உணவிற்கு என்ன காரணம் என்று கேள்வி எழும் .அப்போதெல்லாம் ,மிளகாய் உற்பத்தியின் பொருட்டோ என்று எண்ணுவேன் .பதில் ,உங்களின் பதிவிற்கு பின் தான் தெள்ள தெளிவாக விளங்கியது.நன்றி .

    ஆரஞ்சு நிறத்து கவிதை,பாடல்களை ஒரொரு பதிவிலும் தேடும் என் மனது .

    உங்களின் மனிதிற்குள்ளும் எங்களின் மனதிற்குள்ளும் நீங்கா இடம் பிடித்து விட்டனர் சரயு ஜிஜ்னு .

    ஜிஜ்னு -மகேஷ் பாபு ஓகே தான் .

    ஜெனிலியா ஓகே தான் .இள வயது சரயு க்கு ஓகே .என்ன முதிர்ச்சியான பெண்ணுக்கு ஒத்து வருவாரா என்பது சந்தேகம் .

    நெல்லை தமிழிலும் .சுந்தர தெலுங்கிலும் புகுந்து விளையாடி ,அங்கங்கே ஜெர்மனியிலும் விளையாடி இருக்கீங்க mam .நன்றி .(அது ஜெர்மனியா ,பிரெஞ்சா -வார்த்தை மறந்து போச்சே )

    புத்தக வடிவில் வரும் இந்த காதையை படிக்க நான் தயார் தான் .ஆனால் எனக்கு ஏற்பட்டுள்ள ,ஒரு சில வருத்தங்களை தீர்க்க முடியாதே -புத்தகத்தினால் .back round songs கேட்க முடியாது ; back round covers பார்க்க முடியாது;அதில் வரும் வாசங்கங்கள் படிக்க முடியாதே -இவை தான் கவலை அளிக்கும் விசயங்கள் .

    தமிழம்மா ,இந்த அம்மாளுக்கு முதல நன்றி சொல்லிக்கிடுதன் .அம்புட்டு அழகா நம்மூரு தமிழ சொல்லிருக்காக .அவுக சொல்லயில தான் ,எனக்கு ஆமாம்ல இத நாம பேசிக்கிட்டு திரிஞ்சமுல்ல ன்ட்டு ஞாபகம் வருது .

    தெலுங்கு எனக்கு தெரியாது.கொஞ்சமே கொஞ்சமா உங்கள் உபயத்தில் சொல்றேன் .அம்மாயி ,சால சந்தோசம் அம்மாயி .

    எத்தனையோ அலுவலுக்கு இடையில் இதை முடித்திருக்கும் உங்களுக்கு ,நன்றி mam .thank you so much mam .

    அடுத்த அனுபவத்திற்கு காத்திருக்கிறேன் mam .

    1. நன்றி தேவி. வெக்கேஷன் போயிருந்திங்களா? கதைசொல்லி – நான் பேச்சுக்காக சொல்லல தேவி.. தான் பார்த்த, அறிந்த, தன் சிற்றறிவுக்கு எட்டிய விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிப்பவன்தான் கதைசொல்லி. அவன் சொல்லும் கதைகள் சில சமயம் நன்றாக இருக்கும். சில சமயம் நம்ம டேஸ்ட்டுக்கு உப்பு உறைப்பு கம்மியா இருக்கும். அந்த வகையில் நானும் ஒரு கதைசொல்லி அம்புட்டுத்தேன்…
      நிஜம்மாவே கதையைத் தவிர நான் எழுதின மற்ற விஷயங்களை ரசிச்சதுக்கு நன்றி. ஓவரா தந்துட்டோமோன்னு நெனச்சேன்.
      சால சந்தோஷம் அம்மாயி… மகேஷ்பாபு பேரை சொல்லி இந்த வாரத்தையே இனிமையாகிட்டிங்களே தேவி, நீங்க வாழ்க…. இருந்தாலும் நம்ம பிரின்ஸ் ஜிஷ்ணுக்கு பொருந்துறது சந்தேகம். மீசை இல்லையே… ‘என்னைக் கொண்டாடப் பிறந்தவளே’ அரவிந்த்க்கு சூட் ஆகலாம்.
      இந்தக் கதையைப் பொறுத்தவரை. படிக்கும் ஒவ்வொரு வாசகரும் அவரின் மனதுக்கு இனியவரும்தான் சரயு-ஜிஷ்ணு.

      1. ஹாய் mam ,நன்றி .

        vacation போகல mam .வேலை மிகுதியால் ,தாமதம் ஆகிடுச்சு.

        மகேஷ் பாபு வை ,உங்களின் எந்த ஹீரோ ரோலுக்கு வேணுமினாலும் செலக்ட் பண்ணிக்கலாம் mam.

        இன்னும் நிறைய படைப்புகளை ,வெளியிட வாழ்த்துக்கிறேன் mam .keep rocking mam .

  9. சித்ராங்கா மீது ஈடற்ற காதலை உருவாக்க வைத்த தமிழுக்கு நன்றி…

    சுந்தர தெலுங்கை தமிழில் எழுதிய தமிழுக்கு நன்றி…. (நீங்க ஜிலேபி ஜிலேபியா போட்டிருந்தாலும் google translate போட்டாவது படிப்போம்ல )

    நாகரீக தமிழ், வட்டார தமிழ், தெலுங்கு மணம் வீசும் தமிழ், தமிழ் மணம் வீசும் தெலுங்கு என்று கதாபாத்திரங்களை வித விதமாக பேச வைத்து எங்கள் மனதை கொள்ளை கொண்ட தமிழுக்கு நன்றி…

    கடைசியில் எங்கள் தானை தலைவியை கெட்ட வார்த்தைகள் அற்ற தெலுங்கு பாட்டை பாட வைத்த தமிழுக்கு நன்றி [ஜிஷ்ணு நீ பொழைச்சடா….]

    தாயின் அன்பிற்கு ஈடான சரயுவின் அன்பென்னும் ஜீவநதி காதலாக ஜிஷ்ணுவிடமும்… நட்பாக அனுகுண்டுவிடமும் கலக்க…. எத்தனை இடர்கள் வந்தாலும் துணை நிற்கும் தோழனையும்…. எத்தனை இடர்கள் வந்தாலும் தன் காதலை விட்டு கொடுக்காத கணவனையும் பெற்று தருகிறது… எப்பேர்பட்ட அன்பு!! அந்த அன்பை விவரிக்கும் எழுத்தின் ஆளுமை, அதற்கேற்றார் போல அற்புத பாடல் வரிகள், கவிதைகள், ஆங்காங்கே மேற்கோள்கள். இத்தனை உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்த தமிழுக்கு நன்றி…

    இந்த காப்பியத்தில் சிகப்பு நிற வரிகள்…. பச்சை பசேலென்று மனதில் படிந்து விட்டது… நட்சத்திர பொட்டு, அனிச்சம் பூ என்று அழகிய உவமைகள்… அங்காங்கே இலக்கிய ஓப்பீடுகள்… சாமான்யன் கடவுள் ஆக முடியாது… ஆனால், ஒவ்வொரு மனிதனிடத்தில் கடவுள் இருக்கிறான்… அன்பின் ரூபத்தில்.. ராம சீதா கல்யாணத்தோடு ஜிஷ்ணு சரயு திருமணத்தை விவரித்த விதம்… தெளிவான நீராடை போல… இதமான தென்றல் போல… மணக்கும் மண் வாசனை போல… மனதை கொள்ளை கொண்டது…

    பி.சி. ஸ்ரீராம் காமிரா போல முனிச், பி.எம்.டபிள்யூ மியூசியம், தரணிகோட்டை, ஸ்ரீவைகுண்டம் என்று பல ஊர்களையும் எழுத்து மூலமாவே காட்டி விட்ட தமிழுக்கு நன்றி… [மொரிசியஸ் ஒன்னு தான் பாக்கி…]

    எபிலாகில் புதிதாக வந்த சந்தனா, அபி, வம்சி, குதிரை[ ஹா… ஹா..] மற்றும் மற்ற கதை முழுக்க வந்த அத்தனை கதாப்பாத்திரங்களும் அருமை… [except – ஜமுனா.& ஜாக்சன் கதாபாத்திரங்கள் – அவர்கள் மனதில் ஏனோ ஒட்டாமலே போய் விட்டது… anyway இது இந்த காவியத்தை 0.௦௦௦௦௦௦௦௦௦௦௦1% கூட பாதிக்காது]

    மொத்ததில் சித்ராங்காவை அயராத உழைப்பாலும், கற்பனை வளத்தாலும் அழகிய பதுமையாய் செதுக்கிய சிற்பிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்…. அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…

    1. நன்றி உஷா… கதையை ரசித்ததற்கும் கமெண்ட்ஸ்க்கும்.. கதையில் எத்தனை பலே…வகையான தமிழ் இருக்கும்னு ஆராய்ச்சி செய்திருப்பிங்க போலவே… கண்டு கொண்டதுக்கு நன்றிப்பா…. முடிந்த வரை அந்தந்த பகுதியினர் பேசும் பழமொழிகள், வழக்கு இதனை எனக்குத் தெரிந்தவரை பயன்படுத்தி இருக்கிறேன். உதாரணமாய் நம்ம ‘சரியா’ அப்படின்னு கேக்குற வார்த்தையை ஆந்திர பார்டரில் இருக்குறவங்க ‘ஆமாவா’-ன்னு கேப்பாங்க. அதாவது தெலுகு வார்த்தையான ‘அவுனா?’ என்பதை தமிழில் சொல்லுவார்கள். அதில்லை-ன்னு நம்ம சொல்லுறதை அதுகாது என்று தமிழ் படுத்துவார்கள்.

      தென் மாவட்டத்து பேச்சு வழக்கை ஓரளவு தொட்டிருக்கிறேன். வாரியல் – துடைப்பம், கெண்டி – தாழ்பாள், செத்து சுண்ணாம்பா போயிடுவேன் – இது தென்மாவட்டத்தில் சாதாரணமாய் சொல்லும் பழமொழி.

      நீங்கள் இரண்டையும் ரசித்தது எனக்கு மகிழ்ச்சி. தமிழ் எப்படி, யார் பேசினாலும் அழகு. அத்துடன் சுந்தரத் தெலுங்கும் சேர்ந்தது எனக்குப் பிடித்திருந்தது…
      ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்ததற்கு நன்றி உஷா.

  10. Hi tamil!!!
    very sweet story!!!idai sweet storyinnu solla mudiyaadu arusuvai virunde padaithu irukinga!!!engo aarambithu engengo payanithu romba arumaiya mudithu irukinga!!
    nitchayam idu unga kathaigalil oru best aaga than irukkum manam nirainda vaalthukal!!
    puttagamaaga idai padikanum , paadukaakanum !!

    1. வாழ்த்துக்களுக்கு நன்றி கலா.. கல்யாண சமையல் அளவுக்கு இல்லைனாலும் வீட்டில் சமைக்கும் பண்டிகை சமையலா இருந்ததா? புத்தகத்தை பாதுகாப்பேன் என்று சொல்லி இந்த நாளை இனிமையான நாளாக்கி விட்டீர்கள்

  11. ஹாய் தமிழ்

    முதலில் மிக அருமையான கதை தந்ததற்கு மிக்க நன்றி. சரயு மற்றும் ஜிஷ்ணு உடன் பயணம் முடிந்து விட்டது என்ற எதார்த்தம், உரைத்த போது மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்படியே கதையின் போக்கிலே முழ்கி விட்டேன். அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.

    மிக அருமையான கதை களம், அழகான தெலுங்கு பாடல்கள் அதன் அர்த்தங்கள் என்று கதையை தெளிந்த நீரோடை போல அமைத்து எங்களுக்கு நல்ல ஒரு கதை குடுததர்க்கு மிக்க நன்றி.

    1. நன்றி ஷோபா… உங்களுக்கும் ஜிஷ்ணு சரயுவைப் பிடித்ததா… நானும் அவர்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் யாரை ரொம்ப மிஸ் செய்யுறிங்க? ஜிஷ்ணு? சரயு?ராம்?வம்சி?

  12. Hi Tamil,

    Wonderful story…..one of the best stories i have read in the last 5 years.
    yestrday night start panni…full-a mudichchutann vaithenn

    ur writing made us travel with sarayu and vishnu…..epilogue was very cute….
    really admire saravedi and anugundu frienship…..

    Thanks a lot for this treat….

    Eagerly waiting to read all your old novels and the new story….

    indha story puthagamma vellivara ennonda vazhthukkal.

    Regards,
    Nira

    1. நன்றி நிரா… உங்கள் வார்த்தைகள் எனக்கு நிறைவளிக்கிறது. கண்டிப்பாக பழைய நாவல்கள் படித்துவிட்டு ஒரு வார்த்தை எழுதுங்கள்.

  13. Hai Tamizh

    Superbbb story. Romba arumaiyaana padaippu. Please seekkiram idhai publicationukku anuppi vidungal eppodhu novelaaga varum endru aavaludan kaathirukkum rasigarkalil naanum oruthi.

  14. hai tamil
    solla varthigale illa, avlavu azhagana padaipu ithu.
    life la neraiya story padichalaum silathu manasula apdiye nikum apdi oru story than idhu,
    gishnu-sarayu va marakave mudiyathu, idhu unga eluthu thiramaiku kidaichathu nu nan ninaikiren.
    last epilogue super, kutty gishnu, kutty ram-sarayu avanga looty, padichave araumaiya irundhuthu.
    ithu kadhai kidaiyathu
    kandipa kaviyam than, athuvum iyalpana unarvugala padaikapatta kaviyam
    neenga ithe mathiri neraiya kaviyam padaikanum plz engalukaga,
    sekaram booka eh publish pannunga, nan muthala vangiduven

    regards
    sowmi

    1. ஜிஷ்ணு- சரயுவை ரசித்ததற்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி சௌமியா. புத்தகத்திற்கு சற்று ட்ரிம் செய்ய வேண்டும். விரைவில் நேரம் ஒதுக்குகிறேன்.

  15. Hi Tamil,
    Enna oru padaippu !! kadhaiya, kaaviyama idhu !!

    Mounam pesuma? pesuche ! azhaga, kadhai, kadhaiya pesuchu. Sarayuvin mounam pesiyadhu. Pesiyadhu mattum illai, engal Karpanai kuthirai engengo parakkavum seidhadhe . Ivvalavu effective-a avaloda mounathai pesa vaikka ungalai thavira yaaralum mudinchirukkaathu, Tamil. ‘sollamal solli, kollamal kondru’.

    Ennai porutha varai, books can be one’s best friends, guides – the words in those books are so powerful, so impactful it changes the way a person is/was/will be. Indha book, evoked so much emotions inside of me, the tug and pull, the ups and downs, the tears and laughter, the tenderness and anger, heart-rending grief and pervasive happiness endru – OMG !! a whirlwind of emotions evoked by your powerful depiction, simply tore me apart, and put me back together (emotionally, that is) – sheer poetry, Tamil. Words have been handled, manipulated, chiseled by a master crafter named Tamil Mathura !

    Enakku ‘Book of the year’ idhu dhan !! A book to read endlessly, a book to read whenever, wherever, a book to CHERISH throughout. EXCELLENT, UNBLEMISHED, SUPERLATIVE WORK. Can see the love with which you have created each character, have breathed life into each, can feel the pain of the effort, can imagine the sheer imagery with which you have delivered the whole – enge catch vachchu, eppadi unfold panni endru, ovvonnilum your dedication to details velipadugirathu, Tamil, implicitly !!

    ‘Uyirottamulla kadhai/nadai’ endru solvargal. Inge ‘Uyirottama’, adhukkum mela – uyire poyiduchu, Tamil !! I can’t count the number of times I have said and thought ‘Ayyo, kolreenga Tamil – mudiyala’. Tamil – therein lies your power !! (the power of your words, your power of your story, the power of your characters) – that you can evoke/wring that much emotion, that ultimate emotion, out of cynics such as me. 🙂

    Oru idathula kooda thoive illama, always left the reader hanging in cliff’s edge – impossible to sustain that element of surprise/suspense throughout – but you have achieved the impossible. Hats Off !!

    Oru language-la mistakes illama, sariyana varthai prayogathoda (to give the exact effect you needed) ezhuthuradhukke awesome thiramai venum – idhula you have been handling the story inter-mixing two languages – adhuvum summa illai – emotions – tender, delicate emotions, strong, powerful emotions – in both languages, inter-mixing in the EXACTLY RIGHT proportion – sheer artistry there, Tamil.
    An excellently woven tapestry depicting an excellent friendship and a deep, biding love.

    Naan years ago engeyo, indha sila varigal padithen – appadiye manadhil pathinthadhu. Inge Sarayu and aval Vishnukku rombave porundhum endru ninaithathal, indha vaarthaigalai share seigiren:

    “A thousand years from now, A thousand years,
    Time when my body shall be dust and rain,
    If I but hear the whisper of your voice
    I’ll stir again.”

    Looking forward to seeing this excellent work in PRINT!! BEST WISHES !!

    1. நன்றி சிவா.. இந்தக் கதை முழுவதும் தொடர்ந்து பயணித்து உங்களது கருத்தை பகிர்ந்து கொண்டதுக்கு. அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வார்த்தைகளையும் அதை என்ன நினைத்து எழுதி இருப்பேன் என்று மிகச் சரியாக கணித்து.. அதற்குத் தகுந்த வார்த்தைகளைத் தெரிந்தெடுத்து, வொண்டர்புல்.. உங்களது கமெண்ட்ஸ்க்கு நான் மட்டுமில்லை ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. நாங்க நினைப்பதை சிவாவின் கமெண்ட்ஸ்ல் பார்க்கலாம் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள்.
      உங்களை சித்ராங்கதா மகிழ்வித்தது எனக்கு மிகவும் சந்தோஷம்.
      “A thousand years from now, A thousand years,
      Time when my body shall be dust and rain,
      If I but hear the whisper of your voice
      I’ll stir again.” – இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது… எவ்வளவு ஆழமான காதல்.. அம்மாடி… நினைச்சாலே மனசு உருகுது.

      உங்கள் மொழியின் ஆளுமை அசத்தலாய் இருக்கிறது சிவா. விரைவில் உங்களிடமிருந்து ஒரு கதை எதிர்பார்க்கிறோம்.

  16. hi tamil
    superbbbbbbb epilogue
    adangoppuraane kutty pisaasunga ippave ippadinaa periyavanga aanaa sollave venaam germany thaangaathu
    haa haa avane maathiri vamsi
    appaakku thappaama peththu vaichchirukkaa avanoda saravedi
    hasini ammaakku thappaama kutty saravedi hayyo hayyo
    ada kuyyi anukondu
    nalla sernthaanga koottu appaavaiyum ammaavaiyum polave kalakkuraanung
    harry potter hermione ah romba rasichchen

    vittu pirayave manasillaipaa rombave ivangala miss pannuven
    arumaiyaana kadhal kaviyam tamil
    chitrangathakku nikar avalethaan
    thanyou sooooo much tamil ivala engalukku thanthathukku

    suganthi

    1. நான் சித்ராங்கதாவைத் தந்தது பெரிசில்லை. அதை அப்படியே உள்வாங்கி ஏத்துக்கிட்டிங்களே அதுக்கு மிக நன்றி சுகந்தி. உங்களுக்கு குட்டீஸ்ல யாரை பிடிச்சுருக்கு வம்சி, ஹாசினி, சந்தோஷ், ஹர்ஷா, அபி, சந்தனா?

  17. Tamil,

    Unforgettable story. It is all due to your spectacular writing. Nellai tamil & sundara Telugu mixed with lovely romantic script. I will miss sarayu & Vishnu. Thanks for entertaining us. Some days I don’t know how many times checked the blog to know whether you have updated or not. Keep it up & come soon with another script.

    Sumi

    1. கதையினை ரசித்ததிற்கும், எண்ணங்களைப் பகிர்ந்ததுக்கும் நன்றி சுமதி. தமிழுக்கு இணையாக தெலுகையும் ரசித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  18. Hi Tamil
    Arumai! Arumai!
    Sollvatharkku varthaiye varala. Avlo arumai.
    Ithey mathiri niraiya kathai ezhuthi engalai magilvikka vendi kettu kolkiren.

    Naan Niraiya tharava padikanum. Plz seekarama delete pannidatheengaaaaaaaaaaaa. Ennala intha kathaiyai vittu avvalavu seekeeram veliya vara mudiyathu. Plzzzzzzz.

    1. நன்றி தீபா… இதே மாதிரியே நிறைய கதையா… இதே பாணியிலேயே எழுதினா எனக்கும் உங்களுக்கும் போர் அடிச்சுடும்.

  19. hi tamil,

    No words to share my thoughts abt this story.

    The story line may be ordinary love, but the way of writing is extraordinary.

    Each and every chapter ends with different feelings.

    Jishnu and sarayu cannot be forgotton forever.

    We will miss them very much

    Thanks for giving us such an epic

    All the best for ur next story

    1. நன்றி சங்கரி. சரயுவையும் ஜிஷ்ணுவையும் நினைவில் வைத்திருந்தால் ஒரு ஓரமா என் பெயரும் நினைவில் இருக்கும் அல்லவா??? அதுவே எனக்கு திருப்தி.

  20. Cute epilogue

    Romba arumaiyana story maathiri, epilogum arumai. Definitely once you print this, will buy it 🙂
    romba naal ninaivil nirkum kaaviyam idhu

  21. Hi Tamil,

    Thanks for very very nice and touching story.

    I think I will remember this story for my entire life, such a nice romantic story.

    All the best for your next story.

    Nagalakshmi.

    1. நன்றி நாகலக்ஷ்மி.. //I think I will remember this story for my entire life// உங்கள் வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டு விட்டது.

  22. hi tamil.. awesome story ma…

    hearty congrats on finishing this story..

    epilogue asathiteenga..

    vamsi apdiye jishnu oda Xerox dhan..
    girl fans avanuku niraiya irukkanga..

    hasini-santhosh exactly kutty sarayu-ram dhan..
    avanga panra looties ku alvey illa pola…

    sema arputhamana family..

  23. You finished this story beautifully!

    Epilogue was super! Kids conversations and their mischievous behavior are beautifully written by you. Overall it was a good story!

    1. நன்றி ஜாஸ்மின். கதை முதல் பகுதி எழுதியவுடனேயே முடிவும் எபிலாகும் எழுதிட்டேன். அதற்குத் தான் உங்களை மெதுவாக அழைத்துச் சென்றேன்.

    1. நன்றி ரோஜா… அடக்கடவுளே நான் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் கிடையாது.. இப்படியெல்லாம் என் மேல எதிர்பார்ப்பை வளக்காதிங்க..

  24. Tamil, kalakiteenga…. Epilogue super…..

    Love the lil ones…. Vamsi- Jish ku veetukulle edhiri — ha ha….

    OMG Hasini and Santhosh- mini saravedi and anukundu…. Best bit was HM munna Kai katti vaai potthi nina scene… Classic…. Esp Hasini reminded Kutty Sarayu very much….

    Jish and Sarayu vin BB romance and finally murugal dosai … A dream come true… Worth the wait….

    Epilogue la Ella characters um eppadi , Enna nu vandha dhu very nice…..

    Last UD romba nalla irundhadhu…. Song selection simply superb….

    Adieu Sarayu and Vishnu….

    Innaiku thaan Sarayu uppilla upma saapitadhu pol irukku…. Adhuku ula end card pottuteenga…. We sure are gonna miss Sarayu, Jish , ram ….

    Memorable story Tamil……. Hearty congrats and best wishes to carve such wonderful stories …. ….

    Seekiram innoru super dooper kadhai yoda vaanga Tamil…..

    1. ப்ரியா கோபம் போயே போயிந்தா… நீங்கதானே சரயு-ஜிஷ் காதல் தோல்வி அடைஞ்சப்ப என்னைத் திட்டினது… நினைவில் வச்சிருக்கேன்…

      இன்னைக்குத்தான் சரயு உப்பில்லா உப்புமா சாப்பிட்ட மாதிரி இருக்கா? பத்து மாசத்துக்கு முன்னாடி செஞ்சா… பாருங்க ப்ரியா உப்புமா பிடிக்காத சரவெடி கூட ஜிஷ்ணுவுக்காக உப்புமா சாப்பிடப் பழகிட்டா….

      நன்றி டியர்… லீவ்ல இருக்கேன்… நிறைய கதைகள் படிக்க வேண்டியதிருக்கு… படிச்சுட்டு வரேன்..

  25. ஹாய் தமிழ் வந்துட்டேன் ,

    என்றும் மனதில் இருந்து நீங்காத இடம் பிடித்துவிட்டது உங்க சித்ராங்கதா..ஜிஷ்ணு சரயுவுடன் வாழ்த்த திருப்தி உங்க கதையை படிக்கும் போது கிடைத்தது பா ..பெரிய கதை ஆனால் படிக்கும் போது எந்த அலுப்பும் தெரியவில்லை சீக்கிரம் முடிந்து விட்டதே என்று வருத்தமாக தான் இருந்தது.கதையை பற்றி கொஞ்சமும் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை ரொம்ப திறமையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள்..ஜிஷ்ணு காபாதிரம் ரொம்ப அழகா வந்து இருக்கு தமிழ் அவனோட உணர்சிகளை ரொம்ப அருமையா சொல்லிடிங்க.எப்பிலாக் செம கலக்கல்..குட்டி ராம் குட்டி சரயு இந்த வாண்டுகள் செய்ற அட்டகாசம் சிரிப்பு தாங்கல பா..வாழ்த்துக்கள் தமிழ் சீக்கிரம் அடுத்த கதை எதிர் பார்க்கிறோம்.

    1. வாங்க அனு… தியானம் செய்து முடிச்சாச்சா… நானும் தியானத்தை விரைவில் செய்கிறேன். உங்களுக்கு ஜிஷ்ணு-சரயுவுடன் சேர்ந்தே பயணம் செய்யும் உணர்வைத் தர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஓரளவு பலித்திருப்பது மகிழ்ச்சி.

      அடுத்த கதை பிரேக் முடிஞ்சதும்தான். உங்க கதைகளை எல்லாம் படிச்சு என்ஜாய் பண்ணுறேன். அப்பறம்தான் அடுத்ததை யோசிக்கணும்.

  26. Hi Tamil

    Miha arumaiayana kathai … innum ethanai epsisode koduthalum nangal padithu irupom … meendum meendum padika thoondum kathaigalil ithuvum onru …Unga hard work ku kidaitha vetri …

    1. நன்றி ப்ரனிதா…. இந்தனை எப்பிஸோட்சே பொறுமையா படிச்சிருக்கிங்க. இதுக்கு மேல உங்க பொறுமையை சோதிக்க எனக்கு விருப்பமில்லைப்பா

  27. Hi tamizh,
    Yeppa super story tamizh. Intha kathaiyai veri thanama 2nd timeum padichen pa. Chance ye illa romba nalla story. Intha kathai padikum pozhthu manasula enna Madiri feelings ne if the episode is joyful i also feeling much joy and if it’s sad I’m feeling sad for nearly next update. Any have thank us so much for giving Vishnu and sarayu to us. Thanks a lot. I wish your writing will reach the sky. All the best yaar.

    1. இந்தக் கதையின் சோகமும் மகிழ்ச்சியும் உங்களை தாக்கியது இந்தக் கத்தியுடனேயே உங்க மனசும் பயணம் செய்திருப்பதை சொல்லுது, வாழ்த்துக்கு நன்றி ஹேமா

  28. ஹாய் தமிழ் ,
    முடிவு ரொம்ப அருமை .வித வித குணத்தில் மழலை பட்டாளம் ………
    வம்சி அசத்தல் ஜிச்னு …..ஹாசினி ,சந்தோச அடிக்கும் லூட்டி ,சரயுவும் ,ராமுமே …….ஹசினிக்கு இப்போவே ரசிகன் (கிறுக்கன் )கிடைசிடான் ……….செல்வம் இன்னும் அடங்களை……….

    1. ஹாய் ஷாந்தி வந்துட்டிங்களா… வம்சி, ஹாசினி, சந்தோஷ் எல்லாரையும் பிடிச்சதா? கடைசில ஹர்ஷாவை கிறுக்கன்னு சொல்லிட்டிங்களேப்பா… செல்வம் அவ்வளவு சீக்கிரம் திருந்துற ஆளா என்ன?

  29. Hi Tamil,

    What an ending? Chance illai……. We will miss all of you guys…..It was a great pleasure for us to read this wonderful story……Keep writing such classics…. epilogue was the best.

    Anitha.

    1. நன்றி அனிதா.. எபிலாக்தான் பெஸ்ட்டா… இப்படித் தெரிஞ்சிருந்தா இருவது அத்தியாத்திலேயே கதையை முடிச்சுட்டு அதைக் குடுத்திருப்பேனே…. 🙂 🙂

  30. Tamil
    ரொம்ப நல்லா நிறைவா கதையை முடிச்சிருகீங்க. வெகு சில கதைகளே நான் புத்தகமாக வாங்கி பத்திரபடுத்தி அவ்வப்போது வாசிப்பதுண்டு. Eagerly waiting for Chitrangatha’s publication
    Thanks!!

  31. ஹாய் தமிழ் ,

    மகிழ்ச்சி தரும் எபிலாக் இப்போ தான் மனசுக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கு …! மிக அழகான ஆழமான காதல் கதையை தந்ததிற்கு நன்றி …! இந்த கதை காவியமாய் இல்லாமல் இருக்கலாம் …அனால் இக்கதையினை படித்த படிக்க போகும் (Hope you would publish this story..ssooon) வாசகர்களில் பலருக்கு இக்கதை நினைவில் நீங்காமல் இடம் பெறுவது உறுதி. ஒரு சில கதைகள் மட்டுமே படித்து எத்தனை காலம் ஆனாலும் மனதில் நீங்காமல் வீற்றிருக்கும் ,உங்களின் இந்த கதையும் ஒன்றாகவே இருக்கும் .மிக சாதரணமான கதைகருவினை நீங்கள் சொல்லி இருக்கும் விதம் .காட்சி ,பாத்திர அமைப்பு மற்றும் கதை ஓட்டம் மிகவும் அழகு (ச்சே இப்போன்னு பார்த்து அழகு அருமை யை தவிர வேறெந்த வார்த்தையும் ம்மைண்ட் ல வரலை பா ).நீங்க லிங்க் டேலீட் பண்ணுவதற்குள் இன்னும் ஒரு முறையாவது படித்து விட வென்றும் என்று ஆசை …பார்க்கலாம் .வி வில் மிஸ் சரயு & விஷ்ணு …..!
    வேறென்ன சொல்ல …இப்படி ஒரு சூப்பர் கதையை தந்ததிற்கு நன்றி …

    1. நன்றி சாம்பிள் ரீடர்… நீங்க சொன்ன மாதிரி திரைகதை வேறு… ஜிஷ்ஷை நீங்க எத்துக்கணுமே… அவன் செய்கைகளில் இருக்கும் நியாயம் உங்களுக்கு புரியணுமே… புரிஞ்சுகிட்டிங்கன்னு உங்க கமெண்ட்ஸ் சொல்லுது.

  32. Hi Madhura
    Miga Miga arumaiyaana kathai. Aarambathil kurumbu seyum Sarayu and Play boy Jishnu. Atharkkuppin rombavum sogama irunthathu. Aanaal manathai urukkum sogam. Then story endla thaan konjum manasukku nallà irunthathu. Epilogue padicha pinnadi thaan really I’m so happy. Sarayu and Jishnu-vai marakkave mudiyaathu. Thanks for the story.

    1. நன்றி பூந்தாமரை. நீங்கள் சொல்வது உண்மைதான். முன்னரே சொன்ன மாதிரி இந்தக் கதையில் சரயுவின் வாழ்க்கையை பார்த்தோம்… ஜிஷ்ணு சரயுவின் பாதி என்பதால் அவனின் நிலையையும் எதனால் அவனுக்கும் சரயுவுக்கும் பிரிவு என்பதையும் விளக்க நேர்ந்தது.

  33. hi tamil,

    super ending,romba miss pannuven jishnu and sarayu,ennai poruthavarai ithu kaaviyam thaan,ovovu kadhaikum nalla maatram theriyuthu.next kadhai ithai vida supera irukumnu ethir paarkirom.

    1. நன்றி ஸ்ரீ.. நானும் இவர்களை மிஸ் பண்ணுறேன்… கண்ணு இந்தக் கதையை பேஸ்லைனா செட் பண்ணிக்காதிங்க… அப்பறம் கொஞ்சம் குறைஞ்சாலும் ஏமாற்றம்தான். ஒவ்வொரு கதையையும் ஒரு புது அனுபவமா நினைச்சுப் படிச்சுப் பாருங்க.

  34. தமிழ்,

    சித்ராங்கதா வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள். இந்த கதையில் பகுதிவரைதான் உங்களுடன் கூட பயணிக்க முடிந்தது. மிகுதி கதை வேலை வெள்ளத்தில் அடித்து போகும்போது, கொஞ்சமாய் கரை ஒதுங்க வாய்ப்பு கிடைத்த சமயத்தில், நின்றபடியே அவசரமாய் படித்து, எப்படியோ கதையை முடித்து விட்டேன்.

    கதையுடைய ஆரம்பத்திலேயே, ஹீரோ, ஜிஷ்ணு, ஹீரோயின் சரயு என்று உங்களிடம் சொன்னேனில்லையா? நீங்க தான் ரொம்பவே போங்காட்டம். 🙂 Ofcouse, ராம், அணுகுண்டு, சரயுவின் கணவன் இல்லை என்பதை யூகிக்க முடியவில்லை. கதையின் இலக்கணம், யாரைப் பற்றி விவரமாக சொல்றிங்களோ, அவங்கதான் ஹீரோ அண்ட் ஹீரோயின். சிம்பிள் லாஜிக். இந்த விஷயத்தில் கொஞ்சம் கோட்டை விட்டுட்டிங்க. ராமைப் பற்றி விலாவரியாக ஆரம்பத்தில் சொல்லி இருந்தா ஒருவேளை இந்த அளவு கூட யூகிக்க முடியாம பொய் இருக்கலாம். ஆனாலும் நீங்க ராமை பற்றி விளக்கமாக சொல்லி இருந்தாலும் அவன் அனுகுண்டுதான் என்று யூகிக்க கூடிய அபாயமும் இருக்கு! 😉

    Anyways, ஒரு அருமையான கதை. ஜிஷ்ணு, சரயு போல அவர்கள் குழந்தைகள் சந்தனா, அபி, இல்லை என்பதற்காகவே, மூன்று குட்டிஸ் release செய்திருக்கிங்க. குட்டி ஜிஷ்ணு, குட்டி சரயு, குட்டி அணுகுண்டு சாயலில்.. குட்டி நீலா இல்லையா? 🙂 எங்க குடும்பம் ரொம்ப பெருசு, பிள்ளை குட்டிகளோ பத்து தினுசுன்னு சொல்ற வகையில் 🙂

    ம்ம் அடுத்த கதையில் மெயிலில் சந்திப்போம்.

    1. எவ்வளவோ முக்கியமான வேலைகள் உங்களுக்கு இருந்தும் சின்ன சின்ன இடைவெளிகளில் கதையைப் படித்து என்னிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். அதற்கு மிகவும் நன்றி வனிதா…
      கதையை ஆரம்பிச்சவுடனே ஜிஷ்ணு சரயு பத்தி நீங்க ஊகிச்சது சரிதான்…. ராம் பத்தி கெஸ் பண்ணலையேன்னு நினைச்சு கொஞ்சமா சந்தோஷப் பட்டுகிட்டேன். ஆமாம் ராம் பத்தி விளக்கமா சொல்லி இருந்தால் அவன்தான் அணுகுண்டுன்னு கண்டுபிடிசிருப்பிங்க…. அதனாலதான அவனை இந்தியாக்கு பேக் பண்ணேன்.
      குட்டி நீலாவை மிஸ் பண்ணிட்டேனே வனிதா… அதனால என்ன அணுகுண்டுக்கு மெயில் பண்ணிட்டா போச்சு 🙂 🙂

  35. ஹாய் தமிழ்,

    ரொம்ப அழகா கதைய கொண்டு போயி முடிச்சிட்டீங்க…. உங்க கதைய என்னோட பிரண்ட்ஸ் படிச்சி பாரு’னு சொன்னதை வச்சி படிக்க ஆரம்பிச்சது… FB’ல கூட உங்ககிட்ட இதுவரை கொடுத்த அப்டேட் முழுசா கொடுக்க முடியுமானு கேட்டேன்..நியாபகம் இருக்குமானு தெரியல…

    அப்புறம் நான் படிக்க ஆரம்பிச்சதும் சத்தியமா என்னால நிறுத்தவே முடியலை….அப்புறம், அப்புறம்… ஐயோ ஜிஷ்னு…ஹையோ சரயுனு கண்ணுல தண்ணீலாம் வச்சி ஒரே நாள்ல படிச்சி முடிச்சிட்டேன்….

    நிஜம்மா ரொம்ப, ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தது…எனக்கு ஜிஷ்னுவோட உணர்வுகளை நீங்க எழுதி இருந்த நடையில படிச்சது ரொம்ப பிடிச்சது!!! ஓர் ஆணின் உணர்வுகளை எங்களுக்குள்ள அழகா புரிய வச்சிட்டீங்க…

    சரயு…ஆத்தாடி ரொம்பவே அழுத்தக்காரி!!! ஆனா தன்னோட காதலை அழகா யாருக்கும் நிரூபிக்கனும்னு அவசியம் இல்லைனு சொல்லி விலகி இருந்து அதை ஒரு ஓவியமா வரையாம வரைஞ்சி காட்டிட்டா!

    நீங்க சொன்ன மாதிரி ஒரு சரயு, ஒரு ஜிஷ்னு தான் இருக்கனும்… ஆனா மனம் நிறைவான காதல் பறவைகள்!!!

    இந்த ஒரு ஜோடிக்கு பிறந்ததுகளே இந்தபோடு போடுதுன்னா, நிறைய பேரு இருந்தா தாங்காதுடா சாமி!!! எப்படா எபிலாக் போடுவீங்கனு ஆவலா மெயில் பார்த்துட்டு இருந்தேன்… ஹப்பாஅ… இன்னைக்கு பார்த்ததும் அப்படியே துள்ளி குதிச்சிட்டேன்… ஆனா ஹய்யோ முடிஞ்சிடுச்சானு இருக்குபா….

    ‘சித்ராங்கதா’ கதையை அழகா முடித்து கொடுத்த உங்க டீமுக்கு என்னோட வாழ்த்துக்கள்!!!!

    உங்களோட அடுத்த கதைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    -கீதாபாலன்

    1. நன்றி கீதா… நீங்க FBல கேட்டப்ப நிஜம்மாலே என்கிட்டே pdf இல்ல. இருந்தாலும் இந்தக் கதையை பகுதி பகுதியா பின்னணி இசையோட கேட்டுகிட்டே படிச்சா இன்னமும் நல்லா இருக்கும். தேடித் தேடித் பாட்டுக்களைப் போட்டிருக்கேன். சரயு ஜிஷ்ணு பிரிவின் போது வரும் பின்னணி இசை.. ஜமுனா ஜிஷ்ணுவை டார்ச்சர் பண்ணும்போது வரும் பின்னணி இசை, அப்பறம் ஜிஷ்ணு சரயுவைக் காதலிப்பதை உணரும் இடம், சீதாராமனின் கல்யாணம் இப்படிப் பல சிரமப்பட்டு நிறைய பாட்டுக்கள் கேட்டு தேர்ந்தெடுத்தவை…
      காதல் தோல்வியை பெண்களின் கண்களில் பார்த்திருக்கிறோம்… நிஜமான காதலை இழந்து நிற்கும் ஆண்களின் தவிப்பைக் கொண்டு வர முயன்றேன். உங்களது எழுத்துக்கள் அதில் பாஸ் மார்க் வாங்கிவிட்டேன் என்று கூறுகிறது… மீண்டும் நன்றி கீதா

  36. சந்தோஷமான எபிலாக் அட்டகாசமா இருந்தது……

    வம்சி…அடுத்த வாரிசு ஜிஷ்ணு….ஹ ஹா…பேரு செலக்ட் பண்ணி இருக்கீங்க பாருங்க…கிருஷ்ணா…ஹ ஹா…
    ஹாசினி,சந்தோஷ்…..அடுத்த சரவெடி,அணுகுண்டு…..கிளாஸ்ல என்ன குறும்புத்தனம்….ஹ ஹா..அதுவும் ஹர்ஷாவை கலாய்ப்பது சூப்பர்…
    ஹர்ஷா,ஹாசினி…அடுத்த ஜோடி…ரெண்டு பேருமே H வேற பேர் ஸ்டார்ட் ஆகிடுச்சு…
    இவர்கள் எல்லோரும் அடுத்த தலைமுறைகலாக இருந்தாலும் ஜிஷ்ணு,சரயு வின் தலையெழுத்தோடு இருக்க வேண்டாம்..சந்தோசமாக இருக்கட்டும்…

    ஏலே…ஜிஷ்ணு….ஒத்தபுள்ளையும் வந்ததும் தெரிலை,வளர்ந்ததும் தெரிலைன்னு சொல்லிட்டு அடுத்தடுத்து முழுமூச்சில் இறங்கிடே போல்றிக்கே…இதுலே கலாரசிகன்..பிங்க் பிகினி கேட்க்குதோ!!!!!!
    இபோவாவது சந்தோசமா இருங்க…

    தமிழ் நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது காவியம் தான்…இந்த காவியத்தை விடவும் அடுத்த காவியம் மிக சிறப்பாக அமையும்… நாங்க அடுத்த கதை இதைவிடவும் எதிர்பார்ப்போம்..உங்களால் முடியும்…வாழ்த்துக்கள் தமிழ்……

    1. நன்றி உமா… கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கமெண்ட்ஸ் தந்துட்டிங்க. நன்றி டியர். ஜிஷ்ணு – சரயு சந்தோஷத்தைப் பாத்து உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்.. மகிழ்ச்சி….. எனக்கு நிறைவா இருக்கு.
      //ஏலே…ஜிஷ்ணு….ஒத்தபுள்ளையும் வந்ததும் தெரிலை,வளர்ந்ததும் தெரிலைன்னு சொல்லிட்டு அடுத்தடுத்து முழுமூச்சில் இறங்கிடே போல்றிக்கே// – உங்க கேள்வியை ஜிஷ்ணுகிட்ட சொன்னேன் உமா. அதுக்கு அவன் பதில் இதோ

      உமா, அபி சந்தனா உருவானபோது மிஸ்ஸான நேரத்தை இப்ப பிடிச்சுட்டேன்ல… இதெல்லாம் பங்காரம் மேல எனக்கிருக்குற லவ்ஸ் பை ப்ராடக்ட்… கண்டுக்காதிங்க…

  37. dearest mathura

    atlast there comes an end…….tks to viji and vanitha mam……i was surprised to see your comments – oru vishnu oru sarayuthan iruka mudiyumnu. naan kathaiya calameo link la padichathala , appadiye padichutu unaku mail panninen- idhe words than use panniyiruken…..

    mail i edit panni inge post pandren…

    Chitrangada Epitome of Love…….

    Epologue i….paarthen paarthen suda suda rasithen rasithen
    palamurai padithen pdithen un ezhuthu ennai kolludhe
    kamban illai michaththai uraikka adada adada adada

    Kannum un ezuthum modhiya veLai
    sila nodi naanum swaasikka villai
    kadavuL paartha bakthan poalae
    kaiyum kaalum odavillai
    Silaiyai ninren sila nimidangal

    Angange sila changes panniyiruken paatulathan. Original kavithayini ai irundal azhagai oru kavithai unakakaga ezhuthiyirupen.

    Saravedi anugudin marupathippai hasini santhosh…….harry hermayani superb nick names. I love these kitties.
    Sandhu and abhi – ivlo nalla pasangala……….aiyo vamsi en kanne – vaada en Xerox jishnu………harsha – ada adutha Vishnu ready ayitane……..andha neelave Ramin manaiviyai ,,,,romba thanks Mathura….idhaithan naan edirparthen……
    School head munnadi kaiyai katti ninna ram and sarayu vai ninaithal ….aiyo ennal sirippai adakave mudiyale…..amma undi vill adicha hasini ambe vidra…..jean appadiye……..paavam sarayu….vamsi yin girl friends-I eppadithan samalikaporalo……..andha anbenra kayiral kattapattula arpuda kudumbathai vittu piriyava manasilai.

    Idhu vendumanal kaaviyam illamal irukalam anal idhu sadarana kadhal kathaiye alla. May be 15 andu kala vazhkai idhil iruku…..appadi ezutharathu avlo sulabam illa. Innoro sarayu Vishnu vai neeye ninaithalum padaikave mudiyathu. Idhai vida uyarndadai irukanumnu ninachu ezhutha try pannadhe. Oru sarayu oru Vishnu than. Kandippa chitrangada oru milekal unnudaiya kadai payanathil……….
    Sarayu kathukittu padra and telugu song arumai.

    Well done thozhiye.

    1. ஒரு வார்த்தையில் மட்டும் அடங்கிவிடாது இருந்தாலும் நன்றி ஷாரதா.. இந்தக் கதையில் நீங்கள் காட்டிய இன்வால்வ்மென்ட் என்னை பிரமிக்க வைக்கிறது. உங்களுக்குத் தோன்றும் சந்தேகத்தை நள்ளிரவானாலும் பொருட்படுத்தாமல் எனக்கு எழுதி, உடல் நலக் குறைவிருந்தாலும் பொருட்படுத்தாது வாசித்து உடனடியாக கருத்தை தெரியப் படுத்தி…. நன்றி
      நிறைய ரசிகர்கள் அப்டேட்ஸ் பலமுறை படித்துவிட்டு முடித்தவுடன் எனக்கு மெயில் மெசெஜ் செய்வார்கள். அதில் ஒரு சிலர் ஐந்து முறையோ பத்து முறையோ எத்தனை தடவை படிக்கிறார்களோ அத்தனை மெசேஜ் வரும். இப்படி பல வித்யாசமான ரசிகர்களைப் பார்த்து ஆச்சிரியப் பட்டிருக்கிறேன்.
      ஷாரதா நீங்க சொன்ன ஒரு வாக்கியம் எனக்கு நல்லா நினைவிருக்கு. சரயு- ஜிஷ்ணுவைக் குடும்பத்தில் ஒரு ஆளாத்தான் பாக்க முடியுது. சோ அவர்களை மறக்கலைன்னா நானும் உங்க மனசில் இருப்பேன்ல்ல. அந்த ஒரு அல்ப சந்தோஷம் எனக்கு… ஹா ஹா

  38. Tamil
    Romba azhagaa vanthu irukku Epiloue, Simply Superb ellaa kitties um…
    Manam Niraivaa irukku. Thanx for such a wonderful story…

  39. நன்றி தமிழ் மதுரா

    நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை…

    கதையை வடிவமைத்தது நீங்க… அங்க அங்க நீங்க எழுதின தெலுகு சரியா வருதான்னு டீச்சர் மாதிரி டார்ச்சர் பண்ணி டச்அப் குடுத்து மட்டும் தான் நான்…

    எனக்கும் நன்றி சொல்லி பாராட்டு விழா எடுத்ததுக்கு நன்றி! நன்றி!!

    ===========

    வாசகர்களே!

    கதையோடு பயணம் செய்து…தெலுகு பையன் அவன் நடையில் தமிழை பேசியதை ரசித்து ஏற்றுக்கொண்டதற்கும்…அவனின் உணர்வுகளை அவனுக்கு தெரிந்த விதத்தில் வெளிபடுத்தியதை புரிந்துகொண்டதற்கும்…..

    நன்றி! நன்றி!! நன்றி!!!

    1. நன்றி விஜி… ஜிஷ்ணுவோட தெலுகு சூப்பர்.. பொறுமையா கதையைப் படிச்சு ஒவ்வொண்ணுக்கும் அழகான தெலுகு வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து தந்திருக்கிங்க விஜி. முன்னரே சொன்னதுதான். உங்கள் வார்த்தைகளால் தெலுகில் பேசும் ஜிஷ்ணு எனக்கே புதியவனாய் தோற்றமளிக்கிறான். இந்தக் கதையின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

  40. சூப்பர் எபிலோக்…….. ஆத்தி….. இப்பவே இதுக இப்படின்னா இன்னும் வளர்ந்தா நாடு ,இவனுங்க வீடு தாங்காதே… குட்டீஸ் எல்லாம் செம கலக்கல் தான்….. ஹா ஹா ஹா ஜிஷ்ணுக்கு போட்டி குட்டி ஜிஷ்ணுவா……….தமிழ் mam எங்களுக்கு இவங்கள விட்டு பிரியவே மனசு இல்லை பேசாம பார்ட் 2 ஆரமிச்சுருங்களேன்………………… குட்டி ஹேரி…. ஹெர்மாயினி…. இப்பவே நங்கூரம் போட்ட வீசிலி……எல்லாரும்மே சூப்பர்………. thank u so much for திஸ் எபிலோக் ………….

    1. நன்றி மேகலா…. பாட்டு போட்டில பைனல்ஸ் வரை வந்த ஹர்ஷாவுக்கு தாளம் போட கத்துத்தரும் நம்ம ஹாசினி. நிஜம்மா இவனுங்க இப்படி இருந்தா நம்ம நாடு எப்படி தாங்கும் . அதுதான் ஜெர்மனிக்கு பாக் பண்ணிட்டேன்

  41. ஹாய் தமிழ்,
    சூப்பர்…..பதிவு .
    சந்தானா,அபின்னு அசத்தல்.
    குட்டி ராம்,சரயு …சூப்பர்.
    அதானே அவர்கள் ………முதல்வர் முன் நின்று திட்டு வாங்கியது ….சூப்பர்.
    நீங்க சொன்னாலும்,சொல்லாட்டாலும்…………ஜிஷ்ணு,சரயு காவியமே…….
    அடுத்தது இதைவிட சிறப்பா இருக்கலாம் தமிழ் நம்புங்க.
    உங்களுக்கு உதவிய தோழிகள் வனிதா,விஜிக்கும் ….நன்றிகள்.

    1. நன்றி பொன்ஸ். அம்மா அப்பாவுக்குத் தப்பாம பிறந்த பிள்ளைகள். உங்களது வாழ்த்துக்கு நன்றி பொன்ஸ்… ஆனா அடுத்த கதை ஹீரோ கூட நம்ம ஜிஷ்ஸ கம்பேர் பண்ணக் கூடாது,….

  42. I like all the குட்டி பங்காரம்ஸ்…..
    என்ன, ஒவ்வொரு குட்டி பங்காரத்துக்கும் ஒவ்வொரு எபிலாக் குடுத்திருக்கலாம் (பேராசைதான்… என்ன பண்றது, இவங்களை விட்டு பிரிய மனசே வரமாட்டேங்குது…)
    குறிப்பா, அந்த ஹெர்மயனிக்கும், அந்த ஹாரிபாட்டருக்கும்… ஹிஹி…
    ☺☺☺

    1. நன்றி செல்வி… ஒவ்வொரு குட்டி பங்காரத்துக்கும் ஒவ்வொண்ணா நாடு தாங்காது சாமி. நம்ம சரயுவுக்கு சரியான பொண்ணுல்ல ஹாசினி… பட் நாணாவுக்குப் பிடிச்ச பிள்ளைகள் ஹாசினியும் சந்தோஷும்னு நினைகிறேன்

  43. 💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 27

உனக்கென நான் 27 சந்துருவின் கைபேசியை அன்பரசியின் அலைகள் அடையமுடியவில்லை. அவன் என்ன நினைத்திருப்பான் என சோகமாக அமர்ந்தாள். “விடுடி ஃப்ளைட்ல போயிகிட்டு இருப்பாங்க அப்புறமா ட்ரை பன்னு” என மலர் ஆறுதல் செய்தாள் அன்பரசியின் மனமோ வேதனையால் கனத்தது. “ஆமா

ராணி மங்கம்மாள் – 8ராணி மங்கம்மாள் – 8

8. பாதிரியார் வந்தார் இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம்